Nadda TN Visit: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக:
தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வென்றுவிட வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
இதற்காக, பாஜக மூத்த தலைவர்கள், தமிழ்நாட்டில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகாவை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ் கலாசாரத்தை திமுக, காங்கிரஸ் சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோடி எப்போதும் தமிழ் கலாசாரம், மொழி மற்றும் இலக்கியத்தில் அக்கறை காட்டுகிறார். சர்வதேச அரங்குகளில், தமிழ் கவிஞர்களின் கவிதைகளை வாசித்து மேற்கோள் காட்டுகிறார்.
திமுக, காங்கிரஸை வெளுத்து வாங்கிய நட்டா:
அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டபோது அங்கு செங்கோல் வைக்கப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்தார். ஆனால், காங்கிரஸும், திமுகவும் எப்போதும் தமிழ் கலாச்சாரத்தை, சனாதன கலாசாரத்தை களங்கப்படுத்துகிறது.
பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் இந்தியா பல வளர்ச்சிகளை கண்டுள்ளது. ஒரு பெரிய பாய்ச்சல் நடந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக அனைத்து பொருளாதாரங்களும் சிதைந்துவிட்டன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அமெரிக்கப் பொருளாதாரம் சிக்கலில் இருந்தது. ஐரோப்பிய பொருளாதாரம் சிக்கலில் இருந்தது. ஜப்பானிய பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. ஆஸ்திரேலிய பொருளாதாரம் சிக்கலில் இருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் இந்தியா 11 வது இடத்தில் இருந்த நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளோம்” என்றார்.
“அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக இருக்கும் இந்தியா”
முன்னதாக, அரியலூரில் பேசிய நட்டா, “எலக்ட்ரானிக்ஸ் துறையில் நமது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், மொபைல் போன்கள் முதன்மையாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
இன்று, மேட் இன் இந்தியா என்று பெயரிடப்பட்ட மொபைல் போன்களைப் பார்க்கிறீர்கள். 97 சதவீத மொபைல்கள் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. நாம், ஜப்பானையும் அமெரிக்காவுடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றினோம்.
ஆனால் இன்று, பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது. மருந்துத் துறையில், இந்தியா மிகவும் பயனுள்ள உற்பத்தியாளராக மாறியுள்ளது.
மலிவான மருந்தை உற்பத்தி செய்கிறது. எனவே, இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது, நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக நீங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கும் போது, ​​இந்தியா இன்னும் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும்” என்றார்.
 

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed