Category: உலகம்
all world news including all countries
-

Henley Passport Index 2024 India Passport Rank Stands at 80th Position
எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவிக்கிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இந்த குறியீடானது 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை மதிப்பீடு செய்து வெளியிடுகிறது.ஒவ்வொரு நாட்டவரும், எத்தனை நாடுகளுக்கு முன் விசா இன்றி பயணம் செய்யலாம் அல்லது அந்த நாடுகளுக்கு சென்ற பின் விசா எடுத்துக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாக அறியப்படுகிறது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான பாஸ்போர்ட் குறியீட்டில் மிகவும்…
-

Australia PM Marriage: 60 வயதிலும் காதல் மலரும்.. காதலியை கரம்பிடித்த ஆஸ்திரேலிய பிரதமர்..
<p>ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசு இன்று ( பிப்.15 )சமூக வலைதளத்தில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது காதலி, காதலை ஏற்றுக் கொண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக, தனது காதலியுடன் செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.</p> <p>ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுவின் காதலி ஜோடி ஹெய்டன். இவர்கள் இருவரும், 2020 ஆம் ஆண்டு முதன் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த பிரதமர் தேர்தலிலும் அந்தோனிக்கு…
-

அனைத்து துறைகளும் வீழ்ச்சி.. ஜப்பானை தொடர்ந்து பொருளாதார மந்தநிலையில் சிக்கிய பிரிட்டன்!
<p>பிரிட்டனில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருப்பது உலக பொருளதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்தை சீர்செய்வேன் என்ற உறுதிமொழியுடன் ஆட்சி அமைத்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பொருளாதார மந்தநிலை பெரும் தலைவலியாக மாறியுள்ளது.</p> <h2><strong>பொருளாதார மந்தநிலை என்றால் என்ன?</strong></h2> <p>தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வீழ்ச்சி அடைந்தால் அதுவே பொருளாதார மந்தநிலை எனப்படும். அந்த வகையில், ஜப்பானை தொடர்ந்து பிரிட்டனில்…
-

Putin says Russia is close to creating cancer vaccines in russia speech | Cancer Vaccine: அறிவியலின் அடுத்த உச்சம்! விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி
Cancer Vaccine: புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் உள்ளனர் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். வருடங்கள் ஓடினாலும் பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத, குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது புற்றுநோய் தான். சில மருந்துகள் புற்றுநோய்க்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும், முழுமையாக புற்றுநோயை குணப்படத்தாமல் இருக்கிறது. தற்போது வரை, கீமோதெரபிதான் புற்றுநோய்க்கு எதிராக முக்கியான சிகிச்சை முறையாக இருக்கிறது. ”விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி” இதனால், உலகம்…
-

pm modi arrives Qatar after finished uae trip
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 7வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அபுதாபி விமான நிலையம் சென்றடைந்த அவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் அகமத் பின் சயீத் அல் நஹ்யான் கட்டித்தழுவி வரவேற்றார். இதன்பின்னர் இருவரும் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு,எரிசக்தி , இருநாட்டு மக்களிடையேயான நல்லுறவு உள்ளிட்ட விஷயங்கள்…
-

Russia Vladimir Putin : ரஷிய அதிபர் புதினை படுகொலை செய்ய சதி.. கதிகலங்க வைத்த எலான் மஸ்க்!
<p>கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க தொடங்கியது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக போர் தொடர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்த போரில், ரஷியா பல சவால்களை சந்தித்துள்ளது. பல சவால்களுக்கு மத்தியிலும், உக்ரைனில் பல முக்கிய இடங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது.</p> <h2><strong>"புதினை படுகொலை செய்துவிடுவார்கள்"</strong></h2> <p>இந்த நிலையில், உக்ரைனில் இருந்து ரஷிய அதிபர் புதின் பின்வாங்கினால் அவரை படுகொலை…
-

Euthanasia Former Dutch PM : மனைவியின் கையை பிடித்தபடி கருணை கொலை: முடிந்தது நெதர்லாந்து முன்னாள் பிரதமரின் வாழ்வு..
<p>நெதர்லாந்து நாட்டின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான ட்ரைஸ் வான் அக்ட், தனது மனைவி யூஜெனியுடன் சேர்ந்து கருணை கொலை செய்து கொண்டார். சொந்த ஊரான நிஜ்மேகனில் 93ஆவது வயதில், இருவரும் ஒருவரை ஒருவர் கைகளை பிடித்தபடி மரணம் அடைந்துள்ளனர். </p> <h2><strong>மனைவியுடன் கருணை கொலை செய்து கொண்ட முன்னாள் பிரதமர்:</strong></h2> <p>கடந்த 1977ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை, நெதர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்த ட்ரைஸ் வான் அக்ட், கிறிஸ்தவ ஜனநாயக முறையீட்டு…
-

தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு!
<p>இரண்டு நாள் பயணமாக நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில், துபாயில் இன்று நடந்த உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தூய்மையான, வெளிப்படைத்தன்மையான அரசின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.</p> <h2><strong>"தொழில்நுட்பத்தின் உலகளாவிய மையமாக துபாய் மாறிவருவது"</strong></h2> <p>தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "உலகளாவிய பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தின் உலகளாவிய மையமாக துபாய் மாறிவருவது ஒரு பெரிய விஷயம்.…
-

இதை யாரும் எதிர்பார்க்கல.. நவாஸ் ஷெரீப் வெச்ச ட்விஸ்ட்.. பாகிஸ்தானின் புதிய பிரதமர் இவரா?
<p>பாகிஸ்தானின் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நிலை நீடித்தது. கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அடுத்த நாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், புதிய அரசை அமைக்க முடியாத நிலை உருவானது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றிபெற்றனர்.</p> <h2><strong>பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?</strong></h2> <p>அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின்…
-

Rare Case Of Bubonic Plague In US oregon detected It Killed 50 Million In 14th Century
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் புபோனிக் பிளேக் என்ற அரிய நோயால் (Rare Case Of Bubonic Plague) பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வளர்ப்பு பூனை மூலம் இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.…
-

இந்தியர்களின் லட்சியம் இதுதான்? அபுதாபியில் சக்கைபோடு போட்ட பிரதமர் மோடி!
<p>இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில், அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் ‘அஹ்லன் மோடி’ நிகழ்ச்சியில் பிரதமர் இன்று கலந்து கொண்டார். </p> <h2><strong>"அனைவரின் இதயத்துடிப்பும் ஒன்றைதான் சொல்கிறது"</strong></h2> <p>ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, " அபுதாபியில் புதிய சரித்திரம் படைத்துள்ளீர்கள். நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து…
-

‘India-UAE Ties About Talent, Innovation, Culture’: PM Addresses ‘Ahlan Modi’ Event In Abu Dhabi in tamil
PM Modi In UAE: அபுதாபியில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ‘அஹ்லான் மோடி’ நிகழ்ச்சியில், பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றினார். அபுதாபியில் பிரதமர் மோடி: அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின், முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை அபுதாபி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்த, ”அஹ்லான் மோடி” எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.…
-

இம்ரான் கானுக்கு செக்.. நவாஸ் ஷெரீப்புடன் கைகோர்க்கும் பிலாவல் பூட்டோ.. பாகிஸ்தான் அடுத்த பிரதமர் யார்?
<p>பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அடுத்த நாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், புதிய அரசை அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.</p> <p>336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மை சமூகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு விகிதாசார…
-

madagascar is set to castrate child physically abused person after its parliament passed a law last week
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரின் நாடாளுமன்றம், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ரசாயனம் கொடுத்து அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டத்தை தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு சில அமைப்புகள் பெரியளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆண்மை நீக்கம்: …
-

