Category: இந்தியா
All national news including indian states
-

Shiv Sena : சிவசேனா கட்சி போச்சா? உத்தவ் தாக்கரேவுக்கு பேரிடி.. மகாராஷ்டிர அரசியல் திருப்பம்
<p>கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.</p> <p>ஏக்நாத் ஷிண்டேவுக்கு கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். பின்னர், பாஜகவுடன் இணைந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை ஏக்நாத் ஷிண்டே கலைத்தார். இதை தொடர்ந்து, முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று கொண்டார்.</p> <h2><strong>மகாராஷ்டிர…
-

Goa Murder: "நான் என் குழந்தையை கொல்லவில்லை" விசாரணையில் அந்தர் பல்டி! சிஇஓ பரபர வாக்குமூலம்!
<p>கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுசானா சேத், தனது 4 வயது குழந்தையை கொன்றதாக நேற்று கைது செய்யப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.</p> <h2><strong>"நான் குழந்தையை கொல்லவில்லை”</strong></h2> <p>இந்த விசாரணையின்போது சுசனா சேத் தனது குழந்தையை கொல்வில்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சுசானா சேத் தனது குழந்தையை கொல்லவில்லை என்றும் ஹோட்டல் அறையில் தூங்கி எழுந்தபோது குழந்தை இறந்துவிட்டதாகவும்” அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், குழந்தை…
-

Shankaracharyas: "அவரு ராமர் சிலைய தொடுவாரு, நான் கைய தட்டிட்டு இருக்கணுமா" சங்கராச்சாரியார்கள் அட்டாக்
<p>அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.</p> <p>உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும்…
-

Ayodhya Ram Temple: ஜொலி ஜொலிக்கும் தங்க கதவு! களைகட்டும் ராமர் கோயில் – வைரலாகும் புகைப்படங்கள்!
Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கருவறைக்குள் செல்வதற்காக தங்க கதவு பொருத்தப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில்: அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர்…
-

Odisha’s Red Ant Chutney Gets Geographical Indicatio Tag, All You Need To Know About This Superfood
ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பிரபல உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு (Red Ant Chutney) புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது. பூச்சிகள் வகைகளில் சிலவற்றை உணவாக சாப்பிடும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. நமக்கு சிவப்பு நிற எறும்புகளை கண்டாலே கடித்துவிடும் என்ற அச்சம் ஏற்படும். ஆனால், மயூர்பஞ்ச (Mayurbhanj) மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் சிவப்பு எறும்பை சட்னி செய்து சாப்பிடுவர். இது இந்திய மக்களின் ஒரு முக்கியமான உணவாக உள்ளது. கார சாரமாக…
-

Rajasthan Minister Babulal Kharadi Says Have More Children PM Modi Will Build Homes For Them
பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. மத்திய அமைச்சர்கள் தொடங்கி சாதாரண நிர்வாகிகள் வரை, பலரும் கருத்துகளை தெரிவித்துவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்து கேட்போர் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது. “நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்” மக்கள் அனைவரும் நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வீடு கட்டி தருவார் என்றும் ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் காரடி தெரிவித்துள்ளார்.…
-

Rahul Gandhi Yatra : ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு? என்ன செய்யபோகிறது காங்கிரஸ்?
<p>இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மற்றொரு யாத்திரையை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வந்தது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கடந்தாண்டு டிசம்பர் 27ஆம் தேதி வெளியானது. அதன்படி, வரும் 14ஆம் தேதி மணிப்பூரில் யாத்திரையை தொடங்க உள்ளார் ராகுல் காந்தி. மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை அதாவது 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு யாத்திரை மேற்கொள்ளவார் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.</p> <h2><strong>ராகுல் காந்தி யாத்திரைக்கு வந்த சிக்கல்:</strong></h2> <p>இந்த யாத்திரைக்கு…
-

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அத்வானி.. சிலையை பிரதிஷ்டை செய்யப்போவது யார்?
<p>அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பங்கேற்பாரா? மாட்டாரா? என்பதில் சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. </p> <p>கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில்,…
-

"ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள மாட்டோம்" காங்கிரஸ் அறிவிப்பு
<p>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.</p> <p>மதகுருமார்களை தவிர 10,000 சிறப்பு விருந்தினர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்…
-

PM Modi : "அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை இப்படி மாத்திக் காட்டுவேன்" – பிரதமர் மோடி உறுதி
<p>முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘துடிப்பான குஜராத்’ உலக வர்த்தக மாநாட்டை குஜராத் அரசு நடத்தி வருகிறது. இதற்கு, மற்ற மாநிலங்களில் இருந்து மட்டும் அல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து முதலீட்டாளர்கள் செல்கின்றனர். அந்த வகையில், 10ஆவது முதலீட்டாளர்கள் மாநாட்டை காந்திநகரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.</p> <h2><strong>"இலக்கை நோக்கி செல்லும் இந்தியா"</strong></h2> <p>அப்போது பேசிய அவர், "100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற…
-

மக்களவை தேர்தல்.. இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு
ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அதுமட்டும் இன்றி, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில்…
-

7 AM Headlines: காலை வந்தது! தலைப்பு செய்திகளை தந்தது ஏபிபி நாடு.. சுடச்சுட இதோ..!
<h2>தமிழ்நாடு:</h2> <ul> <li>இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு; அனைத்து அரசி கார்டுகளுக்கும் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</li> <li>பாஜக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் டி.டி.வி. தினகரன், சிவகங்கையில் ஓபிஎஸ் மகன் பேட்டி</li> <li>பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி</li> <li>அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு</li> <li>போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்திற்கு…
-

Latest Gold Silver Rate Today 10 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,820 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,320 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,290 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50…
-

Top News India Today Abp Nadu Morning Top India News January 10 2024 Know Full Details
பூடான்: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பதவியேற்கும் ஷேரிங் டோப்கே! பூடானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை பெற்று வெற்றிபெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேரிங் டோப்கேயின் கட்சி நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு மடங்கு இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள பதினேழு இடங்களில் பூடான் ட்ரெண்ட்ரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பூடானில் 47 தேசிய சட்டமன்ற தொகுதிகளில் 30 இடங்களில் மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பூடான்…
-

Up Ayodhya Ram Mandir Complex Will Be Fragrant With 3610 Kg Weight 108 Feet Length 3 Feet Height Incense Stick
Ayodhya Ram Mandir: அயோத்யா ராமர் கோயிலுக்கான 108 அடி உயர தூப குச்சியாது, குஜராத்திலிருந்து சிறப்பு டிரக் மூலம் கொண்டு வரப்பட்டது. அயோத்யா ராமர் கோயில் குடமுழுக்கு விழா: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 22 ஆம் தேதி ராமரின் சிலை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்ய உள்ளது. இந்த நிகழ்வு மிக பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு ராம பக்தர்கள் மத்தியில் அபரிமிதமான எதிர்பார்ப்புகள்…
-

7 Members Of A Family Went To Sleep, 5 Were Found Dead Next Day In Uttar Pradesh
Uttar Pradesh: உத்தரபிரதேசத்தில் குடும்பமாக தூங்க சென்ற 7 பேரில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் 5 குழந்தைகள் பலி: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: Crime: நாட்டையே உலுக்கிய கொடூரம்! பெற்ற…
-

Ayodhya Temple: அயோத்தி ராமர் கோயிலுக்காக 32 வருஷ மவுன விரதம்! ராமர் கோஷத்துடன் முடிவுக்கு வரும் விரதம்!
<p>தேசிய அளவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பரபரப்பை கிளப்பி வந்த அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p> <h2><strong>32 ஆண்டுகளாக மவுன விரதம்:</strong></h2> <p>பல்வேறு சர்ச்சைகளும், நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்து அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி இந்த கோயில் திறக்கப்பட்டு, பொதுமக்கள்…
-

