cinema headlines 23rd april 2024 tamil cinema news rajinikanth mammootty S Janaki Aparna Das


அபர்ணா தாஸூக்கு நாளை கல்யாணம்..களைகட்டிய வடக்கஞ்சேரி.. தொடங்கியது கொண்டாட்டம்!
பீஸ்ட், டாடா படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரலமான நடிகை அபர்ணா தாஸின் திருமண கொண்டாட்டப் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன. மலையாள நடிகையான அபர்ணா தாஸ், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த பிரபல நடிகரான தீபக் பரம்போலை கரம்பிடிக்க உள்ளார். நாளை இவர்களது திருமணம் கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் நடைபெற உள்ளது.
ரத்னகுமாரை கழற்றி விட்ட லோகேஷ்.. புதிதாக வந்த சந்துரு அன்பழகன் யார் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் கூலி திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனராஜ் தன் ஆஸ்தான டீமுடன் களமிறங்கும் இப்படத்தில், அவரது முந்தைய லியோ, விக்ரம் படங்களில் இணைந்து பணியாற்றிய இயக்குநர் ரத்னகுமார் விலகியுள்ளது பேசுபொருளாகி உள்ளது. மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநரான ரத்னகுமார் லோகேஷின் மாஸ்டர் படம் தொடங்கி வசனகர்த்தா, திரைக்கதை எழுத்து என பணியாற்றி வரும் நிலையில், முன்னதாக லியோ பட விழாவின்போது நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்சித்ததாக இணையத்தில் விமர்சனங்கள் கிளம்பின.
“மாரி செல்வராஜ் போன்றவர்களை காலி செய்யும் பெரிய ஹீரோக்கள்” – ராஜ் கபூர் குற்றச்சாட்டு
மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் கஷ்டப்பட்டு முதல் படம் எடுக்கிறார்கள் ஆனால் அவர்களை அடுத்த அடி வளர விடக்கூடாது என்பதில் பெரிய ஹீரோக்கள் உறுதியாக இருப்பதாக நடிகர் ராஜ் கபூர் குற்றம் சாட்டியுள்ளார்.  சந்தோஷ் நம்பிராஜன் இயக்கியுள்ள உழைப்பாளர் தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.  இதில் பேசிய நடிகர் ராஜ் கபூர், பெரிய படமோ, சின்ன படமோ கொள்கையை எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்க முயற்சிக்க வேண்டும்” எனtத் தெரிவித்துள்ளார். 
எதிர்பார்த்த மாதிரி அமையாத படம்.. முதல் படத்தில் நொந்துபோன இயக்குநர் விஜி!
2001ஆம் ஆண்டு பிரபுதேவா, லைலா நடிப்பில் வெளியான அள்ளித்தந்த வானம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஜி. அவர் தன் முதல் படம் குறித்து சமீபத்திய நேர்க்காணலில் மனம் திறந்துள்ளார். நெகட்டிவ் ரோலில் மட்டும் 2500 அடி வெட்டப்பட்ட நிலையில்,  படம் துண்டு துண்டாகி விட்டது என்றூம்,  இதனால் படத்தின் தரம் இல்லாமல் போய் விட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 15 பாடல்கள் ரெக்கார்டிங்.. எஸ். ஜானகி பற்றி பலரும் அறியாத சில தகவல்கள்!
தென்னிந்திய சினிமாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ். ஜானகியின் பிறந்தநாள் இன்று. தன்னுடைய தனித்துவமான இனிய குரலால் பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்த எஸ்.ஜானகி 60 ஆண்டுகள் 17 மொழிகளில் 48000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி சாதனை படைத்துள்ளார்.  
 

மேலும் காண

Source link

PM Modi : "எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைச்சு..முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க" பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை!


<p>பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.</p>
<h2><strong>வெறுப்பை தூண்டும் விதமாக பேசினாரா பிரதமர்?</strong></h2>
<p>ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது மீதமுள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலை போன்று இந்த முறையும் ராஜஸ்தானில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது.</p>
<p>இதற்காக, பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இஸ்லாமியர்கள் குறித்து அவர் கூறிய கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.</p>
<p>இது வெறுப்பை தூண்டும் பேச்சு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. காவல் நிலையத்திலும் தேர்தல் ஆணையத்திடமும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.&nbsp;</p>
<h2><strong>இஸ்லாமியர்கள் குறித்து மீண்டும் சர்ச்சை கருத்து:</strong></h2>
<p>இந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர், "எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்து காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிவிடும்" என பேசியுள்ளார்.</p>
<p>காங்கிரஸை கடுமையாக சாடிய அவர், "2004 இல், ஆந்திரப் பிரதேசத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது. அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை.</p>
<p>உண்மை என்னவென்றால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ​​தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை உடைத்து தங்களின் சிறப்பு வாக்கு வங்கிக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்க நினைத்தார்கள். இது, அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது.</p>
<p>தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகளுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் வழங்கிய இடஒதுக்கீட்டு உரிமையை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க விரும்பியது.</p>
<p>காங்கிரஸ் கட்சியின் கொள்கை எப்போதும் சமரச அரசியலை மையப்படுத்தியே இருக்கிறது. அதன் கொள்கையே வாக்கு வங்கி அரசியலாகும். 2004ல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, ​​அவர்கள் செய்த முதல் காரியம், ஆந்திராவில் எஸ்சி/எஸ்டி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்ததுதான்.</p>
<p>காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் செயல்படுத்த விரும்பிய திட்டம் இது. 2004 மற்றும் 2010 க்கு இடையில், அவர்கள் நான்கு முறை முஸ்லிம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முயன்றனர். ஆனால், சட்ட ரீதியாக தடைகள் இருந்ததாலும் உச்ச நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை காரணமாகவும் அவர்களால் முடியவில்லை" என்றார்.</p>
<div id="tw-target-rmn-container" class="tw-target-rmn tw-ta-container F0azHf tw-nfl"><strong>இதையும் படிக்க: <a title="Modi Speech On Muslims : " href="https://tamil.abplive.com/news/india/pm-modi-on-muslims-says-congress-will-distribute-people-property-gold-among-them-179470" target="_blank" rel="dofollow noopener">Modi Speech On Muslims : "உங்க சொத்துக்களை புடுங்கி முஸ்லீம்களுக்கு கொடுத்துடுவாங்க" : மோடி சர்ச்சை கருத்து</a></strong></div>

Source link

m tv splitsvilla final episodes tamil in jio cinemas details


பரபரப்பான ரியாலிட்டி ஷோவாக இந்தி ரசிகர்களைக் கவர்ந்த எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் ரியாலிட்டி ஷோவானது, தற்போது எம்.டிவி மற்றும் ஜியோ சினிமா செயலியில் ஒளிபரப்பாகி வருகிறது. இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ள ரியாலிட்டி ஷோவை பிரபல நடிகை சன்னி லியோனும், தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்த வார இறுதி எபிசோடில் மாலை நேரத்தில் நட்சத்திரங்களுடன் தொடங்கும் நிகழ்ச்சியானது, திகைப்பூட்டும் உடைகள், அவதூறான வதந்திகள், நாடக நிகழ்ச்சிகளால் உணர்ச்சிக் குவியலான ரோலர் கோஸ்டர் போன்ற உணர்வை பார்வையாளர்களுக்குத் தரும் என்பது நிச்சயம். காஷிஷ் செய்யும் கடந்தகால யுக்திகள் குறித்த தொடர் உரையாடல்கள் சூழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அதே நேரத்தில் டாக்டர் அரிகாவைப் பற்றிய அட்டியின் சந்தேகங்கள் விவாதத்துக்கு வழிவகுக்கின்றன.
மேலும், சன்னி ஆரக்கிளுக்கு தனது துணையைத்  தேர்ந்தெடுத்து அவரை வெளியேற்றுகிறார். இந்த நேரத்தில் ஆதித், மிஸ்சீஃப் (குறும்பு) பெட்டியைத் திறந்ததும், அதிர்ச்சி அலைகள் அரங்கத்தில் உருவாகின்றன.ஆனால் உண்மையான குழப்பம், குறும்புக்காரரான உர்பியின் (Uorfi)  வருகையுடன் தொடங்குகிறது.
பாதுகாப்பான பக்கத்தில் உள்ள தகுந்த போட்டியாளர்களை அவர் கண்காணிக்கிறார். பின்னர் அவர் கூறும்போது, “இந்தப் பக்கத்தில் எனக்கு சரியான துணை இல்லை என்று தோன்றுகிறது. எனவே உங்கள் பக்கத்துக்கு வந்து குழப்பம் செய்ய விரும்புகிறேன்” என்கிறார்.
முன்னாள் காதலர்கள், காதலிகளின் நுழைவு இது வில்லாவைத் தலைகீழாக மாற்றியது. மேலும் மோதல்களின் துவக்கத்தையும் தூண்டியது. அனைத்து போட்டியாளர்களும் தங்களது காதல் முறிவு மற்றும் அதிர்ச்சிகரமான கடந்த காலங்களைப் பற்றி பேசுவதால், ஸ்ப்ளிட்ஸ்வில்லா மற்றும் எக்ஸ்-ஐல் உள்ளவர்களுக்கு இடையே ஒரு கடுமையான சண்டையாக பதற்றங்கள் அதிகரிக்கின்றன.
ஆனால் இந்த நாடகம் அதோடு முடிவடையவில்லை. அடுத்த நாள் உர்பி (Uorfi- The Mischief Maker), நீதிமன்ற அறை அமர்வுக்கு ஏற்பாடு செய்ததால், ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, உணர்ச்சிகள் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் காதலர்கள், காதலிகள் தங்கள் வழக்குகளை வாதாடுவதற்காக தயாராக நிற்கின்றனர்.
காதலர்கள், காதலிகள் கண்ணீர் சிந்துகின்றனர். இதயங்கள் உடைந்தன, உண்மை வெளிச்சத்துக்கு வரும்போது அங்குள்ள ஜோடிகள் பரிசோதிக்கப்பட்டனர். முன்னாள் காதலர்கள், காதலிகள்  ஒருவரையொருவர் எதிர்கொண்டு கேள்விகளை எழுப்பினர். இந்த வியத்தகு மோதலில் தங்கள் பிரச்சினைகளை அவர்கள் வெளியுலகுக்குக் கொண்டு வருகின்றனர். புறக்கணிப்பு மற்றும் துரோக குற்றச்சாட்டுகள் முதல் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மன்னிப்பு வரை, ஒவ்வொரு மோதலும் உக்கிரமான தீவிரத்துடன் ஸ்பிளிட்ஸ்வில்லாவில் வெளிப்பட்டது.
இந்த வார இறுதியில் உணர்ச்சிகள், கண்ணீர் மற்றும் வாக்குவாதங்களுடன் நிகழ்ச்சி முடிந்தது. ஆனால் இதைத் தொடர்ந்து அடுத்து வரவிருக்கும் பாகங்களில் புதிய விதமான இலக்குகள் மற்றும் புதிய குறும்புகளுடன் அதிக அளவிலான நாடகங்கள் அரங்கேறும்.

மேலும் காண

Source link

csk vs lsg match highlights Lucknow Super Giants won by 6 wickets Marcus Stoinis


ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் லக்னோ அணிகள் விளையாடின.
சென்னை – லக்னோ:
இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினார்கள். 3 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ரஹானே 1 ரன்கள் மட்டுமே எடுத்து மேட் ஹென்றி பந்தில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தார் டேரில் மிட்செல்.  10 பந்துகள் களத்தில் நின்ற மிட்செல் 1 பவுண்டரி உட்பட மொத்தம் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பின்னர் கெய்க்வாட் உடன் ஜோடி சேர்ந்தார் ரவீந்திர ஜடேஜா. இவர்களது ஜோடி லக்னோ அணியின் பந்து வீச்சை நொறுக்கியது. இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களை எடுத்து அரைசதத்தை பதிவு செய்தார். 19 பந்துகள் களத்தில் நின்ற ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் எடுத்து மொஹிஸ்கான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது களம் இறங்கிய ஷிவம் துபே ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். இவர்களது ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனிடையே சி.எஸ்.கே அணியின் சின்ன சிங்கம் ருதுராஜ் கெய்க்வாட் 56 பந்துகளில் சதம் விளாசினார்.கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 108 ரன்களை குவித்தார். அதேபோல் ஷிவம் துபே 27 பந்துகள் களத்தில் நின்ற ஷிவம் துபே 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 66 ரன்களை குவித்தார். கடைசி 1 பந்திற்கு களம் இறங்கிய தோனி பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்தது.
211 ரன்கள் இலக்கு:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினார்கள். இதில் குயின்டன் டி காக் டக் அவுட் முறையில் வெளியேறினார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கே.எல். ராகுல் 14 பந்துகள் களத்தில் நின்று 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 16 ரன்கள் எடுத்து முஸ்தாபிஷர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ருத்ரதாண்டவம் ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் 

MS FINISHES OFF IN STYLE IN CHENNAI! pic.twitter.com/eYw043Z9zs
— Lucknow Super Giants (@LucknowIPL) April 23, 2024

பின்னர் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் உடன் ஜோடி சேர்ந்தார் தேவ்தட் படிக்கல். இவர்களது ஜோடி லக்னோ அணிக்கு ரன்களை வேகமாக சேர்த்தது. இதனிடையே மார்கஸ் ஸ்டோனிஸ் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். அப்போது தேவ்தட் படிக்கல் 13 ரன்கள் மட்டுமே எடுத்து பத்திரானா பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். 
நிக்கோலஸ் பூரன் ஸ்டோனிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். 28 பந்துகளில் 64 ரன்கள் என்ற இலக்கு இருந்த போது நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து ஷர்துல் தாக்கூர் வீசிய 16 வது ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனிடையே 34 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வகையில் மொத்தம் 15 பந்துகள் களத்தில் நின்ற பூரன் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்தார்.

Paanch din mein ✌🏼baar pic.twitter.com/LzbDexAWJ9
— Lucknow Super Giants (@LucknowIPL) April 23, 2024

மார்கஸ் ஸ்டோனிஸின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை எட்டியது.  213 ரன்கள் எடுத்து லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. கடைசி வரை களத்தில் நின்ற ஸ்டோனிஸ் 63 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 124 ரன்களை குவித்தார்.
 