Hungary President Resigns: பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கிய விவரகாரம் – ஹங்கேரி அதிபர் பதவி விலகல்!
<p>குழந்தைகள் மீது பாலியல் வன்முறை நடத்திய குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதால் ஹங்கேரி அதிபர் கத்தலின் நோவாக் ( Katalin Novak ) பதவி விலகியுள்ளார். </p> <p>ஹங்கேரியில் அரசு நடத்தி வரும் சிறார் இல்லத்தில், அங்குள்ள குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை பிரச்னை இருந்துள்ளது. இதை மறைக்க உதவிய நபருக்கு அதிபர் அதிகாரத்தின் அடிப்படையில், கடந்த 2023 ஏப்ரல் மாதம் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது, இது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. எதிர்க்கட்சியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.</p> <p><strong>”நான்…
-

UPI Payment: செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்
<p><strong>UPI Payment: </strong>இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். </p> <h2><strong>யுபிஐ சேவை:</strong></h2> <p>மத்திய அரசு 2016ல் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட பிறகு UPI வசதி…
-

மாஸ் காட்டிய இம்ரான் கான்.. ஆனா, ராணுவம் வெச்ச ட்விஸ்ட்.. பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்?
<p>பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மை சமூகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p> <h2><strong>பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்:</strong></h2> <p>அதன்படி, தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்த இடங்கள் ஒதுக்கப்படும். எனவே, 266 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பஜாவூரில்…
-

biggest stars in the milky way galaxy and
நாம் பூமி என்ற கோளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் பூமியோடு பிற 7 கோள்களை சேர்த்து என மொத்தம் 8 கோள்கள் சூரியன் என்கிற நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அதனால் இதை சூரிய குடும்பம் என அழைக்கிறோம். நமது சூரியனை போல, எண்ண முடியாத அளவிலான தொகுப்பை நட்சத்திர திரள்கள் என அழைக்கிறோம். நாம் இருக்க கூடிய நட்சத்திர திரளுக்கு பால்வழி என அழைக்கப்படுகிறது. பால்வழி போன்று பல நட்சத்திர திரள்கள் இருக்கின்றன. இந்நிலையில் நாம் வாழக்கூடிய…
-

Top 10 Largest Lizards in the World komodo Dragon Crocodile Monitor
பல்லிகள் என்றால் நாம் வீட்டில் பார்த்திருப்போம், சுவரில் ஒட்டிக்கொண்டு அங்கும் இங்கும் சென்றுகொண்டு பூச்சிகளை உண்டு வாழும். ஆனால் சில பல்லி இனங்கள் மனிதர்களை விட நீளமாகவும், அதிக எடை உள்ளதாகவும் உள்ளது என்றால் நம்ப முடிகிறத?. இதோ உலகில் வாழும் மிகப்பெரிய 10 பல்லி இனங்கள் குறித்து தெரிந்து கொள்வோம். 1.கொமோடோ டிராகன்: பூமியில் வாழும் அனைத்து பல்லி இனங்களிலும் மிகப்பெரியது, பிரமாண்டமான கொமோடோ டிராகன் 10.3 அடி நீளம் மற்றும் 150 கிலோ எடையை…
-

பாகிஸ்தானில் இம்ரான் ஆதரவு கட்சி முன்னிலை
Pakistan Election Results 2024: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு கட்சி முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 265 தொகுதிகளில் 84 தொகுதிகளில் இம்ரான் கான் ஆதரவு கட்சியும், 59 இடங்களில் நவாஷ் செரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும், 44 இடங்களில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கைப்பற்றியுள்ளது. மேலும் காண Source link
-

Top 10 Highest Mountains in the World everest and k2
1.எவரெஸ்ட் – 8,848 மீட்டர் எவ்ரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து பூமியின் மிக உயர்ந்த மலையாகும். இமயமலை தொடரில் அமைந்துள்ள இம்மலையானது சீனா-நேபாள எல்லை வழியாக செல்கிறது. 2.கே-2 கே-2 அல்லது காட்வின் ஆஸ்டின் மலையானது, கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது உயரமான மலையாகும். இது சீனா-பாகிஸ்தானுக்கு இடையில் அமைந்துள்ளது 3.கஞ்சன்ஜங்கா – 8,586 மீட்டர் கஞ்சன்ஜங்கா கடல் மட்டத்திலிருந்து உலகின் மூன்றாவது உயரமான மலை. இது நேபாளத்திற்கும் இந்தியாவின் சிக்கிமிற்கும் இடையில் அமைந்துள்ளது,…
-

This Popular South Indian Dish Ranked 10th Among Best Pancakes In The World Any Guesses | Best Pancakes In The World: உலகளவில் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்ற தோசை
தோசை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. தோசை உலகின் மிகச் சிறந்த (Best Pancakes In The World ) PanCake பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. தென்னிந்திய உணவுகளில் பலருக்கும் மிகவும் பிடித்த உணவு வகைகளுள் ஒன்று தோசை. சாதாரண தோசை, மசாலா தோசை, வெங்காய தோசை, ஆனியன் ஊத்தாப்பம், பனீர் தோசை, பீட்ரூட், கேரட் தோசை, சிறுதானிய தோசை, கறி தோசை, மீன்குழம்பு தோசை உள்ளிட்ட பல வகைகளில் தோசை செய்யலாம். உளுந்து, அரிசி,…
-

Pakistan Election Results 2024 Not a Single PM Completed Full Term In Office Since 1947
பாகிஸ்தான் நாட்டில் இதுவரை எந்த பிரதமரும் தங்களது பதவி காலத்தை நிறைவு செய்ததில்லை என்ற சோகமான வரலாறு தொடர்ந்து வருகிறது. அதனைப் பற்றி காணலாம். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. 1956 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே ஆசிய கண்டத்தில் இருக்கும் பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர்…
-

US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்.. தூள் கிளப்பும் டிரம்ப்.. ஷாக்கான அதிபர் பைடன்!
<p>உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டார்.</p> <h2><strong>அமெரிக்க அதிபர் தேர்தல்:</strong></h2> <p>பைடனை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட முனைப்பு…
-

Add A ‘Little Dragon’ in Your Family”: Singapore PM’s Message For Couples | Singapore PM’s: ”குடும்பத்தில் ஒரு குட்டி டிராகனை சேர்த்துக் கொள்ளுங்கள்”
Singapore PM’s: டிராகன் ஆண்டை ஒட்டி சிங்கப்பூர் தம்பதிகள், குழந்தை பெற முன்வர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ”குட்டி டிராகனை சேர்த்து கொள்ளுங்கள்” – சிங்கப்பூர் பிரதமர் சீன வம்சாவளியினர் டிராகன் ஆண்டில் பிறக்கும் குழந்தைகள் மங்களகரமானவை, என்ற நம்பிக்கைய கொண்டுள்ளனர். இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதைமுன்னிட்டு வெளியாகியுள்ள அவரது உரையில், “இளம் தம்பதிகள் தங்கள் குடும்பத்தில் ஒரு ‘குட்டி டிராகனை’…
-

Pakistan Election Results 2024 Imran Khan party backed independent candidates leads Nawaz sharif faces tough contest
Pakistan Election: பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பொதுத் தேர்தம் நடத்தப்பட்டது. 336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்களும் சிறுபான்மை சமூகத்திற்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலில்…
-

Right to Disconnect: ஆபீஸ் முடிந்த பிறகும் வேலை அழைப்பு வருகிறதா? தடுப்பதற்கு வருகிறது புது சட்டம்!
<p>ஒரு நாளில் பணி நேரம் முடிந்தபிறகு அலுவல் தொடர்பான ஃபோன் அழைப்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமை வழங்கும் முறையில் ஆஸ்திரேலியா அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது. </p> <h2><strong>பணி நேரம் கடந்தும் வேலை:</strong></h2> <p>அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வேலை செய்து பொருளீட்டுவது என்பது காலப்போக்கில் வேறொரு பரிணாமத்தை அடைந்துள்ளது. வேலை, குடும்பம், உறவுகள், வாழ்க்கை என எல்லாவற்றையும் சமநிலையோடு அணுகுவதில் ஆண், பெண் என இருவருமே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால்…
-

