Category: உலகம்
all world news including all countries
-

‘ஹார்முஸ் நீரிணை’ வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டண வசூல்: டாலருக்கு பதில் ரியாலுக்கு அனுமதி – ACTPnews.com
கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் இடையே கடும் போர் நடந்து வருகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் உலக நாடுகளுக்கு தேவையான 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 25 சதவீத இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான், அங்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்கி வருகிறது. ஈரான் நாடாளுமன்ற பாதுகாப்பு குழு ‘ஹார்முஸ் நீரிணை மேலாண்மை…
-

அமெரிக்க புதிய வகை கொரோனா: 25 மாகாணங்களில் பரவல் மக்கள் அச்சம் – ACTPnews.com
2024-ம் ஆண்டு இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் காணப்பட்ட இந்த தொற்று, 2025-ம் ஆண்டில் பரவலாக பரவியது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் என 2021-ம் ஆண்டு பரவலாக காணப்பட்ட வைரசின் தொடர்ச்சியாக இது உள்ளது. இதன் புரதம் 70 முதல் 75 வகையான உருமாற்றங்களை பெற்றுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், இதனால் உடனடியான அச்சுறுத்தல் எதுவும் பெரிய அளவில் இல்லை என டாக்டர் ஒருவர் கூறுகிறார். ஆனால், தற்போதுள்ள…
-

மாறி மாறி தாக்குதல்: ஈரான் பி1 பாலம் மீது ஏவுகணை தாக்குதல், இஸ்ரேல் ரயில் நிலையத்தை தகர்ப்பு – ACTPnews.com
கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியையும் முடக்கி வைத்துள்ளது. அதனை திறக்க அமெரிக்க அதிபர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், ஈரான் சற்றும் அசராமல், தொடர்ந்து அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார். ஆனால், அதற்கு பயப்படாத ஈரான், ட்ரம்ப்பிற்கு பதில் மிரட்டல்களை விடுத்து வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் மிக உயரமானப் பாலமாகவும் ஈரானின் பொறியியல் அடையாளச் சின்னமாகவும் விளங்கும் கராஜை தலைநகர்…
-

அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது – ACTPnews.com
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மும்பையில் உள்ள ஈரான் தூதரகமும் உறுதி செய்துள்ளது. ஈரான் தூதரக எக்ஸ் பதிவில், ‘எதிரியின் மற்றொரு F-35 விமானம் நமது உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் ஒரு வலிமையான சக்தி’. என பதிவிட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இத்தகைய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு தாங்கள் தான் என அப்போது ஈரான்…
-

லெபனான் மீது தாக்குதல், ஹோர்மூஸ் நீரிணை மூடல்: ஈரானை மீண்டும் தாக்குவோம் அமெரிக்க, தொடரும் போர்பதற்றம் – ACTPnews.com
ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் சரமாரித் தாக்குதல் நடத்தியது. இதில், 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இதனால் பாகிஸ்தானில் நாளை ஈரான், அமெரிக்க இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. லெபனான் மீது தாக்குதல் 254 பேர் பலி ஈரான் உடனான…
-

40 நாள் ஈரான் போருக்கு $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – ACTPnews.com
பிப்ரவரி 28, 2026 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில், தெஹ்ரான் உட்பட பல நகரங்களில் உள்ள ராணுவ மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது, இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. தெஹ்ரானில் உள்ள ஜம்ஹூரி பகுதி, இஸ்ஃபஹான், கோம், கரஜ்,…
-

விமானத்தில் போதையில் ரகளை செய்த பிரபல நடிகை: எச்சரித்து அனுப்பிய போலீசார் – ACTPnews.com
அமெரிக்காவின் பிரபல நடிகை நடாஷா லியோன் (47) கடந்த ஜனவரி மாதம், தான் மீண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக உருக்கமாக தெரிவித்து இருந்தார். சுமார் 10 ஆண்டுகள் போதை பழக்கமின்றி இருந்தார். கடந்த 7ம் தேதி இரவு, ஹாலிவுட்டில் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் லாஸ் ஏஞ்சல்சில் இருந்து நியூயார்க் செல்வதற்காக ‘டெல்டா’ விமானத்தில் பயணித்தார். விமானம் புறப்பட தயாரானபோது, முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்திருந்த நடாஷா லியோன் சீட் பெல்ட் அணியாமல்…
-

தன்னை இயேசுவாக சித்தரித்து டிரம்ப் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை – ACTPnews.com
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கிறிஸ்துவ மதத் தலைவரான 14 ஆம் போப் லியோ தொடர்ந்து கண்டித்து வருகிறார். நேற்றைய தினம் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், போப் லியோ குற்றச்செயல்கள் மீது விருப்பம் கொண்டவராக நான் நினைக்கிறேன் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ புகைப்படத்தை ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில், நோய்வாய்ப்பட்ட ஒருவரின் மீது இயேசுவை போல் உடை அணிந்திருக்கும் டிரம்ப் கை வைப்பதைப்…
-

ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை டிரம்ப்: வளைகுடா துறைமுகங்களை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை – ACTPnews.com
ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, திங்கள்கிழமை காலை ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு (அமெரிக்கா முற்றுகையிட்ட நேரத்தில்) சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். “ஈரானுடன் எங்களுக்கு வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன. எங்கள் விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார். …
-

ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு – ACTPnews.com
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் தனது சொந்த வலைதளப் பக்கமான ட்ரூத்சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “ஈரானிய அரசு கடுமையான பாதிப்பைச் சந்தித்திருப்பதாக தோன்றும் உண்மையின் அடிப்படையிலும், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில், ஈரானிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை முன்வைக்கும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்திவைக்க எங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அமெரிக்க ராணுவம் முற்றுகையைத் தொடரவும், எல்லா வகையில் தயார் நிலையில்…
-

மீண்டும் போர் பதற்றம், ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த ட்ரம்ப் உத்தரவு – ACTPnews.com
போர் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பட்டிருந்தாலும், இரு தரப்பும் கடல்வழி முற்றுகையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. ஈரான் மீதான கடல்வழி முற்றுகை தொடங்கியதிலிருந்து இதுவரை 33 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எங்களின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அங்கு நுழையவோ, வெளியேறவோ முடியாது.சிறிய படகுகளாக இருந்தாலும், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப்…
-

ஈரான் போர், ஹார்மூஸ் ஜலசந்தி மூடல்: காண்டம் விலை 30% அதிகரிப்பு – ACTPnews.com
ஈரான் மோதல் பெரும்பாலும் எரிசக்தி சந்தைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும், அதன் தாக்கம் தற்போது எதிர்பாராத வழிகளில் பல்வேறு தொழில்துறைகளிலும் பரவி வருகிறது. எரிபொருள் முதல் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் வரை, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் விலைகளை உயர்த்தி, அவை கிடைப்பது குறித்த கவலைகளை எழுப்புகின்றன; தற்போது ஆணுறைகள் போன்ற பொருட்கள்கூட இந்த நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஆண்டுக்கு சுமார் 5 பில்லியன் ஆணுறைகளை உற்பத்தி செய்யும் மலேசியாவைச் சேர்ந்த கரெக்ஸ் நிறுவனம், தனது விலைகளை 30 சதவீதம்…
-

ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – ACTPnews.com
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதையடுத்து, ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான பிரதிநிதிக் குழுக்கள் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. …
-

மீண்டும் போர் பதற்றம் : ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நோ சொன்ன டிரம்ப் – ACTPnews.com
அமெரிக்கா – ஈரான் இடையிலான 10 நாள் போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே பாகிஸ்தானில் மீண்டும் இருநாடுகள் இடையே 2-ஆவது கட்ட அமைதி பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சென்று இருந்தார். ஆனால் அவர் பாகிஸ்தான் இருக்காமல் சனிக்கிழமை ஈரான் திரும்பினார். இதன் பின்னர் அமெரிக்காவுடன் நேரிடையாக அமைதி பேச்சுவார்த்தை ஈடுபட என்று ஈரான் அறிவித்ததுள்ளது.இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த செல்ல…
-

110 கிலோ போதைப்பொருள் கடத்தல்: 22 புத்தத்துறவிகள் இலங்கை விமானநிலையத்தில் கைது – ACTPnews.com
நான்கு நாள்கள் விடுமுறையை தாய்லாந்தில் கழித்துவிட்டு, இலங்கை திரும்பிய புத்த துறவிகளின் உடைமைகளில், பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்ததை இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், புத்த துறவிகளின் பைகளில் ஒரு மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் பைகளில் 5 கிலோ வரை பயங்கரமான போதைப்பொருளை வைத்திருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும், இலங்கையில் உள்ள புத்த கோயில்களில் இருந்த இளம்…
-

அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நீடிக்கிறது: ஈரான் ராணுவ அறிவிப்பால் பதற்றம் – ACTPnews.com
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நிறுத்தம் மே 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையான அணுசக்தி திட்டம் குறித்த விவாதத்தை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்கா இதனை ஏற்க மறுத்துள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பல வியூகங்களை வகுத்து வருகிறது. அமெரிக்காவிற்கு…
-

ஹார்முஸ் ஜலசந்திக்கு தனது பெயரை சூட்ட வேண்டும்: அடம் பிடிக்கும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் – ACTPnews.com
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இந்த பாதையை பயன்படுத்தும் கப்பல்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்க ஈரான் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கியது. இதற்கு அமெரிக்காவும் மற்ற சர்வதேச நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ஹார்முஸ் ஜலசக்தி வழித்தடத்தில் இயல்பான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க அதிபர்…
-

ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி விரைவில் இந்தியா வருகை – ACTPnews.com
BRICS அமைப்பிற்கு தங்கள் நாடு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஈரான் இந்த அமைப்பில் முறையாக இணைந்ததிலிருந்து, முக்கிய BRICS கூட்டங்களில் தங்கள் நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்று வருகின்றனர். ஒருவேளை BRICS உச்சிமாநாட்டிற்காக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தந்தால், அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும்…
-

எந்த நாட்டில் தெரியுமா ? 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை: தவறினால் ரூ.24 கோடி அபாரதம் – ACTPnews.com
சமூக வலைதளப் பயன்பட்டால் சிறுவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. ஆன் லைன் பயன்பாடு காரணமாக குழந்தைகளின் உடல் நலம் மட்டுமில்லாது மனநலனும் பாதிக்கப்படக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளும் ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், மலேசியா அரசும் இது…
-

நீ ஒரு பைத்தியம், ஜெயில இருந்திருப்பா: நெதன்யாகுவை போனில் திட்டிய டிரம்ப் – ACTPnews.com
ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்ததை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதே போன்று அமெரிக்கா முன்னிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இஸ்ரேல், லெபனான் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை மீறி லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் மீது கடும் கோபம் அடைந்த டிரம்ப். இஸ்ரேல் பிரதமர் தென்யாகுவை போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். டிரம்ப் கடும் கோபத்துடன் நெதன்யாகுவிடம் பேசியதாக ஆக்சியோஸ்…
-

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளார்: உறுதி செய்த அமெரிக்கா – ACTPnews.com | actpnews.com
ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி (56) தலைமை மதகுரு பொறுப்பேற்றாா். இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மோஜ்தபா கமேனி படுகாயமடைந்தாக கூறப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் ஈரான் அரசு இதனை உறுதி செய்யாமல் இருந்தது. இந்த நிலையில், கமேனி உயிருடன்…
-

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளார்: உறுதி செய்த அமெரிக்கா – ACTPnews.com | actpnews.com
ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி (56) தலைமை மதகுரு பொறுப்பேற்றாா். இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மோஜ்தபா கமேனி படுகாயமடைந்தாக கூறப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் ஈரான் அரசு இதனை உறுதி செய்யாமல் இருந்தது. இந்த நிலையில், கமேனி உயிருடன்…
-

ஸ்டைல் இளவரசியான கிம் ஜாங் உன்னின் மகள்.. வியக்கும் Gen-Z கொரியன்ஸ்..! – Kumudam | actpnews.com
வடகொரியாவில் சமீப காலமாக அதிபர் ‘கிம் ஜாங் உன்’ எங்கு சென்றாலும், அவருடன் கூடவே ஒரு சிறுமியும் காணப்படுகிறார். அந்தச் சிறுமி வேறு யாருமல்ல… கிம் ஜாங் உன்னின் மூத்த மகள் ‘ஜூ ஏ’தான்! வயது வெறும் 13 மட்டுமே! வடகொரியாவை வழிநடத்தப் போகும் அடுத்த தலைவராக, அதிபரின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் ‘ஜூ ஏ’, சர்வதேச அளவிலும் ஃபேஷன் விஷயத்தில் கவனத்தை ஈர்க்கிறார். ஜூ ஏவின் நடை, உடை, அலங்காரம், ஹேர் ஸ்டைல் ஆகியவை ஃபேஷன்…
-

Modi Meloni Melody: இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் கொடுத்த மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
பிரதமர் நரேந்திர மோடி ரோம் சென்றிருந்தபோது, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் பாக்கெட்டை பரிசாக வழங்கினார். இதையடுத்து, மெலோனி அவருக்கு நன்றி தெரிவித்து பகிர்ந்த வீடியோ, சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது. மெலோனி வெளியிட்ட வீடியோ தனது சமூக வலைதளத்தில் அந்த தருணத்தை பகிர்ந்துகொண்ட இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, “பரிசுக்கு நன்றி,” என்று பதிவிட்டதோடு, “பிரதமர் மோடி பரிசாக மிகவும், மிகவும் சுவையான டாஃபியான மெலோடியை கொண்டு வந்தார்,” என்றும் பாராட்டியுள்ளார். Thank…
-

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு பிரதமர் மோடி கொடுத்த கிஃப்ட் – வீடியோ
இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு சாக்லேட் கிப்ட் கொடுத்துள்ளார். பிரதமர் மோடி கொடுக்கும்போது, அதனை செல்பி வீடியோவாக எடுத்துள்ள மெலோனி, தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA — Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026 இந்த வீடியோவுக்கு பலரும் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.
-

ஈழ மக்களுக்காக குரல் கொடுங்க… விஜய்க்கு இலங்கையில் இருந்து வேண்டுகோள்
ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில், தமிழகத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்ள்ள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையொன்றைப் படைத்து, மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கவுள்ள உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🚨 TNC urges Vijay to champion Eelam Tamil political aspirations The…
-

விஜய்யுடன் இணைந்து இலங்கையில் பணியாற்ற தயார்! நமல் ராஜபக்சே அதிரடி! வீடியோ
தவெக தலைவர் விஜய்யுடன் இணைந்து நாட்டை புணரமைக்க தயார் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் நமல் ராஜபக்ச அறிவித்துள்ளார். தமிழகத்தில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இலங்கையில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது. விஜய்யின் வெற்றியை இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது, அங்கு உள்ள சிங்களவர்களும் கொண்டாடினர். நாடாளுமன்றத்தில், எம்பிக்கள் பலர், ஆதரவு கருத்துக்களை தெரிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய்க்கு இந்தியாவை தாண்டி, இலங்கையில் பெரும் ஆதரவு…
-

விஜய் பதவியேற்பதை பார்ப்பதே கடைசி ஆசை- இலங்கை MP வீடியோ
விஜய் வெற்றி பெற்றதை உள்ள இலங்கையில் உள்ள தமிழர்கள் வரவேற்று வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய எம்பி அர்ச்சுனா, என்னுடைய அண்ணன் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதே எனது கடைசி ஆசை என்று கூறியுள்ளார். என்னுடைய அண்ணன் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதே எனது கடைசி ஆசை – அர்ச்சுனா pic.twitter.com/tsedGiTUg6 — TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) May 6, 2026
-

இலங்கையில் தவெக கொடி! விஜய்யின் அலை இலங்கையில் வீசுமா?
நடிகர் விஜய் தமிழகத்தில் கட்சி ஆரம்பித்ததும் பலரும் அவரை நடிகர் என்றும், நடிகன் நாடாளமாட்டான், தகுதி இல்லை என்றெல்லாம் பேசினார்கள். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு பொதுக்கூடத்திற்கும் வருகை தந்த மக்கள் அலையை பார்த்த பின்னர், கூட்டம் வாக்காக மாறாது என்றார்கள். ரசிகர்கள், சிறுவர்கள் எல்லாம் வாக்களித்து விஜய்யால் அரசியலில் கரை சேர முடியாது என்று விமர்சித்தார்கள். ஆனால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 233 தொகுதிகளில் களம் கண்ட விஜய்யின் வேட்பாளர்களுக்கு…
-

விஜய்யிடம் கச்சத்தீவு, யாழ்ப்பாணத்தை கொடுங்க…! இலங்கையில் ஒலித்த குரல்… வீடியோ…
தவெக தலைவர் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிலும், இந்தியாவை கடந்து இலங்கையில் நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் அர்ச்சுனா, விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், விஜய்யிடம் கச்சத்தீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் வழங்க வேண்டும் என்று பேசியுள்ளார். 🔴🔴🔴 pic.twitter.com/HxHUTLQiN4 — TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) May 5, 2026 கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல் எழுந்து வரும்…
-

ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்து! பரபரப்பு காட்சி!
மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் புறப்படும்போது திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. சினலாவோ பகுதியில் உள்ள மசட்லான் என்ற இடத்தில் இருந்து நேவி ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஒருசில நொடிகளில் அந்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு திடீரென விபத்துக்குள்ளானது. சில அடி உயரமே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் ஹெலைகாப்டர் பெரும் சேதமடைந்தது. Mexican #Navy #helicopter crash lands just after takeoff in Mazatlan, Sinaloa.#crash #mexico pic.twitter.com/iW4tvIfBmn — Anbil ChinnaThambi (@AnbilChinna) May 5,…
-

இலங்கை அதிபருக்கு விருது கொடுத்த அண்ணாமலை! வீடியோ..!
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விருது வழங்கி கவுரவித்தார். இலங்கை சென்றுள்ள அண்ணாமலை, அங்கு நடந்த கம்பன் விழா 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவருக்கு கம்பன் புகழ் விருது வழங்கி கவுரவித்தார். இந்த விருதை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். In Colombo today, along…
-

பிரிட்டன் இல்லை என்றால் அமெரிக்காவின் நிலை? டிரம்பை கிண்டலடித்த மன்னர் சார்லஸ்! பரபரப்பு வீடியோ
அமெரிக்க அதிபர் டிரம்பை பிரிட்டன் மன்னர் சார்லஸ் கிண்டலடித்தது கலகலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரிட்டன் மன்னர் சார்லசும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, இருவரும் பல விசயங்களை பொதுவெளியில் பேசினர். அப்போது, அமெரக்கா இல்லை என்றால், ஒட்டு மொத்த ஐரோப்பியாவும் ஜெர்மனி மொழியை பேசிருப்பார்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மன்னர் சார்லஸ், பிரிட்டன் மட்டும் இல்லை என்றால், நீங்கள் ஃபிரஞ்ச் மொழி பேசியிருப்பீர்கள் என்று பதிலடி கொடுத்தார். #WATCH…
-

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன?
தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன? நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் தினமும் மாறுபடும். குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். இதன் காரணமாக, இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. சூழல்: கடந்த ஆண்டு டிசம்பர் 15 அன்று தங்கத்தின் விலை ₹1 லட்சத்தைத் தாண்டியது. அப்போதிருந்து, தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கங்களுடன் உள்ளன. இந்த வருட தொடக்கத்தில் விலைகள் உச்சத்தை…
-

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்து மேப் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை பாகிஸ்தான் அரசு நேரடியாக நிர்வாகம் செய்து வருகிறது. இருந்தாலும், அவை இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று இந்தியாவின் வரைபடம் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உறுதிப்பட தெரிவித்து வருகிறது. ரஷ்யா, இஸ்ரேல் போன்ற இந்தியாவுக்கு நெருக்கமான நாடுகள், இந்தியாவின் வரைபடத்தை அங்கீகரித்து,…
-

சில்லு சில்லா சிதறிய கார்… விபத்தின் பரபரப்பு காட்சி…
ரொமானியாவில் டிரக் மீது கார் மோதி சில்லு சில்லாக சிதறிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரொமானியாவில், கிரீக் நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வேன் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்திசையில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இதனால், எதிரில் வந்த டிரக் மீது பயங்கரமாக மோதி தூக்கி வீசப்பட்டு சில்லு சில்லாக சிதறியது. இந்த காட்சி பின்னால் வந்த மற்றொரு டிரக்கில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. Deadly crash in Romania: a minibus…
-

இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்து… ஷாக்கிங் வீடியோ…
இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்துக்குள்ளான ஷாக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இத்தாலியின் கசர்டா மாகணத்தில் உள்ள டியானோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் வெடித்து சிதறியதால், அங்கு இருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்து… ஷாக்கிங் வீடியோ… கசர்டா மாகணத்தில் உள்ள டியானோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் வெடித்து சிதறியது#tanker #blast #accident…
-

நொடியில் சிதைந்த கார்… பறிபோன call of duty வடிவமைப்பாளரின் உயிர்… பதைபதைக்க வைக்கும் காட்சி…
நொடியில் சிதைந்த கார்… பறிபோன call of duty வடிவமைப்பாளரின் உயிர்… பதைபதைக்க வைக்கும் காட்சி… call of duty வீடியோ கேம் கிரியேட்டரான வின்ஸ் ஜாம்பிள்ளா, கோரமான கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். 55 வயதான Vince Zampella, தெற்கு கலிஃபோர்னியாவில், தனது ஃபெர்ராரி காரில் பயணித்துக்கொண்டிருந்தார். மலைப்பகுதியின் குகையில் இருந்து அதிவேகமாக அவரது சிவப்பு நிற ஃபெர்ராரி கார் வந்தது. அப்போது, சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி, கார் சுக்கு நூறாக சிதைந்தது.…
-

மெக்சிகோவில் விமானம் விழுந்து விபத்து – 6 பேர் பலி – பரபரப்பு காட்சிகள்
மெக்சிகோவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோ நகரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் ஒன்று, சான் பெட்ரோ டோட்டல்டேபெக் மாவட்டத்தில் உள்ள டொலுகா விமான நிலையத்திற்கு சென்றது. விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், அருகில் உள்ள கிடங்கில் விழுந்து வெடித்து தீ பிடித்து சிதறியது. இந்த விமானத்தில், 10 பேர் வரை பயணித்ததாக தெரிய வந்துள்ளது. 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில்,…
-

பிரேசிலில் உள்ள அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் மாதிரி சரிந்து விபத்து
பிரேசிலில் உள்ள அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் மாதிரி சரிந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் நியூ யார்க் சிட்டியில் சுதந்திர தேவி சிலை உலக மக்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அந்த சிலையை காண பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். அதிலும், சிலையின் உள்பகுதியிலேயே சென்று தலையில் இருந்து நியூயார்க் நகரின் அழகை ரசிக்க முடியும் அப்படிப்பட்ட அமெரிக்க சுதந்திர தேவியின் சிலை போன்றே, மாதிரி ரிப்ளிகா சிலையை பிரேசிலில் உள்ள போர்டோ அலிக்ரே…
-

இந்தோனேசியாவில் வெள்ளத்திற்கு 174 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 174 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பல்வேறு தீவுகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவில் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பெருவெள்ளம் வடியாத நிலையில், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், சுமத்திரா தீவில் மட்டும் இதுவரை 174 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் மாயமாகியுள்ளதால்,…
-

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் சீனா – புதிய ராக்கெட்டை ஏவியது…
அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் வகையில், சீனா புதிய ராக்கெட்டை ஏவியுள்ளது. உலகிலேயே முதல் நாடாக சொந்தமாக விண்வெளி ஆய்வு மையம் வைத்துள்ள சீனா, அடுத்தடுத்து ராக்கெட்டுகளை ஏவி, விண்வெளியில் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறது. அதிலும், எந்தவகையான செயற்கைக்கோள்களை ஏவுகிறது என்று மற்ற நாடுகளுக்கு தெரியாத வகையில், ரகசியமாக செயல்படுவதால், சீனாவை யாரும் தொட முடியாத இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக ஒரு ராக்கெட்டை, சாங்ஷி மாகாணத்தில் உள்ள தையூவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து…
-

வடகொரியாவின் புதுவித தாக்குதலால் அதிர்ந்த தென் கொரியா… அச்சத்தில் அமெரிக்கா…
வடகொரியா நடத்திய ஜிபிஎஸ் தாக்குதலால் பல கப்பல்கள், விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவையே குலைநடுங்க வைக்கும் நாடாக வடகொரியா இருந்து வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு பொருளாதாரத் தடைகளை மீறியும், ஐநா சபையில் தடையை மீறியும் அணுஆயுத சோதனையும் நடத்தி வருகிறது. இது, அண்டை நாடான, தென் கொரியாவுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும், வடகொரியா சோதனை நடத்தும் ஏவுகணைகள் அனைத்தும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய…
-

இஸ்ரேலியர்களை காப்பாற்ற விமானம் அனுப்பிய நெதன்யாகு…
நெதர்லாந்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்க விமானங்களை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுப்பியுள்ளார். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், கால்பந்து ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில், இஸ்ரேலிய ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டுவர, அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக, 2 மீட்பு விமானங்களை ஆம்ஸ்டர்டாம் நோக்கி அனுப்பியுள்ளார். வன்முறையாளர்கள் மீது டட்சு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நெதன்யாகு, இஸ்ரேலிய குடிமக்களின் பாதுகாப்பை…
-

வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா திடீர் வேண்டுகோள்
ரஷ்யாவில் உள்ள படைகளை வட கொரியா திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தென்கொரியா வலியுறுத்தியுள்ளது. உக்ரைனுக்கு மீது போர் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது வடகொரிய ராணுவ வீரர்களை போரில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, வடகொரிய படைகளுக்கு ரஷயா பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியிருந்தது. இதன்மூலம், உக்ரைனில் ரஷ்ய படையுடன் இணைந்து வடகொரிய படைகளும் போரில் ஈடுபடும் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அதிலும், 10,000 வீரர்களை போரில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறி…
-

சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 7.1 ரிக்டராக பதிவு…
தென் அமெரிக்க நாடான சிலியில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலி, பொலிவியா, அர்ஜெண்டியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் 115 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 7.20 மணிக்கு 7.1 ரிக்டர் என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால், பாதிப்புகள் பெரிய அளவில்…
-

உக்ரைனில் பெலுகா திமிங்கலங்களை பாதுகாக்க செய்த செயல்… நெகிழ்ச்சி வீடியோ…
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, உக்ரைனில் இருந்து பெலுகா திமிங்கலங்கள் ஸ்பெயினுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. கட்டுமானங்களை எல்லாம் சிதைத்து வருவதால், பொதுமக்கள் கட்டடங்களில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை அங்கு கர்கிவ் நகரில் உள்ள அக்குவாரியமில் வளர்க்கப்படும் வெள்ளை நிற பெலுகா திமிங்கலங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றை பாதுகாக்க உக்ரைன் கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ஸ்பெயினில் உள்ள…
-

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து… 13 பேர் படுகாயம்… பரபரப்பு…
இலங்கையில் கால்வாய்க்குள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயமடைந்தனர். இலங்கையின் வராகபோலாவில் 7 பெற்றோர், குழந்தைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்ட நிலையில், விபத்து எப்படி எற்பட்டது? எதனால் ஏற்பட்டது என்பது…
-

இந்தியாவுக்கு நோ.. சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட்.. எலான் மஸ்க் போடும் மெகா திட்டம் என்ன?
<p>உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள எலான் மஸ்க், இந்த மாதத்தின் இறுதியில் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் தனது இந்திய பயணத்தை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.</p> <h2><strong>சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த எலான் மஸ்க்:</strong></h2> <p>டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் தனது பயணத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டது. ரத்து செய்யப்பட்ட இந்திய பயணத்தை எப்போது மேற்கொள்வார்…
Latest News

Stay Connected
Hahahaha You are so good
Every day is a new beginning
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








Eline sağlık, faydalı olmuş.