TN CM Stalin congratulated Manmohan Singh on his retirement today after being a member of the Rajya Sabha for 33 years


33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் வாயிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியற் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது.

Dear Dr. Manmohan Singh,On behalf of the Dravida Munnetra Kazhagam (DMK) and myself, I extend my heartfelt thanks for your remarkable service to the nation as a member of the Council of States (Rajya Sabha) for 33 years.Throughout your tenure, you have displayed a rare… pic.twitter.com/hDtZgccyH4
— M.K.Stalin (@mkstalin) April 3, 2024

உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு நீங்கள் மாறும்போது, இந்திய யூனியனுக்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பில் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
திமுக சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் ஞானம் மற்றும் தொலைநோக்கு மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்” என குறிப்பிட்டிருந்தார். 

மேலும் காண

Source link