<p>குடவோலை முறையை பெருமைப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி: டெல்லி அணிவகுப்பில் சுவாரஸ்யம்</p>
<p>டெல்லியில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில், குடவோலை முறையை பெருமைப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்தி இடம்பெற்றது. </p>
<p>டெல்லியில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது. இதில் குடவோலை முறையை பெருமைப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன. </p>
<p> நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு பெண்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. </p>
<p>டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு மாநிங்களில் இருந்து வந்திருந்த 1500 பெண் நடனக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான காரணம் என்னவென்றால் பழங்காலத் தமிழகத்தின் தேர்தல் நடைமுறையை விளக்கும் வகையில் குடவோலை முறை ஊர்தி அணிவகுப்பு இடம்பெற்றது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>