தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் கோவிலுக்கு போயிட்டு எழில் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ராமையா சர்டிபிகேட்டுடன் வந்துட்டியா என்று கேட்க சுடர் கொண்டு வந்திருப்பதாக சொன்னதும் அவளை உள்ளே அழைத்து வர கனகவள்ளி நீ குழந்தைகளை நல்லபடியாக பார்த்துப்பேன்னு நம்புறேன் என்று வேலைக்கு எடுத்து கொள்வதாக சொல்கிறாள்.
அதன் பிறகு காபி கொடுக்க சுடர் காபியோட நிறுத்திடுவாங்க போலயே, எனக்கு வேற பயங்கரமா பசிக்குதே என்று யோசிக்கிறாள், பிறகு செல்வி சுடருக்கு ரூமை காட்ட அதை பார்த்து இவ்வளவு பெரிய ரூமா? நான் மட்டும் தான் படுத்து தூங்க போறானா? என மெய் சிலிர்த்து போகிறாள். அடுத்து அவளுக்கு அப்பா சொன்ன விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்து போகிறது.
ராமையா அங்கு வர அவரின் பெயரை கேட்டதும் கலாய்த்து பாட்டு பாடி ஆட்டம் போடுகிறாள், இந்த வேலையை கொடுத்த கனகவல்லி மேடம்க்கு நன்றி சொல்லணும் என்று சுடர் சொல்ல உன்ன ரெகமெண்ட் பண்ணது குழந்தைங்க தான் என்று சொல்ல குழந்தைகள் சுடரை டார்ச்சர் பண்ணனும், கொஞ்ச நேரம் ஆனதும் நம்ம வேலையை ஸ்டார்ட் பண்ணிடனும் என்று பிளான் போடுகின்றனர்.
பிறகு சுடர் குழந்தைகளுக்கு நன்றி சொல்லி என்மேல உங்களுக்கு அவ்வளவு பாசமாக என்று கேட்க குழந்தைகள் ஆமாம் என்று நக்கலாக சொல்கின்றனர், பிறகு உங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாது தான் சாரி எனவும் சொல்கிறாள். பிறகு மனோகரி எழில் போட்டோ முன்பு நின்று எதையோ பேசி கொண்டிருக்க எழில் அங்கு வந்து விட சமாளித்து வெளியே வருகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 
மேலும் படிக்க 
Valentine’s Day: காதல் கல்யாணத்துல இருக்கும் மைனஸ்.. வெளிப்படையாக பேசிய சரண்யா பொன்வண்ணன்!
Valentine’s Day: பள்ளியில் மட்டும் 3 காதல்கள்.. சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports