<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா நான்சிக்கு நான் நிரபராதி என்று நிரூபித்து காட்டுவதாக சவால் விட்டிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p>
<p>அதாவது, சுபாஷ் ரவுடிக்கு போன் செய்து மகாவை கொன்றது பற்றி கேட்க அவன் நான் கொல்லவில்லை என்ற உண்மையை உடைக்க சுபாஷ் அர்ச்சனாவிடம் இதை பற்றி சொல்லி புலம்பும் போது மகாவை கொன்றது நானும் கல்பனாவும் தான் என்று சொல்ல முதலில் அதிர்ச்சியாகும் சுபாஷ் பிறகு சிப்பேர் என சந்தோசப்படுகிறான்.</p>
<p>அடுத்து நான்சியையும் விட கூடாது என்று அர்ச்சனா முகத்தை மறைத்து கொண்டு கட்டையால் தாக்க செல்ல இருட்டில் இதை பார்த்து பெண் ஒருவரும் பின்னாடியே செல்ல கடைசியில் சீதா இருட்டில் யார் என்று தெரியாமல் அர்ச்சனாவை கட்டையால் அடித்து விட எல்லாரும் கூடி விடுகின்றனர்.</p>
<p>ராம் சீதாவிடம் எதுக்கு நீ சித்தியை அடித்த என்று கேட்க அவள் இதையும் கொலை முயற்சியில் சேத்துடாதீங்க பாஸ், இவங்க எதுக்கு கட்டையோட செல்வி அக்கா ரூமுக்கு போனாங்கனு கேளுங்க என்று கோர்த்து விடுகிறாள். பிறகு அர்ச்சனாவும் சுபாஷும் நான்சியை பார்த்து பேச அவள் எல்லாத்தையும் நீங்க பண்ணீங்கன்னு தெரியும் என்பது போல பேச இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.</p>
<p>பிறகு ராம் ஸ்டேஷனுக்கே ராஜசேகர் ட்ரான்ஸ்வர் வாங்கி வந்து ஷாக் கொடுக்க ராம் நீங்க எதுக்கு வந்தீங்க என்று கேட்க அரசாங்கம் அனுப்பிச்சு வந்தேன் என்று பதிலடி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports