Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Updates BB7 Tamil Title Winner Runner-Up Prize Money Finale Winner Kamal Haasan


விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இன்றுடன் முடிவடைகிறது.  இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கிராண்ட் பைனல் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி சிறப்புனா கலைநிகழ்ச்சியுடன் எண்ட் கார்ட் போடவுள்ளது.  கடந்த ஆக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது.
மொத்தம் 23 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி  தொடங்கியது.  டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.  ஒரு மாதத்திற்கு 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். 
பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, ஆர்.ஜே. அர்ச்சனா ஆகியோர் நுழைந்தனர். இதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கப் தொடங்கியது.  முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி,  அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்தது.  
போட்டியாளர்களைப் பொறுத்தவரையில் அனைவருமே  பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய முதல் நாளில் இருந்து முட்டி மோதி டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டது மட்டும் இல்லாமல், மக்கள் மனதிலும் இடம் பிடித்து டைட்டிலை நெருங்கி வருகின்றனர். 
சண்டை சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இறுதியில் அதாவது, 98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர். 
இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

Source link