‘Let The Egalitarian Pongal Bloom Like Joy’ – Chief Minister Stalin’s Letter To Dmk Cadres | CM STALIN: ”டெல்லி வரை அதிரட்டும்.. சர்வாதிகார போக்கு அகல”

CM STALIN: முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு, பொங்கல் வாழ்த்து கூறி கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்:
முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்து. வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அந்தப் பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்குத் தம்பி உதயநிதி அவர்களே பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் #MichaungCyclone பேரிடர் நிவாரணம், #பொங்கல்_பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கியுள்ளோம்.தமிழ்நாடெங்கும் #SamathuvaPongal மகிழ்ச்சியெனப் பொங்கட்டும்! அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்!”நான்தான் எல்லாம்”… pic.twitter.com/4DHckH4GMV
— M.K.Stalin (@mkstalin) January 14, 2024

ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ டெல்லி வரை அதிரட்டும். திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தைச் சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும். உணர்ந்து, மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு.
கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய், ஜனவரி 10-ஆம் தேதியே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொங்கலின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது நமது திராவிட மாடல் அரசு” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு சார்பில் 3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
 

Source link