Karthigai Deepam: வீட்டை விட்டு வெளியேறும் தர்மலிங்கம்: கார்த்திக் எடுத்த முடிவு – கார்த்திகை தீபம் அப்டேட்!


<p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ராணி என்ற துப்புரவு பணியாளர் பெண்ணை பாட அழைத்திருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p>
<p>அதாவது ராணி பாட வராத நிலையில் கார்த்திக் &ldquo;நான் எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தும் அவங்க வரல, சரி, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்&rdquo; என்று ஆபீஸில் பேசிக் கொண்டிருக்கும்போது, ராணியும் அவருடைய கணவரும் வருகின்றனர்.</p>
<p>ராணி &ldquo;நீங்க சொன்ன மாதிரி நான் பாட ரெடி சார்&rdquo; என்று சொல்ல, அவளது கணவர் &ldquo;திறமைக்கு நானே முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறன்&rdquo; என்று வருந்துகிறார். பிறகு ராணி பாடி முடிக்கிறார்.&nbsp;</p>
<p>அடுத்ததாக தர்மலிங்கத்தை வீட்டுக்கு கூட்டி வர, கார்த்திக் அவரை வீட்டில் வந்து சந்தித்து நலம் விசாரிக்கிறான். இந்த நேரம் பார்த்து அங்கு வரும் சேட்டு தர்மலிங்கம் &ldquo;இந்த வீட்டை எனக்கு வித்துட்டாரு, அந்தப் பணத்தை வைத்து தான் தீபாவுக்கு நகை போட்டாரு&rdquo; என்ற உண்மையை உடைக்கிறார்.&nbsp;</p>
<p>அதோடு தர்மலிங்கம் &ldquo;ஏற்கனவே இந்த வீட்டை காலி பண்ணி இருக்க வேண்டும், இப்போ அவருக்கு உடம்பு சரியில்லை, அதனால் கொஞ்ச நாள் இருந்துட்டு கூட காலி பண்ணட்டும், ஆனா சீக்கிரம் காலி பண்ணிடுங்க&rdquo; என்று சொல்ல, கார்த்திக் &ldquo;இந்த வீட்டை எவ்வளவுக்கு வித்தாரு அந்த பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் வீட்டை திருப்பிக் கொடுத்துடுங்க&rdquo; என்று கேட்கிறான்.&nbsp;</p>
<p>ஆனால் சேட்டு &ldquo;ஆரம்பத்தில் இந்த வீட்டை வாங்குற எண்ணம் எனக்கு இல்ல ஆனா அதன் பிறகு யோசித்துப் பார்க்கும்போது இந்த வீட்டிலிருந்து என்னுடைய பசங்களுக்கு ஸ்கூல் எல்லாமே பக்கத்துல இருக்கு, அதனால வீட்ட திருப்பி கொடுக்கிற எண்ணம் இல்லை&rdquo; என சொல்கிறார். இதனால் தர்மலிங்கம் குடும்பத்தை வீட்டை காலி செய்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.&nbsp;</p>
<p>இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.</p>

Source link