மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகின்றன. கயானாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வரமா 51 ரன்களை குவித்தார். இசான் கிசான் 27 ரன்களையும் ஹர்திக் பாண்டியா 24 ரன்களையும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில், ஹொசைன், ஜோசப், செப்பர்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பின்னர், 153 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 18.3ஆவது ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் நிக்கலஸ் பூரன் 4 சிக்சர்கள் 6 ஃபோர்களை விளாசி 67 ரன்களை குவித்தார். இதனால், அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்திந அணி தரப்பில், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், மீதமுள்ள 3 போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed