Thirukovilur Constituency: காலியானதாக அறிவிக்கப்பட்ட பொன்முடி தொகுதி! திருக்கோவிலூருக்கு எப்போது இடைத்தேர்தல்?


<p><strong>Thirukovilur Constituency:</strong> திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக &nbsp;தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.</p>
<h2><strong>திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு:</strong></h2>
<p>நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி, அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை அனைத்துமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்களை கூட அறிவிக்க தொடங்கிவிட்டன.</p>
<p>கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டை பொறுத்தவரை இத்தனை இடங்கள் தந்தால் கூட்டணி வைக்கலாம் என சில கட்சிகள் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது.&nbsp; இந்த நிலையில், திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக &nbsp;தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.</p>
<p>திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வான பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அமைச்சர், எம்.எல்.ஏ பதவிகளை பொன்முடி இழந்தார். &nbsp;பொன்முடியின் எம்.எல்.ஏ பதவி தகுதி இழப்பு அறிவிக்கப்பட்டதும், அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாகியது.&nbsp;</p>
<h2><strong>தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகள்:</strong></h2>
<p>இதனால், திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக &nbsp;தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிந்தரையை ஏற்று தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிடும்.&nbsp; நாடாளுமன்ற தேர்தல் சில வாரங்களில் நடக்கும் நிலையில், அத்துடன் திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.&nbsp;</p>
<p>இதேபோல, விளவங்கோடு தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்காக மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி,&nbsp; கடந்த மாதம் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று பா.ஜ.க.வில் இணைந்தார்.</p>
<p>காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்ததையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது.</p>
<p>இதையடுத்து, விளவங்கோடு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியிருக்கிறார். பொதுவாக ஒரு மக்களவைத் தொகுதியோ, சட்டமன்ற தொகுதியோ காலியானால் அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.&nbsp;</p>
<p>தற்போது விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் தொகுதிகள் காலியாகி இருப்பதால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.&nbsp; எனவே, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, விளவங்கோடு இடைத்தேர்தலுக்குமான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<hr />
<p>மேலும் படிக்க</p>
<p class="abp-article-title"><a title="TN 12th Exam: நடந்து முடிந்த ஆங்கிலத் தேர்வு: 12,696 மாணவர்கள் ஆப்சென்ட்- 3 பேர் முறைகேடு!" href="https://tamil.abplive.com/education/tamil-nadu-12th-exam-2024-english-exam-12696-students-absent-3-students-involved-in-malpractice-171093" target="_self">TN 12th Exam: நடந்து முடிந்த ஆங்கிலத் தேர்வு: 12,696 மாணவர்கள் ஆப்சென்ட்- 3 பேர் முறைகேடு!</a></p>

Source link