Maari Serial: மாரி பற்றி அறியும் தாரா: கருப்பு உருவத்தை வைத்து தீட்டும் அதிரடி ப்ளான்: மாரி சீரியல் இன்று!


<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.&nbsp;</p>
<p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா மாரியின் கை ரேகையை வாங்கிய நிலையில் சங்கரபாண்டியை அழைத்துக் கொண்டு ஜோசியரை சந்திக்க வருகிறாள்.&nbsp;கை ரேகை மற்றும் ஜாதகத்தை ஒப்பிட்டு பார்த்த ஜோசியர் இரண்டும் ஒருவருடைய ஜாதகம் தான் என்று சொல்ல தாரா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு ஃப்ளாஷ் கட் ஓபனாகிறது.</p>
<p>அம்மாவை இழந்த சோகம் தெரியாமல் சூர்யா துர்காவுடன் விளையாடிக் கொண்டிருக்க, இவனுக்கு அம்மாவோட ஏக்கத்தை வரவைத்து தாய் பாசத்தை காட்டி ஜெகதீஷை திருமணம் செய்ய ப்ளான் போடுகிறாள்.&nbsp;</p>
<p>இதற்கு தடையாக இருக்கும் பார்வதி மற்றும் துர்காவை காலி செய்ய முடிவெடுக்கிறாள். அதற்கேற்றார் போல பார்வதி துர்காவையும் சூர்யாவையும் கூட்டி கொண்டு கோயிலுக்கு கிளம்ப, தாரா சூர்யாவை நிறுத்திக் கொண்டு பார்வதி செல்லும் காரை லாரியால் மோத ஏற்பாடு செய்கிறாள்.&nbsp;</p>
<p>&ldquo;பார்வதியைக் கொன்று குழந்தையை வேறு எங்கேயாவது கொண்டு போய் விட்டுடுங்க&rdquo; என சொல்கிறார். பிறகு துர்கா நீலகண்டனிடம் சென்றது, மீண்டும் இங்கு வந்தது என அனைத்தும் தேவியின் கணக்கு தான் என்பதை தெரிந்து கொள்கின்றாள்.&nbsp;</p>
<p>மேலும் இதை உறுதி செய்ய ஸ்ரீஜாவிடம் &ldquo;உங்க தாத்தா சின்ன வயது குழந்தைகளோட நகை, துணி போன்றவற்றை வைத்திருக்காரா?&rdquo; எனக் கேட்க, ஸ்ரீஜா ட்ரங்க் பெட்டி விஷயத்தை சொல்ல கருப்பு உருவத்தை வைத்து அதைத் திருட திட்டம் போடுகிறாள்.&nbsp; இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.</p>

Source link