 

மேலும் காண

Source link

Lok Sabha 2024 TDP party Pemmasani Chandra Sekhar Declares Assets Worth 5,785 crore


இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1 ஆம் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையவுள்ள நிலையில், ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது.
ஆந்திர மாநில தேர்தல்:
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. அங்கு, மக்களவை தேர்தலானது மே மாதம் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆந்திராவில் வரும் 25 ஆம் தேதியுடன்( ஏப்ரல் 25 )  மனுதாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனுதாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய கட்சிகளுக்கிடையிலான மும்முனை போட்டி நிலவுகிறது.  
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேச கட்சி சார்பில் போட்டியிடும் நபரின் மனுதாக்கலானது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், அவர்தான் பணக்கார வேட்பாளராக உள்ளார்.
ரூ.5,785 கோடி சொத்து மதிப்பு:
அவர் யார் என்றால், குண்டூர் தொகுதியில் தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் என்பவர்தான். அவருக்கு கிட்டத்தட்ட ரூ. 5,785 கோடி மதிப்புள்ள குடும்பச் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திரப் பிரதேசத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் பணக்காரப் போட்டியாளராக மாறியுள்ளார். 
அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, அவரது தனிப்பட்ட சொத்துக்கள் ரூ.. 2,448.72 கோடியாகவும், அவரது மனைவிக்கு ரூ. 2,343.78 கோடியாகவும், குழந்தைகளிடம் ரூ. 1,000 கோடியாகவும் உள்ளது.
இருப்பினும், இவர்களின் குடும்பத்துக்கு, அமெரிக்காவின் ஜேபி மோர்கன் சேஸ் வங்கிக்கு ₹ 1,138 கோடி கடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இவருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன. 
சந்திரசேகர் ஒரு மருத்துவர். அவர் 1999 இல் விஜயவாடாவின் என்டிஆர் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பும் மற்றும் 2005 இல் பென்சில்வேனியாவின் டான்வில்லில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் எம்டி முதுகலை படிப்பும் முடித்துள்ளார். 
Also Read: ABP C Voter Opinion Poll: ஆந்திராவில் பாஜக பிரம்மாண்ட வெற்றி; தெலங்கானா, அஸ்ஸாம்மில் அதிர்ச்சியளிக்கும் சர்வே

Source link

Taiwan Earthquake 80 earthquakes hit Taiwan overnight – watch video


தைவானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், நேற்று இரவு முதல் 80க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
தைவானில் நேற்றிரவு 11.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. அதேபோல், அதிகாலை 2.55 மணிக்கு மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. 
ஒரே இரவில் 80 முறைக்கு மேல் நிலநடுக்கம்: 
கடந்த ஏப்ரல் 3ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர், தைவானில் மீண்டும் நேற்றிரவு முதல் அதிகாலை வரை ஒரே இரவில் 80 முறைக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இவற்றில் மிகவும் சக்திவாந்த நிலநடுக்கமாக 6.3 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.  இன்று அதிகாலை உணரப்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதன் மையப்பகுதி ஹுவாலியன் நகருக்கு தெற்கே 28 கிலோமீட்டர் (17.5 மைல்) தொலைவில் 10.7 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.  மற்ற நிலநடுக்கங்கள் 4.5 முதல் 6 ரிக்டர் வரை பதிவானதாக தெரிகிறது. இதன் காரணமாக, கட்டிடங்கள் ஆங்காங்கே குலுங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

More than 80 #earthquakes, the strongest of 6.3 magnitude, struck #Taiwan ‘s east coast starting Monday night and into the early hours of Tuesday (April 23) and some caused shaking of buildings in the capital #Taipei . pic.twitter.com/DGcO7p8WMF
— Smriti Sharma (@SmritiSharma_) April 23, 2024

இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹூவாலியன் கிராமப்புற கிழக்கு மாகாணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.  இங்குதான் கடந்த ஏப்ரல் 3ம் தேதி அதாவது  இரண்டு வாரங்களுக்கு முன்பு தைவானின் கிழக்குக் கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், சுமார் 14 பேர் உயிரிழந்த நிலையில்,  700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, தைவானில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றன. இதையடுத்து, தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவாகும். கடந்த 1999ம் ஆண்டு தைவானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAIWAN UPDATE:Example: This is a 4.1 earthquake from last night. We have had dozens over the past 24 hours. I have no idea how many. 80+???Many 5’s and two 6’s. I cannot relax or live life with so many earthquakes back to back. How long is this going to continue???This is… pic.twitter.com/79oiIg3gwE
— Gretchen Smith🇺🇸 (@MAGAgpsmith) April 23, 2024

கடந்த ஏப்ரல் 3ம் தேதி நிலநடுக்கத்திற்குப் பிறகு ஒரு ஹோட்டல் மோசமாக சேதமடைந்ததாகவும், நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, அந்த ஹோட்டல் மேலும் சாய்ந்ததாகவும் தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது அந்த கட்டிடத்தில் ஹோட்டல் இயங்கவில்லை. எனவே, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 
நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது..?
இதை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள, பூமியின் கட்டமைப்பை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் பூமியானது டெக்டோனிக் தட்டுகளில் அமைந்துள்ளது. அதன் கீழே திரவ எரிமலை மற்றும் டெக்டோனிக் தட்டுகள் மிதக்கின்றன. பல சமயங்களில் இந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. மீண்டும் மீண்டும் மோதுவதால், சில சமயங்களில் தட்டுகளின் மூலைகள் வளைந்து அதிக அழுத்தம் ஏற்படும் போது, ​​இந்த தட்டுகள் உடையும். அத்தகைய சூழ்நிலையில், கீழே இருந்து வெளிப்படும் ஆற்றலே நிலநடுக்கமாக உருவெடுக்கிறது. 
 

மேலும் காண

Source link

Fahadh Faasil discloses his interest acting in love films like mouna ragam


மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான திறமையான இயக்குநராக இன்றும் தன்னுடைய படங்கள் மூலம் கொண்டாடப்படுபவர் இயக்குநர் பாசில். அவரின் மகன் ஃபகத் பாசிலும் இன்று தென்னிந்திய நடிகராக மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பகாலகட்டங்களில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய திறமையை மேலும் மேலும்  மெருகேற்றி இன்று அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு மல்டி ஹீரோவாக வலம் வருகிறார்.

ஈர்க்கக்கூடிய நடிகர் :
சின்னச்சின்ன முகபாவனைகள், அலட்டல் இல்லாத நடிப்பு, கேரக்டருக்கு ஏற்ற பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, கண்களால் நடிப்பை வெளிப்படுத்துதல் என தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் மாறுபாடு காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் உயிர்கொடுத்து பார்வையாளர்களுக்கு அந்த கேரக்டர் மீது ஒரு தனி ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் நடிப்பது அவரின் தனி சிறப்பு.
நடிப்பால் செதுக்குபவர் :
ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான வேலைக்காரன், விக்ரம், மாமன்னன், புஷ்பா உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். விக்ரம் படத்தில் ஏஜென்ட் அமீரக ரசிகர்களின் கவனம் பெற்று பாராட்டுகளை குவித்தார். மாமன்னன் படத்தில் சாதி வெறி பிடித்த அரசியல்வாதியாக ரத்னவேல் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. புஷ்பா படத்தில் பன்வர்சிங் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுனுக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக மிரட்டி இருப்பார். 
2024 லைன் அப் :
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேஷம் திரைப்படத்தில் ரங்கா என்ற கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்து பாராட்டுகளை குவித்தார். தற்போது ரஜினியுடன் வேட்டையன், அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 , வடிவேலுவுடன் மாரீசன், கராத்தே சந்திரன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. இது தவிர வேறு சில படங்களிலும் கமிட்டாகி உள்ளார். 2024ல் கைவசம் ஏராளமான லைன் அப் வைத்துள்ளார் ஃபகத் பாசில். 

காதல் படத்தில் விருப்பம் :
இந்நிலையில் சமீபத்தில் ஃபகத் பாசில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் காதல் படங்களில் நடிப்பது குறித்து தனக்கு இருக்கும் விருப்பம் பற்றி தெரிவித்திருந்தார். மௌன ராகம் போன்ற ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். ரசனை என்பது மிகவும் முக்கியமானது. இந்த காலகட்டத்தில் அப்படி ஒரு திருமண வாழ்க்கை என்பது பயங்கரமாக மாறியுள்ளது. இது குறித்து நான் ஆலோசிக்க விரும்புகிறேன் என கூறி இருந்தார் ஃபகத் பாசில். அவரின் ரொமான்ஸ் வெர்ஷன் எப்படி இருக்கும் என்பதையும் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள். 

மேலும் காண

Source link

US State Department Report Highlights Human Rights Violation In Manipur held on 2023 india reacts


கடந்த ஆண்டு மணிப்பூரில் நடந்த இன கலவரத்தின்போது, மனித உரிமை மீறல், சிறுபான்மையினரை துன்புறுத்தல், கருத்து சுதந்திரம் மற்றும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், AFSPA, பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத கொலைகள் போன்றவற்றிற்காக அமெரிக்க வெளியுறவுத்துறையானது இந்தியாவை கடுமையாக சாடியுள்ளது.
மணிப்பூர் கலவரம்- அமெரிக்கா அறிக்கை:
இந்தியாவில் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்தான அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டது. “மணிப்பூரில் இன மோதல் வெடித்த பிறகு குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் நடந்தன” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது .
மணிப்பூரில் நடந்த இனக்கலவரத்தில் என்ன நடந்தது, இனக்குழுக்களின் தலையீடு, கடந்த ஓராண்டாக நடந்து வரும் வன்முறை மோதல்களுக்கு மத்தியில் மனித உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டன, வன்முறை குறித்து பிரதமர் மோடியின் கருத்து, ஐ.நா.வின் தலையீடு மற்றும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
“இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே இன மோதல் வெடித்தது. அதன் விளைவாக குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு ( 2023 ) மே 3 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் குறைந்தது 175 பேர் கொல்லப்பட்டதாகவும் 60,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது. 

”மோடி அரசு தோல்வி”:
மோடி தலைமையிலான அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசு வன்முறையை தடுத்து நிறுத்துவதில் தோல்வியடைந்ததை உச்சநீதிமன்றம் விமர்சித்ததையும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வன்முறையை கருத்தில் கொண்டு, உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையை நிறுத்துவதற்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் தாமதமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 
அறிக்கையில் பட்டியலிடப்பட்டவை சில:
சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் நடைபெற்றன. 
தனியுரிமையில் தன்னிச்சையான அல்லது சட்டவிரோத தலையீடு 
உறவினர்களின் குற்றங்களுக்காக குடும்ப உறுப்பினர்களுக்கு தண்டனை; பாலியல் வன்முறை 
பணியிட வன்முறை, 
குழந்தை திருமணம் மற்றும் கட்டாய திருமணம், 
இன மற்றும் சாதி சிறுபான்மையினரை குறிவைத்து வன்முறை    
இந்நிலையில் , இந்த குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை, உள்நாட்டு விவரங்களில் தலையீடு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் காலனி ஆதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அறிக்கை குறித்தான விரிவான தகவல்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். Also Read:

Source link

Pic of the day: Mohanlal plants an affectionate kiss on Mammootty cheek | Pic of the day: முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய மோகன் லால் – மம்மூட்டி


மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி இருவரும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இருவர் மோகன் லால் – மம்முட்டி. கேரளாவின் கொச்சி நகரில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 
இந்த நிகழ்ச்சியில் மோகன்லால்,  ஜவான் படத்தில் அனிருத் இசையில் வெளியான ஷாருக்கானின் “ஜிந்தா பந்தா” மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற “ஹுக்கும்” ஆகிய இரண்டுக்கும் நடனமாடினார். இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. 

Big M’s of Mollywood 💎❤️@Mohanlal @mammukka pic.twitter.com/4NT80oErLS
— Ajay Lalettan (@Ajay2255_) April 23, 2024

இந்நிகழ்ச்சியில், திரைப்பட தயாரிப்பாளர் ஜோஷிக்கு விருது வழங்க இருவரும் ஒன்றாக  மேடைக்கு வந்தனர். மம்முட்டி மேடையேறி வந்தவுடன் மோகன்லால் கன்னத்தில் முத்தமிடுவார். உடனே, மோகன்லாலும் மம்முட்டிக்கு கன்னத்தில் முத்தமிடுவார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. மலையாள சினிமாவில் இருவரும் பிரபல நடிகர்களாக இருந்தாலும் இருவருக்குள்ளும் இருக்கும் நட்புறவும் பாசமும் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர். இருவரும் அன்பை வெளிப்படுத்திய விதம் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஷாருக்கான் – மோகன்லால் அன்பு உரையாடல்
ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் பர்ஃபாமன்ஸ் மிகவும் நன்றாக இருந்ததாக பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் பாராட்டியுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் “ இந்தப் பாடலை எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால். லவ் யூ.நீங்க தான் ஒர்ஜினல் ஜிந்தா பந்தா“ என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, மோகன்லாலுடன் இரவு உணவு சாப்பிட விரும்புவதாகவும் ஷாருக் கான் தெரிவித்திருக்கிறார்.

Thank u @Mohanlal sir for making this song the most special for me now. Wish I had done it half as good as you. Love u sir and waiting for dinner at home as and when. You are the OG Zinda Banda!!! https://t.co/0NezClMavx
— Shah Rukh Khan (@iamsrk) April 23, 2024

இதற்கு மோகன் லால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ல பதிலில்.” டியர், ஷாருக். உங்களைப்போல யாராலும் பர்ஃபார்ம் செய்ய முடியாது. நீங்கதான் எப்போதும் ‘OG Zinda Banda ‘. உங்களின் க்ளாசிக் ஸ்டைலில்.” என்று குறிப்பிட்டு இரவு உணவு மட்டும் ’Zinda Banda’ ஸ்டைலில் காலை உணவும் சாப்பிடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் – மலையாள சினிமா பிரபலங்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அந்த போஸ்ட்களை பகிர்ந்து வருகின்றனர். பலரும் வீடியோ ரொம்பவும் க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Dear @iamsrk, nobody can do it like you! You are and always will be the OG Zinda Banda in your classic, inimitable style. Thanks for your kind words. Also, just dinner? Why not groove to some Zinda Banda over breakfast, too? https://t.co/0OCZD4VPoH
— Mohanlal (@Mohanlal) April 23, 2024

மீண்டும் ஒன்றாக நடிக்கும் மோகன்லால் – ஷோபனா
மலையாளத்தில் திரையில் ரசிகர்கள் அதிகம் பார்த்த ஜோடிகளில் ஒன்று மோகன்லால் மற்றும் ஷோபனா. இருவரும் இணைந்து 55 படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். எந்தெந்த மாதரம் (1986) , அபயம் தேடி (1986) , வெள்ளனகளுடே நாடு (1988), உள்ளடக்கம் (1991), மாயா மாயூரம் (1993), மணிச்சித்திரதாழு (1993) , மின்னாரம் (1994), நாடோடிகட்டு (1987) ஆகிய திரைப்படங்கள் இருவர் கூட்டணியில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள்.
 மோகன்லாலின் 360ஆவது படத்தில்  நடிகை ஷோபனாவுடன் இணைந்து நடிக்கிறார் என்பதும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண

Source link

TN Heat Wave : நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?


