TN Rain Alert: டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு எப்படி?


<p>தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை &nbsp;பெய்யக்கூடும். ஏனைய &nbsp;மாவட்டங்கள் மற்றும் &nbsp;புதுவையில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p>அதேபோல் நாளை, தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை &nbsp;பெய்யக்கூடும். ஏனைய &nbsp;மாவட்டங்கள் மற்றும் &nbsp;புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p>
<p>அதேபோல் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<h2>உறைபனி எச்சரிக்கை:</h2>
<p>19.01.2024 மற்றும் 20.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது&nbsp;</p>
<h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
<p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். &nbsp;அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. &nbsp;அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<p>கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): &nbsp;வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.&nbsp;</p>

Source link