ஆதித்யா விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் இஸ்ரோ தலைவருக்கு அதிர்ச்சி! புற்றுநோய் இருப்பது கண்டெடுப்பு!


இஸ்ரோ தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்ட  நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் கூறுகையில், “சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலின் போது சில உடல்நலப் பிரச்னைகள் எனக்கு இருந்தன . இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு அது தெளிவாக தெரியவில்லை. அதைப் பற்றிய தெளிவான புரிதலும் எனக்கு இல்லை. ஆதித்யா-எல் 1 விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் தான் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது ” என்றார். 

மேலும் காண

Source link