Wildlife Photography: "அழகாக உறங்கும் துருவக் கரடி" சிறந்த வன உயிரின புகைப்பட கலைஞர் விருதை வென்றது!
<p>சிறைய பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் புகைப்படம் பிரிட்டன் தேசிய வராலாற்று அருங்காட்சியகத்தின் சார்பில் வழங்கப்படும் ஆண்டின் ‘சிறந்த வனவிலங்கு புகைப்படம்’ (மக்கள் தேர்வு) விருதைப் பெற்றுள்ளது.</p> <h2><strong>தூங்கும் துருவக்கரடி:</strong></h2> <p>துருவக் கரடி அழகாக உறங்கிய படத்தை எடுத்த பிரிட்டனைச் சேர்ந்த நிமா சரிஹானி (Nima Sarikhani) ‘ இந்தாண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர்’ விருதை வென்றுள்ளார். ’Natural History Museum’ நடத்திய புகைப்படப் போட்டியில் நார்வே தீவுகளில் உள்ள துருவக் கரடியை படமெடுத்த…
-

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: எத்தனை இடங்களுக்கான தேர்தல்? எந்தெந்த கட்சிகள் பங்கேற்பு? முழு விவரம்!
<p>வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 8) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மூலம் பாகிஸ்தான் மக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான எதிர்காலத்தை தீர்மானித்து, பொருளாதார நெருக்கடியை சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p> <p>பாகிஸ்தானில் தற்போது கடும் விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கே தவித்து வருகின்றன. இப்படியான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இந்த தேர்தலையொட்டி, சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பாதுகாப்புப்…
-

Britain’s King Charles III Diagnosed With Cancer official statement from Buckingham Palace | Britain’s King Charles: பேரதிர்ச்சி..! 74 வயதில் பிரிட்டன் மன்னரான மூன்றாம் சார்லஸ்
Britain’s King Charles: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு: கிங் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல, மாறாக விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட்டுக்கான அவரது சமீபத்திய சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயின் சரியான தன்மை தொடர்பான தகவல்கள்…
-

இலங்கை 76-வது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம்
<div class="gs"> <div class=""> <div id=":qj" class="ii gt"> <div id=":qi" class="a3s aiL "> <div dir="auto"> <div dir="auto" style="text-align: justify;"><strong>இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்த வேண்டும் என பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம்.</strong></div> <div dir="auto" style="text-align: justify;"> <p>ஒரு காலத்தில், உலகம் முழுவதையும் ஐரோப்பியர்கள் ஆண்டு வந்தனர். குறிப்பாக, ஆசிய கண்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பின்னர், நடைபெற்ற விடுதலை போராட்டத்தின் விளைவாக பல்வேறு ஆசிய நாடுகள்…
-

காவல் நிலையத்தில் ஸ்னைப்பர் தாக்குதல் 10 காவலர்கள் பலி, 6 பேர் காயம்
Pakistan Cops Killed: பாகிஸ்தானில் பதற்றமான கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள, காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பாகிஸ்தான் காவலர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது, நள்ளிரவில் பஷ்டூன் போராளிகள் ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் ஸ்வாபியின் எலைட் போலீஸ் பிரிவைச் சேர்ந்த…
-

தொடர்ந்து விரிவடையும் போர்.. ஈராக், சிரியாவை விட்டுவைக்காத அமெரிக்கா.. உச்சக்கட்ட பதற்றம்!
<p>பாலஸ்தீனிய பகுதியான காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.</p> <h2><strong>பிராந்தியம் முழுவதும் விரிவடையும் போர்:</strong></h2> <p>இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கம் சண்டையிட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி செங்கடல் பகுதியில்…
-

