7 Am Headlines today 2024 27th February headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

அரசு மற்றும் அரசியல் பயணமாக இன்று தமிழநாடு வருகிறார் பிரதமர் மோடி; என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பாதுகாப்பு தீவிரம்
பிரதமர் மோடி நாளை தூத்துக்குடி வரவுள்ளதால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். 
பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை; அவசரமாக டெல்லி செல்லவேண்டிய சூழல் உள்ளது – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தை கலைஞரின் தாஜ்மகால் என வர்ணித்தார் ரஜினிகாந்த்.
கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் அறிவிப்போம் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை” என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றரை ஆண்டிற்கு மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருவதால், அரசு அம்மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – சீமான்
பாஜகவுக்கு தாவிய விஜயதாரணி; காலி என அறிவிக்கப்பட்ட விளவங்காடு தொகுதி – தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் செய்திதொடர்பு பிரிவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் நியமனம்
மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது  – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழ்நாட்டில் 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி – ஆளுநர் ஆர்.என்.ரவி
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திரா தீவிரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
திருவள்ளூர் சீமாவரம் சுங்கச்சாவடி அருகே லாரி மீது கார் மோதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உயிரிழந்தார்

 
இந்தியா:

நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் 34 ரயில் நிலையங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவை
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
கேரளாவில் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட்- வயநாட்டில் டி.ராஜா மனைவி  ஆனி ராஜா போட்டி
பிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
மராத்தா இட ஒதுக்கீடு.. 17 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் மனோஜ் ஜரங்கே
ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.பி. கீதா கோரா பா.ஜ.க.வில் இணைந்தார்
அக்பர், சீதா என சிங்கங்களுக்கு பெயர் வைத்த வன அதிகாரி சஸ்பெண்ட்
பாகிஸ்தானுக்கு ராவி நதி நீர் வழங்குவதை நிறுத்திய இந்தியா; இதனால் ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக ஆயிரத்து 150 கன அடி நீர் கிடைக்கும். 

உலகம்:

பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டுமென கோரி இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழப்பு
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக பாலஸ்தீன பிரதமர் பொறுப்பை ராஜினாமா செய்தார் முகமது ஷ்டய்யே
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவு

விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் முடிந்தது. தற்போது இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றியது.
மகளிர் பிரிமியர் லீக்; உ.பி. வாரியர்ஸை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பெற்ற டெல்லி
ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வெல்ல வேண்டும் – சுரேஷ் ரெய்னா விருப்பம்

Published at : 27 Feb 2024 07:05 AM (IST)

மேலும் காண

Source link