Bengaluru Water Crisis: பெங்களூரு மைதானத்தில் பராமரிப்பு பணிக்கு குடிநீர் பயன்படுத்தப்பட்டதா? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!


<p class="p3"><strong>சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவதாக தகவல் வெளியானதையடுத்து<span class="s1">, </span>என்ஜிடி<span class="s1">(</span>தேசிய பசுமை தீர்ப்பாயம்<span class="s1">) </span>இந்த விஷயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது<span class="s1">.</span></strong></p>
<p class="p3">கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் கடந்த<span class="s1"> 20 </span>ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது<span class="s1">. </span>நகரில்<span class="s1"> 3,000</span>க்கும் மேற்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீர் லாரியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்<span class="s1">. </span>கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தொடங்கிவிட்டது<span class="s1">. </span>ஒரு கோடியே<span class="s1"> 40 </span>லட்சம் மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில்<span class="s1">, </span>மக்களின் அன்றாட தண்ணீர் தேவையில்<span class="s1"> 1,500 </span>மில்லியன் லிட்டர் பற்றாக்குறை உள்ளது<span class="s1">. </span>இச்சூழலில் தண்ணீர் சேமிப்பு குறித்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது<span class="s1">. </span>முன்னதாக<span class="s1">, </span>மத்திய அரசின் வறட்சி நிவாரணம் கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது<span class="s1">.</span></p>
<h2 class="p3"><strong>பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு<span class="s1">:</span></strong></h2>
<p class="p3">இந்நிலையில் தான் பெங்களூருவில் உள்ள எம்<span class="s1">.</span>சின்னசாமி மைதானத்தில் பராமரிப்பு வேலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது<span class="s1">. </span>இச்சூழலில்<span class="s1"><span class="Apple-converted-space">&nbsp; </span></span>நகரில் அதிகரித்து வரும் தண்ணீர் நெருக்கடிக்கு மத்தியில்<span class="s1">, </span>ஐபிஎல் போட்டிகளின் போது சின்னசாமி ஸ்டேடியத்தில் தண்ணீர் உபயோகம் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறும், சுத்திகரிக்கப்பட்ட நீர் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும்&nbsp; கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இது தொடர்புடைய மாநில அதிகாரிகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம்<span class="s1"> (NGT) கேள்வி எழுப்பியுள்ளது.</span></p>
<p class="p3">பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்<span class="s1"> (BWSSB) </span>மற்றும் கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்<span class="s1"> (KSPCB) </span>ஸ்டேடியத்தில் பயன்படுத்தப்படும் நீரின் அளவு மற்றும் ஆதாரம் குறித்த தகவல்களை மே<span class="s1"> 2 </span>ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு<span class="s1"> NGT </span>கேட்டுக் கொண்டுள்ளது<span class="s1">. </span>இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாய<span class="s1"><span class="Apple-converted-space">&nbsp; </span></span>தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் உறுப்பினர் டாக்டர் ஏ<span class="s1">. </span>செந்தில் வேல் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்<span class="s1">. </span>முன்னதாக<span class="s1">, </span>ஐ<span class="s1">.</span>பி<span class="s1">.</span>எல்<span class="s1"> 17 </span>வது சீசனில் இதுவரை<span class="s1"> 3 </span>போட்டிகள் நடைபெற்றுள்ளன<span class="s1">. </span>இந்த போட்டிகளுக்காக சுமார்<span class="s1"> 75,000 </span>லிட்டர் தண்ணீர் உபயோகிக்கப்பட்டிருக்கிறது<span class="s1">. </span>ஏப்ரல்<span class="s1"> 15, </span>மே<span class="s1"> 4, </span>மே<span class="s1"> 12 </span>மற்றும் மே<span class="s1"> 18 </span>ஆகிய தேதிகளில் நான்கு போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது<span class="s1">. </span></p>
<h2 class="p3">கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மறுப்பு<span class="s1">:</span></h2>
<p class="p3">கார்நாடக மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ஐ<span class="s1">.</span>பி<span class="s1">.</span>எல் போட்டிகளின் போது பயன்படுத்தவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்<span class="s1">. </span>பிட்ச் அல்லது அவுட்ஃபீல்ட் பராமரிப்பு போன்ற பணிகளுக்கு நிலத்தடி நீர் அல்லது குடிநீரைப் பயன்படுத்தவில்லை என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்<span class="s1">.<span class="Apple-converted-space">&nbsp; </span></span>இதற்கிடையில்<span class="s1">, </span>தோட்டக்கலை மற்றும் வாகனம் கழுவுதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசு கடுமையான தடையை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
<p class="p3">&nbsp;</p>
<p class="p3">&nbsp;</p>

Source link