ஏர் இந்தியாவின் அதிநவீன ஏர் பஸ் சொகுசு விமானம்..! முதல் முறையாக சென்னை வந்தது..!


<h2 dir="auto" style="text-align: justify;"><strong>அதிநவீன ஏர் இந்தியா விமானம்</strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">மும்பையில் இருந்து ஏர் இந்தியாவின்,&nbsp; அதிநவீன ஏர் பஸ் A 350 ரக சொகுசு விமானம், முதல் முறையாக சென்னை வந்துவிட்டு, பெங்களூர் புறப்பட்டு சென்றது. இந்த அதிநவீன சொகுசு விமானம், எரிபொருளை சேமிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், அதிர்வுகள் இல்லாமல், காற்றில் மிகுந்த படி அதிவேகமாக செல்லும்.&nbsp; மும்பையில் இருந்து நேற்று காலை 11.25 மணிக்கு, ஏர் பஸ் A 350 என்ற மிகப்பெரிய அதிநவீன ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு, பகல் 12.48 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது.</div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>ஏர் இந்தியா நிறுவனம்</strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">அதன்பின்பு அந்த அதிநவீன மிகப் பெரிய ஏர் இந்தியா விமானம், பிற்பகல் 2.17 மணிக்கு, சென்னையில் இருந்து, புறப்பட்டு, பிற்பகல் 2.54 மணிக்கு, பெங்களூர் சென்றடைந்தது. இந்த ஏர் பஸ் A 350 ரக விமானத்தை, ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கியுள்ளது. இந்த விமானம் 350 பயணிகளில் இருந்து 400 பயணிகள் வரை பயணம் செய்ய வசதி உடையது. மேலும் இந்த விமானம், எரிபொருளை, மிகுந்த சிக்கனமாக கையாளும் தன்மையுடையது. இதனால் இந்த விமானம் 25% எரிபொருளை சேமிக்கும் திறனுடையது. இந்த விமானம் பறக்கும் போது மிகக் குறைந்த அளவே, கார்பன் டை ஆக்சைடு என்ற கழிவுகளை வெளியேற்றும்.</div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>விமான பயண நேரம்</strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">இதனால் காற்று மாசுபடாததோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதோடு இந்த விமானம் வானில் பறக்கும் போதும், புறப்படும் போதும், தரையிறங்கும் போதும், அதிக அதிர்வுகளை ஏற்படுத்தாமல், காற்றில் மிதந்தபடி பறந்து செல்லும். மேலும் இந்த விமானம் அதிவேகமாக செல்லக்கூடியது. மும்பை- சென்னை இடையே, வழக்கமாக விமான பயண நேரம் 120 நிமிடங்கள். ( 2 மணி நேரம்). ஆனால் இந்த விமானம் நேற்று, 83 நிமிடங்களில் (1 மணி 23 நிமிடங்கள்) மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளது. அதைப்போல் சென்னையில் இருந்து பெங்களூர் செல்வதற்கு வழக்கமான பயண நேரம் 70 நிமிடங்கள். ஆனால் இந்த விமானம் நேற்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு, 37 நிமிடங்களில், சென்றடைந்தது.</div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>ஏர் இந்தியா நிறுவனம்</strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கியுள்ள இந்த அதிநவீன சொகுசு விமானத்தை, சோதனை அடிப்படையில், மும்பையில் இருந்து சென்னைக்கும் அதன் பின்பு, பெங்களூருக்கும் இயக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதைப்போன்ற பெரிய ரக, அதிநவீன விமானம், சென்னை விமான நிலையத்தில், நேற்று முதல் முறையாக வந்து தரை இறங்கி, புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், அதோடு இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில், முதல் முறையாக ஏர் இந்தியா நிறுவனம், இந்த விமானத்தை இந்தியாவிற்குள், இயக்கத் தொடங்கியுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.</div>

Source link