Bloodstains Clever Cab Driver How CEO Accused Of Son Murder Was Caught | Crime: நாட்டையே உலுக்கிய சி.இ.ஓ! பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற பெண்
கர்நாடகாவில் பயங்கரம்: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுசனா சேத் (39). இவர் தனது 4 வயது மகனுடன் கோவாவிற்கு ஜனவரி 6ஆம் தேதி வந்திருந்தார். வடக்கு கோவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது 4 வயது மகனுடன் தங்கி இருக்கிறார். கடந்த 6ஆம் தேதி கோவாவிற்கு வந்த சுசனா, இரண்டு நாட்களுக்கு பிறகு பெங்களூரு செல்ல தயாராக இருந்தார். இதனால், ஹோட்டல் ஊழியரை அழைத்து டாக்சி புக் செய்து தர வேண்டும் கேட்டிருக்கிறார். சாலை வழியாக…
-

SHEETAL DEVI PROFILE ARMLESS PARA ARCHER RECEIVED ARJUNA AWARD Exceptional Journey
பல்வேறு சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றியுள்ளார் மாற்றுத்திறனாளி வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் லோய்தர் கிராமத்தை சேர்ந்த இவர், தனது அசாத்திய பயணத்தில் உச்சத்தை தொட்டுள்ளார். வில்வித்தை விளையாட்டில் அசத்தி வரும் ஷீத்தல் தேவிக்கு விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான அர்ஜூன விருது இன்று வழங்கப்பட்டுள்ளது. சவால்களை சாதனையாக மாற்றிய தங்க மகள்: ஃபோகோமிலியா என்ற அரிய வகை நோயின் காரணமாக கைகளே இல்லாமல் பிறந்த ஷீத்தல் தேவி…
-

NEET PG Exam: | NEET PG Exam:
NEET PG Exam: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் இளநிலை தேர்வில் (Neet UG) தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதேபோல, எம்.டி, எம்.எஸ்…
-

Bear Grylls Shares Funny Clip With PM Modi On Elephant Dung Video Goes Viral- Watch | Bear Grylls With Modi: இதுதான் யானை சாணம்..! பிரதமர் மோடிக்கு அறிமுகப்படுத்திய பியர் கிரில்ஸ்
MODI: சாகசப் பயணி பியர் கிரில்ஸ் இந்திய பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட பயண்ம் தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பயணம்: பிரபல சாகசப் பயணியான பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி, கடந்த 2019ம் ஆண்டு இந்திய காடுகளில் மேன் Vs வைல்ட் எனும் சாகசப் பயணம் மேற்கொண்டார். அதுதொடர்பான வீடியோ ஒன்றை தற்போது, பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”மேன் வெர்சஸ்…
-

Sachin Tendulkar Farmer Protest | விவசாயிகள் மல்யுத்த வீரர்கள் மீது அக்கறை இல்லாத சச்சின்; பிரதமருக்காக மட்டும் பொங்குவது ஏன்?
தற்போது சர்வதேச அளவில் பேசப்பட்டுவருவது பிரதமர் மோடி லட்சத்தீவுகளுக்கு பயணம் செய்ததும் அதன் பின்னர் லட்சத்தீவின் சுற்றுலாத்துறையை இன்னும் மேம்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததும்தான். இதற்கு மாலத்தீவின் அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பிரதமர் மோடியின் திட்டம் மாலத்தீவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடியது எனக் கூறியதுடன் கடுமையாக சாடினர். இதற்கு இந்தியாவின் திரைப்பிரலங்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இணையத்தில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இதனால், மாலத்தீவில்…
-

Medical Prescription: "கொஞ்சம் புரியுற மாதிரி சீட்டுல எழுதுங்க” – மருத்துவர்களுக்கு ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுரை
<p>மருந்து சீட்டுகளை மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும் என ஒடிசா நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. </p> <p>உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறும் நிலையில் மக்களின் வசதிக்காக அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என பல கட்டங்களில் நகரங்கள் தொடங்கி கடைக்கோடி ஊர் வரை மருத்துவ வசதிகள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. </p> <p>ஆனால் அங்கு சென்றால் மருந்துச்சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து நமக்கு தலைச்சுற்றலை ஏற்படுத்தும் வகையில்…
-

