Category: உலகம்
all world news including all countries
-

America police Pins Down Black Man Killing Him like george floyd Then Brags About Bar Fights
US Black Man: இந்தியாவில் சாதிய கொடுமை போல அமெரிக்காவில் இனவெறி பல நூற்றாண்டுகளாகவே பிரச்னையாக இருந்து வருகிறது. கறுப்பின மக்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கறுப்பினத்தவருக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகள்: குறிப்பாக, காவல்துறையினரால் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்தாலும் அது ஏற்படுத்திய வலி நம் மனதில் இருந்து மறையாமல் வடுவாக மாறியுள்ளது. இந்த நிலையில்,…
-

அச்சச்சோ! வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு எச்.ஐ.வி: அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
வாம்பயர் ஃபேஷியல் செய்த 3 பெண்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. CDC அறிக்கையின் படி, நியூ மெக்சிகோ ஸ்பாவில் வாம்பயர் ஃபேஷியல் செய்தபின் மூன்று பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாம்பயர் ஃபேஷியல் எனப்படும் பிரபலமான ஒப்பனை செயல்முறை மூலம் எதிர்பாராத விதமாக எச்ஐவி பரவுவதை சமீபத்திய வழக்கு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. வாம்பயர் ஃபேஷியல் என்பது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சருமத்திற்கு புத்துயிர் தரும் முறையாகும். இந்த சிகிச்சையின் மூலம் முகத்தில் உள்ள வடுக்கள், முகப்பரு…
-

Houthi Attack: இந்தியா நோக்கி வந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. செங்கடலில் பரபரப்பு..
<p>காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியது. இதில் இஸ்ரேல், ஹமாஸ் காசாவில் இருக்கும் மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் சுரங்கம் அமைத்து செயல்பட்டு வருவதாக கூறி தாக்குதல் நடத்தியது. 6 மாதங்களுக்கு மேலாக தொடரும் போரை நிறுத்த பல நாடுகள் அழுத்தம் கொடுத்தும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.</p> <p>இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பலரது வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்து, உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில்…
-

“I Can’t Breathe”: Black Man Dies After US Cops Pin Him Down, Kneel On Neck in tamil | Black Man Dies: அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்
Black Man Dies: போலீசாரால் கைது செய்யப்பட்ட பின் உயிரிழந்த நபர், என்னால் சுவாசிக்க முடியவில்லை என கூச்சலிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மீண்டும் ஒரு கருப்பர் மரணம்: கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவில் போலீசார், ஜார்ஜ் பிளாய்ட் எனும் கருப்பர் ஒருவரை கைது செய்தனர். அப்போது, அவரை தரையில் தள்ளி அவரது கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். தன்னால் சுவாசிக்க முடியவில்லை என பலமுறை கூச்சலிட்டும், அவரது கழுத்தில் இருந்து போலீசார் காலை எடுக்கவில்லை. இதனால்,…
-

பாகிஸ்தானில் அனுமன் கோயில் கழிவறையாக மாற்றமா? தீயாய் பரவும் பொய் செய்தி!
பாகிஸ்தானில் ஹனுமான் கோயில் ஒன்று பொது கழிவறையாக மாற்றப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி பொய்யானது என்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் அனுமன் கோயில் கழிவறையாக மாற்றமா? பாகிஸ்தான் லாகூர் நகரத்தில் அமைந்துள்ளது பாரம்பரியமிக்க பசுலி ஹனுமான் கோயில். இந்த கோயிலுக்கு பசுலி மந்திர் என்ற பெயரும் உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பணக்கார இந்து குடும்பத்தால் கட்டப்பட்ட இந்த கோயில் ஆன்மீக, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தளமாக விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பல ஆண்டுகளாக…
-

Greece: ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாடு.. பதறிய மக்கள்.. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நாசாவின் விளக்கம்!
<p>கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர். </p> <p>தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்றது. பால்கன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த நாட்டின் தலைநகரமாக ஏதென்ஸ் நகரம் உள்ளது. அட்டிக் சமவெளியில் அமைந்துள்ள இந்த நகரம் மிகப்பெரிய பரப்பளவை கொண்டது. 3 பக்கம் மலைகளால் சூழப்பட்ட ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. கிரேக்க சாம்ராஜ்யத்தின்…
-

கார் பந்தய போட்டியில் பயங்கரம்.. பார்வையாளர்கள் மீது மோதிய ரேஸ் கார்.. இலங்கையில் அதிர்ச்சி!
Car Race Accident: இலங்கையில் நடந்த கார் பந்தய போட்டியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்டம் தியாதலாவா பகுதியில் கார் பந்தய போட்டி நடந்து கொண்டிருந்தபோது, ஸேர் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் மீது மோதியது. கார் பந்தய போட்டியில் விபத்து: இந்த துயர சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இலங்கை காவல்துறை தரப்பு கூறுகையில், “ஐந்து ஆண்களும் ஒரு சிறுமியும் விபத்தில்…
-

Global Military ExpendtureIndia is 4th largest military spender after US, China & russia | Global Military Expendture: போர் பதற்றம்
Global Military Expendture: கடந்த 2023ம் ஆண்டில் ராணுவத்திற்காக உலக நாடுகள் சேர்ந்து மொத்தமாக 2,443 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளன. உலகளவியா ராணுவ செலவினம்: உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – காஸா என இரண்டு போர்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இஸ்ரேல் – ஈரான் இடையேயும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், சர்வதேச நாடுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ராணுவத்திற்காக அதிகளவில் செலவு செய்து வருகின்றன. இந்நிலையில், உலகளாவிய ராணுவச்…
-

Taiwan Earthquake 80 earthquakes hit Taiwan overnight – watch video
தைவானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், நேற்று இரவு முதல் 80க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தைவானில் நேற்றிரவு 11.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. அதேபோல், அதிகாலை 2.55 மணிக்கு மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. ஒரே இரவில் 80 முறைக்கு மேல் நிலநடுக்கம்: கடந்த ஏப்ரல் 3ம் தேதி ஏற்பட்ட…
-

malaysia Ten people have died after two navy helicopters collided in mid-air during a military rehearsal | மலேசியாவில் நடுவானில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது விபத்து
மலேசியாவில் நடுவானில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாதில் 10 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கோலாலம்பூரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Pelo menos 10 pessoas morreram depois que dois helicópteros militares colidiram no ar em Lumut, na Malásia. pic.twitter.com/hPv4qhNOQY — André GAP 🇧🇷 (@AndreGA_Pe) April 23, 2024 கோலாலம்பூரில் உள்ள பேராக்கின்…
-

Everest MDH Masala Ban in Hong Kong Singapore Due To Cancer Causing Chemicals Spice Brands
இந்தியாவின் எம்.டி.ஹெச். மற்றும் எவரேஸ்ட் ஆகிய நிறுவனங்களின் மசாலாப் பொருட்களில் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டிருப்பதால் சிங்கபூர், ஹாங்-காங் ஆகிய நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய மசாலா தயாரிப்பு நிறுவனங்களாக எம்.டி.ஹெச். ( MDH Pvt.) எவரெஸ்ட் ( Everest Food Products Pvt) ஆகியவை தயாரித்த மசாலாப் பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்ஸைடு (ethylene oxide) என்ற பூச்சிக்கொல்லி அனுமதிக்கப்பட்ட அளவை…
-

Pakistan rakes up Kashmir issue with Iran in meet to repair strained ties months after airstrikes in january | Iran – Pakistan: ஜனவரியில் வான்வழித் தாக்குதல்
Iran – Pakistan: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானில், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் சென்ற ஈரான் அதிபர்: ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்செய்யும் நோக்கில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தீவிரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக, இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஈரான் அதிபர் மற்றும் பாகிஸ்தான் அதிபர்…
-

மக்களவை தேர்தலை விடுங்க! இந்தியாவே உற்று நோக்கும் மற்றொரு தேர்தல் இதுதான்!
<p>இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜகவும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணியும் முனைப்பு காட்டி வருகிறது.</p> <h2>இந்தியா உற்று பார்க்கும் அண்டை நாட்டு தேர்தல்:</h2> <p>சொந்த நாட்டில் நடைபெறும் தேர்தலுக்கு இணையாக அண்டை நாட்டு தேர்தலையும் இந்திய மக்கள் உற்று கவனித்து வருகின்றனர். அது வேறும்…
-

Maldives Parliamentary Elections: மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் புதிய ட்விஸ்ட்.. அதிபர் முய்சுவின் கட்சி 66 இடங்களில் வெற்றி..!
<p>‘மஜ்லிஸ்’ எனப்படும் 93 உறுப்பினர்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) 86 இடங்களில் 66 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. </p> <h2><strong>மஜ்லிஸ் என்றால் என்ன..? </strong></h2> <p>மக்கள் மஜ்லிஸ் என்பது மாலத்தீவின் ஒருசபையை கொண்ட சட்டமன்ற அமைப்பாகும். மாலத்தீவின் அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சட்டங்களை இயற்றவும், திருத்தவும் மஜ்லிஸுக்கு…
-

ahead of india visit elon musks Tesla To Lay Off 14,000 Workers Globally Citing “Duplicate Roles”: Report | Tesla Layoff: இந்தியா வரும் முன் எலான் மஸ்க் அதரடி
Tesla Layoff: மின்சார கார் உற்பத்தி நிறுவனமானடெஸ்லா, உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கிற்கு சொந்தமானதாகும். 14,000 பேரின் வேலை பறிப்பு? எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது உலகளாவிய பணியாளர்களில் 10% க்கும் அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. போலியான பணியிடங்களை கண்டறிந்து அகற்றுவதன் மூலம், அநாவசிய செலவுகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முடிவு நிறுவனம் முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால்,…
-

Singapore Prime Minister Lee To Resign On May 15, Deputy PM Wong Set To Succeed in tamil | Singapore PM: போதும், எனக்கு வயசாயிடுச்சு..! பதவியை ராஜினாமா செய்யும் பிரதமர் லீ
Singapore PM Resign: லீயின் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை பிரதமரான வோங், புதிய பிரதமராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் ராஜினாமா..! சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் பிரதமர் பதவிய ஏற்று சுமார் 20 ஆண்டுகள் ஆன பிறகு, வரும் மே 15 ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவிதுள்ளார். கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் வாரிசு திட்டங்களில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, லீ திட்டமிட்டதை விட தாமதமாக…
-

Papua New Guinea faced magnitude 6.2-6.5 of earthquakes
பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதியடைந்தனர். சமீபகாலமாக உலக நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான், ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தைவான் நாடு வெகுவாக பாதிக்கப்பட்டது. அங்கிருக்கும் கட்டடங்கள் சீட்டுக்கட்டுப் போல சரிந்த வீடியோக்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படியான நிலையில் பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே பப்புவா நியூ…
-

Indian Student Shot Dead Inside His Audi In Canada South Vancouver | காரில் வைத்து கொல்லப்பட்ட இந்திய மாணவர்! கனடாவில் தொடரும் மர்மம்
கனடாவில் முந்தைய காலங்களை ஒப்பிடும்போது கடந்த 3 ஆண்டுகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருமளவும் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆங்காங்கே நடைபெறும் குற்ற சம்பவங்கள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. குறிவைக்கப்படுகிறார்களா கனடா வாழ் இந்தியர்கள்? கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒட்டாவாவில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். சமீப காலமாக, கனடா வாழ் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும்…
-

Israel Iran War Reason What is The Conflict Between Iran and Israel EXPLAINED in Tamil | Israel Iran War Reason: இடத் தகராறில் ஆரம்பித்தது இருநாட்டு போராக உருவெடுப்பு.. இஸ்ரேல்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இது மூன்றாம் உலக போரை கூட உருவாக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 ஜென்ரல் உள்பட 12 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் உறுதியாக சொல்லுகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஈரான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று…
-

Israel Iran War News in Tamil Israel Iran War who will win america support Israel
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் மற்றும் ஏவுகணை தாக்குதல் ஆகியவற்றின் மத்தியில், இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட 6 நாடுகள் அங்குள்ள தங்கள் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும், இந்த இரு நாடுகளுக்கும் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகிறது. இருப்பினும், அடுத்த…
-

Iran Israel Conflict: இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. அமெரிக்காவையும் எச்சரித்த ஈரான்.. என்ன நடக்கிறது..?
<p>இஸ்ரேல் நாட்டின் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. சிரியாவில் உள்ள தங்கள் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா விலகியே இருக்க வேண்டும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p> <p>ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நாளுக்குநாள் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று இரவு ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. இந்த தாக்குதலின்போது அமெரிக்கா…
-

17 Indians among 25 crew on board container ship seized by Iran near Strait of Hormuz
பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. போர் நிறுத்தம் கோரி சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்த போதிலும், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்: போர் தொடங்கி 6 மாதங்கள் ஆன நிலையிலும், அதன் தீவிரம் குறைந்தபாடில்லை. இதற்கிடையே, ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியா நாட்டு தலைநகரான டமஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. ஈரானில்…
-

Australia terror attack: பெரும் பதற்றம் – ஆஸ்திரேலியாவின் சிட்னியில் திவிரவாதிகள் தாக்குதல்
Australia terror attack: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டது மற்றும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வணிக வளாகம் ஒன்றில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வீடியோவில், தனிநபர் ஒருவர் தீவிரவாதிகளை தடுக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இந்த…
-

Iran Israel Clash: இந்தியர்களே உஷார்..! இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவியது ஈரான் ஆதரவு அமைப்பு
<p><strong>Iran Israel Clash:</strong> ஈரான் ஆதரவு போராளிகள் அமைப்பான ஹெஸ்பொல்லா கத்யுஷா ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ள்து.</p> <h2><strong>இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்:</strong></h2> <p>ஈரான் ஆதரவு போராளிக்அள் அமைப்பான, ஹெஸ்புல்லா இஸ்ரேலிய பீரங்கி தளங்கள் மீது டஜன் கணக்கான கத்யுஷா ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டஜன் கணக்கான கத்யுஷா…
-

48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல்.. ஈரான் போடும் மெகா திட்டம்.. அலறும் உலக நாடுகள்!
Iran Attack: காசாவில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. ஈரானை சீண்டும் இஸ்ரேல்: குறிப்பாக, ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரால் காசா பகுதியில் 33,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காசா போரில் தலையிட மாட்டோம்…
-

“ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்” இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!
MEA Advisory: போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொந்தளிப்பான சூழலில் மத்திய கிழக்கு நாடுகள்: பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. போர் நிறுத்தம் கோரி சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன. காசா…
-

Russian spacecraft almost obliterates Nasa satellite in 10 metre near miss
ரஷ்யா மற்றும் நாசா ஆகிய நாடுகளின் இரு செயற்கைக்கோள்கள் 10 மீட்டர் அருகருகே வந்த கடந்து சென்றது. பூமியை சுற்றும் செயற்கைக்கோள்கள்: பூமியின் கண்காணிக்கவும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பூமியை தவிர இதர கோள்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளும், அதன் தேவைக்கேற்ப, அவ்வப்போது செயற்கைக்கோள்களை அனுப்புகின்றனர். இவ்வாறு விண்வெளியில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளானது, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயல்படும்தன்மை கொண்டது. இதையடுத்து, அங்கு குப்பைகளாக வலம் வருகின்றன. இந்நிலையில் பல வருடங்களாக…
-

Twitter Down: எக்ஸ் தளம் முடக்கம்.. செய்வதறியாமல் திணறும் எலான் மஸ்க்.. என்னதான் பிரச்னை?
<p>Twitter Down: உலகின் பல்வேறு பகுதிகளில் எக்ஸ் தளம் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) முடங்கிய சம்பவம் பெரும் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனர் குழப்பம் அடைந்தனர்.</p> <h2><strong>சமூக வலைதளங்களின் வளர்ச்சி:</strong></h2> <p>வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக வலைதள பயனர்களின் எண்ணிக்கை தற்போது 4.9 பில்லியனாக…
-

Russian court rejects Google’s appeal against 400 crore fine over Ukraine content | Google Russia: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்
Google Russia: உக்ரைன் போர் தொடர்பான தவறான செய்திகளை பரப்பியதாக, 49.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கூகுள் நிறுவனத்திற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்: உக்ரைன் போர் பற்றிய போலித் தகவல் என்று ரஷ்யா கருதுவதை நீக்கத் தவறியதற்காக, கூகுள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி ரூபார் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் வழக்கு தொடர்ந்து. ஆனால், அபராதத்தை ரத்து செய்யக்கோரிய கூகுள் நிறுவனத்தின்…
-

குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்? கனடாவில் தொழிலதிபர் சுட்டுக்கொலை.. நடந்தது என்ன?
Canada Murder: இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் கனடாவும் அமெரிக்காவும் முதன்மையாக இருக்கிறது. குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்? ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு செல்பவர்கள், அந்நாட்டு கிரீன் கார்டை (நிரந்தர குடியுரிமை அட்டை) பெற்று கொண்டு, அந்நாட்டு குடிமக்களாக மாறுவதும் வழக்கமாகி வருகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா, கனடாவுக்கு செல்பவர்கள்…
-

Crime: 14 வயது என கூறி பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு.. சிக்கிய இளம்பெண்.. என்ன நடந்தது?
<p>அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை சிறுமி என கூறி பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p> <p>அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா நகரில் வசிக்கும் அலிசா ஆன் ஜிங்கர் என்ற 23 வயது பெண் தான் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் பொருட்டு தனது வயது 14 என சொல்லி அறிமுகமாகியுள்ளார். </p> <p>முன்னதாக பள்ளி மாணவர் ஒருவருடன் தகாத உறவு…
-

UK Murder: பிரிட்டனை அதிரவிட்ட இளம்பெண் கொலை.. 200 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்த கணவன்..
<p><strong>UK Murder:</strong> ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமீபத்தில் பகீர் தகவலை வெளியிட்டிருந்தார்.</p> <p>பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் எந்தளவுக்கு நடக்கிறது என்பதற்கு இதுவே சான்று. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு, டெல்லியில் நடந்த இளம்பெண் ஷ்ரத்தா கொலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.</p> <p>ஷர்த்தா…
-

Alarm bells ring over H5N1 bird flu Experts warn of pandemic Worse then Covid
உலகளவில் பரவி வரும் ’h5n1’ பறவைக்காயச்சல் கொரோனா பெருந்தொற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் ’H5N1’ வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு புதிய தகவல்களை வெளிட்டு வருகின்றனர். அதன்படி, டெய்லி மெயில் (Daily Mail) வெளியிட்ட அறிக்கையின்படி, பறவைக்காய்ச்சலின் H5N1 ரக வைரஸ் கொரோனா வைரஸை விட தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்த்ம் என்று எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ் பரவுவதும் வேகமாகி வருகிறது என்று தெரிவித்துள்ளனர். இதை…
-

Canada Accuses India Of Interfering In Its Elections External Affairs Ministry Response
Canada India: காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக கனட அரசாங்கம் மீது இந்தியா தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரிகள், தங்கள் நாட்டில் புகுந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக கனட அரசு பதில் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இந்திய கனட உறவில் மேலும் விரிசல்: இப்படிப்பட்ட சூழலில், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார்…
-

NASA Astronaut Loral O’Hara Returns to Earth from space station video | Video: விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பிய வீரர்கள்
ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையம்: சர்வதேச விண்வெளி நிலையம் என்பது பூமிக்கு அப்பால் சுமார் 360 கி.மீ தொலைவில் பூமியைச் சுற்றி வரும் விண்கலமாகும். இங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சென்று, பல நாட்கள் தங்கி ஆய்வு செய்வது வழக்கம். அங்கு சென்ற விண்வெளி வீரர்கள், வானியல் குறித்தான பல்வேறு தகவல்களை ஆராய்ந்து பூமிக்கு தகவல் தெரிவிப்பர். பூமியை வந்தடைந்த விண்வெளி வீரர்கள்:…
-

McDonald buys all Israeli franchise restaurants after boycott comes from Israel Palestine conflict | McDonald: உலகளவில் குவிந்த எதிர்ப்பு! இஸ்ரேலில் 225 உணவகங்களை சொந்தமாக்கிய மெக்டொனால்ட்ஸ்
McDonald buys all Israeli franchise: உலகளவில் மெக்டொனால்ட்சுக்கு எதிரான குரல் எழுந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள அனைத்து 225 ஃபிரான்ச்சைஸ் உணவகங்களை வாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. மெக்டொனால்ட்ஸ்: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உணவகமான மெக்டொனால்ட்ஸ், உலகளவில் மிகவும் பிரபலமான உணவகமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், மெக்டொனாட்ஸுக்கு எதிராக உலக அளவில் பெரும் எதிர்ப்பு குரல் எழுந்தது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள 225 ஃபிரான்ச்சைஸ் கடைகளை சொந்தமாக வாங்கும் முடிவை எடுத்துள்ளது. இதன் காரணமாக, 225…
-

Crime In Cities: உலகின் அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்கள் எது..? இந்தியாவில் இத்தனை நகரங்களா..? முழு விவரம்!
<p>உலகில் அதிக குற்றங்கள் நடைபெறும் நகரங்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் 20 இடங்களில் ஐந்து ஆப்பிரிக்க நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் 11 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. </p> <p>இந்த பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி 70வது இடத்திலும், நொய்டா 87வது இடத்திலும், குர்கான் 95வது இடத்தில் உள்ளது.<br /> </p> <h2><strong>முதல் இடம் எந்த நகரத்திற்கு..? </strong></h2> <p>numbeo.com இணையதளம் வெளியிட்ட பட்டியலின்படி, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கராகஸ் உலகிலேயே அதிக குற்றங்கள்…
-

மண்ணை கவ்வும் ரிஷி சுனக்.. திமிறி எழுந்த தொழிலாளர் கட்சி.. பிரிட்டன் கருத்துக்கணிப்பு முடிவுகளால் ஷாக்!
<p>பிரிட்டனில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைய உள்ளது.</p> <h2><strong>பிரிட்டன் பொதுத் தேர்தல்:</strong></h2> <p>பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் 650 உறுப்பினர்களை கொண்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு 326 இடங்களில் வெற்றிபெற வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை…
-

Cyber Attack: இஸ்ரேலில் சைபர் தாக்குதலுக்கு வாய்ப்பு .. மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை!
<p>இஸ்ரேலில் சைபர் தாக்குதலில் இணையதள சேவைகள் பாதிக்கப்படக் கூடும் என அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p> <h2>இஸ்ரேல் – ஹமாஸ் போர்</h2> <p>இஸ்ரேல் நாட்டின் மீது கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலில் நடைபெற இசை நிகழ்ச்சியை குறிவைத்து தாக்குதலானது தொடங்கியது. இதற்கு பதிலடியாக காஸா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் பணய கைதிகளாக சிறை…
-

Ghana Shocker 63 Year Old Priest Marries 12 Year Old Girl know more details here
குழந்தை திருமணத்திற்கு எதிராக பல உலக நாடுகள் கடுமையான சட்டங்களை இயற்றிய பிறகும், பல நாடுகளில் அந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. உலகில் 5இல் ஒரு சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. தொடர்ந்து வரும் குழந்தை திருமணங்கள்: இதை தடுக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்த பிறகு கடந்த சில ஆண்டுகளாக சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தற்போது பல்வேறு காரணிகளால் அது தடைப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிலவி…
-

Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose
தைவான் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோவானது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தைவான் நிலநடுக்கம்: இன்று அதிகாலை தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 5 எனவும் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தைவானில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்தன. பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளுக்கு செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. தைவானுக்கு சுனாமி எச்சரிக்கையைத் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அருகே…
-

Comet comes close to earth it visible in the skies know more details
வரும் ஜூன் மாதத்தில் வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நெருங்கி வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வால் நட்சத்திரம்: வானியலின் அற்புத நிகழ்வாக அவ்வப்போது ஆச்சர்யமூட்டும் பல நிகழ்வுகள் நடக்கும். அதில் சிலவற்றை விஞ்ஞானிகள் முன்பே கணித்து தெரிவிக்கின்றனர். அதில் சில நிகழ்வுகளை நாம் வெறும் கண்ணால் பார்க்க கூடியதாக இருக்கிறது. சிலவற்றை தொலைநோக்கி வழியாக மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், 12 பி பான்ஸ்-புரூக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்ட வால் நட்சத்திரமானது சுமார் 30…
-

