<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.&nbsp;</p>
<p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் மற்றும் வைகுண்டம் கோயிலுக்கு வர, பாக்கியம் சௌந்தர பாண்டியிடம் விஷயத்தை சொல்லி வரவேற்க கூப்பிட, சௌந்தர பாண்டி வர மறுக்கிறார்.&nbsp;</p>
<p>இதனைத் தொடர்ந்து ரொம்ப ஓவராக பண்ணா சந்தேகமும் வந்து விடும் என எடுத்துச் சொல்லி முத்து பாண்டியும் பாண்டியம்மாவும் சௌந்தரபாண்டியை கூட்டிச் செல்கின்றனர். வேண்டா வெறுப்பாக இருவரையும் வரவேற்க ஷண்முகம் சிரித்த முகத்துடன் வரவேற்றால் தான் வருவோம் என அடம்பிடிக்கின்றனர்.&nbsp;</p>
<p>வேறு வழியின்றி சௌந்தரபாண்டி சிரித்துக் கொண்டே அவர்களை வரவேற்க, இருவரும் கோயிலுக்குள் வருகின்றனர். கோயிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் கவிதா, ஷண்முகம் வந்ததும் அவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி தனக்கு அக்கா மாமாவை தவிர யாரும் இல்லை எனச் சொல்கிறாள்.&nbsp;</p>
<p>அதைக் கேட்டு ஷண்முகம் இனிமே உனக்கு அண்ணனாக இருந்து இந்தக் கல்யாணத்தை நான் நடத்தி கொடுக்கிறேன் என வாக்கு கொடுக்கிறான். பிறகு தட்டு மாற்றுவதற்கான வேலைகள் நடக்கிறது. இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed