பட்டுக்கோட்டை அருகே தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்து

பட்டுக்கோட்டை அருகே மனோரா என்ற இடத்தில் சாலையோர தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்த வேன், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்னபாண்டி (35), பாக்கியராஜ் (60), ஞானம்மாள் (60), ராணி (40) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 
விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Source link