TN Assembly: சட்டபேரவையில் பின்னுக்கு தள்ளப்பட்ட ஓபிஎஸ்.. உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு!


<p>சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நீண்ட நாட்கள் கோரிக்கைக்குப் பின் ஒதுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p>தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தற்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வரும் அதே&nbsp; நேரத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளையும், மக்களின் பொதுப்பிரச்சினைகளையும் எழுப்பி வருகின்றனர். இதற்கு முதலமைச்சர் முதல் அந்தந்த துறை அமைச்சர்கள் வரை பதிலளித்து வருகின்றனர்.&nbsp;</p>
<p>நேற்று கூட்டத்தொடரின் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, &lsquo;சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகில் தான் துணைத்தலைவர் அமர்வது மரபாக உள்ளது. அப்படி இருக்கையில் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.,க்களால் தேர்வு செய்யப்பட்டும், அவருக்கான இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு விட்டது&rsquo; என தெரிவித்தார்.&nbsp;</p>
<p>இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், &lsquo;எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அதற்கு தக்க ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்&rsquo; என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இடத்தில் இதுவரை அமர்ந்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் இடம் மாற்றப்பட்டுள்ளது. அவர் இருந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p>இதேபோல் சில தினங்களுக்கு முன் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த <a title="செந்தில் பாலாஜி" href="https://tamil.abplive.com/topic/senthil-balaji" data-type="interlinkingkeywords">செந்தில் பாலாஜி</a>யின் இருக்கையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சி பிரிவில் 2வது வரிசையில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிமுகவின் நீண்ட நாள் கோரிக்கைக்கு முடிவு கிடைத்து விட்டது.&nbsp;</p>

Source link