கர்நாடகாவுக்கு விரட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் தமிழ்நாடு எல்லையில் தஞ்சம்; பீதியில் மக்கள்


<p>கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதிற்கு விரட்டப்பட்ட யானைக் கூட்டம் தளி, தேன்கனிக்கோட்டை , ஓசூர் பகுதியில் மீண்டும் திரும்பியுள்ள யானைகளால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.&nbsp;</p>
<p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே &nbsp;தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து விரட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக வனப்பகுதி மற்றும் அஞ்செட்டி பனை ஏரியை ஒட்டியுள்ள &nbsp;குந்துக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன.&nbsp;</p>
<p>ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள யானைகள் &nbsp;பன்னெர்கட்டா (கர்நாடகா) வனப்பகுதிக்கு செல்லாமல் ஜவளகிரி வனப்பகுதி ஒட்டியுள்ள &nbsp;மாருப்பள்ளி, சொள்ளேபுரம், பனசுமான தொட்டி என கிராமங்களில் &nbsp;ஆங்காங்கே பிரிந்து &nbsp;சுற்றி திரிகின்றன.</p>
<p>&nbsp;அந்த யானைகள் தேன்கனிக்கோட்டை &nbsp;ஒட்டியுள்ள கிராமங்களில் பல குழுக்களாக பிரிந்து கண்டகானப்பள்ளி, உச்சனப்பள்ளி &nbsp;கிராமத்தில் புகுந்த யானைகள் ராகி, சோளம், முட்டைகோஸ், கொள்ளு என பயிர்களை தின்றும், காலால் மிதித்தும், மேலும் அங்கு சொட்டுநீர் பாசன பைப்லைன்களை உடைத்தும் நாசம் செய்துள்ளன.</p>
<p><br />தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகளும், ஓசூர் சானமாவு பகுதியில் 15 யானைகளும் உள்ளன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் யானைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தகுந்த நிவாராணம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.&nbsp;</p>
<p>யானைகள் மீண்டும் படையெடுப்பால் கிராம பகுதியில் பரப்பரப்பும் பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>

Source link