திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.
திமுகவின் முக்கியமான நபரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, தொடர்ந்து 7 முறை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த திமுக ஆட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மொத்தமான 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 35க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 7 குழுக்களாக பிரிந்து, சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனையின் முடிவுக்குப் பிறகே, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? பணம் கைப்பற்றப்பட்டதா? என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.






















