TN Weather Update: 24 ஆம் தேதி கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. மற்ற நாட்களில் எப்படி?


<p>&nbsp;</p>
<p>தமிழ்நாட்டில் அதிகாலை நேரத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<p>அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக &nbsp;இருக்கக்கூடும். &nbsp;உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
<p>20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
<p>அதேபோல் வரும் 24 ஆம் தேதி,&nbsp; கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், &nbsp;புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. &nbsp;உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2>
<p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<p>கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.4&nbsp; டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 31.4 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.1&nbsp; டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:&nbsp;</h2>
<p>18.02.2024: தென்தமிழக &nbsp;கடலோரப்பகுதிகள், &nbsp; &nbsp;மன்னார் &nbsp; &nbsp;வளைகுடா மற்றும் குமரிக்கடல் &nbsp;பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு &nbsp;45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 &nbsp;கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.&nbsp;மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.&nbsp;</p>

Source link