<p>விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சட்ட விதிகள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும்.</p>
<h2><strong>பொது சிவில் சட்ட மசோதா:</strong></h2>
<p>இந்த பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்தார்.</p>
<p>இது தொடர்பான சட்ட முன்வடிவை உருவாக்குவதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், &nbsp;உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது உத்தரகாண்ட் பாஜக அரசு.&nbsp; சுமார் ஓராண்டாக மக்களிடம் கருத்துகளை கேட்ட குழு தனது அறிக்கையை தயாரித்தது.&nbsp;</p>
<p>இந்த அறிக்கையை பொது சிவில் சட்ட வரைவாக தயாரித்து உத்தரகாண்ட் அரசிடம் வழங்கியது. இதற்கு உத்தரகாண்ட மாநில அமைச்சரவையும் கடந்த 4ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.&nbsp;இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.&nbsp;</p>
<h2><strong>யார் யாரை திருமணம் செய்யக் கூடாது தெரியுமா?</strong></h2>
<p>இந்த மசோதா மீது விவாதங்கள் நடத்தப்பட்டு, நேற்று நிறைவேற்றப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங் &nbsp;தாமி உரைக்கு பின், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, நாட்டில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட்.&nbsp; இந்த நிலையில், பொது சிவில் சட்ட மசோதாவில் யார் யாரை திருமணம் செய்யக் கூடாது என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.</p>
<p>அதன்படி, அம்மா, இறந்த தந்தையின் மனைவி ( தாய் இல்லாமல்), பாட்டி, தாய் வழி தாத்தாவின் இறந்த விதவை மனைவி, தாய் வழி பாட்டியின் தாய் (கொள்ளுப் பாட்டி), தாத்தாவின் இரண்டாவது மனைவி, &nbsp;தாய் வழி தாத்தாவின் தாய்,&nbsp; தந்தையின் தாய், தந்தை வழி தாத்தாவின் விதவை மனைவி(பாட்டி), தந்தை வழி பாட்டியின் தாய், தந்தை வழி பாட்டியின் தந்தையின் விதவை மனைவி, தந்தை வழி தாத்தாவின் தாய், தந்தை வழி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி, மகள், இறந்த மகனின் மனைவி, மகள் வழி பேத்தி, மகள் வழி பேரனின் இறந்த மகனின் மனைவி, மகன் வழி பேத்தி, சகோதரி, சகோதரியின் மகள், சகோதரனின் மகள், தாயின் சகோதரி, தந்தையின் சகோதரி, தந்தையின் சகோதரனின் மகள், தந்தையின் சகோதரியின் மகள், தாயின் சகோதரியின் மகள், தாயின் சகோதரனின் மகள் உள்ளிட்டோர்களை திருமணம் செய்ய தடை என்று &nbsp;மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p>&nbsp;</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed