Category: இந்தியா
All national news including indian states
-

“UPI transaction” இனி ரூ.10 ஆயிரம் மேல் பணம் அனுப்ப முடியாது? RBI முக்கிய முடிவு – ACTPnews.com
ரொக்க பணபரிவர்த்தனைக்கு பதிலாக ஆன்லைன் பண பரிவர்த்தனை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு ஆப்கள் மூலம் UPI transaction என்பது தற்போது நடந்து வருகிறது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் பயன்பாடு என்பது படிபடியாக குறைந்து வருகிறது. என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும், அதற்கேற்ப முறைகேடுகளும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஆன்லைனில் பணமோசடி என்பதும் தினந்தோறும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆன்லைன் பணமோசடியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், அதனை தடுப்பது கடினமாக வருகிறது. இதன்…
-

2028 முதல் புதிய பெட்ரோல் டூ வீலர்களை பதிவு செய்ய தடை விதிப்பு – ACTPnews.com
டெல்லி அரசு மின் வாகன வரைவு கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2026-2030 -ஆம் ஆண்டுக்கான மின்சார வாகன (EV) கொள்கை வரைவானது பெட்ரோல் வாகனங்கள் மீதான காலவரையறை கட்டுப்பாடுகள், கடுமையான வாகனக் குழும விதிமுறைகள், மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான சலுகைகள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன் உட்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் தலைநகர் மின்சாரப் போக்குவரத்திற்கு மாறுவதை விரைவுபடுத்துவதற்கான ஒரு விரிவான செயல் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. Draft EV Policy 2026-ன் கீழ், ஏப்ரல்…
-

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – ACTPnews.com
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனைப் பாம்பு கடித்த நிலையில், அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக ஒரு மாந்திரீகிடம் அழைத்துச் சென்றனர். அந்த மாந்திரீகர், சிறுவனை கங்கை நதியில் மிதக்க வைத்தால் விஷம் இறங்கிவிடும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய பெற்றோர், சிறுவனை நதியில் இறக்கி அமானூஷ்யமான செயலில் ஈடுபட்டனர். மாந்திரீகரின் அறிவுரைப்படி, மூங்கில் கழிகளால் செய்யப்பட்ட ஒரு மிதவையில் சிறுவனைக் கட்டி, சுமார் 12 மணி நேரம் கங்கை நதி…
-

கோடை விடுமுறை திருப்பதியில் குவியும் பக்தர்கள்: விஐபி, இலவச தரிசனம் ரத்து – ACTPnews.com
திருப்பதி தேவஸ்தானம் கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக கோடை காலத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் திருப்பதி சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் புள்ளி விவரத்தை சேகரித்து உள்ளனர். வி.ஐ.பி தரிசனத்திற்கு தினமும் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஒதுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் 3,800 பேர் மட்டுமே தரிசனம் செய்கின்றனர். அந்த 3 மணி…
-

பாஜக அமைச்சரை நடுரோட்டில் அக்ரோஷமாக கேள்வி கேட்டு அலற விட்ட வீரமங்கை – ACTPnews.com
மும்பையின் வொர்லி பகுதியில் ஆளும் மகாயுதி கூட்டணியைச் சேர்ந்த பாஜகவினர், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியைக் கண்டித்துப் பேரணி நடத்தினர். மத்திய அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனக் கூறி நடத்தப்பட்ட இந்தப் பேரணியால், வொர்லி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலை 5 மணிக்குத் தொடங்க வேண்டிய இந்தப் பேரணி தாமதமானதால், ஜம்போரி மைதானம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணிவகுத்து…
-

நாடு முழுவதும் 18,262 கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு – ACTPnews.com
கோடைக்கால விடுமுறை மற்றும் பயணிகளின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரையிலான உச்சக்கட்டப் பயணக் காலத்தில் மொத்தம் 18,262 சிறப்பு ரயில் பயணங்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தில், இதுவரை 11,878 பயணங்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரயில் சேவைகளும் பயணிகளின் தேவையைப் பொறுத்து தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டிகளின் இருப்பை அதிகரித்தல், பயண நேரத்தை மேம்படுத்துதல் மற்றும்…
-

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் – ACTPnews.com
மசூதிகளில் பெண்கள் நுழைய அனுமதி கோரி புனேவைச் சேர்ந்த யாஸ்மின் ஜுபெர் அகமது பீர்ஜாடே, அவரது கணவர் ஜுபெர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின் போது, ‘‘உண்மைத் தன்மையைத் தெளிவுபடுத்திக் கொள்ளக் கேட்கிறோம். மசூதிக்குள் இஸ்லாமிய பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்களா?’’ என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு…
-

அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு? – ACTPnews.com
நாக்பூரைச் சேர்ந்த ரோகித் லால் (29), புது டெல்லியில் உள்ள இந்தியத் தரக் கவுன்சிலில் பணியாற்றி வந்தார். குருகிராமில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்த இவர், நேற்று காலை தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் வழக்கமாக வேலைக்குச் செல்லும் சக ஊழியர், பலமுறை போன் செய்தும் ரோகித் எடுக்காததால் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரோகித் தனது படுக்கையிலேயே உயிரிழந்து கிடப்பதைக்…
-

பானிபூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி: 18 பேர் கவலைக்கிடம் – ACTPnews.com
ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில், சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவர்களில் 18 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 6 வயது குழந்தை கிசிச்சை பலனின்றி உயிரிழ்துள்ளது. இந்த சம்பவம் குறித்து துணை ஆணையர் ராம்நிவாஸ் யாதவ் கூறுகையில், கெட்டுப்போன உணவு மற்றும் சாத்தியமான கலப்படம் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது தண்ணீர் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன.…
-

இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு – ACTPnews.com
கேந்துஜார் மாவட்டத்தின் படனா வட்டாரத்தில் அமைந்துள்ள ‘ஒடிசா கிராமீன் வங்கி’யின் மாலிபோசி கிளையில் தியானாலி கிராமத்தை சேர்ந்த, பழங்குடியினத்தை சேர்ந்த ஜீத்து முண்டா என்பவரின் மூத்த சகோதரி கல்ரா முண்டா சுமார் 2 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது வங்கி கணக்கில் சுமார் 19,300 ரூபாய் இருந்துள்ளது.இந்த நிலையில் வேறு சட்டபூர்வ வாரிசுகள் எவரும் இல்லாத நிலையில், காலமான சகோதரி கல்ரா முண்டாவின் பெயரில் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கேட்டு குறிப்பிட்ட வங்கி கிளைக்கு…
-

மேற்கு வங்கம் 2-ம் கட்ட தேர்தல்: 11 மணி நிலவரப்படி 39.97% வாக்குப்பதிவு – ACTPnews.com
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர். மொத்தம் 41,001…
-

மே.வங்கம் வாக்குப்பதிவு நிறைவு : 2-ம் கட்ட தேர்தல் 90% மேல் வாக்குகள் பதிவு – ACTPnews.com
மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர். மொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இன்று வாக்குபதிவின் போது…
-

பெட்ரோல் ரூ.10, டீசல் ரூ.12.50 விலை உயர்வு? மத்திய அரசு அதிர்ச்சி தகவல் – ACTPnews.com
ஈரான் போருக்கு மத்தியில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துடன் இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய தினம் கூட கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், சில நாடுகளில் பெட்ரோல், டீசல் கடுமையாக விலை உயர்ந்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின்…
-

பெட்ரோல் ரூ 25, டீசல் ரூ.20 விலை உயருகிறது? எண்ணெய் நிறுவனங்கள் சூசக தகவல் – ACTPnews.com
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு சுமார் 70 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை, தற்போதைய போர் பதற்றம் காரணமாக ஏப்ரல் இறுதியில் சராசரியாக 114…
-

கேரளம் கம்யூனிஸ்ட் பின்னடைவு: ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்! – ACTPnews.com
கேரளம் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், மீண்டும் கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 42 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பாஜக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.…
-

தேர்தலில் முறைகேடு முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன்: அடம் பிடிக்கும் மம்தா பானர்ஜி – ACTPnews.com
மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி, பாஜக முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக 207 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் சதியால் மாற்றப்பட்டவை என்றும், பாஜக வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்துள்ளதாகவும் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை என்றும், அதன் உதவியுடன்தான் பாஜக இந்த முறைகேடுகளைச் செய்துள்ளது என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சுமார் 90…
-

புதிய முப்படை தலைமை தளபதியாக தமிழர் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம் – ACTPnews.com
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, “ ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி பொறுப்பேற்கும் நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை இந்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய முப்படைத் தலைமைத் தளபதியான ஜெனரல் அனில் சௌகான், 2026 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார். அதைதொடர்ந்து புதிய முப்படை தலைமை தளபதி பதவியேற்க உள்ளார். டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக்…
-

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு – ACTPnews.com
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக தனி பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சியை பிடித்தது. இதை தொடர்ந்து, பா.ஜ., தலைமையில் அங்கு ஆட்சி அமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்தன. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சுவேந்து அதிகாரியை சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். பா.ஜ., சார்பில் மேற்கு வங்கத்தின் முதல் முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில் இன்று (மே 09) புதிய அரசு பதவியேற்பு விழா கொல்கட்டாவில் உள்ள…
-

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் பங்க் விடுமுறை? – ACTPnews.com
அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், இந்தியா மட்டுமில்ல உலக நாடுகள் கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் பெட்ரோல்-டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது. சில நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். வாகனங்களில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குழுவாக இணைந்து பயணிக்க வேண்டும் என பிரதமர் மோடி என வேண்டுகோள் விடுத்துள்ளார். 15…
-

பாஜக அரசுக்கு எதிராக பதிவு… ஷாக் கொடுத்த அண்ணாமலை.. தவெகவில் ஐக்கியமா? – ACTPnews.com
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என்று கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே பிரச்னை நிலவி வந்தது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதி தரப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், இருமொழிக் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என கடந்த திமுக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த சூழலில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறியதும், மும்மொழிக்…
-

காங்கிரஸ் செய்த ஊழல்.. அம்பலப்படுத்திய ஜோதிமணி.. சிக்கலில் முக்கியப் புள்ளி? – ACTPnews.com
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும், திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக கழன்றியது காங்கிரஸ். நம்முடன் இருந்து கொண்டே முதுகில் குத்துபவர்கள் காங்கிரஸ் கட்சியினர், நம்பிக்கைக்குரிய கட்சி அல்ல என்று காங்கிரஸ் குறித்து அந்த காலக்கட்டத்தில் கருணாநிதி வைத்த விமர்சனத்திற்கிணங்க, திமுகவிற்கு துரோகம் இழைத்தது காங்கிரஸ் என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்லாமல், திமுக தலைமையும் காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டதோடு, இனி எந்த காலத்திலும் காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இப்படி,…
-

விஜய் அப்பாயின்மெண்ட்டை அமித்ஷா Cancel செய்தது ஏன்? லீக்கான முக்கிய தகவல்..! – ACTPnews.com
நீண்ட இழுபறிக்குப் பின் தமிழ்நாட்டின்முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த மே 27 – 28 தேதிகளில் டெல்லிக்கு விஜயம் செய்திருந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதலமைச்சர் விஜய், தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இருவரிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், முதலமைச்சர் விஜய்யின் டெல்லி விஜயம், தமிழக அரசியலில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அஸ்திவாரம் போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டேக்…
-

அரசு உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை : புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு – ACTPnews.com
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தை தொடர்ந்து புதுவை மாநில தலைமை செயலாளர் சரத் சவுகான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் அரசின் சொத்துக்களை சரியாக பயன்படுத்த வேண்டும். எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை…
-

டில்லி உணவகத்தில் திடீர் தீ விபத்து: 20 பேர் பலி பலர் கவலைக்கிடம் – ACTPnews.com
தெற்கு டில்லியில் மால்வியா நகரில் ஹௌஸ் ராணி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.காலை 8.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 9.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு இதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ வேகமாகப் பரவியதால் தீயை அணைக்கவும் தீயில் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதுவரை இந்த விபத்தில் 20…
-

மகளிர் உரிமை தொகை 80 லட்சம் பெண் பயனாளிகள் அதிரடி நீக்கம் – ACTPnews.com | actpnews.com
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். தமிழகத்தை தொடர்ந்து பிற மாநிலங்களில் இந்த திட்டத்தை வேறு வேறு பெயரில் தொடங்கின. கர்நாடக மாநிலத்தில் ‘Gruha Lakshmi Scheme’ என்கிற பெயரில் மாதம் ரூ. 2000 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. டெல்லி மாநிலத்தில் ‘Mahila Samriddhi Yojana’ என்கிற பெயரில் மாதம் ரூ. 2500 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அதுவே அசாம் மாநிலத்தில்…
-

காங்கிரஸிற்கு ஒரு ராஜ்யசபா சீட்… Confirm செய்த விஜய்..! – Kumudam
நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடைகிறது. இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளதால், 3 இடங்களுக்கு அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றதால், அவர் தனது ராஜ்யசபா…
-

Rahul Slams Modi: “’இங்க புயலே வீசிட்டு இருக்கு, அங்க மெலோனிக்கு சாக்லெட் கொடுத்துட்டு இருக்கார் மோடி“; சீறிய ராகுல்
இந்திய பிரதமர் ரோம் சென்றிருந்தபோது, அவர் பரிசளித்த ‘மெலோடி’ சாக்லெட்டுகள் குறித்து இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி நகைச்சுவையாக பேசும் விடியோ ஒன்று வைரலானது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், அந்த நகைச்சுவையான தருணத்தை, அரசின் பொருளாதாரக் கையாளுதல் குறித்த தனது விமர்சனத்துடன் தொடர்புபடுத்தி, சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளிலிருந்து பிரதமர் விலகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து…
-

காங்கிரஸ் தலைவருக்கு நேர்ந்த அவமானம் – அதிர்ச்சியில் தொண்டர்கள்! வீடியோ
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவமானம் நேர்ந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கேரளாவில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்தவர்கள், அருகில் இருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கை குலுக்கினர். ஆனால், கை கொடுப்பதற்காக மல்லிகார்ஜுன கார்கே நீண்ட நேரமாக கையை தூக்கிக்கொண்டே இருந்தார். அதைப் பொருட்படுத்தாமல், சாதாரணமாக காங்கிரஸ் நிர்வாகி கடந்து சென்றது, காங்கிரஸ் தொண்டர்களை கொதிப்படைய வைத்துள்ளது. அதை…
-

பாஜகவின் வெற்று விளம்பரம் – அம்பலப்படுத்திய ஜோதிமணி எம்பி
பாஜகவின் வெற்று விளம்பரத்தை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அம்பலப்படுத்தியுள்ளார். இன்று பல்வேறு ஊடகங்கள் மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஷ் அவர்கள் வணிக வகுப்பில் ( Business Class) பயணம் செய்யாமல் எகானமி வகுப்பில் பயணம் செய்தார் என்று கூச்சமே இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். ஒரு விமானம் பறக்கும் போது எகானமி வகுப்புக்கு ஒரு விதமாகவும், வணிக வகுப்பிற்கு ஒரு விதமாகவுமா எரிபொருள் செல்வாகும் என்று எந்த…
-

பாஜகவால் மேற்கு வங்கத்தில் சுதந்திரம் கிடைத்தது! காங்கிரசார் கொண்டாட்டம்!
மேற்கு வங்க மாநிலத்தில் 1977க்குப் பிறகு காங்கிரசால் தலைதூக்க முடியாத நிலை இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதைத் தொடர்ந்து திரினாமூல் காங்கிரசும் என மேற்குவங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்தன. இதனால், காங்கிரசால் துளிர் கூட விட முடியாத நிலை மேற்கு வங்கத்தில் நிலவியது. அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள் அனைத்தையும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியனர் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. காங்கிரசார் எதுவுமே செய்ய முடியாத நிலையில், திரினாமூல் காங்கிரஸாரால் முடக்கி வைக்கப்பட்டதாக புகார்கள் இருந்தது. இநநிலையில்,…
-

புதுச்சேரியில் பாஜக கூட்டணி அமோகம்! காங்கிரஸ் படுதோல்வி!
புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ்-16, பாஜக -10, அதிமுக – 2, எல்ஜேகே -2 என தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 என கூட்டணி அமைத்து நின்றன. விஜய்யின் தவெக.-28 தொகுதிகளில் தனித்தும், அதன் கூட்டணியாக நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. நாம்…
-

அசாமில் அசைக்க முடியாத பாஜக! ஹாட்ரிக் ஆட்சி!
அசாம் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அசாம் மாநிலத்தில் மாற்றம் ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று பலரும் பேசினர். ஆனால் தேர்தல் முடிவு வேறு மாறி இருந்தது. மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிகமான இடங்களில் பாஜக கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக…
-

கேரளமில் ஆட்சியை இழந்தது கம்யூனிஸ்ட்! ஆட்சியை பிடித்தது யார்?
அண்டை மாநிலமான கேரளமில் 10 ஆண்டுகால கம்யூனிச ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பினராயி விஜயன் மார்க்சிஸ்ட் ஆட்சியை நடத்தி வந்தார். இவர்களுக்கு பலத்த போட்டி கொடுக்கும் வகையில் பாஜகவும் களத்தில் இறங்கியதோடு, ஒரு எம்பி வெற்றி பெற்றுள்ளது. திருவணந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. போட்டி கடுமையாக இருக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் புதிய மாற்றங்களுடன் பழைய கதைக்கே…
-

முதல்முறையாக மேற்கு வங்கத்தை பிடித்த பாஜக! முழு வெற்றி நிலவரம்…!
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்தி முதல்முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்தியாவில் பாஜகவுக்கு முழு எதிரி மாநிலமாக கருதப்படுவது மேற்கு வங்கமும் கேரளாவும் மட்டுமே. இதில் மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக மம்தா பானர்ஜி இருந்து வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 293 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக – 206 திரினாமூல்…
-

மேற்கு வங்கம்: 285 வாக்குச்சாவடிகளில் மே 21 மறுவாக்குப்பதிவு
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது பல்வேறு இடங்களில் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளில் 15 வாக்குச்சாவடிகளில் ஏற்கனவே நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வாக்குப்பதிவில் சுமார் 90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஃபால்டா தொகுதியில் புதிய உத்தரவு தொடர்ச்சியாக எழுந்த புகார்களின்…
-

பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்கிறது… எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பொது பயன்பாட்டு பெட்ரோல்…
-

பெட்ரோல் விலை ஏறப்போகிறது? எப்போது தெரியுமா?
பெட்ரோல் விலை ஏறப்போகிறது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி மீம்ஸ் வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. போரை ஆரம்பித்து வைத்த அமெரிக்காவிலும் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்ததை, முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். Here in North Carolina and around the country, gas prices are too high. This is…
-

மும்பை அருகே விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு…
மும்பை அருகே நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மும்பையில் இருந்து புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி பகுதிக்கு சிறிய விமானத்தில் சென்றார். பாராமதியில் விமானம் தரையிறங்கும்போது, திடீரென விபத்துக்குள்ளாகி, தீ பிடித்து எரிந்தது. விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், தீயை அணைத்து, உடல்களை மீட்டனர். VIDEO…
-

ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் பலி… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…
ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் பலி… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்… அசாம் மாநிலத்தில் ரயில் மோதியதில் ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழந்தது, அந்த ரயிலில் பயணித்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைராங்க் டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், அசாம் மாநிலம் லிம்திங் மண்டலத்தில் உள்ள ஜமுனாமுக் காம்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயில் தண்டவாளங்களை கடக்க யானை கூட்டம் சென்று கொண்டிருந்தது. வேகமாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், யானைகள் மீதி மோதி…
-

கேரளாவில் பயங்கரம் – அந்தரத்தில் தொங்கிய ரெஸ்டாரன்ட் – மக்கள் அச்சம்…
கேரளாவில் அந்தரத்தில் தொங்கும் ரெஸ்டாரன்டில், பல மணி நேரம் வாடிக்கையாளர்கள் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அனேச்சல் பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு அந்தரத்தில் தொங்கும் ஸ்கை ரெஸ்டாரன்ட் திறக்கப்பட்டது. அங்கு, அந்தரத்தில் இருந்து உணவு சாப்பிட சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், மலப்புரத்தில் இருந்து, 2 சிறுவர்கள் பெற்றோர் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள், ஸ்கை ரெஸ்டாரன்ட் புக் செய்து சென்றனர். ஆனால், அந்தரத்தில் இருந்தபோது, ஹைட்ராலிக் பிரச்சினை…
-

ஏர்ப்போர்ட்டுக்கு ஆயிரம் ஏக்கர் தேவையில்லை… ஆந்திராவின் அதிரடி திட்டம்…
ஆந்திராவில் சோதனை முயற்சியாக ஆற்று நீரில் இயக்கப்படும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. விமான சேவை என்றாலே, அதற்கு விமான நிலையம், ஓடுதளம் என ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்காக பெரும்பாலும், விவசாய நிலங்களையே அரசுகள் கையகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும் என்று பொதுமக்கள் அச்சத்தில், விமான நிலைய திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக அப்படி ஒரு போராட்டம்…
-

பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பரிந்துரை…
பெண்கள் பாதுகாப்புக்காக, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் லக்னோவில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன், கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது, ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு…
-

மீண்டும் ரயில் விபத்து… அதிர்ச்சியில் மத்திய அரசு…
மேற்கு வங்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் வைத்துள்ள இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகிறது. ரயில்கள் ஒன்றன்மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹவுரா அருகே நல்பூர் என்ற இடத்தில், செகந்திராபாத் – சாலிமார் அதிவிரைவு ரயில் வந்தபோது,…
-

காஷ்மீர் சட்டப்பேரவையில் நடந்த பரபரப்பு சம்பவம்! காரணம் அதுதான்…
காஷ்மீர் சட்டப்பேரவையில் பிடிபி எம்எல்ஏ காட்டிய பேனரால், பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, பிடிபி எம்எல்ஏ திடீரென ஒரு பேனரை கையில் ஏந்திக்கொண்டு சென்றார். காஷ்மீரில் இருந்த சிறப்புச் சட்டம் 370ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட அந்த பேனரை பார்த்ததும், அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்தனர். இதனால், காஷ்மீர் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்து முழக்கங்களை…
-

வயநாடு மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி… வங்கி செய்த செயலால் போராட்டம்…
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள அரசு நிவாரண நிதி வழங்கிய நிலையில், அந்த தொகையை, ஈஎம்ஐக்காக கேரள கிராமிய வங்கி பிடித்தம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு முண்டக்கை ,சூரல்மலையில் கடந்த மாதம் 30 தேதி அதிகாலை பெய்த கனமழை காரணமாக மூன்று முறை எற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 420 மேற்பட்டோர் உயிரிழந்தனர். 119 பேர் மாயமாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாமிலும், உறவினர் வீடுகளிலும், ஒருசிலர் அரசு கொடுத்துள்ள வாடகை…
-

ஒரே நாடு ஒரே தேர்தல் – பிரதமர் மோடி புதிய அறிவிப்பு…
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் உரையாற்றினார். பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் குறித்து பேசிய பிரதமர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சியில்…
-

கேரளாவில் கோவில் மேல்சாந்திக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு…
கேரளாவில் கோவில் மேல்சாந்திக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டபனை மேப்பாறை மகா விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருபவர் மதுசூதனன் (வயது 52). 20 ஆண்டுகளாக ஆன்மிக பணியில் ஈடுபடும் இவர், அடிக்கடி கேரள அரசின் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். அதேபோன்று தற்போதும் லாட்டரி வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி பிப்டி பிப்டி லாட்டரி குலுக்கல் நடந்தது. அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டது.…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports









Every day is a new beginning