Strongest Earthquake In 25 Years Hits TaiwanTsunami Warning Issued
தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இயற்கை பேரிடர்களில் மிகவும் அபாயகரமானதாக நிலநடுக்கம் கருதப்படுகிறது. பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகும்போது மேற்பரப்பு தட்டுகள் நகர்ந்து ஒன்றுடன் ஒன்று உராசுவதால் நிலநடுக்கமானது ஏற்படுகிறது. இது ஆழ்கடலில் நிகழும் போதும் சுனாமி அலைகள் எழுந்து பேரழிவை ஏற்படுத்துகிறது. கண நேரத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் நிலநடுக்கம் என்றாலே அனைவரும் பதற்றமடைந்து விடுகின்றனர். Massive Earthquake of 7.5 Magnitude…
-

Prime Minister Justin Trudeau has launched a national school meal program for school children in Canada
கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய பள்ளி உணவு திட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளார். As a teacher, I know kids learn better on a full stomach. Our new National School Food Program will make sure kids aren’t going to school hungry – and will give every student a fair shot at doing their best in the classroom. …
-

Pakistan Imran Khan and His Wife’s 14-Year Jail Term Suspended In Toshakhana Corruption Case | Imran Khan: இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan), அவரது மனைவி புஷ்ரா பீவி (Bushra Bibi) இருவருக்கும் விதிக்கப்பட்ட 14 ஆண்டு கால சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புஷ்ரா பீவி வழக்கு இம்ரான் கான் – புஷ்ரா பீவி இருவரும் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். 2017-ம் ஆண்டில் கவார் பிரீத்தும் புஷ்ரா பீவியும் விவாகரத்து பெற்றனர். இஸ்லாம் திருமண விதிகளின்படி கணவரை…
-

Canada PM Justin Trudeau announces free contraceptives for Women know more details here | Free Contraceptives: அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள் இலவசம்
Free Contraceptives: விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்று கொள்ளவும், கர்ப்பத்தின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் குடும்ப கட்டுப்பாடு உதவுகிறது. இதில், கருத்தடை முறைகள் பெரும் பங்காற்றுகிறது. கருத்தடை தொடர்பான தகவல்கள், சேவைகளை பெறுவது ஒவ்வொரு தனிநபரின் அடிப்படை மனித உரிமை ஆகும். கருத்தடையின் நன்மைகள்: திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுப்பது மகப்பேறு தொடர்பான உடல்நலக்குறைவு மற்றும் கர்ப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது. இளம் வயதில் குழந்தைகளை பெற்று கொள்வதால் பல பெண்கள் உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. இவர்களை தவிர,…
-

Billgates meets pm modi in delhi tutucorin pearls and some gifts and discuss ai and climatic condition | Billgates Modi: ”தூத்துக்குடி முத்துகள்” பில்கேட்ஸுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த மோடி
Billgates Meets Modi: உலகின் மிகப்பெரிய பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளருமானவர் பில்கேட்ஸ். இவர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். பில்கேட்ஸுக்கு பரிசளித்த மோடி: இந்தியாவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இந்திய பிரதமர் மோடியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பில்கேட்ஸ், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட…
-

Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து
Easter pilgrims: தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 45 பேர் பலியான சோகம்: மாமட்லகலா அருகே உள்ள பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புகளின் மீது மோதி பாலத்தின் மீது இருந்து கவிழ்ந்து கீழே இருந்த பள்ளத்தில் சரிந்தது. தொடர்ந்து, தரையில் மோதிய வேகத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. 165 அடி உயர பாலத்தில் இருந்து…
-

"உள்விவகாரங்களை நீங்க மதிக்கணும்" கெஜ்ரிவால் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பதில்!
<p><strong>இன்னும் 22 நாள்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், ஜார்க்கண்ட், டெல்லி என இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</strong></p> <h2>சர்வதேச பிரச்னையாக மாறிய கெஜ்ரிவால் விவகாரம்:</h2> <p>கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 2…
Latest News

Stay Connected
Kadıköy Su Kaçağı Tespiti Profesyonel ekipman kullandılar. https://vplesson.com/
Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/
Great content! Keep up the good work!
suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Ümraniye Zemin Altı Su Kaçağı Tespiti Nokta atışı kaçak bulma yaptılar. https://amano.lk/