India To Chair, Host UNESCO’s World Heritage Committee For First Time In July Permanent Representative Of India To UNESCO, Vishal V Sharma,
இந்த ஆண்டு ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கும் என யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி விஷால் வி ஷர்மா தெரிவித்தார். இந்த அமர்வை இந்தியா நடத்துவதும், தலைமை தாங்குவதும் இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. India to chair & host UNESCO’s World Heritage Committee for the 1st time…
-

தேசிய அளவில் இத்தனை தொகுதிகளில் போட்டியா? ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்.. சிக்கலாகும் கூட்டணி
<p>கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மத்தியில் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலை போன்றே, வரவிருக்கும் தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. </p> <p>அதே சமயத்தில், மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக, காங்கிரஸ் உள்பட 28 எதிர்க்கட்சிகள் சேர்ந்து INDIA என்ற பெயரில் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும்…
-

Jammu And Kashmir To Have No Local Body Members From Tomorrow Democracy
Jammu and Kashmir : பயங்கரவாதம், சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநில அந்தஸ்து பறிப்பு என தொடர் பிரச்னைகளை சந்தித்து வரும் ஜம்மு காஷ்மீரில் அடுத்த பிரச்னை உருவாகியுள்ளது. வரலாற்று ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பிரச்னைக்குரிய பகுதியில் அமைந்திருப்பதால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. ஒரு பக்கம் பயங்கரவாதிகள் என்றால் மறுபக்கம் ராணுவம் தங்களை அடக்குவதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரில்…
-

RBI On Minimum Balance: வங்கிகளுக்கு வந்த கட்டுப்பாடு – இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் கிடையாது
செயலற்ற வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக, இனி அபராதக் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதோடு, செயலற்ற கணக்குகளை செயல்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த வங்கியின் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, 2 ஆண்டுகளாக எந்தவித பரிவர்தனைகளும் நடைபெறாமல் இருக்கும் கணக்குகள், செயலற்ற வங்கிக் கணக்குகளாக கருதப்படுகின்றன.…
-

PM Modi: பிரதமர் மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து.. மாலத்தீவு தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..
<p>பிரதமர் மோடி விவகாரத்தில் சர்ச்சை கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாலத்தீவு தூதர் இப்ராகிம் ஷாகீப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.</p> <p>கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக லட்சத்தீவு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் தனது பயண அனுபவம் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பான அவரது சமூக வலைத்தளப்பகுதியில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத…
-

Former RBI Governor Raghuram Rajan Speaks In Global Investors Meeting Chennai By Tamilnadu Government
Raghuram Rajan : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 2030ஆம் Raghuram ஆண்டுக்குள் தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் செயல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் கொள்கை, 2024, வெளியிடப்பட்டதோடு, தமிழ்நாடு அரசுடன் பல வெளிநாட்டு நிறுவனங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. குறிப்பாக, வியட்நாம் நாட்டை சேர்ந்த மின்னணு வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், தூத்துக்குடியில்…
-

அதிகார துஷ்பிரயோகம் செய்த குஜராத் அரசு.. பில்கிஸ் பானு வழக்கில் நீதியை நிலைநாட்டியதா உச்சநீதிமன்றம்?
<p>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.</p> <h2><strong>”நீதி வழங்கப்படுவதை பார்த்து கொண்டிருக்கக்கூடாது"</strong></h2> <p>அதில், உச்சநீதிமன்றம் பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளது. "நீதிமன்றங்கள், நீதியை வழங்க வேண்டுமே தவிர, நீதி வழங்கப்படுவதை…
-

Rajasthan Byelection Result: ராஜஸ்தான் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ்! வீணாய் போன பாஜக கணக்கு!
<p>ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரன்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அமைச்சராக இருந்த பாஜக வேட்பாளர் சுரேந்திர பால் சிங் தோல்வியடைந்தார். </p> <p>ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் 200 தொகுதிகளில் ஒரு வேட்பாளர் உயிரிழந்த காரணத்தால் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த…
-

Bilkis Bano Case: பாதிக்கப்பட்டவரின் உரிமை முக்கியம்: பில்கிஸ் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் 5 முக்கிய அம்சங்கள்
<p>கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. குஜராத் அரசின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ரத்து செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளது. </p> <h2><strong>பில்கிஸ் பானோ வழக்கில் எஸ்சியின்…
-

Top News India Today Abp Nadu Morning Top India News January 8 2024 Know Full Details
அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்.. கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன? தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர் மழை இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடரும் காரணத்தால் இந்த மழை…
-

West Bengal Tmc Worker Satyan Chowdhury Shot Dead Baharampur Congress Adhir Ranjan Demands Probe | திடீரென இறங்கிய மர்ம கும்பல்: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை
மேற்கு வங்க மாநிலம் பஹ்ராம்பூரில் திரிணாமுல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர்களில் ஒருவரான சத்யன் சௌத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் பிப்லாப் குண்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய பிப்லாப் குண்டு, ”இது ஒரு சோகமான சம்பவம். சௌத்ரி கட்சி தொடங்கியதில் இருந்தே கட்சிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மரணம் தொடர்பாக காவல்துறை நியாயமான விசாரணையை நடத்த வேண்டும். காவல்துறையினர் இதைப் பற்றிக் கண்டுபிடித்து நியாயமான விசாரணை நடத்துவார்கள் என்று…
-

Latest Gold Silver Rate Today 5 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
-

Sachin Tendulkar Makes Stance Clear Amid Maldives Controversy Says Explore Indian Islands
லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. தான் சென்றது மட்டும் இன்றி, தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டார். லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால், இதற்கு மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மாலத்தீவிற்கு பெரிய பின்னடைவை தரும் என்றும் லட்சத்தீவில் சுற்றுலாவை…
-

PM Modi: பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து.. சுற்றுலா பயணத்தை ரத்து செய்யும் இந்திய மக்கள்..!
<p>பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அந்நாட்டு சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய அடி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. </p> <p>கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக லட்சத்தீவு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் தனது பயண அனுபவம் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். அதில், ‘லட்சத்தீவு என்பது காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று. </p> <p>லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும்…
-

பில்கிஸ் பானு விவகாரம்: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லுமா? இன்று தீர்ப்பு
<p>கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. </p> <h2><strong>பில்கிஸ் பானு விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுமா?</strong></h2> <p>குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு…
-

Why Did Ambati Rayudu Quit YSRCP Within 10 Days? Ex-India Star Breaks Silence | Ambati Rayudu: அரசியலில் குதித்த வேகத்தில் வெளியேறியதற்கு முக்கிய காரணம் இதுதான்
கடந்த ஓரிரு வாரங்களாக அரசியல் களத்திலும் இந்திய கிரிக்கெட் களத்திலும் பேசு பொருளானது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு குறித்துதான். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அம்பத்தி ராயுடு ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் இணைந்தார். இவர் இணைந்தது மட்டும் இல்லாமல் அடுத்த 10 தினங்களில் கட்சியில் இருந்து விலகினார். இவர் கட்சியில் இணைந்ததும் வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்…
-

விமானத்தில் குடும்ப உறுப்பினரை தாக்கிய சிறுவன்.. நடுவானில் பரபரப்பு..!
<p>கனடாவில் விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரையே 16 வயது சிறுவன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p> <h2><strong>தொடரும் சர்ச்சை சம்பவங்கள்:</strong></h2> <p>சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட…
-

Atrocities On Dalits: ”ஏன் சேர்ந்து உட்காறீங்க" – பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் தாக்கிய கொடூர கும்பல்!
<p>சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.</p> <h2><strong>கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்:</strong></h2> <p>இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக…
-

Why Should We Tolerate Hate Says Celebs Join Hands For Lakshadweep Pm Visit Controversy | Boycott Maldives : ‘மாலத்தீவு போகாதீங்க’
Boycott Maldives : கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். தன்னடைய பயணத்தின் அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மோடி, “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். சர்ச்சையான மோடியின் லட்சத்தீவு பயணம்: லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம்…
-

The Study Found That 17000 People Died From A Medicine Used During The First Wave. | Covid:கொரோனாவுக்கு வழங்கப்பட்ட மருந்தால் 17,000 பேர் உயிரிழப்பா? ஆய்வில் பகீர்
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியா மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, வேக்சினால் தான் சீக்சிரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 17 ஆயிரம் பேர் உயிரிழப்பா? இந்த கொரோனா காலக்கட்டத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) என்ற மருத்து மருத்துவர்களின் பரிந்ததுரையின்பேரில் பயன்படுத்தப்பட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்காத அந்த…
-

Childrens Missing: சட்டவிரோதமான காப்பகம்! மாயமான 26 சிறுமிகள் – மீட்கப்பட்டார்களா? மத்திய பிரதேசத்தில் பகீர்!
<p><strong>Madhya Pradesh:</strong> மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருந்து 26 குழந்தைகள் காணாமல் போனது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p> <h2><strong>காணாமல் போன 26 சிறுமிகள்:</strong></h2> <p>மத்திய பிரதேச மாநிலம் போபால் என்ற பகுதியில் சட்டவிரோதமாக குழந்கைள் காப்பகம் நடத்தப்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (NCPCR) தகவல் கிடைத்துள்ளது. குழந்தைகள் காணாமல் போனதாக தகவல் வந்ததை அடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கனுங்கோ, பர்வாலியா பகுதியில் உள்ள…
-

ஞானவாபி மசூதி: இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு வெளியிடப்படுமா? நீதிமன்றம் பரபர முடிவு
<p>உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இந்த மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.</p> <h2><strong>ஞானவாபி வழக்கு:</strong></h2> <p>காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை…
-

Shocking Video: குடி போதையில் நாய்க்குட்டிக்கு மது ஊற்றிய கொடூரம்.. வீடியோ பதிவு வைரலானதால் பதிவான வழக்கு..
<p>சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ ஒன்று பரவி வைரலாகி வருகிறது. இதில், ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நாய்க்குட்டி ஒன்றுக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். அதனை வீடியோவாகவும் எடுத்து லைக்ஸுகளுக்காக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். அந்த நாய்க்குட்டி ஏதும் அறியாமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் மது அருந்துகிறது. </p> <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"> <p dir="ltr" lang="hi">in logo ko itne log follow karte hai pr inke karam nahi dekhte kitne gande log…
-

கழிவறைகள் கழுவுவதாக கூறுவதா? தயாநிதிமாறனுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம்…
பீகாரில் இருந்து தமிழகம் வருபவர்கள் கழிவறைகள் கழுவுவதாகக தயாநிதிமாறன் கூறிய கருத்துக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம் பி தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், திமுக என்பது கருணாநிதியின் கட்சி. திமுக…
-

36 தமிழக மீனவர்களை விடுவித்தது பிரிட்டிஷ் கடற்படை… வீடியோ உள்ளே!
பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். தமிழகத்தின் தேங்காய்ப்பட்டின மீனவர்கள் 36 பேர் செப்டம்பர் 29ஆம் தேதி இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை கைது செய்த British Indian Ocean Territory நிர்வாகம், படகையும் பறிமுதல் செய்தது. இந்நிலையில், 36 மீனவர்களையும் British Indian Ocean Territory நிர்வாகம் விடுவித்துள்ளது. #WATCH | Vizhinjam, Kerala: Indian fishermen who were arrested by the…
-

இன்று முதல் கேஸ் சிலிண்டர் விலை உயர்கிறது
இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலையை ரூ.209 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் ரூ.1731.50 க்கு விற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. Oil marketing companies have increased the prices of commercial LPG gas cylinders. The rate…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
wettbüro in meiner nähe my blog; Basketball Wetten Spread
o que é aposta esportiva Here is my web blog … planilha Apostas Esportivas over
gambling in canada statistics, united statesn bingo rules and canadian poker, or canadian roulette winning numbers Feel free to visit…
new usa online casinos no deposit bonuses, best payout Can I Self Exclude From All Online Gambling casino usa and…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports









live snooker beste wedden sportwedstrijden tips