<p>தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படங்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசு பல நல்லதிட்டங்களை நடைமுறைப்படுத்தவும் காரணமாக இருந்துள்ளது. குறிப்பாக சூர்யா, மணிகண்டன் நடிப்பில் வெளியான “ஜெய் பீம்” திரைப்படம், பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் அவர்களுக்கு அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட அநீதிகளையும் எடுத்துரைக்கும் விதமாக வெளிவந்தது. இது உண்மைக் நிகழ்வை மையப்படுத்திய படமாக இருந்தாலும், இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கம் ஆட்சியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவும் பல்வேறு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. </p>
<p>திரைப்படங்களினால் பல்வேறு சமூக மாற்றங்கள் நடந்துவரும் இந்த நவீன உலகில் மிகவும் பிற்போக்குத்தனமான திரைப்படங்களும் வெளிவருவதை பார்க்கத்தான் முடிகின்றது. அந்த வரிசையில் இடம்பிடிக்க தயாராக உள்ள குழந்தை <span class="style-scope yt-formatted-string" dir="auto">C/O கவுண்டம்பாளையம். இந்த படத்தினை இயக்கி நடித்துள்ளார் நடிகர் ரஞ்சித். இந்த படத்தின் டீசர் கடந்த 16ஆம் தேதி அதாவது மாட்டுப்<a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> தினத்தன்று வெளியாகி உள்ளது. மொத்தம் 30 நொடிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரில் இடம் பெற்றுள்ள வசனங்கள், “நாமெல்லாம் மாட்டுக்கறி திங்கறவங்கடா. ஒருமுறை ருசி கண்டுட்டா நம்ம காலடியிலேயே கெடப்பாளுக, நானு ஓசிக மாநிலத் தலைவர், காதலிக்கும்போது சாதி தேவையில்லை, ரிஜிஸ்ட்டர் ஆஃபீஸ் போகும்போது தேவையில்லை. ஏன் பெத்த அப்பா அம்மாவே தேவையில்ல.. சமத்துவம்” இந்த வசனங்கள்தான். </span></p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/tGXNaV10XOY?si=qBaDIVuKc5h57WAN" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p><span class="style-scope yt-formatted-string" dir="auto">இந்த வசனங்கள் மூலம் இந்த படத்தின் இயக்குநரும் நடிகருமான ரஞ்சித் கூற வருவதை ரசிகர்களால் புரிந்துகொள்ள முடிந்தாலும், அவரே இந்தபடத்தின் கதை என்பது ” நாடகக்காதல்” எனக் கூறியுள்ளார். நாடகக் காதல் என்ற ஒற்றை வார்த்தையை எடுத்துக்கொண்டு அவர் பேசியுள்ளது முழுக்க முழுக்க விஷமத்தனமான கருத்துக்களைக் கக்கியுள்ளார் என்றே மக்களால் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் காதலித்தவர்கள் தாங்களாகவே பிரிவதை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்று இன்றுவரை பாராட்டைப் பெற்றுள்ள படங்கள் உள்ளன. உதாரணத்திற்கு நாடோடிகள், ஆதலால் காதல் செய்வீர் போன்றவை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சி செய்யும் போக்குகளின் ஒருபகுதியாகத்தான் இந்த படத்தின் டீசர் அமைந்துள்ளது. </span></p>
<p><span class="style-scope yt-formatted-string" dir="auto">இந்த படத்தின் டீசரில் மாட்டுக்கறி, ஓசிக போன்ற வார்த்தைகள் பட்டியலின சமூகத்தையும், தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு கட்சியையும் அந்தக் கட்சியின் தலைவரையும் குறிவைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். விமர்சகர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் படத்தின் இயக்குநர் ரஞ்சித் இந்த படம் ஒரு உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது எனக் கூறி, நேரடியாகவே அந்த சமூகத்தின் பெயரையும் அந்த கட்சியின் பெயரையும் கட்சியின் தலைவரின் பெயரையும் குறிப்பிடலாமே? ஆனால் படத்தின் டீசர் தொடங்கும்போது இது உண்மை சம்பவங்ங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் என குறிப்பிடவில்லை. இதன் மூலம் தெரியவருவது, நடிகர் ரஞ்சித் இயக்குநர் அவதாரம் எடுக்க ஒரு சமூக மக்களையும் ஒரு அரசியல் கட்சியையும் அதன் தலைவரையும் வேண்டுமென்றே இட்டுக்கட்டி குளிர்காய நினைக்கின்றார் என்றே தெரிகிறது. </span></p>
<p><span class="style-scope yt-formatted-string" dir="auto">மேலும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ள முதல் வசனமான நாமெல்லாம் மாட்டுக்கறி திங்கறவங்கடா. ஒருமுறை ருசி கண்டுட்டா நம்ம காலடியிலேயே கெடுப்பாளுக எனும் வசனத்தின் மூலம் பெண்களையே தரக்குறைவாக சித்தரித்துள்ளது அம்பலமாகின்றது. அதாவது அந்த வசனம் மாட்டுக்கறி சாப்பிடும் ஒருவருடன் உடலறவு கொள்ளும் பெண் உடலுறவுக்காகவே அந்த நபரை நாடியிருப்பார் என பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பீப் பாடலுக்கு கொதித்தெழுந்த மாதர் சங்கங்கள் இந்த டீசரைக் கவனிக்கவில்லையா என்ற கேள்வி எழாமல் இல்லை. </span></p>
<p><span class="style-scope yt-formatted-string" dir="auto">உள்ளதைச் சொல்கின்றேன், என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நடந்ததை படமாக்கியுள்ளேன் எனக் கூறி நடிகர் ரஞ்சித் செய்ய முயல்வது இருநபர்களுக்கு இடையே நடந்ததை ஒட்டுமொத்தமாக இரண்டு சமூகங்களை எதிரெதிர் துருவங்களில் நிறுத்தி அவர்களை எதிரிகளாக மாற்ற முயல்வது அப்பட்டமாகத் தெரிகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் காதலர்கள் பிரிவை கதைக்களமாகக் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதைவிடுத்து நடிகர் ரஞ்சித் தேர்ந்தெடுத்துள்ள திரைக்கதை அவரின் காழ்புணர்ச்சியினை தோலுரித்துக் காட்டுகின்றது. </span></p>
<p><span class="style-scope yt-formatted-string" dir="auto">இப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ரஞ்சித் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மாநில தலைநகர் தொடங்கி மாவட்டத் தலைநகர் வரை ஹேப்பி ஸ்டீரீட்ஸ் மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற கருத்தினை தெரிவித்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் இவரை பூமர் என கமெண்ட் செக்ஸனில் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. </span></p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
online personalized casino sign, Cecile, winners usa, legit casino sites canada and new zealandn real money pokies, or best usa…
apuestas ciclismo vuelta anticipadas nba
cocorico shop torzon market darknet
google casino tragamonedas Juegos De Bingos Y Casinos Gratis
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

‘விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!’ – பின்னணி என்ன? |“Udhayanidhi Criticises Him; CM Vijay Suddenly Enters the Assembly in the Evening!” – What’s the Background? | ACTPnews.com
-

Annamalai urges immediate action to rescue Tamils stranded in Nepal – நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை – அண்ணாமலை வலியுறுத்தல் | ACTPnews.com
-

‘தம்பி நீ எழுந்தா தான் சண்டை வருது, 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க.!’- ஆதவ் அர்ஜுனா குறித்து பிரேமலதா | premalatha vijaykanth slams aadha arjuna | ACTPnews.com
-

‘இது சட்டமன்றமா… இல்ல சண்டை மன்றமா?’ – திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த் |“Is This a Legislative Assembly or a Fight House?” – Premalatha Vijayakanth Erupts Suddenly | ACTPnews.com
-

இமயமலை உருகினால் 200 கோடி பேருக்கு ஆபத்து – நேபாள அமைச்சர்|‘What Melts in Himalayas Rises in Sea’: Nepal FM’s Big Warning | ACTPnews.com


















empresa de apuestas deportivas, Leonardo, sevilla juventus