<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.&nbsp;</p>
<p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா மாரியின் கை ரேகையை வாங்கிய நிலையில் சங்கரபாண்டியை அழைத்துக் கொண்டு ஜோசியரை சந்திக்க வருகிறாள்.&nbsp;கை ரேகை மற்றும் ஜாதகத்தை ஒப்பிட்டு பார்த்த ஜோசியர் இரண்டும் ஒருவருடைய ஜாதகம் தான் என்று சொல்ல தாரா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு ஃப்ளாஷ் கட் ஓபனாகிறது.</p>
<p>அம்மாவை இழந்த சோகம் தெரியாமல் சூர்யா துர்காவுடன் விளையாடிக் கொண்டிருக்க, இவனுக்கு அம்மாவோட ஏக்கத்தை வரவைத்து தாய் பாசத்தை காட்டி ஜெகதீஷை திருமணம் செய்ய ப்ளான் போடுகிறாள்.&nbsp;</p>
<p>இதற்கு தடையாக இருக்கும் பார்வதி மற்றும் துர்காவை காலி செய்ய முடிவெடுக்கிறாள். அதற்கேற்றார் போல பார்வதி துர்காவையும் சூர்யாவையும் கூட்டி கொண்டு கோயிலுக்கு கிளம்ப, தாரா சூர்யாவை நிறுத்திக் கொண்டு பார்வதி செல்லும் காரை லாரியால் மோத ஏற்பாடு செய்கிறாள்.&nbsp;</p>
<p>&ldquo;பார்வதியைக் கொன்று குழந்தையை வேறு எங்கேயாவது கொண்டு போய் விட்டுடுங்க&rdquo; என சொல்கிறார். பிறகு துர்கா நீலகண்டனிடம் சென்றது, மீண்டும் இங்கு வந்தது என அனைத்தும் தேவியின் கணக்கு தான் என்பதை தெரிந்து கொள்கின்றாள்.&nbsp;</p>
<p>மேலும் இதை உறுதி செய்ய ஸ்ரீஜாவிடம் &ldquo;உங்க தாத்தா சின்ன வயது குழந்தைகளோட நகை, துணி போன்றவற்றை வைத்திருக்காரா?&rdquo; எனக் கேட்க, ஸ்ரீஜா ட்ரங்க் பெட்டி விஷயத்தை சொல்ல கருப்பு உருவத்தை வைத்து அதைத் திருட திட்டம் போடுகிறாள்.&nbsp; இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed