karthigai deepam serial today february 12th zee tamil episode written update


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா, ரூபஸ்ரீ, மாயா ஆகியோர் கூட்டு சேர்ந்து போஸ்டரைக் கிழிக்க ப்ளான் போட்டு இருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
அதாவது, ரவுடிகள் போஸ்டரை கிழித்துக் கொண்டிருக்க, இளையராஜா இதை பார்த்து விடுகிறான். அதன் பிறகு அவன் ரவுடிகளிடம் “எதுக்கு போஸ்டரை கிழிக்கறீங்க?” என்று கேட்க, அவனையும் அடித்து விடுகின்றனர். 
உடனே இளையராஜா கார்த்திக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துகிறான். இதனால் கடுப்பாகும் கார்த்திக் ரவுடிகளிடம் சண்டை போடுகிறான். அபிராமிக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இதை வீடியோ எடுத்து அபிராமிக்கு அனுப்பி, “என்ன உன் பையன் இப்படி சண்டை போடுறான்?” என்று கேட்கிறாள். 
இதனால் அபிராமி இதை அவமானமாக நினைத்து அருணாச்சலத்திடம் “கார்த்திக்கு எதுக்கு இந்த வேலை? ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்?” என சொல்லி வருத்தப்பட்டு தீபாவைத் திட்ட, கண் கலங்குகிறாள். 
பிறகு கார்த்திக் மீண்டும் அனைத்து இடங்களிலும் போஸ்டரை ஒட்டச் சொல்ல, “போஸ்டர் ஒட்டியவர்கள் வேறு இடத்தில் வேலை இருப்பதால் வர முடியாது“ என சொல்லி விடுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Director Nagaraj: குடித்துவிட்டு விஜய்யிடம் கதை சொன்ன இயக்குநர்! நல்ல வாய்ப்பை தவறவிட்ட ‘தினந்தோறும்’ நாகராஜ்!
BB Aishu: “மகள் பிக்பாஸ் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல்: இப்படி விமர்சிக்காதீங்க” – ஐஷூவின் தந்தை கோரிக்கை!

மேலும் காண

Source link