Ayodhya Ram Temple: இயற்கை பொருட்களை வைத்து பட்டாபிஷேக ராமர் பொம்மையை உருவாக்கிய அரசு பள்ளி மாணவி


<p>புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியிலில் பயிலும் மாணவிகளுக்கு வாரம் தோறும் கைவினை பயிற்சி அறிக்கப்படுகிறது. கைவினை பயிற்சி பெற்ற மாணவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு கலை நயமிக்க பொருட்களை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் கைவினை பயிற்சி பெற்ற 9ம் வகுப்பு மாணவி சவுமியா பட்டாபிஷேக ராமரை உருவாக்கியுள்ளார். இயற்கையாக கிடைக்க கூடிய பனை ஓலை, குருமி, தேங்காய் நார், சோளக்கதிர் ஆகியவற்றை கொண்டு ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய கலை பொம்மையை உருவாக்கி அசத்தியுள்ளார். மேலும் செலியமேடு அரசு பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதி வழிகாட்டுதலின்படி மாணவி உருவாக்கிய கலை பொருளை பார்வயிட்டு பள்ளி முதல்வர் மோகன் பிரசாத் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை பாராட்டி வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் மாணவி உருவாக்கிய பட்டாபிஷேக ராமர் கலை பொருள் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.</p>
<h2><strong>அயோத்தி ராமர் கோயில் திறப்பு:</strong></h2>
<p>நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான்.&nbsp; உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோவில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம் அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோவில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது.&nbsp;</p>
<p>அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, நாளை அதாவது ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது.&nbsp; குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு&nbsp; விடப்பட்டுள்ளன.&nbsp;</p>
<p>கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை ராமர் கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளது. இவர்களை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; ராமர் கோயில் திறப்பால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றன.</p>

Source link