<h2 style="font-weight: 400; text-align: justify;"><strong>வெப்ப அலை வீசக்கூடும்</strong></h2>
<p style="font-weight: 400; text-align: justify;">தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.04.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் உள் மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24.04.2024 அன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="font-weight: 400; text-align: justify;">எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள். இதேபோன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு உள் மாவட்டங்களுக்கு, &nbsp;நாளை வெப்ப அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.</p>
<h2 style="font-weight: 400; text-align: justify;"><strong>பொதுமக்கள் தங்களை கோடை வெப்பத்திலிருந்து &nbsp;தோலை பாதுகாக்க சில டிப்ஸ் &nbsp; உங்களுக்காக இதோ ?</strong></h2>
<p style="text-align: justify;">1. தயிருடன்&nbsp; கடலை மாவை சேர்த்து &nbsp;சருமத்தில் தடவலாம்</p>
<p style="text-align: justify;">2. &nbsp; பச்சை காய்கறி கீரை மற்றும் &nbsp;பகை பழ வகைகளை உணவில் அதிகம் சேர்க்கவும்</p>
<p style="text-align: justify;">3.&nbsp; இளநீர் ,மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாறு குடிப்பது அவசியம்</p>
<p style="text-align: justify;">4. &nbsp; கடுமையான கோடை வெயிலில் வெளியே செல்லும் பொழுது &nbsp;சன்க்ரீம் ,லோஷன் ஆகியவற்றை விருப்பப்படுபவர்கள் தடவிக் கொள்ளலாம்.</p>
<p style="text-align: justify;">5.&nbsp;தலைக்கு குடை தொப்பி உள்ளிட்ட பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்</p>
<p style="text-align: justify;">6. வெயிலில் இருந்து வீட்டிற்கு திரும்பிய உடனே &nbsp;ஆசுவாசப்படுத்திக்கொண்டு முகத்தை கழுவிக் கொள்வது நல்லது</p>
<p style="text-align: justify;">7. &nbsp;கோடை காலங்களில் சோப்பை பயன்படுத்துவதற்கு பதில் &nbsp; ஃபேஸ்வாஷ் ஆகியவற்றை பயன்படுத்தலாம்</p>
<p style="text-align: justify;">8.&nbsp;முடிந்தவரை வெளியில் துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்</p>
<h2 style="text-align: justify;">வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள முக்கிய விஷயங்கள்..</h2>
<p style="text-align: justify;">&nbsp;1 முடிந்த அளவு மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் பயணம் &nbsp;செய்வதை தவிர்க்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">2 &nbsp;தாகம் எடுக்கவில்லை என்றாலும் அவ்வப்பொழுது தண்ணீர் குடிப்பது அவசியம், &nbsp;தாகம் &nbsp;எடுக்கவில்லை என்றாலும் வேர்வை வழியாக வெளியேறும் நீரை மீட்டெடுக்க இது உதவும்</p>
<p style="text-align: justify;">3 &nbsp;முடிந்தவரை பருத்தி ஆடைகளை பயன்படுத்த முயற்சி செய்யவும். &nbsp;இல்லாதவர்கள் இறுக்கமான ஆடைகள், &nbsp;எடை அதிகம் உள்ள ஆடைகள் ஆகியவற்றை தவிர்க்கலாம்.</p>
<p style="text-align: justify;"><br />4 &nbsp;வெயிலில் கடினமான பணிகளை செய்வது &nbsp;முடிந்த அளவு தவிர்க்க முயற்சி செய்யுங்கள்</p>
<p style="text-align: justify;"><br />5. &nbsp;மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டால் &nbsp;தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்</p>
<p style="text-align: justify;"><br />6. &nbsp;வீட்டையும் முடிந்த அளவு குளிர்ச்சியாக வைத்திருக்க &nbsp;முயற்சி செய்யுங்கள்.</p>
<p style="text-align: justify;"><br />7. &nbsp; முடிந்த அளவு இயற்கை &nbsp; குளிர்பானங்களை குடிப்பதை தவிர்த்து விட்டு, &nbsp;இயற்கையாக கிடைக்கக்கூடிய &nbsp;பழங்கள் மற்றும் பழச்சாறுகளை சாப்பிடுவது நல்லது.</p>
<p style="text-align: justify;"><br />8 புரதச்சத்து அதிகம் உள்ள &nbsp;உணவுகளை தவிர்ப்பது நல்லது.</p>
<p style="text-align: justify;">9. &nbsp;அதிகரிக்கும் வெப்பம் &nbsp; பல்வேறு வகைகளில் ஆபத்தை ஏற்படுத்தும், &nbsp;எனவே முதியவர்களை முடிந்த அளவிற்கு வெயிலில் &nbsp;வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. &nbsp;அதேபோன்று &nbsp;குழந்தைகளையும் மாலை வேலைகளை தவிர &nbsp;மதிய வேலைகளில் வெளியே அனுப்பாமல் இருப்பது &nbsp;நல்லது.</p>
<p style="text-align: justify;">10 . &nbsp; அதேபோன்று தொடர்ந்து அரசு கூறும் &nbsp;நெறிமுறைகளை பின்பற்றுவது, &nbsp;தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் &nbsp;வெயில் பாதிப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொள்வது &nbsp;மிக அவசியமாக உள்ளது.</p>

Source link

விழுப்புரத்தில் தெரு நாய் கடித்து கவுன்சிலர் படுகாயம்.. நகராட்சி நடவடிக்கை என்ன?


<div dir="auto">
<div dir="auto">விழுப்புரம் : விழுப்புரம் நகர பகுதியான சேவியர் காலனி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த&nbsp; அப்பகுதிமக்கள் திமுக வார்டு கவுன்சிலரிடம் கோரிக்கை வைத்தபோதிலும் அவரையும் விட்டு வைக்காமல் தெரு நாய்கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.&nbsp;</div>
<h2 dir="auto">பொதுமக்களை கடித்துகுதறிய தெருநாய்&nbsp;</h2>
<div dir="auto">விழுப்புரம் நகர பகுதியான சேவியர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ளவர்களை தெருநாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகத்தினர் அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது</div>
<h2 dir="auto">அலட்சியமாக செயல்படும் நகராட்சி நிர்வாகம்&nbsp;</h2>
<div dir="auto">இதனால் தற்போது வரை 10-க்கும் மேறட்டோரை கடித்து பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவரக்ள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிற நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் தெருநாய்களை பிடிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து வந்த தெருநாய்கள் இன்றைய தினம் அப்பகுதி 15 வது வார்டு திமுக கவுன்சிலர் மகிமை பிரியாவையும் விட்டு வைக்காமல் காலில் கடித்து குதறி வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இருப்பினும் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.</div>
</div>

Source link

"காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்படும்" பகீர் கிளப்பும் உ.பி. முதலமைச்சர்!


<p><strong>மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் என பலரும் சர்ச்சைக்குரிய விதமாக பேசுவது தொடர் கதையாகி வருகிறது.</strong></p>
<h2><strong>பாஜக தலைவர்களின் தொடர் சர்ச்சை:</strong></h2>
<p>இஸ்லாமியர்கள் குறித்தும் காங்கிரஸ் பற்றியும் பிரதமர் மோடி பேசிய கருத்துகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், "இஸ்லாமியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கிறது.தேசத்தின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை இருப்பதாக கடந்த 2006ஆம் ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பகிர்ந்து வழங்க அக்கட்சி வாக்குறுதி அளித்தது" என்று பேசினார்</p>
<p>இன்றைய பொதுக்கூட்டத்தில் காங்கிரஸை கடுமையாக சாடிய மோடி, "2004 இல், ஆந்திரப் பிரதேசத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது. அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை" என்றார்.</p>
<h2><strong>"ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்"</strong></h2>
<p>வெறுப்பை தூண்டும் விதமாக பிரதமர் மோடி பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாக புகார் எழுந்தது. மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "பாஜகவுக்கு வாக்களியுங்கள். மம்தா பானர்ஜியின் குண்டர்களை தலைகீழாக தொங்கவிடப்பட்டு தோலுரிப்பேன்" என்றார்.</p>
<p>மோடி, அமித் ஷா வரிசையில் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்படும்" எனக் கூறியுள்ளார். அம்ரோஹாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டு மீண்டும் ஒரு முறை பொய்யான தேர்தல் அறிக்கையுடன் உங்களிடம் வந்துள்ளனர்.</p>
<p>காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள், அவர்கள் ஆட்சி அமைத்தால் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என்று சொல்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள், இந்த நாடு பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பால் நடத்தப்படுமா அல்லது ஷரியத் சட்டத்தால் நடத்தப்படுமா?</p>
<p>மக்களின் சொத்துக்களை பறித்து பங்கீடு செய்வோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸும், சமாஜ்வாதியும் உங்கள் சொத்தைக் கொள்ளையடிக்க அனுமதிக்க விரும்புகிறீர்களா?</p>
<p>இந்த வெட்கமற்றவர்களின் நிலையைப் பாருங்கள். ஒருபுறம், அவர்கள் உங்கள் சொத்துக்களை குறி வைக்கிறார்கள், மறுபுறம் மாஃபியாவையும் குற்றவாளிகளையும் தங்கள் கழுத்தணியாக்கி, அவர்கள் பெயரில் குர்ஆனை ஓதுகிறார்கள்" என்றார்.</p>
<p><strong>இதையும் படிக்க: <a title="Fact Check: இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை பேச்சு! மன்மோகன் சிங் சொன்னதாக பிரதமர் மோடி கூறியது உண்மையா?" href="https://tamil.abplive.com/news/politics/pm-modi-controversial-speech-on-muslims-fact-check-reveals-manmohan-singh-worries-has-weightage-179774" target="_blank" rel="dofollow noopener">Fact Check: இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை பேச்சு! மன்மோகன் சிங் சொன்னதாக பிரதமர் மோடி கூறியது உண்மையா?</a></strong></p>

Source link

malaysia Ten people have died after two navy helicopters collided in mid-air during a military rehearsal | மலேசியாவில் நடுவானில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது விபத்து


மலேசியாவில் நடுவானில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாதில் 10 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கோலாலம்பூரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pelo menos 10 pessoas morreram depois que dois helicópteros militares colidiram no ar em Lumut, na Malásia. pic.twitter.com/hPv4qhNOQY
— André GAP 🇧🇷 (@AndreGA_Pe) April 23, 2024

கோலாலம்பூரில் உள்ள பேராக்கின் லுமுட் என்ற இடத்தில் ராயல் மலேசியன் கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே அனைவரும் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். 
இதையடுத்து, இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்கவில்லை என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரண்டு ஹெலிகாப்டர்களிலும் தலா 5 பேர் என மொத்தம் 10 கடற்படை வீரர்கள் இருந்த நிலையில், இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர். 
பயிற்சியின்போது விபத்து: 
ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின்படி, மலேசிய கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் பேராக்கின் லுமுட்டில் உள்ள ராயல் மலேசியன் கடற்படை தளத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி கொண்டது.

BREAKING: 🇲🇾 2 military helicopters crash after mid-air collision in Malaysia, killing all 10 people on board pic.twitter.com/ckiEaqnd4R
— Megatron (@Megatron_ron) April 23, 2024

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்கள் AgustaWestland AW139 மற்றும் Eurocopter Fennec ஆகும். இரண்டு ஹெலிகாப்டர்களும் 3-5 மே 2024 அன்று நடைபெறவிருக்கும் கடற்படை பிறந்தநாள் நிகழ்ச்சியில் சாகசம் செய்ய பயிற்சி செய்து கொண்டிருந்தன. விபத்து தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. இதில் இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதியவுடன் சீட்டுக்கட்டு போல தரையில் விழுந்ததை அந்த வீடியோவில் தெளிவாக காணலாம். 
விசாரிக்கக் குழு அமைப்பு: 
மலேசியக் கடற்படையின் 90வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ராயல் கொண்டாட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்து கொண்டிருந்ததாக மலேசியன் ஃப்ரீ பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது . இதற்கிடையில், HOM (M503-3) ஹெலிகாப்டர் Fenech ஹெலிகாப்டரின் ரோட்டருடன் மோதியது. விபத்திற்குப் பிறகு, ஃபெனெக் ஹெலிகாப்டர் அருகிலுள்ள நீச்சல் குளத்திலும், மற்றொரு ஹோம் ஹெலிகாப்டர் லுமுட் கடற்படைத் தளத்தின் மைதானத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இந்த மோதல் எதனால், எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள் தெளிவாக வெளியாகவில்லை. முழு விபத்து குறித்து விசாரிக்க குழுவொன்று செயல்பட்டு வருவதாக மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.
முன்னதாக மார்ச் மாதத்திலும், மலேசியாவின் கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் ஹெலிகாப்டர் மீட்புப் பணியின் போது விபத்துக்குள்ளானது. இது தவிர, பிப்ரவரி மாதத்திலும் சிலாங்கூர் நகரில் மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காண

Source link

csk-vs-lsg-innings-highlights- Lucknow Super Giants -need 211 to-defeat Chennai Super Kings indian premier league 2024 Ruturaj Gaikwad


ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினார்கள். 3 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ரஹானே 1 ரன்கள் மட்டுமே எடுத்து மேட் ஹென்றி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
சின்ன சிங்கம் ருதுராஜ் அதிரடி:
அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தார் டேரில் மிட்செல். இவர்களது ஜோடி சென்னை அணிக்கு ரன்களை வேகமாக சேர்த்துக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கையில் மிட்செல் விக்கெட்டை இழந்தார். 10 பந்துகள் களத்தில் நின்ற மிட்செல் 1 பவுண்டரி உட்பட மொத்தம் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் கெய்க்வாட் உடன் ஜோடி சேர்ந்தார் ரவீந்திர ஜடேஜா.

To a hundred more knocks! 💯💥#CSKvLSG #WhistlePodu 🦁💛 pic.twitter.com/GxdBwZny0E
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2024


இவர்களது ஜோடி லக்னோ அணியின் பந்து வீச்சை நொறுக்கியது. இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களை எடுத்து அரைசதத்தை பதிவு செய்தார். 
19 பந்துகள் களத்தில் நின்ற ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் எடுத்து மொஹிஸ்கான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 12 ஓவர்கள் வரை சென்னை அணி ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. அந்த சூழலில் களம் இறங்கிய ஷிவம் துபே ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். இவர்களது ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனிடையே சி.எஸ்.கே அணியின் சின்ன சிங்கம் ருதுராஜ் கெய்க்வாட் 56 பந்துகளில் சதம் விளாசினார்.
211 ரன்கள் இலக்கு:

The Guiding Star! 🌟🦁#CSKvLSG #WhistlePodu 🦁💛pic.twitter.com/aUsekAgySQ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2024

கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 108 ரன்களை குவித்தார். அதேபோல் ஷிவம் துபே 27 பந்துகள் களத்தில் நின்ற ஷிவம் துபே 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 66 ரன்களை குவித்தார். கடைசி 1 பந்திற்கு களம் இறங்கிய தோனி பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
 
 

மேலும் காண

Source link

Fahadh Fassil recalls hi first experience doing audition for a hollywood film


தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். தன்னுடைய அசாத்தியமான நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற ஃபகத் பாசில் இயக்குநர்களின் விருப்பமான நடிகராக திகழ்கிறார். நல்ல கதைக்களம் கொண்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் கூட நடிக்க தயங்காத ஃபகத் பாசில் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரங்களை எதார்த்தமான நடிப்பின் மூலம் மெருகேற்றுபவர். 

ஹாலிவுட் வாய்ப்பு :
விக்ரம், மாமன்னன், புஷ்பா உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ள ஃபகத் பாசில் தற்போது மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு ஆடிஷன் செய்தது குறித்து தெரிவித்துள்ளார். முதல்முறையாக ஹாலிவுட் படத்துக்கு ஆடிஷன் செய்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார்.  
ஆடிஷனில் என்ன நடந்தது ?
படத்தின் பெயரையோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பற்றியோ எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் ஆடிஷன்  செய்வதற்காக  காட்சி ஒன்று கொடுக்கப்பட்டது என்பதை பற்றி மட்டும் கூறி இருந்தார். ஃபகத் பாசில் அந்த வாய்ப்பை ஏற்று கொண்டாரா இல்லையா என்பது குறித்த எந்த ஒரு தகவலும் அவரின் நெருங்கிய வட்டாரத்திற்கு கூட தெரியவில்லை. 
நடிகர் ஃபகத் பாசில் அவர் நடிக்கும் படத்தில் கேரக்டர் கொடுத்த பிறகு அதற்கு ஏற்றார்போல மட்டுமே நடிப்பார் என்றும் மற்றபடி நண்பர்கள் முன்னால் கூட நடித்து காட்ட மாட்டார். அவரை நடிக்க வைக்கவும் முடியாது  என்பது அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே அறிந்த ஒரு விஷயம். அப்படி அவரை நடிக்க வைக்க வேண்டும் என்றால் அவர் நடிப்பதற்கான கூடுதல் விவரங்கள் வழங்கப்பட வேண்டும். திரைக்கதைக்கு ஏற்ப தயாரிப்பாளர்கள் அவருக்கு கொடுக்கும் கேரக்டரை  பொறுத்தே அவரின் நடிப்பு அடங்கும். இந்த சூழலில் அவர் எப்படி ஆடிஷனில் நடித்து காண்பித்தார் என்பது குழப்பமாக இருக்கிறது. 
வெற்றியின் உச்சத்தில் ஃபகத் : 
ஆரம்ப காலகட்டத்தில் ஏகப்பட்ட தோல்விகளை சந்தித்த ஃபகத் பாசில் தற்போது வெற்றியின் உச்சத்தில் உள்ளார். சமீபத்தில் ஜீத்து மோகன் இயக்கத்தில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்ததுடன் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

‘ஆவேஷம்’ ரங்கா :
‘ஆவேஷம்’ படத்தில் ரங்கா என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்த கேங்ஸ்டராக நடித்து இருந்தார் ஃபகத் பாசில். ரங்கா கேரக்டருக்கு தேவையான ஸ்வாக் மற்றும் ஸ்டைல் கேரளா இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. அந்த கேரக்டருக்கு தேவையான பெரும்பாலான குணாதிசயங்களை ஃபகத் தான் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த ப்ராஜெக்ட்ஸ் :
தற்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனை எதிர்த்து பன்வர் சிங் கதாபாத்திரத்திலும், நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படமான ‘வேட்டையன்’ படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும் நஸ்லென் மற்றும் மமிதா நடிப்பில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற பிரேமலு படத்தின் இரண்டாவது பாகத்தை ஃபகத் பாசில் தயாரிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளார் ஃபகத் பாசில் என கூறப்படுகிறது.    

மேலும் காண

Source link

Heat Waves: தமிழ்நாட்டில் வெப்ப அலை.. 5 நாட்களுக்கு எச்சரிக்கை விடுப்பு


<div id=":r9" class="Ar Au Ao">
<div id=":r5" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true" aria-owns=":tj" aria-controls=":tj" aria-expanded="false">
<div dir="ltr">
<div dir="ltr">
<div dir="ltr">
<div dir="ltr">
<div dir="ltr">
<p>இந்திய ரயில்வே, வெப்ப அலை குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் எந்த பகுதி வெப்ப அலையால் பாதிக்கப்படும், எந்த தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன எனப்து குறித்தான தகவலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.&nbsp;</p>
<p><strong>ரயில்வே தெரிவித்துள்ளதாவது,</strong></p>
<p>உள் கர்நாடகா, ராயலசீமா, மேற்கு வங்காளம் ஆகிய அடுத்த 5 நாட்களில் வெப்ப அலை வீசக்கூடும்</p>
<p>தெற்கு ரயில்வே தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும்</p>
<p>ஜார்கண்ட், பீகார், தெலுங்கானா, கிழக்கு உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 24-27 வரை வெப்ப அலை வீசக்கூடும்.</p>
<p>ஏப்ரல் 27 அன்று கொங்கன் பகுதியில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஏப்ரல் 23 முதல் 27 வரை கர்நாடகா கேரளா மற்றும் மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்.</p>
<p>ஏப்ரல் 23 முதல் 27 வரை தமிழ்நாடு, புதுச்சேரி &amp; காரைக்கால் மற்றும் கேரள &amp; மாஹே மீது தெற்கு ரயில்வே வெப்ப வானிலையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் ரயில் நிலையங்கள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனவும் நிழல்கள், குளிர்ந்த கூரைகள் போன்றவற்றின் மூலம் குளிரூட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>

Source link

"மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன்" அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை!


<p><strong>நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், வரும் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.</strong></p>
<h2><strong>வன்முறையை தூண்டும் விதமாக பேசினாரா அமித் ஷா?</strong></h2>
<p>மேற்குவங்கத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சைக்குரிய விதமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்துகள் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் தொடர்ச்சியாக வன்முறையை தூண்டும் விதமாக அமித்ஷா பேசியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன் என கூறியுள்ளார்.</p>
<p>உத்தர தினாஜ்பூர் மாவட்டம் <span class="Y2IQFc" lang="ta">கரண்டிகி கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "</span>குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் தைரியம் இல்லை. புதிய சட்டத்தின் கீழ் அனைத்து இந்து அகதிகளும் குடியுரிமை பெறுவார்கள்.</p>
<h2><strong>"ராமர் கோயிலை கொடுத்தவர் மோடி"</strong></h2>
<p>மம்தா பானர்ஜியால் ஊடுருவலை நிறுத்த முடியுமா? அவர்களால் முடியாது. (பிரதமர் நரேந்திர) மோடியால் மட்டுமே ஊடுருவலை தடுக்க முடியும். கடந்த முறை எங்களுக்கு 18 இடங்களை கொடுத்தீர்கள். ராமர் கோயிலை கொடுத்தவர் மோடி. இந்த முறை எங்களுக்கு 35 இடங்களை கொடுங்கள். ஊடுருவலை நிறுத்துவோம்.</p>
<p>சந்தேஷ்காலியில் மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெண்களை சித்திரவதை செய்ய அனுமதித்தார். உயர்நீதிமன்றம் தலையிட்டு இன்று குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>தாய்மார்கள், நிலம், மக்கள் என்ற முழக்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார். சந்தேஷ்காலியில், தாய்மார்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. மக்கள் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாஜகவுக்கு வாக்களியுங்கள். மம்தா பானர்ஜியின் குண்டர்களை தலைகீழாக தொங்கவிடப்பட்டு தோலுரிப்பேன்" என்றார்.</p>
<p>தொடர்ந்து பேசிய அமித்ஷா, "நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வடக்கு வங்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கும் என்று உறுதியளிக்கிறேன். ராய்கஞ்சில் எய்ம்ஸ் அமைக்க திட்டமிட்டிருந்தோம். அதைத் தடுத்தது மம்தாதான். இது மோடியின் உத்தரவாதம். எங்களுக்கு 30 இடங்கள் கொடுங்கள். வடக்கு வங்காளத்தின் முதல் எய்ம்ஸ் பணியைத் தொடங்குவோம்" என்றார்.</p>
<p>இதற்கு பதிலடி அளித்த மம்தா, "அச்சமும் பீதியும் பாஜகவை வாட்டி வதைத்துள்ளது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, அவர்கள் தோல்வியை உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஆதாரமற்ற செய்திகளை கூறுகிறார்கள்" என்றார்.</p>
<p><strong>இதையும் படிக்க: <a title="Fact Check: இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை பேச்சு! மன்மோகன் சிங் சொன்னதாக பிரதமர் மோடி கூறியது உண்மையா?" href="https://tamil.abplive.com/news/politics/pm-modi-controversial-speech-on-muslims-fact-check-reveals-manmohan-singh-worries-has-weightage-179774" target="_blank" rel="dofollow noopener">Fact Check: இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை பேச்சு! மன்மோகன் சிங் சொன்னதாக பிரதமர் மோடி கூறியது உண்மையா?</a></strong></p>

Source link

The water flow of Mettur dam has been at 57 cubic feet for the second consecutive day.


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 79 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக குறைந்துள்ளது. 

நீர்மட்டம்:
அணையின் நீர் மட்டம் 54.66 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 20.87 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 82.94 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 12.14 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 86 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 765 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 43.19 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 8.17 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 15 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண

Source link

Everest MDH Masala Ban in Hong Kong Singapore Due To Cancer Causing Chemicals Spice Brands


இந்தியாவின் எம்.டி.ஹெச். மற்றும் எவரேஸ்ட் ஆகிய நிறுவனங்களின் மசாலாப் பொருட்களில் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டிருப்பதால் சிங்கபூர், ஹாங்-காங் ஆகிய நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. 
இந்திய மசாலா தயாரிப்பு நிறுவனங்களாக எம்.டி.ஹெச். ( MDH Pvt.) எவரெஸ்ட் ( Everest Food Products Pvt) ஆகியவை தயாரித்த மசாலாப் பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்ஸைடு (ethylene oxide) என்ற பூச்சிக்கொல்லி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
சிங்கப்பூரில் மீன் குழம்பு மசாலாவிற்கு தடை 
சிங்கப்பூர் உணவு முறை எவரெஸ்ட் மீன் குழம்பு மாசாவில் அதிகளவு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டறிந்தவுடன், அதன் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. மேலும், எவரெஸ்ட் மசாலாப் பொருட்களை கொள்முதல் செய்யவும் தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக சிங்கபூர் அரசு தெரிவித்துள்ள விளக்கத்தில், ‘ எத்திலீன் ஆக்ஸைடு உணவில் பயன்படுத்த அனுமதியில்லை. இது விவசாயப் பொருட்களுக்கு கிருமிநீக்கம் செய்யப்படும் ரசாயனம். எனவே, மக்கள் யாரும் இதை சமையலில் உபயோகிக்க வேண்டாம். இது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளது.
சந்தையில் உள்ள எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா பாக்கெட்கள் அனைத்தையும் திரும்ப பெறுமாறு அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
ஹாங்காங் 
கடந்த வாரம் சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டது. அடுத்து, ஹாங்காங் நகரிலும் எம்.டி.ஹெச். மெட்ராஸ் சாம்பார் மசாலா, Curry மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 ஹாங்காங் சந்தையில் விற்பனை செய்யப்பட்டும் எம்.டி.ஹெச். மெட்ராஸ் Curry மசாலா, சாம்பர் மசலாம், Curry பவுடர் உள்ளிட்டவற்றில் அதிகமாக எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதை ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு துறை சோதனையில் கண்டறிந்துள்ளது (The Centre For Food Safety of The Government). 
இது தொடர்பாக ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,” Tsim Sha Tsui  பகுதியில் உள்ள மூன்று கடைகளில் இருந்து பெறப்பட்ட மசாலாப் பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது மக்களின் உடல்நலனுக்கு கேடு என்று அறிந்ததும் அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது. இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.”என்று தெரிவித்துள்ளது. 
எத்திலீன் ஆக்ஸைடு என்றான் என்ன? 
எத்திலீன் ஆக்ஸைடு (Ethylene oxid) என்பது ஓர் நிறமற்ற, எரியக்கூடிய வாயு. இது மற்ற வேதிப்பொருட்கள் கிடைப்பதற்கு குறிப்பிட்ட அளவில் சேர்க்கப்படுகிறது. ’antifreeze’ எனப்படும் வாகன எஞ்ஜின்களின் தட்பவெப்பநிலையை சீராக இயங்க உதவும் ஆயில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. 
குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்பட்டால் விவசாயப் பொருட்களின் பூச்சுக்கொல்லியாக செயல்படும். கருத்தடை மருந்துகள் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. 
எத்திலீன் ஆக்ஸைடு மனிதனின் நரம்பியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை பாதிக்கும். மேலும், புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கிறது. மனிதர்கள் உண்ணும் உணவில் இதை சேர்ப்பது ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவரெஸ்ட் நிறுவனம் விளக்கம்
எவரெஸ்ட் நிறுவனம் Wion என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த விளக்கத்தில், நாங்கள் 50 ஆண்டுகால புகழ், பாரம்பரிய மிக்க ப்ராண்ட். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் ஆய்வுக் கூடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய இரண்டையும் உறுதி செய்த பிறகே எங்கள் தயாரிப்புகள் வெளிவருகின்றன; ஏற்றுமதி செய்யப்படுகின்றன.எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) ஆகியவற்றின் அனுமதி பெற்றுள்ளது. ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பு எங்களது தயாரிப்புகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது. 
2023-ம் ஆண்டும் எவரெஸ்ட் நிறுவனம் தயாரித்த பொருட்களில் அதிகளவு ரசாயனம் இருந்ததால் ’Salmonella’ பாதிப்பு ஏற்பட்டபோது அமெரிக்கவில் எவரெஸ்ட் மசாலா பொருட்கள் பயன்படுத்த வேண்டாம் அந்நாட்டின் பாதுகாப்பு துறை தெரிவித்திருந்தது.
உணவுப் பொருட்களில் குறிப்பிட்ட அளவே எத்திலீன் ஆக்ஸைடு பயன்படுத்தப்பட்டாலும் அதை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும். புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் காண

Source link

sa re ga ma pa seniors show to start soon in zee tamil details


தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்தத் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப. பல சாமானிய மக்களின் கனவை நனவாக்கி அவர்களின் இசை திறமையை உலகறிய செய்யும் மேடையாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. 
ராக் ஸ்டார் ரமணியம்மா, வாவ் கார்த்திக், புருஷோத்தமன், நாகர்ஜூன், லக்ஷ்னா, அசானி, பிரியன் என பல பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக இந்த சரிகமப அமைந்துள்ளது.  இந்த நிலையில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மெகா ஆடிஷன், போட்டியாளர்கள் தேர்வு குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. 
இந்த சீசனுக்காக தொடர்ச்சியாக 75 நாட்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக ஆடிஷன் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 12,000 பேர் ஆடிஷனில் பங்கேற்றதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 12,000 பேரில் திறமையான 50 போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 
மேலும் மெகா ஆடிஷன் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமான செட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில் இதில் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, ஸ்வேதா மோகன், கே. எஸ் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கே. எஸ்.ரவிக்குமார் 49 படங்களை இயக்கிய அனுபவத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார். 
முதல் இரண்டு வாரங்கள் மெகா ஆடிஷன் சுற்று ஒளிபரப்பாகும் எனவும் இதன் மூலமாக இந்த நிகழ்ச்சியில் தொடர இருக்கும் திறமையானவர்களை, போட்டியாளர்களைத் தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதுவரை இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமே ஆடிஷனில் பங்கேற்க ஆர்வம் காட்டி வந்த நிலையில் நிலையில் இந்த முறை மலேஷியா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்த் என பல நாடுகளில் இருந்து பலர் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளனராம். 
பெயிண்டர், ஓலை பின்னுபவர், போஸ்ட் உமன் என பல விதமான குடும்ப பின்புலங்களை கொண்டவர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்று இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த ‘சரிகமப சீசன் 4’ நிகழ்ச்சியும் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் படிக்க: Prakashraj – Modi : தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்!
ஆஹா என்ன வரிகள் 8: “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை” கண்ணதாசன் சொன்ன உலக தத்துவம்!

