<h2 dir="auto" style="text-align: justify;"><strong>தாதா ஸ்ரீதர் </strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">காஞ்சிபுரம் கோவில் நகரமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் கொலை நகரமாக காட்சியளித்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விட்டு வந்த ஸ்ரீதர் தனபாலன் என்பவர் படிப்படியாக வளர்ந்து, காஞ்சிபுரம் நகரத்தில் முக்கிய தாதாவாக வலம் வரத் துவங்கினார். ஒரு காலகட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கும், அனைத்து வியாபாரிகள் மற்றும் பல்வேறு தொழில் செய்யும் உரிமையாளர்கள் அனைவரும் அவருக்கு பயந்து மாமுல்கள் கொடுத்து வந்தனர்.</div>
<div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/03/192fd0e2538e63b40769519a18dafec51709434360777113_original.jpg" /></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;">அச்சமயத்தில் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொலை மற்றும் மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்வது ஆகிய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு காவல்துறையினர், எடுத்த அதிரடி நடவடிக்கையால் தாதா ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு காஞ்சிபுரம் நகரில் அவரது, இடத்தை பிடிப்பதற்கு 15க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் அரங்கேறியது. </div>
<h2 dir="auto" style="text-align: justify;">ரவுடி தினேஷ்குமார் -தனிகா</h2>
<div dir="auto" style="text-align: justify;">ஸ்ரீதரின் முக்கிய கூட்டாளிகளான ரவுடி தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 30 வழக்குகளும், ரவுடி </div>
<div dir="auto" style="text-align: justify;">தனிகா என்பவர் மீது 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 51 வழக்குகளும் உள்ளன. ஒரு கட்டத்தில் தினேஷ் குமார் மற்றும் தனிகா ஆகியோர் இருவரும் தனி கோஷ்டிகளாக பிரிந்து கொண்டு, தங்களில் யார் அடுத்ததாக தாதா போட்டியில் 15-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்தனர். இதனை அடுத்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</div>
<div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/03/fac86248817151b554597079ffe529eb1709434396910113_original.jpg" /></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;">இதில் தினேஷ் அணியில் பல குட்டி ரவுடிகள் இடத்தைப் பிடிப்பதற்காக கொலை சம்பவங்களை அரங்கேற்றினர். அதில் தினேஷ் கூட்டாளியாக ஷேக் காதர் பல்வேறு கொலை சம்பவங்களில், ஈடுபட்டு வந்தார். ஷேக் காதர் மீது 5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது . அவ்வப்பொழுது காவல் காவல்துறையினால் கைது, செய்யப்பட்டு ஜாமினில் வெளி வருவதும் தொடர்கதை ஆகி வருகிறது.</div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>மனைவி விஜயலட்சுமி புகார் </strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">இந்நிலையில் காதர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்பொழுது இருவருக்கும் ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்த காதர் கடந்த ஜூலை மாதம் ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்தநிலையில் இன்று மதியம் பழந்தண்டலம் என்ற பகுதியில் தனது தாயைப் பார்க்க காதரை, காஞ்சிபுரம் தனிப்பட்ட போலீசார் இன்று மதியம் கைது செய்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட காதர் இதுவரை எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும், தரவில்லை என்று அவரது மனைவி விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.</div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>என்கவுண்டர் பயம் </strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">கைது செய்யப்பட்டு நான்கு மணி நேரத்துக்கு மேலாகியும் எந்த தகவலும் தராதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனுதாரர் விஜயலட்சுமி வந்திருந்தபொழுது செய்தியாளர்களை சந்தித்த பொழுது, "என் கணவருடைய நிலைமை என்னவென்று இதுவரை எனக்கு தெரியவில்லை, நான் வழக்கறிஞராக இருக்கிறேன்.</div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/03/80f67ae132feedf74a519027e733c7b91709434445552113_original.jpg" /></div>
<div dir="auto" style="text-align: justify;">அவர் திரும்பி வருகின்ற நிலையில் ஏன் அப்படி செய்கிறார்கள். எஸ். பி. அவர்களிடம் மனு கொடுக்க வந்தபொழுது அவர் இங்கு இல்லை எனக் கூறுகிறார்கள். என்னுடைய வீட்டுக்காரர் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. கணவரை கைது செய்த காவல்துறையினர் இதுவரை எந்த தகவலையும் சொல்லவில்லை. என்கவுண்டர் போன்ற சம்பவத்தில் ஈடுபடுவார்களோ என பயமாக உள்ளது, எனக்கு என் கணவரைப் பற்றி தகவல் தெரிவித்து அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தால் போதும் என தெரிவித்தார்.</div>
<h3 dir="auto" style="text-align: justify;">தடுக்கி விழுந்ததில் கை மற்றும் காலில் காயம்.</h3>
<div dir="auto" style="text-align: justify;">இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி காதரை போலிசார் கைது செய்ய முயற்சித்தபோது தடுக்கி விழுந்ததில் இடது கால் மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கை மற்றும் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் காதர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்<wbr />சைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்</div>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
each way betting system revealed Also visit my blog; Best Bonus Bookmakers
tordex market darknet https://darknetmarketworld.com/
sportwetten anbieter ohne steuer Review my webpage wetten basketball Nba
Для надежной защиты участка отлично подойдут [url=https://www.vorota-otkatnyye-mekhanicheskiye-na-rolikakh.ru/]откатные ворота московская область[/url]. Конструкция отличается простотой и высокой надежностью, поэтому ворота служат долго…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

H-1B: அமெரிக்காவில் வேலை இழந்தால் கிடைக்கும் 60 நாள்கள் அவகாசம்… அதை நீக்கப் புதிய திட்டம்! | H-1B Workers to Lose Grace Period in White House-Approved Plan | ACTPnews.com
-

திருவாரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு! – கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? | ACTPnews.com
-

“மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது”- விஜய் குறித்து தமிழிசை | tamilisai soundararajan about vijay as a pm | ACTPnews.com
-

Minister Sampathkumar clarifies that moral responsibility for the omission of Periyar and Ambedkar names – ’பெரியார், அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நானே தார்மீக பொறுப்பு’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்! | ACTPnews.com
-

Is Kiran Kumar Reddy the Governor of Tamil Nadu? ஆர்.எஸ்.எஸ்ஸின் நண்பர், விஷ்ணு ரெட்டியின் உறவினர்.. கிரண்குமார் ரெட்டி தமிழ்நாட்டின் ஆளுநரா? | ACTPnews.com

















[url=https://remont-dvig124.ru]Капитальный ремонт двигателя[/url] После завершения сборки двигатель проверяют на холостом ходу и под нагрузкой.