CSK vs KKR Highlights: ஜடேஜா, தேஷ்பாண்டே மிரட்டல்! கொல்கத்தாவை சுருட்டி வீசிய சென்னைக்கு 138 ரன்கள் டார்கெட்!


<p>சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்த தொடரில் பேட்டிங்கில் ஆதிக்கம் காட்டும் கொல்கத்தா அணியும், 5 முறை சாம்பியனான சென்னை அணியும் ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார்.</p>
<h2><strong>அதிரடி தொடக்கம்:</strong></h2>
<p>இதையடுத்து, ஆட்டத்தை பில் சால்ட் &ndash; சுனில் நரைன் தொடங்கினர். &nbsp;ஆட்டத்தின் முதல் பந்திலே துஷார் தேஷ்பாண்டே பந்தில் சால்ட் டக் அவுட்டானார். அடுத்து நரைன் &ndash; ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். சுனில் நரைனுக்கு தோள்பட்டையில் வலி இருந்தாலும் அவர் தனது வழக்கமான அதிரடியைத் தொடர்ந்தார். அவருக்கு ரகுவன்ஷியும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.</p>
<p>இதனால், 5 ஓவர்களிலே கொல்கத்தா அணி 50 ரன்களை எட்டியது. பவர்ப்ளேவிற்கு பிறகும் கொல்கத்தாவின் அதிரடி தொடரும் என்று எதிர்பார்த்த கே.கே.ஆர். ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், சுழல் ஜாம்பவனுமாகிய ஜடேஜா சுழலில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த ரகுவன்ஷி எல்.பி.டபுள்யூ ஆனார். அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.</p>
<h2><strong>சுழலில் மிரட்டிய ஜடேஜா:</strong></h2>
<p>அதே ஓவரில் கொல்கத்தாவிற்காக அதிரடி காட்டிக் கொண்டிருந்த சுனில் நரைன் ஜடேஜாவின் அதே ஓவரில் அவுட்டானார். அவர் 20 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் ரன் எடுக்க திணறினர். இதைப்பயன்படுத்திய சென்னை அணி தொடர்ந்து சுழல் தாக்குதல் நடத்தியது. ஜடேஜா வீசிய 2வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.</p>
<p>5 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் &ndash; இளம் வீரர் ராமன்தீப் நிதானமாக ஆடினர். தீக்&zwnj;ஷனா, ரவீந்திரா, ஜடேஜா என சென்னை தொடர்ந்து சுழல் தாக்குதல் நடத்தியது. களமிறங்கியது முதலே அதிரடியாக ஆட முயற்சித்த ராமன்தீப் தீக்ஷனா பந்தில் சிக்ஸர் அடித்த அடுத்த பந்தில் போல்டானார். இதனால், 85 ரன்களுக்கு கொல்கத்தா 5 விக்கெட்டுகளை இழந்தது.</p>
<h2><strong>சொதப்பிய கொல்கத்தா:</strong></h2>
<p>இதையடுத்து, ஸ்ரேயாஸ் &ndash; ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர். கட்டாயம் அடித்து ஆட வேண்டிய சூழலில் இந்த ஜோடி சேர்ந்தது. ஆனாலும், சென்னை அணி சிறப்பாக பந்துவீசியதால் இவர்களால் ரன்களை எடுக்க முடியவில்லை. முதல் 5 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்த கொல்கத்தா 15.1 ஓவர்களில்தான் 100 ரன்களை எட்டியது. &nbsp;நீண்ட நேரமாக களத்தில் நின்று அதிரடிக்கு முயற்சித்த ரிங்குசிங் 9 ரன்களில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் போல்டானார். இதையடுத்து, 17வது ஓவரில் அதிரடி வீரர் ரஸல் களமிறங்கினார்.</p>
<p>சென்னை வீரர்கள் ஸ்லோயர் பந்துகளையும், ஒயிட் யார்க்கர்களையும் வீசி நெருக்கடி அளித்தனர். தேஷ்பாண்டே வீசிய பந்தில் பவுண்டரி அடித்த அடுத்த பந்திலே ரஸல் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு அவுட்டானார். மைதானத்தில் முழுக்க முழுக்க சென்னை பந்துவீச்சு ஆதிக்கம் இருந்தது. விக்கெட்டுகள் விழுந்தாலும் ஸ்ரேயாஸ் களத்தில் இருந்தார். ஆனாலும், அவரும் ரன்களை எடுக்கத் தடுமாறினார். ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி ஓவரில் 34 ரன்களுடன் அவுட்டானார்.&nbsp;&nbsp;கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 138 ரன்களை 9 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது. சென்னை அணிக்காக ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.&nbsp;</p>

Source link