மேலும் காண

Source link

Guru Peyarchi : குரு பெயர்ச்சிக்கு கண்டிப்பாக இந்த கோவிலுக்கு போங்க.. திருமண தடை நீங்கும் என நம்பிக்கை..


<p><strong>விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில். இக்கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 300வது சிவன் கோவில் ஆகும். அதனால் தான் இந்த ஊரின் பெயரும் முன்னூர் என்று அழைக்கப்படுகிறது. முன்னூருக்கு வந்தால் முன்னேற்றம் உண்டு என்பது வாக்காக உள்ளது.</strong></p>
<h2>ஆடவல்லீஸ்வரர்</h2>
<p>ஆடவல்லீஸ்வரர் இந்த கோவிலில் தெற்கு திசையை நோக்கி சுயம்பு ரூபமாக லிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். இதற்கான காரணம் பசு, புற்றுகளிலே பால் சுரந்து, &nbsp;அந்த புற்றுகளில் இருந்து சிவபெருமான் தோன்றியதாக புராணத்தில் உள்ளது. இந்த கோவில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது என்பதை குறிப்பிடும் கல்வெட்டுகள் உள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு, பார்வதி சிவனுடன் நடனமாடிய காட்சி கிடைக்கப்பெற்றதை அடுத்து இங்குள்ள சிவனுக்கு ஆடவல்லீஸ்வரர் என பெயர் வந்துள்ளது, இந்த இடம் தென் கயிலாயம் என்றும் பூஜிக்கப்படுகின்றது.</p>
<h2>கல்வெட்டுக் குறிப்பு</h2>
<p>கி.மு. 1700-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 44 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் ஆடவல்லீஸ்வரர், அம்பாள் ப்ருஹன்நாயகி தவிர ஆறுமுகங்களுடன் அருளும் சுப்பிரமணிய சுவாமியும் முக்கியமானவர். இவர் நல்லியக்கோடான் மன்னனுக்கு போரில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஆலயத்தில் பிரதோஷங்கள், சங்கடஹர சதுர்த்தி, மகா சிவராத்திரி, கிருத்திகை வழிபாடு என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.</p>
<h2><strong>நெய் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும்</strong></h2>
<p>மாதந்தோறும் வரக்கூடிய பிரதோஷ தினங்களில் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகார தலமாக மேற்கு நோக்கி இருக்கக்கூடிய குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.</p>
<h2><strong>தேவர்களே ஆனாலும் கர்வம் கூடாது</strong></h2>
<p>நவக்கிரகங்களில் சுப கிரகமாகத் திகழ்பவர் பிருகஸ்பதி என்று வணங்கப்படும் குரு பகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆசிரியராக விளங்கும் இவர், நான்கு வேதங்களிலும் புலமை மிக்கவர். ஒழுக்கத்தினாலும், கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர்.</p>
<p>முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம், குரு பகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது. தேவர்களேயானாலும் கர்வம் கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும், தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு, படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார்.</p>
<h2><strong>தவ வலிமை</strong></h2>
<p>குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி, அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவ வலிமைகளை மீண்டும் பெறலாம் என உபாயம் கூறியருளினார்.</p>
<h2><strong>தென்திசை நோக்கி எழுந்தருளியிருக்கும் ஆடவல்லீஸ்வரர்</strong></h2>
<p>குருபகவான், ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற, அவரது தவவலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன், அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தார்.</p>
<p>நவக்கிரகங்களில் முழுமையான சுபபலம் பெற்ற குரு பகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து ‘தென் திருக்கயிலாயம்’ என்றும், ‘பூவுலகின் கயிலை’ என்றும் போற்றப்படுவதாக தல புராணம் சொல்கிறது. இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென்திசை நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.</p>
<p>ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷம் இருப்பவர்களுக்கும், கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும், அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைக் காப்பாற்றவே இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தல வரலாறு தெரிவிக்கிறது.</p>
<h2><strong>மேற்கு திசை நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி </strong></h2>
<p>சனகாதி முனிவர்களுக்கு மவுன யோக நிலையில் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் காட்சி தந்து அருளியுள்ளார் என்று பிரம்மாண்ட புராணம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாகவும், தேவ குருவான பிருகஸ்பதிக்கு இழந்த தவ வலிமையை மீண்டும் அளித்து அருள்பாலித்த தலம் என்பதாலும் இறைவன் தென்திசை நோக்கி அருள்பாலிப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆலயம் மிகச் சிறந்த ஒரு குரு தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. பொதுவாக தட்சிணாமூர்த்தியானவர், தென்திசை நோக்கிதான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய தட்சிணாமூர்த்தி மேற்கு திசை நோக்கி இருப்பது காணக்கிடைக்காத காட்சியாகும். வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.</p>

Source link

AIadmk General Secretary Edapapadi Palaniswami said that Prime Minister Modi’s talk about Muslims is against the Indian Constitution


பிரதமர் நரேந்திரமோடி இசுலாமியர்கள் பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமியும் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

‘கண்டனம் இல்லாமல் அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி’
ஆனால், அந்த அறிக்கையில் எந்த இடத்திலும் ‘கண்டனம்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. மாறாக, இது போன்ற பேச்சுக்கள் நாட்டின் நலனுக்காக முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்ட எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக கண்டனம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல், இப்படி ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் பிரதமர் பேச்சு குறித்த தன்னுடைய அறிக்கையில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, மிக கவனமாக, இந்த கருத்து இறையாண்மைக்கு உகந்தது அல்ல, இசுலாமியர்கள் மனதை புண்படுத்தும்படி இதுபோன்ற கருத்துகளை பேசுவது ஏற்படையதல்ல என்ற வார்த்தைகளை மட்டுமே அவர் பயன்படுத்தியுள்ளது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.
’எஸ்.டி.பி.ஐ கட்சிக்காக அறிக்கை வெளியீடா?’
அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி மிக முக்கிய அங்கத்தை வகித்தும் வரும் நிலையில், மோடியை நேரடியாக எதிர்க்காமல், பெயருக்காக ஒரு அறிக்கையை மட்டும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டாரா?  என்ற சந்தேகமும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது. மீண்டும் பாஜக ஆட்சியே மத்தியில் அமையும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அதிமுகவில் தன்னுடைய தலைமைக்கு ஏதாவது ஆபத்து வந்துவிமோ என்ற எச்சரிக்கை உணர்வில் இதுபோன்ற சாஃப்ட் அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார் என்றும் அரசியல் களத்தில் விவாதம் எழுந்துள்ளது
’வழக்கில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள்’
அதே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 3வது முறையாக பாஜக ஆட்சி அமைந்தால், தாங்கள் கூட்டணிக்கு வரவில்லையென்று, பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக இறங்கிவிடுமோ என்ற எண்ணமும் எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற அறிக்கை வெளியிட காரணம் என கூறப்படுகிறது.
’பாரத பிரதமர் என்று குறிப்பிட்ட ஈபிஎஸ்’
பிரதமர் என்று கூட சொல்லாமல தன்னுடைய அறிக்கையில் முதல் வரியிலேயே பாரத பிரதமர் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னரே தீவிர பாஜக எதிர்ப்பை கைவிட்டுவிடுவாரோ என்ற தோற்றம் இந்த அறிக்கையின் மூலம் உருவாகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
’பாஜக எதிர்ப்பில் ஈபிஎஸ் உறுதியாக உள்ளார் – அதிமுக தொண்டர்கள் கருத்து’
ஆனால், தன்னுடைய பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் பின்வாங்க மாட்டார் என்றும், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தாலும் கொள்கை ரீதியாக பாஜகவை அவர் எதிர்ப்பது தொடரும் என்றும், தேர்தலின்போதே பாஜகவிற்கு பயப்படாதவர், இதன் பிறகும் அவர்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார் என   அதிமுகவினர் தெரிவித்துள்ளர்.
 

மேலும் காண

Source link

Tamil Nadu latest headlines news April 23th 2024 flash news afternoon details today


Edappadi Palanisamy:“இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் அறிக்கை
அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் படிக்க..
Yellow Alert: நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்ப அலை – தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாடு, கர்நாடாகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் அதிகளவு வெப்ப அலை வீசும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
மிஸ் கூவாகம் அழகிப்போட்டி… முதல் பரிசைத் தட்டிச் சென்ற ஈரோடு திருநங்கை மருத்துவர் ரியா!
விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கு நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிஒ போட்டியில் விதவிதமான ஆடைகளை அணிந்து திருநங்கைகள் ஒய்யாரமாக ரேம்ப் வாக்கில் நடந்து வந்தது பார்வையாளர்களை வெகு கவர்ந்தது. இந்த ஆண்டின் மிஸ் கூவாகம் பட்டத்தினை உதவி மருத்துவரான ஈரோட்டைச் சார்ந்த ரியா முதல் இடத்தை பிடித்தார். மேலும் படிக்க…
Mettur Dam: இரண்டாவது நாளாக தொடர்ந்து 57 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 79 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் படிக்க..
சூரிய அஸ்தமனத்தையும் சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியுமா? இன்று குமரியில் நிகழும் அதியசம்!
சித்ரா பௌர்ணமி என்பது இந்துகள் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான நாள்களில் ஒன்று. இன்று சிவனுக்கு உகந்த நாளாகவும், இன்றுதான் பூமியில் அனுமன் அவதரித்த நாள் என்றும் கூறப்படுகிறது. இதுபோக, இன்றைய நாளில்தான் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். விழுப்புரம் அடுத்த கூவாகத்தில் திருவிழா என பல்வேறு இந்து சமய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க..

மேலும் காண

Source link

PM Modi controversial speech on Muslims Fact check reveals manmohan singh worries has weightage


Fact Check Modi: நேற்று முன்தினம், ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். குறிப்பாக, இஸ்லாமியர்கள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பற்றியும்  அவர் கூறிய கருத்துகள் தேசிய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேசத்தின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை இருப்பதாக கடந்த 2006ஆம் ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக பன்ஸ்வாரா பொதுக்கூட்டத்தில் பேசினார்.
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பகிர்ந்து வழங்க அக்கட்சி  வாக்குறுதி அளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். பிரதமர் மோடி சொன்னது உண்மையா? என்பதை ஒன்றன் பின் ஒன்றாக தெரிந்து கொள்ளலாம்.
அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்களா இஸ்லாமியர்கள்?
குடும்ப கட்டுப்பாடு, தாய் மற்றும் சேயின் சுகாதாரம் , ஊட்டச்சத்து, வயது வந்தோரின் ஆரோக்கியம் உள்ளிட்டவை தேசிய அளவில் எந்தளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, சமூகத்தில் அதன் மீதான தாக்கம் என்ன என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இது தொடர்பாக ஆய்வு செய்து தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இதையும் படிக்க: PM Modi : “எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைச்சு..முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க” பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை!
மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பின்படி, பிரதமர் மோடி சொன்ன கருத்து உண்மைக்கு புறம்பானது என்பது தெரிய வந்துள்ளது. இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து மதத்தவரின் கருவுறுதல் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருவது ஆய்வின் முடிவுகளின் மூலம் தெரிய வருகிறது.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணால் எத்தனை குழந்தைகளை பெற்று கொள்ள முடியும் என்பதை குறிப்பதே கருவுறுதல் விகிதம் ஆகும். இந்த விகிதம் 2.1 ஆக இருந்தால், அது replacement level என அழைக்கப்படும்.  அதாவது, அவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கவும் இல்லை குறையவும் இல்லை நிலையாக இருக்கிறது என அர்த்தம்.
2019-21 தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் 2.36ஆக உள்ளது. அதாவது, அவர்களின் மக்கள் தொகை கிட்டத்தட்ட replacement levelக்கு இணையாக உள்ளது. கருவுறுதல் விகிதத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையேயான வித்தியாசம் என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது.
2015-16 தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்துக்களின் கருவுறுதல் விகிதம் 2.13 ஆக இருந்தது. 2019-21 கணக்கெடுப்பின்படி, இந்த விகிதம் 1.94ஆக குறைந்துள்ளது. அதேபோல, 2015-16 தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் 2.62 ஆக இருந்தது. 2019-21 கணக்கெடுப்பின்படி, இந்த விகிதம் 2.36ஆக குறைந்துள்ளது.
தேசத்தின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை என மன்மோகன் சிங் சொன்னாரா?
கடந்த 2006ஆம் ஆண்டு, டிசம்பர் 6ஆம் தேதி, மன்மோகன் சிங் பேசியது செய்திக்குறிப்பாக வெளியானது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, “நம் அனைவரின் முன்னுரிமைகளே தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன்.
விவசாயம், நீர்ப்பாசனம், நீர்வளம், சுகாதாரம், கல்வி என திட்டங்களை வகுக்கும்போது, எஸ்சி/எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக வகுக்க வேண்டும். வளர்ச்சியில் சம பங்கினை சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினருக்கு வழங்க உறுதிசெய்ய புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளர்ச்சி, வளங்களில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
சமூகத்தில் பலவீனமான பிரிவினரை மனதில் வைத்து திட்டங்கள் வகுக்க வேண்டும் என மன்மோகன் சிங் கூறியுள்ளார். ஆனால், அதிலிருந்து இஸ்லாமியர்களை மட்டும் தனித்து மேற்கோள் காட்டியுள்ளார் பிரதமர் மோடி.
சமூகத்தில் பின்தங்கியவர்களா இஸ்லாமியர்கள்? 
இஸ்லாமியர்களை பலவீனமான (பின்தங்கிய) பிரிவு என மன்மோகன் சிங் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அரசின் தரவுகள், அவர் பேசியதற்கு சான்றாக இருக்கின்றன. 2005-06 மத்திய அரசு தரவுகளின்படி, மற்ற மதப்பிரிவினை ஒப்பிடுகையில் பள்ளிக்கு செல்லாவதர்களில் இஸ்லாமிர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதேநிலைதான், 2019-21 ஆண்டிலும் தொடர்கிறது. 2005-06 காலகட்டத்தில், 12 ஆண்டு கால பள்ளி படிப்பை நிறைவு செய்தவர்களின் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களே குறைவாக இருந்தனர். அதேநிலைதான், 2019-21 ஆண்டிலும் தொடர்கிறது.
இதையும் படிக்க: Modi Speech On Muslims : “உங்க சொத்துக்களை புடுங்கி முஸ்லீம்களுக்கு கொடுத்துடுவாங்க” : மோடி சர்ச்சை கருத்து

