vijay tv siragadikka aasai serial march 16th episode update | Siragadikka Aasai :பார்லரின் பெயர் மாற்றிய விவகாரம் …ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய விஜயா


சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 
மீனாவை பார்க்க வந்த பைனான்சியரிடம் விஜயா வம்பு இழுக்கிறார். பின் மீனாவுக்கு கடனாக 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கிறார். ”500 மாலை கட்டி ஆயிரக் கணக்குல சம்பாதிக்குற ஏன் அது உனக்கு பத்தலையா அப்புறம் ஏன் கடன் வாங்குற” என விஜயா கேட்கிறார். ”கூடிய சீக்கிறம் உங்களுக்கே தெரிய வரும்” என மீனா சொல்கிறார். 
ரோகிணி வித்யாவிடம் ”அந்த பேங்க்காரங்க வேற திரும்பி வந்துட்டாங்க. முன்னாடி சொன்ன பொய்யெல்லாம் இப்போ எனக்கே வினையா வந்து மாட்டுது” என புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் பார்லருக்கு வருகிறார். அப்போது கடையின் பெயர் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கிறார். என்ன ”ரோகினி இது அம்மா பேர்ல தானே பார்லர் இருந்தது வேற எதோ பேர்ல இருக்கு” என கேட்கிறார். 
”இந்த ஃபீல்டுல நான் சீக்கிரம் முன்னேறுறேனு எல்லோரும் என்ன தான் கவனிச்சிக்கிட்டு இருக்காங்க” என்கின்றார் ரோகிணி. மேலும் தான் பார்லரை க்ரீன் பராண்டுக்கு ஃப்ரான்சிஸ் கொடுத்திருப்பதாக சொல்கிறார். இதனால் நிறைய ப்ராஃபிட் கிடைக்கும் என ரோகினி சொல்கிறார். இதைக்கேட்டு மனோஜும் சந்தோஷப்படுகிறார். பின் இதை வீட்டில் சொல்வதாக சொல்லி விட்டு மனோஜ் செல்கிறார். 
மனோஜ் வீட்டில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு, ரோகிணி பார்லரை ஃப்ரான்சிஸ் கொடுத்துட்டா என சொல்கிறார். அப்போ பேரும் மாறிடுமாங்க என மீனா முத்துவிடம் கேட்கிறார். ஆமா என மனோஜ் சொல்கிறார். அதற்குள் ரோகினியும் வீட்டுக்கு வந்து விடுகிறார். ”அப்போ இப்போ அம்மா பேர்ல இருக்குறது மீனாவோட பூக்கடை மட்டும் தான்” என முத்து சொல்கிறார். 
”அத்தை நான் இதை உங்க கிட்ட சர்ப்ரைஸ்சா சொல்லலாம்ணு நெனச்சேன்” என்கிறார் ரோகினி. விஜயா ”பரவாயில்லமா இதுல என்ன இருக்கு” என கூலாக பதில் சொல்கிறார். இதைப் பார்த்து அண்ணாமலையே ஆச்சர்யப் படுகிறார். பின் ரோகினி விஜயாவை தனியாக பார்த்து பேசுகிறார். ’ஏன் கிட்ட கேட்காமா எதுக்கு பேரை மாத்துன?” என கோபமாக கேட்கிறார் விஜயா. 
”நல்ல வாய்ப்பு வந்தது அதனால தான்” என ரோகினி சொல்கிறார். ”நீ வீடு வீடா போய் மசாஜ் பண்ணிக்கிட்டு இருந்த நான் பத்திரத்தை வச்சி பணம் கொடுக்கலனா உன்னால சொந்தமா பார்லர் வச்சிருக்க முடியுமா?” என விஜயா ஆக்ரோஷமாக கேட்கிறார். ரோகிணி மிரண்டு போய் நிற்க்கிறார்.  இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் காண

Source link