<p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போதே 10 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>விவசாயி வீட்டில் நகை கொள்ளை&nbsp;</strong></p>
<p style="text-align: justify;">விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்திற்குட்பட்ட&nbsp; பிடாகம் குச்சிபாளையம் கிராமத்தில்&nbsp;காந்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.&nbsp; விவசாயியான இவர் நேற்று இரவு மனைவியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அதிகாலையில் அவரது மனைவி எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது அறையின் உள்ள பிரோ கதவுகள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>போலீசார் விசாரணை&nbsp;</strong></p>
<p style="text-align: justify;">கொள்ளை சம்பவம் குறித்து&nbsp; காந்தியின் மகன் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைரேகை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;வீட்டில் காந்தி மற்றும் அவரது மனைவி தூங்கி கொண்டிருந்த போதே வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை அகற்றிவிட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 5 லட்சம் மதிப்பிலான நகைகள், பொருட்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.&nbsp;</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed