இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதே போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பொது பயன்பாட்டு பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயரப்போகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிந்ததும் மத்தியில் ஆளும் பாஜக தனது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.



























