Periyar University: சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் பணியிடை நீக்கம்: அரசு அதிரடி உத்தரவு- பின்னணி இதுதான்!


<p>சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>கணிதத் துறைப் பேராசிரியராக இருந்து, கணினி அறிவியல் துறையிலும் பணிபுரிந்தவர் தங்கவேலு. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்டபோதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.</p>
<h2><strong>என்ன குற்றச்சாட்டுகள்?</strong></h2>
<p>தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குவதில் ஆகியவற்றில் தங்கவேலு நிதி முறைகேடு செய்ததாகவும் கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதேபோல, அளவுக்கு அதிகமாக கணினிகள் வாங்கி, அதிலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.&nbsp; ஆதி திராவிட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு, அவுட்சோர்சிங் பணிகளுக்கான ஆள் தேர்வில் மோசடி என பதிவாளர் தங்கவேலு மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் குவிந்தன.</p>
<p>இவற்றை விசாரித்த தமிழக அரசு, குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நிரூபணம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தது. தொடர்ந்து பதிவாளர் தங்கவேலுவைப் பணியிடை நீக்கம் செய்யவும், பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு உத்தரவிட்டது. பதிவாளர் தங்கவேலு பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<h2><strong>விசாரணைக் குழு அமைப்பு</strong></h2>
<p>முன்னதாக, சேலம்&zwnj; பெரியார்&zwnj; பல்கலைக்கழகத்தில்&zwnj; ஆசிரியர்&zwnj; நியமனத்தில்&zwnj; முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்&zwnj;, ஊழல்கள்&zwnj; நடைபெறுவதாக வரபெற்ற புகார்கள்&zwnj; தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்&zwnj; குழு அமைத்தது. குறிப்பாக உயர் கல்வித்&zwnj;துறை அரசு கூடுதல்&zwnj; செயலாளர்&zwnj; பழனிசாமி மற்றும்&zwnj; அரசு இணைச்&zwnj; செயலாளர்&zwnj; இளங்கோ ஹென்றி தாஸ்&zwnj; ஆகியோர்&zwnj; கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.&zwnj;</p>
<h2><strong>துணை வேந்தர் கைது</strong></h2>
<p>எல்லாவற்றுக்கும் மேலாக பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாநகர் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p>

Source link