south indian actress samantha ruth prabhu latest bikini pics set fire on social media fans enjoyed | Samantha: நுண்சிலை செய்திடும் பொன் சிலையே! பிகினி உடையில் மனதை கவர்ந்த சமந்தா


சமந்தா நீண்ட நாட்களாக நடிப்பில் இருந்து விலகியிருந்தாலும், நடிகையின் பெயர் ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதுதான் இன்றைய டிரெண்டிங் டாபிக். 
சமந்தா:
தென்னிந்திய திரையிலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் நடிக்கும் தனது ஒவ்வொரு படத்திலும் தன்னை யார் என்று நிரூபணம் செய்வார். திரையில் எந்த விதமான கதாபாத்திரத்தையும் ஏற்று நேர்த்தியாக நடிப்பவர். 
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக படத்தில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரையுலகு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை இவரே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வெளியிட்டார். சமீபத்தில்  சமந்தா மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அதில் இருந்து மீண்டதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பு காரணமாகதான் சமந்தா படத்தில் நடிப்பில் இருந்து விலகி இருந்ததாகவும் தெரிகிறது. 
பிகினி உடை:
இந்தநிலையில், சமந்தா ரூத் பிரபு தற்போது மலேசியாவில் உள்ள லங்காவியில் தனது ஓய்வு காலத்தை ஜாலியாக எஞ்சாய் செய்து வருகிறார். நேற்று மாலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 
அந்த புகைப்படத்தில் சமந்தா, பிரவுன் நிற பிகினியில் ஒரு குளத்தில் ஜாலியாக குளிக்கிறார். இந்த பிகினி உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் டாப் டிரெண்டிங். முன்னதாக, சமந்தா மலேசியாவில் தான் இருந்த பல படங்களை பகிர்ந்து கொண்டார். 

படத்தில் இருந்து விலகல்: 
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் ‘ஊ சொல்றியா மாமா ‘ பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சமந்தா ரூத் பிரபு . கடந்த ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படத்தில் இருந்து சமந்தா நடிப்பு உலகில் இருந்து விலகி இருக்கிறார் .
குஷி படத்திற்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம், சமந்தா தனது உடல்நிலையில் கவனம் செலுத்துவதற்காக குறைந்தது ஒரு வருடத்திற்கு படத்தில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, மயோசிடிஸ் சிகிச்சைக்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, தற்போது உலகம் முழுவதும் பயம் செய்து வந்தார். இந்தநிலையில்தான், சமந்தா மீண்டும் படத்தில் நடிக்க தொடங்க இருப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு இந்த பிரச்சனை ஏற்பட்ட அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. இது எனக்கு மிகவும் கடினமான ஆண்டு.” என தெரிவித்தார். 
2022 ஆம் ஆண்டில், அவர் தனது ‘யசோதா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்தினார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சிட்டாடல் என்ற வெப் தொடரில் சமந்தா நடிக்கவுள்ளார் . வருண் மற்றும் சமந்தா இணையும் இந்த வெப் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், அதன் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் காண

Source link