actress yami gautam reveals about her pregnancy at article 370 trailer launch event


தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நடிகை யாமி கெளதம் (Yami Gautam) தனது படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.
யாமி கெளதம்
பஞ்சாப் இயக்குநர் முகேஷ் கெளதமின் மகள் யாமி கெளதம், தொடக்க காலத்தில் சோப் மற்றும் ஃபேர் & லவ்லி விளம்பரங்களில் நடித்து வந்தார். பின் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்த விக்கி டோனர் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ’ தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்கிற படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடித்தார். அக்‌ஷய் குமார் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஒ.எம்.ஜி 2 ஆம் பாகத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு , கன்னடம் , இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் நடித்த யாமி கெளதம், கடந்த 2015ஆம் ஆண்டு ’சனம் ரே’ படத்தில் நடித்து வந்தார்.  அப்படத்தில் நடித்த  நடிகர் புல்கித் சாம்ராட்டை அவர் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக எந்த விளக்கமும் அவர் தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை, புல்கித் சாம்ராட்டின் மனைவி இந்தத் தகவலை வெளிப்படையாக தெரிவித்தப் பின்னர், இந்த தகவல்கள் உறுதிபடுத்தப் பட்டன.
இதனைத் தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ’ஆதித்யா தார்’ என்பவரை திருமணம் செய்துகொண்டார் யாமி கெளதம். இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி தங்களது திருமணத்தை விமரிசையாகக் கொண்டாடினார்கள்.  திருமணத்திற்குப் பிறகு தனது பெயரை ’யாமி கெளதம் தார்’ என்று அவர் மாற்றவும் செய்தார்.
முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் யாமி கெளதம்

Poora ka Poora Kashmir, Bharat Desh ka hissa tha, hai aur rahega! #Article370Trailer Out Now! Releasing in cinemas on 23rd February#PriyaMani @vaibbhavt @arungovil12 #KiranKarmarkar @TheRajArjun @Skand2021 @koulashwini2 #IrawatiMayadev #AshwaniKumar #DivyaSeth @sumitkaul10… pic.twitter.com/nZ2GGzzjYD
— Yami Gautam Dhar (@yamigautam) February 8, 2024

ஆதித்யா சுகாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம், பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ஆர்ட்டிகிள் 370. இப்படத்தை யாமி கெளதமின் கணவர் ஆதித்யா தார் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் தார் இணைந்து தயாரித்துள்ளார்கள்.  இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தனது மனைவி  5 மாதம் கருவுற்றிருப்பதாக ஆதித்யா தார் தெரிவித்தார். இந்தப் படத்தின் படப்பிடின் இடையில் தான் கருவுற்று இருப்பது தனக்கு தெரிய வந்ததாக யாமி கூறியுள்ளார். தனது வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு இந்தப் படத்தில் நடித்து வந்த அனுபவம் தனக்கு மிகுந்த சவாலானதாக இருந்ததாக யாமி கெளதம் தெவித்துள்ளார். தனது கணவன் மற்றும் அவரது சகோதரர் இல்லாவிட்டால் தன்னால் எதையும் செய்திருக்க முடியாது” என்றும் யாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் யாமிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
 

மேலும் காண

Source link