தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி டாஸ்மாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
மார்ச் 6 முதல் 8 வரை டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்த்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை என்ற பெயரில், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ, ஊழியர்களையோ அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.