Mark Zuckerberg becomes dollar 27 billion richer as Meta stock rallies net worth surpasses Bill Gates
Mark Zuckerberg: மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் 27 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. மெட்டா நிறுவன வருவாய் விவரம்: மெட்டா நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு, மெட்டா குழுமத்தின் பங்குகள் நேற்று மட்டும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மெட்டா நிறுவன பங்குகளின் மதிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு கடுமையாக சரிந்தது. கடந்த 2022ஆம் ஆண்டில் 35 பில்லியன் டாலர் அளவிற்கு…
-

Imran Khan: திருமண சட்ட விதிகளை மீறிய இம்ரான் கான்.. மனைவிக்கும் சேர்த்து சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
Imran Khan: பாகிஸ்தான் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த இம்ரான்கான் 1996ம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2018ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவியேற்றார். அந்த நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ம் ஆண்டு இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. முடிவுக்கு வருகிறதா இம்ரான் கானின் அரசியல் பயணம்? பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கானுக்கு எதிராக…
-

35 million new cancer cases projected in 2050 world health organisation report
WHO: 2050ஆம் ஆண்டுக்குள் புதிதாக 3.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வருடங்கள் ஓடினாலும் பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத, குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது புற்றுநோய் தான். பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் புற்றுநோய்க்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சில மருந்துகள் புற்றுநோய்க்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும், முழுமையாக புற்றுநோயை குணப்படத்தாமல் இருக்கிறது. தற்போது வரை, கீமோதெரபிதான் புற்றுநோய்க்கு எதிராக முக்கியான சிகிச்சை…
-

Indias Grant Loan in 2023-24 which county in lead including maldives check the list
Indias Grant Loan: வெளிசந்தையில் கடன் வாங்கி அண்டை நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. ரூ.14.13 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்: மத்த்ய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் நிதி பற்றாக்குறைய சமாளிக்க பிரமாண பத்திரங்கள் உள்ளிட்டவை மூலம், 14.13 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 15.43 லட்சம் கோடி ரூபாய் கடன் வங்கியதை விட இது குறைவே…
-

Pakistan: நெருங்கும் பொது தேர்தல்.. பாகிஸ்தான் சுயேட்சை வேட்பாளர் சுட்டுக்கொலை..
<p>பாகிஸ்தானில் இன்னும் ஒரு வார காலத்தில் அதாவது பிப்ரவரி 8 ஆம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜூர் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சூட்டத்தில் உயிரிழந்தார்.</p> <p>பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய சுயேட்சை வேட்பாளர் ரெஹான் ஜெப் கான்…
-

Wipro layoffs Hundreds of mid level employees to lose jobs says report
Wipro Layoff: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, 100க்குக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. விப்ரோ எடுத்த அதிரடி முடிவு: குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில்…
-

Former Pakistan Prime Minister Imran Khan and his wife have been sentenced to 14 years in prison in a corruption case.
தோஷ்கானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு (Imran Khan) 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். அரசியல்வாதியும் கூட. கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) தொடங்கினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது. நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால்…
-

Right To Abortion: நிலைநாட்டப்படுமா பெண்கள் கருகலைப்பு உரிமை? – பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!
<p>பெண்களின் கருகலைப்பு உரிமை தொடர்பான மசோதா நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். </p> <p>அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பெண்கள் கருகலைப்பு தொடர்பான உரிமைகள் வழங்கப்படும் என உறுதியளித்தார். பிரான்ஸ் அரசாங்கம் அரசியலமைப்பின் 34 வது பிரிவு "கருக்கலைப்புக்கு பெண்களின் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளை சட்டம் தீர்மானிக்கும்” என்று திருத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. </p> <p>அரசியலமைப்புத் திருத்தமானது நாடாளுமன்றத்தின்…
-

இனி நல்ல காலம்தான் போலயே! மீண்டெழும் உலக பொருளாதாரம்.. இந்தியா நிலை என்ன? சர்வதேச நிதியம் கணிப்பு
<p>கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி நான்கு ஆண்டுகளாக உலக பொருளாதாரம் பெரும் சவால்களை சந்தித்தது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று, அதனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் என உலக பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டது. கடந்தாண்டுதான், நிலைமை ஓரளவுக்கு சீரானது.</p> <p>உக்ரைன் – ரஷிய நாடுகளுக்கு இடையே போர் தொடர்ந்த போதிலும், இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் தொடங்கிய போதிலும் பொருளாதாரத்தில் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. </p> <h2><strong>எப்படி இருக்கப்போகிறது </strong><strong>உலக பொருளாதாரம்</strong><strong>?</strong></h2>…
-

Missing Indian Student In US Confirmed Dead; Body Found On Purdue University Campus Who Was Neel Acharya?
அமெரிக்காவிலுள்ள இண்டியான மாகணத்தில் மாயமான இந்திய மாணவர் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இண்டியான மாகணத்திலுள்ள ‘John Martinson Honors College of Purdue University’-யில் கணினி அறிவியலில் பட்டம் படித்துவரும் நீல் ஆச்சார்யா (Neel Acharya) என்ற மாணவர் கடந்த ஞாயிறுக்கிழமை முதல் காணவில்லை என அவருடைய தாய் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உதவி கோரியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக காவல் துறையின தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பொது Purdue பல்கலைக்கழக்த்தின் வளாகத்தில்…
-

Imran Khan, Shah Mahmood Qureshi Sentenced To 10 Years In Jail In Cipher Case
அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு (Imran Khan) பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். அரசியல்வாதியும் கூட. கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) தொடங்கினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது.நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால் நீண்ட காலம் பதவியில்…
-

Bernard Arnault Overtakes Elon Musk As Richest In World Check Latest Net Worth | Richest Persons: எலான் மஸ்க்கை ஓரங்கட்டிய அர்னால்ட்! இனி இவர்தான் நம்பர் 1 பணக்காரர்
உலகப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக, பெரு நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தினந்தோறும் வெளியாகும் இது தொடர்பான செய்திகள் மாத சம்பளம் வாங்குபவர்கள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. உலக பணக்காரர் பட்டியல்: ஆனால், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர்களின் சொத்துப் பட்டியலைப் பார்த்தால் வேலையை விட்டு தூக்கும் நிறுவன உரிமையாளர்கள் வளர்ச்சி மட்டும் குறையவில்லை என்றே தோன்றுகிறது. இப்படிப்பட்ட சீரற்ற பொருளாதார…
-

Iran-Pakistan: மீண்டும் வெடிக்கும் பிரச்னை – ஈரானில் 9 பாகிஸ்தானியர்கள் படுகொலை – காரணம் என்ன?
<p><strong>Pakistani killed in iran:</strong> ஈரான் நாட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டதால், இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் சிக்கலாகியுள்ளது.</p> <h2><strong>9 பாகிஸ்தானியர்கள் கொலை:</strong></h2> <p>ஈரானின் அமைதியான தென்கிழக்கு எல்லைப் பகுதியில் சனிக்கிழமையன்று அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள், ஒன்பது பாகிஸ்தானிய தொழிலாளர்களை கொலை செய்துள்ளனர். சரியாக, ஒரு வாரத்திற்கு முன்பு அண்டை நாடுகளான இரண்டும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டன. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் வரை கொல்லப்பட்டதாக…
-

Donald Trump Ordered To Pay 692 Crores To Rape Accuser In Defamation Case
Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில், மான்ஹாட்டன் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. டிரம்புக்கு ரூ.692 கோடி அபராதம்: அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தன்னிடம் அத்துமீறி நடந்ததாக பிரபல பத்திரிகையாளரான ஜீன் கரோல் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், தனது குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்ததோடு, நம்பகமான பத்திரிகையாளர் என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் ஜீன் வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும்…










suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz