தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் பணம் கொடுத்து பேரம் பேசப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரூ.35 கோடி பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. புகார்
ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தன்னை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதமைமைச்சர் விஜய் சாமி தரிசனம் ஏன்? – ACTP news Tamil
8 பேர் கைது; ரூ.180 கோடி சதித்திட்டம் என தகவல்
எம்.எல்.ஏ. அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் ஐ.பி.டி.எஸ். நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி மதிப்பிலான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு போலீஸ் சம்மன்
இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சென்னை போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.
கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக இல்லத்திற்கு சென்ற போலீசார், சம்மனை அவரது தந்தையிடம் வழங்கினர்.
ஜூலை 6-ம் தேதி ஆஜராக உத்தரவு
போலீசார் வழங்கிய சம்மனில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் வரும் ஜூலை 6-ம் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
#விஜய் #தவெக #TVK #SenthilBalaji #TamilPolitics #BreakingNews #TamilNews #ChennaiPolice #PoliticalNews #LatestTamilNews #TamilNadu #VijayPoliticalNews #TVKNews #CrimeNews #TrendingNews






















