Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை.. முதலமைச்சர் அதிரடி..!
திருப்பூர் பல்லடத்தில் தாக்குதலுக்கு உள்ளான தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் படிக்க
Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! கொங்கு மண்டலத்தில் கோலோச்சுமா அதிமுக?
மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு விழாவின் தாக்கம் பெரியளவில் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என்பதே அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது. மேலும் படிக்க
TNPSC Group 2A Result: குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளின் தேர்வு முடிவுகள் எப்போது?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் 2 நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளின் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் படிக்க
Republic Day 2024: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு! ட்ரோன்கள் பறக்க தடை- குடியரசு தின விழாவையொட்டி பலத்த ஏற்பாடு!
குடியரசு தின விழா கொண்டாட்டத்தை  முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதுமே 7500 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க
TN Weather Update: வறண்ட வானிலையில் லேசான மழை? வானிலை நிலவரம் சொல்லும் தகவல் இதோ..
தென்னிந்திய  பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 31 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 31 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

Source link