மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்தி முதல்முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
இந்தியாவில் பாஜகவுக்கு முழு எதிரி மாநிலமாக கருதப்படுவது மேற்கு வங்கமும் கேரளாவும் மட்டுமே. இதில் மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக மம்தா பானர்ஜி இருந்து வந்தார்.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 293 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பாஜக – 206
திரினாமூல் காங்கிரஸ் – 81+1முன்னிலை
காங்கிரஸ் – 2
Aam Janata Unnayan party- 2
CPI(M) – 1
All India Secular Front – 1
ஆட்சி அமைக்க தேவை 148 இடங்கள். இதில் பாஜக 206 இடங்களை கைப்பற்றியுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை முதல்முறையாக பிடித்துள்ளது. பாஜகவுக்கு எதிரி மாநிலமாக கட்டமைக்கப்பட்டு வந்த மேற்கு வங்கமும் இப்போது பாஜகவின் கோட்டையாக மாறியுள்ளது.



























