<p>சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ ஒன்று பரவி வைரலாகி வருகிறது. இதில், ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நாய்க்குட்டி ஒன்றுக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். அதனை வீடியோவாகவும் எடுத்து லைக்ஸுகளுக்காக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். அந்த நாய்க்குட்டி ஏதும் அறியாமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் மது அருந்துகிறது. </p>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="hi">in logo ko itne log follow karte hai pr inke karam nahi dekhte kitne gande log hai kitna shota bacha hai jaan ja sakti hai <a href="https://twitter.com/SPsawaimadhopur?ref_src=twsrc%5Etfw">@SPsawaimadhopur</a> <a href="https://twitter.com/PoliceSawai?ref_src=twsrc%5Etfw">@PoliceSawai</a> plz🙏 iss bande pe karwahi ki jaye <a href="https://twitter.com/RajPoliceHelp?ref_src=twsrc%5Etfw">@RajPoliceHelp</a> <a href="https://twitter.com/PoliceRajasthan?ref_src=twsrc%5Etfw">@PoliceRajasthan</a> <a href="https://twitter.com/RajCMO?ref_src=twsrc%5Etfw">@RajCMO</a> <a href="https://twitter.com/SurajSDubey_?ref_src=twsrc%5Etfw">@SurajSDubey_</a> <a href="https://twitter.com/JesudossAsher?ref_src=twsrc%5Etfw">@JesudossAsher</a> <a href="https://twitter.com/asharmeet02?ref_src=twsrc%5Etfw">@asharmeet02</a> <a href="https://twitter.com/Bratin_v?ref_src=twsrc%5Etfw">@Bratin_v</a> <a href="https://t.co/nqnFMHwJ1v">https://t.co/nqnFMHwJ1v</a> <a href="https://t.co/l8odn4hq7l">pic.twitter.com/l8odn4hq7l</a></p>
— voiceforanimals11 (@vfanimals11) <a href="https://twitter.com/vfanimals11/status/1743156029549093223?ref_src=twsrc%5Etfw">January 5, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2><strong>என்ன நடந்தது..?</strong></h2>
<p>ராஜஸ்தானின் சவாய் மாதோபூரை சேர்ந்த ஷேரு போர்டா என்ற நபரும், அவருடைய நண்பர்கள் சிலரும் ஒரு காட்டு பகுதிகளில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த நாய்க்குட்டி தாகத்திற்காவும், பசிக்காகவும் அவர்களை சுற்றி சுற்றி வந்துள்ளது. இதை பார்த்த அவர்கள் ஒரு பிளாஸ்டிக் கிளாஸில் விஸ்கி மற்றும் தண்ணீர் கலந்து நாய்க்குட்டிக்கு கொடுத்துள்ளனர். மிகவும் தாகத்தில் இருந்து அந்த நாய்க்குட்டியும் இது அதையும் அறியாது அந்த மது கலந்த தண்ணீர் குடித்துள்ளது.</p>
<p>இதை முழுவதும் வீடியோ எடுத்த அந்த நண்பர்கள் குழு சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளுவதற்காக பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த பதிவுகளில் கீழ் கண்டனங்களை பதிவிட்டனர். </p>
<p>இந்தநிலையில், ராஜஸ்தான் காவல்துறையினர் ஹெல்ப் டெஸ்க் ஆன் எக்ஸ் மூலம் உள்ளூர் காவல்துறையினர் டேக் செய்து, விஷயத்தை கண்காணிக்கும்படி கூறியது. இதற்கு பதிலளித்த உள்ளூர் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்தனர். </p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="hi"><a href="https://twitter.com/SPsawaimadhopur?ref_src=twsrc%5Etfw">@SPsawaimadhopur</a> कृपया मामले को देखें।</p>
— Rajasthan Police HelpDesk (@RajPoliceHelp) <a href="https://twitter.com/RajPoliceHelp/status/1743170795747307539?ref_src=twsrc%5Etfw">January 5, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2><strong>விலங்குகள் மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள்: </strong></h2>
<p>நாய், பூனை போன்ற விலங்களுக்கு மது கொடுப்பது மிகவும் ஆபத்தான செயல்களில் ஒன்று. இதற்கு காரணம், விலங்குகளில் உள்ள கல்லீரல் ஆல்கஹாலை பிரிக்கும் தன்மை கொண்டது கிடையாது. ஆல்கஹாலால் விலங்குகளுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும். மேலும், விலங்களுக்கு உடல் வெப்பநிலையை குறைத்து சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும். </p>
<h2><strong>இது முதல்முறையல்ல – கடுமையான நடவடிக்கை தேவை:</strong></h2>
<p>இது மாதிரியான சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் இதேபோன்ற சம்பவத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் இளைஞர்கள் குழு ஒன்று நாய்க்குட்டியை மது அருந்த செய்து அதனை வீடியோவாக பதிவிட்டனர். வீடியோவை ஆதரவாக கொண்டு, சம்பவ இடத்தில் இருந்த 4 பேர் மீது விலங்கு பிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்தியாவில் விலங்குகளை பாதுகாக்கவும், அத்தகையை செயல்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
us wahl basketball wetten system deutschland
online wette My homepage … ncaa basketball wetten – Latrice,
sites de bonus apostas online [primeassessoriaesportiva.Com.br] gratis
Site De aposta é Legal super heinz
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-
-

41 ஆண்டுகள் அன்பு நினைவுகள்! மறைந்த மனைவி குறித்து உருக்கமாகப் பதிவிட்ட ஜே.சி.டி. பிரபாகர் | JCD Prabhakar’s Emotional Note for Late Wife Grace | ACTPnews.com
-

“இந்த நிலைமையை மாத்தணும். நாம யாரும் அரசியல்வாதி ஆக வேண்டியதில்லை” – பிரகாஷ் ராஜ் | Prakash Raj Slams PM Modi at Chennai Event: “People Should Do Politics, Not Politicians | ACTPnews.com
-

யார் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு இருக்கிறது? முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்? – பெ.சண்முகம் கேள்வி | ACTPnews.com
-

புதுச்சேரி: அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைக்குமா?’ – `பட்ஜெட்’ பொதுநல வழக்கால் சிக்கல் | ACTPnews.com



















pferderennen basketball Wetten doppeltes Ergebnis