மேலும் காண

Source link

actor prakash raj codemns p m modi comment on congress muslims manmohan singh | Prakashraj


பிரதமர் நரேந்திர மோடியின் பருப்பு தமிழ்நாடு, கர்நாடகாவில் வேகாது, அவரின் பேச்சுக்கள் என்பது, நாம் எல்லாரும் தலை குனிய வேண்டிய அசிங்கமான விஷயம் என நடிகர் பிரகாஷ் ராஜ் (Prakash Raj) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சர்ச்சைப் பேச்சு
18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்து ஏப்.26, மே 7, 13, 25, ஜூன் 1 என மொத்தம் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், லக்னோ, சத்தீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி கடந்த சில நாள்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பரப்புரையின்போது, இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் நாட்டின் சொத்தில் முதல் உரிமை தந்ததாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு இவ்வாறு சொன்னதாகவும், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி சட்டத்தை மாற்றி பெண்களின் நகை, மக்களின் சொத்துகளைப் பறித்துக்கொள்ளப் போகிறார்கள், கம்யூனிஸ்டுகள் நாட்டை நாசமாக்கியுள்ளனர் என்றும் பிரதமர் மோடி பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
மேலும் முன்னதாக ராஜஸ்தானில் பரப்புரை மேற்கொள்ளும்போது இந்த நாட்டில் அதிகம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என இஸ்லாமியர்களை மறைமுகமாகத் தாக்கி பிரதமர் மோடி பேசியது கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 
மன்மோகன் சிங் பேசியது..
விவசாயம், நீர்ப்பாசனம், நீர்வளம், சுகாதாரம், கல்வி என திட்டங்களை வகுக்கும்போது, பட்டியல் இனத்தவர், பழங்குடி வகுப்பு மக்கள், ஓபிசியினர், சிறுபான்மை மக்கள், குழந்தைகள், பெண்கள், இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆகியோர் மேம்பாட்டிற்காக வகுக்க வேண்டும், வளர்ச்சியில் சம பங்கினை சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினருக்கு வழங்க உறுதிசெய்ய புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2006ஆம் ஆண்டு பேசியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி அவரது கருத்தை இவ்வாறு பேசியிருப்பது கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
‘தமிழ்நாட்டில் பருப்பு வேகாது’
இந்நிலையில் நடிகரும் ஆளும் பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து தன் கருத்துகளை அழுத்தமாக பகிர்ந்து வருபவருமான பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியின் இந்தப் பேச்சை கடுமையாக  விமர்சித்துள்ளார். ”மல்லிப்பூவுக்குள் இருக்கும் மணம் தானே வெளியே வரும்?  மன்னருடைய அசிங்கம் அவருடைய பேச்சில் இருந்து வெளியே வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை, முஸ்லிம் இனத்தைக் குறிப்பிட்டு மோடி பேசுகிறார். இதிலேயே அவரது குறிக்கோள் தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும்போது இந்த வார்த்தையை அவர் பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்தப் பருப்பு இங்கே வேகாது, ஆனால் உ.பியில் வேகும். ஒரு நாளைக்கு 5 வேடங்கள், ஒரு நாடு, ஒரு தர்மம், ஒரு மொழி என்று சொல்லும் மன்னருக்கு இரண்டு நாக்கு. இது நாம் எல்லாரும் தலை குனிய வேண்டிய அசிங்கமான விஷயம். மக்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என விமர்சித்துள்ளார்
‘மக்கள்தான் ஜெயிப்பார்கள்’
திருடனைப் பற்றி இன்னொரு திருடனிடம் எப்படி புகார் தர முடியும்? தேர்தல் ஆணையத்துக்கு யாராவது புகார் தர வேண்டுமா? ராமரை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் மறுபடி இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தால் எதுவுமே நடக்காது. எவனும் இருக்கக்கூடாது, எதிர்க்கட்சி இருக்கக்கூடாது. யாரும் கேள்வி கேட்கக்கூடாது.
மக்கள் கூட அவ்வப்போது அறியாமையில் ஓட்டு போடுவார்கள். கர்நாடகாதான் இந்த முறை மாநிலத்தில் அவர்களை ஆட்சியில் இருந்து கீழே இறக்கியது. கடைசியில் தேர்தலில் ஜெயிப்பதும் தோற்பதும் மக்கள்தான். அவர்களுடைய வாழ்க்கைதான். தென் இந்தியா நிச்சயம் இந்த முறை, பாஜகவுக்கும், இந்த மன்னருக்கும் என்ன சொல்ல வேண்டுமோ? அதை சொல்லும்” எனப் பேசியுள்ளார். 

மேலும் காண

Source link

"தேர்தல் ஆணையம் சரியாக வேலை செய்யவில்லை" முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு


<div dir="auto" style="text-align: justify;">சித்ரா பௌர்ணமி முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்த பெற்ற அரிதான சித்திரகுப்தர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வின் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு &nbsp; அன்னதான விழாவை துவக்கி வைத்த பிறகு, &nbsp;அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து &nbsp;சாமி தரிசனம் மேற்கொண்டார்.</div>
<h2 dir="auto" style="text-align: justify;">பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்</h2>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ba372a;">இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,</span> நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும். விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு , போதை பொருட்கள் நடமாட்டம் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு இந்த தேர்தலில் வெளிப்படும் .நாங்கள் அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் எங்களுக்கு வெற்றியை தேடி தரும்.&nbsp; அரசு பேருந்து ஊழியர் பகலில் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளார்.</div>
<h2 dir="auto" style="text-align: justify;">300 , 500 வெற்றி பெறுமா ?</h2>
<div dir="auto" style="text-align: justify;">சட்டம் ஒழுங்கு சீரழிவை சந்தித்துள்ளது. தேர்தலில் அவர்கள் மக்களை நம்பவில்லை. ஆனால் நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்தித்தோம். அவர்கள் 300 மற்றும் 500 ரூபாய் நம்பி தேர்தலில் போட்டியிட்டார்கள். இந்த தேர்தலில் மக்கள் வெற்றி பெறுவார்களா? 300 , 500 ரூபாய் வெற்றி பெறுமா? என்பதுதான் கேள்வியாக உள்ளது.</div>
<h2 dir="auto" style="text-align: justify;">2014 ஃபார்முலா தான் இது</h2>
<div dir="auto" style="text-align: justify;">கோயம்புத்தூரில் அண்ணாமலை ஒரு லட்சம் வாக்குகளை &nbsp;மட்டுமே வாங்குவார். 2014 இல் எடப்பாடி பழனிச்சாமி தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டை அப்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருந்தார், தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் ஒரு சில விஷயங்களில் கொள்கையை மீறி கூட்டணிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது, இதனால்தான் தேசிய கட்சி இல்லாத கூட்டணியை 2014 இல் சந்தித்தோம், இதை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் சுமார் 37 இடங்களில் வெற்றி பெற வைத்தனர். 2014 இல் பெற்ற வெற்றி 2024 கிடைக்கும்.</div>
<h2 dir="auto" style="text-align: justify;">தேர்தல் ஆணையம் குளறுபடி</h2>
<div dir="auto" style="text-align: justify;">அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் அனைத்து தரப்பிற்கும் வாய்ப்பு தரும் கட்சி. உழைப்பு, அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி. வாரிசு கட்சி அல்ல. முன்னாள் அமைச்சர்களோ மாவட்ட செயலாளர்களுக்கு தான் வாய்ப்பு என்ற நிலை இல்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குளறுபடியாக இருந்தது, ஒவ்வொரு தொகுதியிலும் பத்தாயிரம் வாக்குகள் வரை பெயர்கள் எடுக்கப்பட்டது.</div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">கோவில்பட்டியில் 14 ஆயிரம் வாக்குகள் காணவில்லை. இதைத் தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் குளறுபடியாக இருக்கிறது. மாலையில் ஒரு கணக்கு மற்றும் காலையில் ஒரு கணக்கை கூறுகிறார்கள். தேர்தல் ஆணையம் அவர்களுடைய பணியை சரியாக செய்யவில்லை, இது ஜனநாயகத்துக்கு நல்லதில்லை தேர்தல் ஆணையம் வருங்காலத்தில் விழிப்போடு செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். &nbsp; விழாவிற்கான ஏற்பாடு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் செய்யப்பட்டிருந்தது. &nbsp;இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் &nbsp;வாலாஜாபாத் பா.கணேசன், &nbsp;காஞ்சி பன்னீர்செல்வம், &nbsp;பாலாஜி &nbsp;உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</div>

Source link

Karur Abaya Pradhan Renkanathaswamy Thirukalyana Vaibogam program | சித்திரை திருவிழா! கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்


கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் முக்கிய நிகழ்வாக சுவாமியின் திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
 

சித்திரை திருவிழா:
கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திரு வீதி உலா காட்சி தருகிறார். இந்நிகழ்ச்சியில் சித்திரை மாத முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி அபய பிரதான ரெங்கநாதர் சுவாமிகளுக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் ஆலய மண்டபத்தில் பால் தயிர் திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தார். அதை தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி அபய பிரதான ரங்கநாதர் சுவாமியை ஊஞ்சலில் கொழுவிருக்க செய்தனர். 
 

திருக்கல்யாணம்:
தொடர்ந்து ஆலயத்தின் பட்டாச்சாரியார் ஆலய மண்டபத்தில் பிரத்யேக யாக குண்டங்கள் அமைத்து திருக்கல்யாணயாக நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி அபய பிரதான ரெங்கநாதர் சுவாமிக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும், பால்பழம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் சீர் கொண்டு வந்த பிறகு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
 

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமிக்கு மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
 
 
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial
 
 

மேலும் காண

Source link

ட்ரோன் மூலம் உடல் உறுப்புகளை எடுத்துச் செல்ல முடியுமா? சென்னை அருகே நடந்த முக்கிய சோதனை!


<div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>ட்ரோன் மூலம் தொழுநோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகள் அனுப்பும்&nbsp; முதற்கட்ட சோதனை நடைபெற்றது.</strong></span></div>
<h2 dir="auto" style="text-align: justify;"><strong>ட்ரோன்கள்</strong></h2>
<div dir="auto" style="text-align: justify;">
<p>ஆள் இல்லாமல் இயங்கக்கூடிய சிறிய வகை&nbsp; விமானத்தின் பெயர் ட்ரோன் என அழைக்கப்படுகிறது. இது விமான வடிவிலும் பல்வேறு வடிவங்களிலும் உள்ளது.&nbsp; ஆளில்லா விமானங்களில் &nbsp;பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. &nbsp;குறிப்பாக ஆளில்லா விமானங்களில் தொழில்நுட்பமும் தினமும் &nbsp;மெருகேறி வருகிறது. &nbsp;அதற்கு ஏற்றார் போல் &nbsp; பல்வேறு துறைகளில் ஆளில்லா விமானங்களில் பயன்பாடுகளை அதிகரிக்க &nbsp;பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது</p>
<p>&nbsp;</p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/23/8e953e19526bd631fcd5a3c03524354d1713839688963113_original.jpg" width="926" height="521" /></p>
<h2>மருத்துவத்துறை &nbsp;ட்ரோன் பயன்பாடு</h2>
<p>மருத்துவத்துறையை பொறுத்தவரை ட்ரோன்களின் பயன்பாடு முக்கிய தேவையாக கருதப்படுகிறது. எளிதில் சென்று சேர முடியாத &nbsp;பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்துகளை அனுப்பி வைக்க முடியும், &nbsp;அதேபோன்று யுத்த காலங்களிலும் &nbsp;ஆளில்லா விமான மூலம் மருந்து அனுப்பி வைப்பது அவசியத் தேவையாக பார்க்கப்படுகிறது. இதுபோக இந்தியா முழுவதும் ட்ரோன் மூலம் மலைப்பகுதிகள், வனாந்திர காடுகள் பகுதிகளில் முக்கிய தேவைகளாக மாறிவருகிறது.</p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/23/c015a82237c66955bf475fe99632cbdf1713839714667113_original.jpg" width="896" height="504" /></p>
</div>
<h2 dir="auto" style="text-align: justify;">மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம்</h2>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">இதன் இன்னொரு முக்கிய அங்கமாக மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கிராம மருத்துவமனைக்கு ட்ரோன் விமானம் மூலம் அவசர சிகிச்சைக்கு மருந்து விநியோகம் செய்ய சோதனை ஓட்டம்&nbsp; வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டது. செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம் சார்பில் மாவட்டத்தில் உள்ள இதர தொழுநோய் மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் விரைவாக அனுப்பவும்&nbsp; ரத்தப் பரிசோதனை மாதிரிகளை விரைவாக எடுத்து பரிசோதை செய்ய சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் எடுத்து செல்லும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. பரனூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழுநோயாளிகளுக்கு மருந்துகள் அனுப்பவும்,இரத்த மாரிதிகளை எடுத்து வரவும் திட்டமிட பட்டுள்ளது.</div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">
<h2 dir="auto" style="text-align: justify;">சிறிய ரக ட்ரோன் பரிசோதை&nbsp;</h2>
</div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">குறிப்பாக மூன்று பிரிவுகளாக எல்லைகளை வரையறுத்துள்ளது. மேலும் விமான நிலையம்,விமான தளவாடங்கள் அமைக்கப்படுள்ள பகுதிகளை சுமார் 5 முதல் 10 கிலோமீட்டர் தொலைவை சிவப்பு நிற எல்லைகளாகவும், இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள எல்லை பிரிவுகளை 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவை&nbsp; ஆரஞ்சு நிற எல்லை பிரிவுகளாகவும்,15 முதல் 20 கிரோமீட்டர் தொலைவை பச்சை நிற பிரவுகளாகவும் கணக்கிட்டு வரையறுக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்காக மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகளை சாலை மார்க்கமாக எடுத்து சென்றால் சுமார் 40 நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்க்கு மேலாக போக்குவரத்து சூழல் உள்ளது.</div>
<div dir="auto" style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/23/4a563ac2428ebff875b7b0ffb9a0cb921713839741474113_original.jpg" width="946" height="532" /></div>
<h2 dir="auto" style="text-align: justify;">முக்கிய உடல் உறுப்புகள்&nbsp;</h2>
<div dir="auto" style="text-align: justify;">தற்போது போக்குவரத்து சூழல் மற்றும் நேரத்தைத்தை குறைக்கும் வகையில் இந்த திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. செங்கல்<wbr />பட்டு திருமணி பகுதியில் இருந்து சாலை மார்க்கமாக கூடுவாஞ்சேரி சுமார் 25 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நேரத்தை&nbsp; குறைக்கும் வகையில் கூடுவாஞ்சேரி பகுதிக்கு சுமார் 15 முதல் 20 நிமிடத்தில் எடுத்து செல்லும்&nbsp; புதிய முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது. சுமார் 200 மீட்டர் உயரத்தில் ட்ரோன் பறந்து மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகளை எடுத்து வருகின்றன.</div>
<div dir="auto" style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/23/d8b07ca740d320288eb223ad8727f22e1713839770101113_original.jpg" width="910" height="512" /></div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">அடுத்த சோதனை ஓட்டமானது வரும் மே மாதம் 3ம் தேதி நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டமானது முழுமையாக வெற்றிகரமாக நடைபெற்றால் அடுத்து இதயம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகள்&nbsp; எடுத்து செல்ல ஏதுவாக இருக்குமென கூறப்படுகிறது.</div>

Source link

Kumbabhishek ceremony of 2000 year old Vennaimalai Sri Balasubramania Swamy Temple in Karur | 2000 ஆண்டுகள் பழமையான கரூர் வெண்ணெய்மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்


கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய்மலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
 

2000 ஆண்டுகள் பழமையான முருகன் கோயில்:
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில் கரூர், வெண்ணெய்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். 2000 ஆண்டுகள் பழமையான ஆலயங்களில் ஒன்றான கரூர் வெண்ணெய்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலின் கும்பாபிஷேகம் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வாக கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை முன்னிட்டு ஆலயம் அருகே பிரம்மாண்டமாக பிரத்யேக யாக குண்டங்கள் அமைத்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது.
 

ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்:
யாக கலசத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு சிவாச்சாரியார் கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு, கோபுர கலசத்தை வந்தடைந்தனர். பின்னர் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கலசத்திற்கு தூப தீபம் காண்பிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சித்திரை தேரோட்டம்:
குளித்தலை அருகே அய்யர்மலையில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த அய்யர்மலை சிவஸ்தலமானது கடல் மட்டத்திலிருந்து 1171அடி உயரத்தில் 1071 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த அய்யர் மலையானது வாட்போக்கி மலை, காகம் பறவாமலை, ரத்தினகிரி மலை, ஐவர்மலை என்றும் சுவாமி மூலவர் வாட்போக்கி நாதர், முடித்தழும்பர், ராஜலிங்கர், மாணிக்க மலையான்  என்றும் அழைக்கப்படுகிறார்.
மலை உச்சியில் அமையப்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும்  சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உற்சவர் அம்மாளுடன் சிறப்பு அலங்காரத்தில் நந்தி, கைலாசம், ரிஷபம், காமதேனு, சிம்மம், சேஷம்,பல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வரும் சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உடனுறை சுரும்பார் குழலி அம்மனுக்கு பால், இளநீர், நெய், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.
 

தானியங்கள் தூவி நேர்த்திக்கடன்:
சுவாமி உற்சவர்கள்  சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள்  ஓம் நமச்சிவாயா என்ற நாமம் முழங்க, சிவ வாத்தியங்கள் இசைக்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் கிடைக்கும் அர்ச்சனை செய்த வழிபட்டனர். தேரோட்டமானது அய்யர்மலை நான்கு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையினை பல்வேறு கோவில் குடிப்பாட்டுக்காரர்கள்  வடம் பிடித்து இழுக்க மூன்று நாட்கள் சுற்றி வந்து வரும் ஏப்ரல் 24ம் தேதி மாலை நிலைக்கு வந்தடையும். திருத்தேரினை முன்னிட்டு அய்யர் மலையை சுற்றி கோவில் குடி பாட்டு காரர்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல்,நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட  தானியங்களை தூவி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial
 

மேலும் காண

Source link

பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தள!


Balakot Airstrike: நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி?
தேர்தல் நடந்து வரும் நிலையில், முன்னாள் இந்திய விமான படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதௌரியா பாலகோட் தாக்குதல் குறித்து பேசியுள்ளார். பாகிஸ்தான் விமானப்படையை உடைத்து பாலகோட் தாக்குதல் மேற்கொண்டதாக கூறியுள்ளார்.
பாஜகவில் சமீபத்தில் இணைந்த அவர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து பேசுகையில், “பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததும், பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத தெளிவான கொள்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.
ஒரு பயங்கரவாத சம்பவம் நிகழ்கிறது. எல்லைக்கு அப்பால் சென்று குற்றவாளிகள் மறைந்து கொண்டபோது, ​​​​இந்திய பாகிஸ்தான் எல்லை முழுவதும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. புல்வாமா தாக்குதல் நடந்தபோது, ​​எல்லையில் உள்ள  பயங்கரவாதிகள் பதுங்கு குழியில் சென்று மறைந்து கொண்டனர். அவர்களை தேடி கண்டுபிடித்தோம். அப்போதுதான், பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது.
பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி:
இது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதன்மூலம், வலுவான செய்தியை அனுப்பினோம். அதன் பிறகு இதுபோன்ற (பயங்கரவாத) சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இந்த (வான்வழித் தாக்குதல்) பாகிஸ்தானின் விமானப்படை மற்றும் ராணுவ பாதுகாப்பை உடைத்து நடத்தப்பட்டது.
எங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. இது ஒரு வெற்றிகரமான நடவடிக்கை. எந்தச் சூழலுக்கும் தயாராக இருந்தோம். நம் நாட்டில் யாராவது பயங்கரவாதத்தை பரப்பினால், அவர்கள் எங்கு மறைந்தாலும் அவர்கள் குறிவைக்கப்படுவார்கள். அர்த்தம் தெளிவாக உள்ளது. பூஜ்ஜிய சகிப்புத்தன்மை. பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்” என்றார்.
 

மேலும் காண

Source link

Pakistan rakes up Kashmir issue with Iran in meet to repair strained ties months after airstrikes in january | Iran – Pakistan: ஜனவரியில் வான்வழித் தாக்குதல்


Iran – Pakistan: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானில், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாகிஸ்தான் சென்ற  ஈரான் அதிபர்:
ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்செய்யும் நோக்கில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தீவிரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக, இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஈரான் அதிபர் மற்றும் பாகிஸ்தான் அதிபர் இடையேயான சந்திப்பு, ஆசிய பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Reliance Profit: 3 மாதங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த வருவாய் ரூ.18 ஆயிரத்து 951 கோடி – ஆனாலும் நஷ்டமாம்..!
காஷ்மீர் பிரச்னையை பேசிய பாகிஸ்தான்:
இருநாட்டு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின் போது, ​​பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார்.  ஆனால் அது பற்றி பேசும் முயற்சியை ஈரானிய அதிபர் தவிர்த்துள்ளார். அதற்கு பதிலாக இப்ராஹிம் ரைசி, பாலஸ்தீன பிரச்சினை குறித்து பேசியுள்ளர்.  மேலும், அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஈரான் எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார். 
விவாதிக்கப்படும் விவகாரங்கள் என்ன?
விரிசல் ஏற்பட்டுள்ள இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்செய்யும் முயற்சியில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, மதம், கலாச்சாரம், ராஜதந்திரம், முதலீடு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி,  ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் தொடர்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையும் இரு தலைவர்களுக்கு இடையே நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு:
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் தொடர்பாக பேசிய இப்ராஹிம் ரைசி, “ இருநாடுகளுக்கு இடையே உயர்ந்த மட்டங்களில் உறவுகளை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக அளவு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக அளவை 10 பில்லியன் டாலராக அதிகரிக்க முதல் கட்டமாக முடிவு செய்துள்ளோம்” என கூறினார். தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் பேசுகையில், “நாங்கள் இருவரும் எதிர்கொள்ளும் சவால்களை மீறி இந்த உறவை வலுவாக வைத்திருக்க வேண்டும். அதனால் பாகிஸ்தானும் ஈரானும் செழிக்கும்.  நமது எல்லைகள் முன்னேற்றத்தைக் காண முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு தற்போது சற்று தணிந்துள்ளது. 

மேலும் காண

Source link

Fact Check: காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?


<div id=":r9" class="Ar Au Ao">
<div id=":r5" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true" aria-owns=":tj" aria-controls=":tj" aria-expanded="false">
<div dir="ltr">
<p><strong>தோனி புகைப்படம் வைரல்:</strong></p>
<p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தல என்றும் ரசிகரால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படமானது, &nbsp;காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது &nbsp;அந்த &nbsp;புகைப்படத்தில், தோனி&nbsp; இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) ஜெர்சியை அணிந்து, அவரது இடது உள்ளங்கையை காட்டியும், வலது ஆள்காட்டி விரலால் ‘ஒன்று’ என்றும் சைகை செய்வது போன்று புகைப்படம் உள்ளது.</p>
<p>இந்நிலையில், அந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், தோனி&nbsp; காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறியதாக, பலர் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.</p>
<p><strong>அதில்,சில பதிவுகளில் தெரிவிக்கப்பட்டதாவது,</strong></p>
<p>கமல் ஆர் கான் என்னும் பதிவர் தெரிவிக்கையில், "காங்கிரசுக்கு கட்சிக்குதான் வாக்களித்ததாக தோனி தெளிவாகக் கூறுகிறார். என்று பதிவிட்டு புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார்..</p>
<p>மற்றொரு பயனர் தெரிவிக்கையில், "வாக்களித்த பிறகு தோனி ஏன் தனது கையைக் காட்டுகிறார்?" என இந்தி மொழியில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.&nbsp;</p>
<h2><strong>காங்கிரசுக்கு வாக்கு கேட்டாரா தோனி?</strong></h2>
<p><strong>இந்நிலையில்,&nbsp; இந்த புகைப்படம் குறித்து ஏபிபி நாடு செய்தி தளம் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தது.&nbsp;ஆய்வு செய்ததில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தோனி சைகை செய்யவில்லை என்பதை உறுதி செய்தோம்.</strong></p>
<p><strong>எதனடிப்படையில் என்றால், இந்த புகைப்படமானது, 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். இது சிஎஸ்கே வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ( தற்போது X தளம் ) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவை இங்கு இணைத்துள்ளோம்.</strong></p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Nandri filled Thala Dharisanam as our Twitter fam becomes 6 Million Strong! <a href="https://twitter.com/hashtag/SixerOnTwitter?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SixerOnTwitter</a> <a href="https://twitter.com/hashtag/WhistlePodu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WhistlePodu</a> <a href="https://twitter.com/hashtag/Yellove?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Yellove</a> 🦁💛 <a href="https://t.co/GJc6vBYf39">pic.twitter.com/GJc6vBYf39</a></p>
&mdash; Chennai Super Kings (@ChennaiIPL) <a href="https://twitter.com/ChennaiIPL/status/1312980770441494529?ref_src=twsrc%5Etfw">October 5, 2020</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
அதில் சிஎஸ்கே பக்கத்தில் 6 மில்லியன் பின் தொடர்பவர்களை அடைந்ததை கொண்டாடும் வகையில், ஒரு கையில் 5 விரல்கள் மூலமும் மற்றொரு கையில் ஒரு விரல் மூலமும் என 6 என்று சைகை காண்பித்துள்ளார். இதை, தற்போது வேறு விதமாக சிலர் பரப்பி வருகின்றனர்.</p>
<p>மேலும், &nbsp;மற்றொரு வீடியோவையும் சிஎஸ்கே அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதிலும், தோனி &nbsp;6 என காண்பிக்கப்படுவது காட்சியாக உள்ளது.</p>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Chennai Super <a href="https://twitter.com/hashtag/SixerOnTwitter?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SixerOnTwitter</a>! A big thanks to all the super fans for each and every bouquet and brickbat throughout the last decade. All the <a href="https://twitter.com/hashtag/yellove?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#yellove</a> to you. <a href="https://twitter.com/hashtag/WhistlePodu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WhistlePodu</a> 🦁💛 <a href="https://t.co/9KgCtf3G9I">pic.twitter.com/9KgCtf3G9I</a></p>
&mdash; Chennai Super Kings (@ChennaiIPL) <a href="https://twitter.com/ChennaiIPL/status/1312995053250387968?ref_src=twsrc%5Etfw">October 5, 2020</a></blockquote>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
<h2><strong>பொதுமக்கள் கவனம் தேவை:</strong></h2>
<p>தேர்தல் காலம் என்பதால், பலர் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப சிலவற்றை திருத்தம் செய்து பதிவிடுவதை, சமூக வலைதளங்களில் காண முடிகிறது. சமூக வலைதளங்களில் எந்த பதிவையும் பகிர்வதற்கு முன்னர், உண்மையா என அறிந்து பகிரவும். மேலும், வாக்களிக்கும் போது, உங்கள் மனசாட்சி தன்மைக்கு&nbsp;உட்பட்டு வாக்களிக்க வேண்டும். யார் நல்லவர்கள், யார்&nbsp; மக்களுக்கு யார்&nbsp; நல்லது செய்வார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுமே&nbsp;தவிர, பிரபலம் சொல்வதால்&nbsp;கண்மூடித்தனமாக முடிவு எடுக்க கூடாது. உங்கள் வாக்கு உங்கள் உரிமை.&nbsp;</p>
</div>
</div>
</div>

Source link

ஆஹா என்ன வரிகள் 8: "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" கண்ணதாசன் சொன்ன உலக தத்துவம்!


<p>இந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த திரையுலகம் தமிழ் திரையுலகம் ஆகும். அதற்கு திரைக்கதை, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இசை, ஒளிப்பதிவு என ஏராளமான காரணங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு மொழிகளை கடந்த ரசிகர்கள் உள்ளனர்.</p>
<h2><strong>புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை:</strong></h2>
<p>குறிப்பாக, தமிழ் சினிமா தாங்கிய அளவிற்கு தத்துவ பாடல்களை வேறு எந்த மொழி சினிமாவும் தாங்கியிருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி கொடிகட்டி பறந்த காலத்தில் ஏராளமான தத்துவ பாடல்கள் வெளியாகியுள்ளது. இன்று வரை அந்த பாடல்கள் மக்களின் கவலைகளுக்கு மருந்தாக அமைந்து வருகிறது.</p>
<p>அந்த வகையில், காலத்தை கடந்து என்றும் ரசிகர்கள் மனதில் அரசாட்சி செய்பவர் கவிஞர் கண்ணதாசன். மனிதனின் அனைத்து உணர்வுகளுக்கும் பாடல் எழுதிய மாமேதை கண்ணதாசன் ஆவார். உலகின் யதார்த்த வாழ்க்கையையும், வெற்றி, தோல்வி, காதல், திருமணம், சொந்தங்கள் என அனைத்தையும் ஒரே பாடலில் உலகிற்கு சொல்லியிருப்பார் கண்ணதாசன். அந்த பாடலே புத்தியுள்ள மனிதரெல்லாம்.</p>
<p>இந்த பாடலின் முதல் வரியிலே,</p>
<p><strong>"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..</strong></p>
<p><strong>வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.."</strong></p>
<p>என்று எழுதியிருப்பார்.</p>
<p>கண்ணதாசனின் வரிகள் எந்தளவு உண்மை மற்றும் யதார்த்தம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால், திறமையான அனைவருக்கும் வாய்ப்புகளும், வெற்றிகளும் எளிதில் கிட்டிவிடுவதில்லை. அதேசமயம், சில துறைகளில் வெற்றி பெறுபவர்கள் திறமையானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. யாருடைய துணையாலோ அல்லது தனது செல்வாக்கைப் பயன்படுத்தியோ அவர்கள் அந்த வெற்றியை பெற்றிருப்பார்கள். அதையே கண்ணதாசன் அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார்.</p>
<h2><strong>பணம் இல்லாவிட்டால் சொந்தமும் துன்பம்:</strong></h2>
<p>இதே பாடலின் பல்லவியில்,</p>
<p><strong>"பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை..</strong></p>
<p><strong>மனமிருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை..</strong></p>
<p><strong>பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்..</strong></p>
<p><strong>பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்.."</strong></p>
<p>என்று எழுதியிருப்பார்.</p>
<p>இந்த வரிகளையும் நமது வாழ்க்கையுடன் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். அடுத்தவருக்கு உதவ வேண்டும், நம்மால் முடிந்த உதவிகளை இயலாதவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்கலாம். ஆனால், அதைச் செய்வதற்கு தேவையான பணம் நம்மிடம் இல்லாமல் இருக்கும்.</p>
<p>ஆனால், போதுமான அளவிற்கு பணம் உள்ள மனிதர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். மேலும், போதுமான அளவு செல்வம் இல்லாதவர்களை உறவினர்களே உதாசீனப்படுத்துவார்கள் என்பதையும், அதுவே நம்மிடம் போதுமான அளவு பணம் இருந்தால் உறவினர்கள் போல பலரும் உரிமையுடன் பழகுவார்கள் என்பதையும் கூறியிருப்பார். மேலே உள்ள வரிகளில் மனிதர்களின் குணத்தை மிக அழகாக கண்ணதாசன் எடுத்துக் காட்டியிருப்பார்.</p>
<h2><strong>காதல் – திருமணம் – மரணம்:</strong></h2>
<p>அதற்கு அடுத்த பல்லவியில்,</p>
<p><strong>"பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை..</strong></p>
<p><strong>காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை..</strong></p>
<p><strong>மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை..</strong></p>
<p><strong>சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை.."</strong></p>
<p>என்று எழுதியிருப்பார்.</p>
<p>இந்த வரிகளும் நமது வாழ்விற்கும், நமது மனதிற்கும் நெருக்கமாக அமைந்திருக்கும். பதின்ம வயதை கடந்த அனைவரும் காதலிப்பதில்லை. இன்றைய சூழலில், பெரும்பாலோனார் காதலித்தாலும் அந்த காதல் திருமணத்தில் முடிவதில்லை என்றும், பெற்றோர்கள் நடத்தி வைத்தாலும் அல்லது காதல் திருமணங்களாக இருந்தாலும் அந்த மணமக்கள் அனைவருமே சேர்ந்து வாழ்ந்துவிடுவதில்லை என்றும், சந்தர்ப்ப சூழலால் பிரியும் சூழல் ஏற்பட்டு விடுகிறது என்றும், இறுதி வரை சேர்ந்து வாழும் மணமக்கள் அனைவருமே சாவிலும் ஒன்றாக இருக்கப்போவதில்லை என்பதையும் தனது வார்த்தைகளால் கண்ணதாசன் நமக்கு உணர்த்தியிருப்பார்.</p>
<p>அதேபோல, அடுத்த பல்லவியில்</p>
<p><strong>"கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு..</strong></p>
<p><strong>அவன் காணுகின்றன கனவினிலே வருவதெல்லாம் உறவு..</strong></p>
<p><strong>அவன் கனவில் அவள் வருவாள்..</strong></p>
<p><strong>அவனைப் பார்த்து சிரிப்பாள்..</strong></p>
<p><strong>அவள் கனவில் யார் வருவாள்..?</strong></p>
<p><strong>யாரைப் பார்த்து அணைப்பாள்..?"</strong></p>
<p>என்று எழுதியிருப்பார்.</p>
<p>கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கும் மனிதனுக்கு, அவனது இலக்குகள் அனைத்தும் கனவாகவே போய்விடும் என்பதையும், எந்த பெண்ணையோ அவன் நினைத்து உருகிக் கொண்டிருக்க, அந்த பெண் யாரை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறாளோ? என்று இளைஞர்களின் வாழ்க்கையும், தவிப்பையும் எழுதியிருப்பார்.</p>
<p>கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் வரிகளுக்கு சந்திரபாபு தனது அருமையான நடிப்பாலும், நடனத்தாலும், குரலாலும் உயிர் கொடுத்திருப்பார். 1962ம் ஆண்டு வெளியான அன்னை படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது. ப்ளாக்பஸ்டர் படமான இந்த படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் இன்றளவும் யூ டியூபில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கலாம்.</p>

Source link

மிஸ் திருநங்கை அழகி போட்டி… முதல் பரிசை தட்டிச்சென்ற சென்னையைச் சேர்ந்த ஷாம்சி


<p>விழுப்புரத்தில் திருங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் திருநங்கை அழகி போட்டி நடைபெற்றது. விதவிதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்திய திருநங்கைகள். இந்த ஆண்டின் மிஸ் திருநங்கையாக சென்னையைச் சேர்ந்த ஷாம்சி தேர்வு.</p>
<h2>மகாபாரத போர்&nbsp;</h2>
<p>மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண வரலாற்றை நினைவுக் கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.</p>
<p>அதன்படி இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதியும், அதனைத்தொடர்ந்து வரும் 24ஆம் தேதி கூத்தாண்டவர் தேரோட்டமும், திருநங்கைகள் தாலி துறந்து கைம்பெண் கோலம் ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.&nbsp;</p>
<p>வரலாற்று சிறப்புமிக்க இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா, கர்நாடகா, டில்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இப்படி விழுப்புரத்தில் குவிந்துள்ள திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை திருநங்கை நாயக்குகள் சார்பில் திருநங்கைகள் கலை விழா மற்றும் மிஸ் திருநங்கை – 2024 என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான அழகி போட்டி இன்று (21ஆம் தேதி) இரவு நடைபெற்றது.</p>
<h2>மிஸ் திருநங்கை அழகிப் போட்டி&nbsp;</h2>
<p>இவ்விழாவில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஏராளாமான திருங்கைகள் கலந்து கொண்டு பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப நடமாடியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.&nbsp;</p>
<p>இதன்பின்னர் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான உடைகளை அணிந்து இசைக்கு ஏற்றபடி நளினத்துடன் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.</p>
<h2>முதல் பரிசை தட்டிச்சென்ற சென்னை திருநங்கை&nbsp;</h2>
<p>பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் முதலிடம் பிடித்து இந்த ஆண்டிற்கான மிஸ் திருநங்கையாக சென்னையைச் சேர்ந்த ஷாம்சி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். 2ம் இடம் புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவப் படிப்பு படித்து வரும் திருநங்கை வர்ஷா மற்றும் 3ம் இடம் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபப்ரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.</p>
<p>இவ்விழாவில் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த், தீபக், நடிகைகள் அம்பிகா, தீபா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.</p>

Source link

வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏன்..? தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம்..!


தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ Voter Turnout’ செயலியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கெடுக்கப்பட்ட நிலையில் சில குளறுபடிகள் நடைபெற்றது. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள், இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது. 
தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தகவல் வர தாமதம் ஆகும். இதன் காரணமாகவே செயலி மூலமாக ஊடகங்களுக்கு அப்டேட் செய்தோம்.” என தெரிவித்தார். 
மேலும் சில கேள்விகளும், பதில்களும்.. 
மாநில எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே சோதனை: 
மாநில எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே இனி பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..? 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து எந்த தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து வரவில்லை. 
பெயர் நீக்கம் குறித்து அக்டோபரிலேயே தகவல்: 
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து அக்டோபரிலேயே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது. வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக case by case விசாரணை நடத்த வேண்டும். கடந்த 1996ல் தரப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடியாகும். புதிய அட்டைதான் தேவையென்று இல்லை. வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாராவாரம் அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும். வாக்காளர் பட்டியலை பெயரை சேர்க்க, சரிபார்க்க பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாக்காளர் நீண்டகாலமாக அவரது முகவரியில் இல்லாவிட்டால் பட்டியலில் பெயர் இல்லாமல் போகலாம். 
என விளக்கம் அளித்தார். 
கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது. அதில், தமிழ்நாடு முழுவதும் 69.72 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
மாவட்டங்கள் வாரியாக பதிவான வாக்கு சதவிகிதம் பின்வருமாறு:

திருவள்ளூர் – 68.59%
வடசென்னை 60.11%
தென்சென்னை – 54.17%
ஸ்ரீபெரும்புதூர் – 60.25%
காஞ்சிபுரம் – 71.68%
அரக்கோணம் – 74.19%
மத்திய சென்னை – 53.96%
வேலூர் – 73.53%
கிருஷ்ணகிரி – 71.50%
தருமபுரி – 81.20%
திருவண்ணாமலை – 74.24%
ஆரணி – 75.76%
விழுப்புரம் – 76.52%
கள்ளக்குறிச்சி – 79.21%
சேலம் – 78.16%
நாமக்கல் – 78.21%
ஈரோடு – 70.59%
திருப்பூர் – 70.62%
நீலகிரி – 70.95%
கோவை – 64.89%
பொள்ளாச்சி – 70.41%
திண்டுக்கல் – 71.14%
கரூர் – 78.70%
திருச்சி – 67.51%
பெரம்பலூர் – 77.43%
கடலூர் – 72.57%
சிதம்பரம் – 76.37%
மயிலாடுதுறை – 70.09%
நாகை – 71.94%
தஞ்சை – 68.27%
சிவகங்கை – 64.26%
மதுரை – 62.04%
தேனி – 69.84%
விருதுநகர் – 70.22%
ராமநாதபுரம் – 68.19%
தூத்துக்குடி – 66.88%
தென்காசி – 67.65%
நெல்லை – 64.10%
கன்னியாகுமரி – 65.44%

 

மேலும் காண

Source link

latest gold silver rate today april 2 2024 know gold price your city


தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 54,760-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,845  விற்பனை செய்யப்படுகிறது. 
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,520 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,315 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.89.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000 க்கு விற்பனையாகிறது.
கோயம்புத்தூர்
“தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,315 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,845  ஆகவும் விற்பனையாகிறது.
மதுரை 
மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,315 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,845  ஆகவும் விற்பனையாகிறது.
திருச்சி
திருச்சியில் (Gold Rate In Trichy ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,315 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,845  ஆகவும் விற்பனையாகிறது.
வேலூர் 
வேலூரில் (Gold Rate In Vellore) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,315 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,845  ஆகவும் விற்பனையாகிறது.
நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
மும்பை
மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,424 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,805 ஆகவும் விற்பனையாகிறது.
புது டெல்லி
புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.7,439 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,821 ஆகவும் விற்பனையாகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,424 கவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,805 ஆகவும் விற்பனையாகிறது.
ஐதராபாத்
ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,424 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,805 ஆகவும் விற்பனையாகிறது.
அகமதாபாத்
அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,429 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,811 ஆகவும் விற்பனையாகிறது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,424 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,805 ஆகவும் விற்பனையாகிறது.
பெங்களூரு
பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,424 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,805 ஆகவும் விற்பனையாகிறது.
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,439 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,821 ஆகவும் விற்பனையாகிறது.
புனே
புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,424 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,805 ஆகவும் விற்பனையாகிறது.

Source link

மக்களவை தேர்தலை விடுங்க! இந்தியாவே உற்று நோக்கும் மற்றொரு தேர்தல் இதுதான்!


<p>இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜகவும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணியும் முனைப்பு காட்டி வருகிறது.</p>
<h2>இந்தியா உற்று பார்க்கும் அண்டை நாட்டு தேர்தல்:</h2>
<p>சொந்த நாட்டில் நடைபெறும் தேர்தலுக்கு இணையாக அண்டை நாட்டு தேர்தலையும் இந்திய மக்கள் உற்று கவனித்து வருகின்றனர். அது வேறும் எந்த நாடும் அல்ல, இந்தியாவுக்கு சமீப காலமாக குடைச்சல் தந்து வரும் மாலத்தீவுதான்.</p>
<p>இந்தியாவின் அண்டை நாடுகளில் முக்கியமான நாடாக இருப்பது மாலத்தீவு. இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அந்நாட்டுடன் இணக்கமான உறவை &nbsp;இந்தியா பேணி வருகிறது. இதனால், மாலத்தீவில் பல திட்டங்கள், இந்தியாவின் நிதியுதவியுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.</p>
<p>இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை பேணி வந்த அதிபர் முகமது சோலி, மாலத்தீவு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய – மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.</p>
<h2><strong>சீன ஆதரவு அதிபருக்கு செக் வைக்கப்படுமா?</strong></h2>
<p>இந்தியாவுக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்ட மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றினார். இதை தவிர, பல்வேறு விவகாரங்களில் இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது.</p>
<p>மாலத்தீவு நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் 93 உறுப்பினர்களை கொண்டது. இதற்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது அதிபரை தேர்வு செய்தவற்கான தேர்தல் அல்ல. மாலத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல்.</p>
<p>இந்த தேர்தலின் முடிவுகள் என்னவாக இருந்தாலும் முகமது முய்சுவே அதிபராக தொடர்வார். ஆனால், அதிபரின் கொள்களை திட்டங்களை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு தேவை. இந்த தேர்தல் முடிவுகளை வைத்தே அது அமையும்.</p>
<p>தற்போதைய அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் மைனாரிட்டி கூட்டணி அரசை நடத்தி வருகிறது. இந்திய ஆதரவாளராக பார்க்கப்படும் முன்னாள் அதிபர் முகமது சோலியின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி, நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்து வருகிறது. அக்கட்சிக்கு 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தனது கொள்கை முடிவுகளை அமல்படுத்த முய்சு முயற்சித்த போதிலும், அது இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகக் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.&nbsp;</p>
<p>&nbsp;</p>

Source link

IN PICS Actress Anju Kurian stuns in white saree check out for pictures

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சு குரியன்.இவர் பிரேமம், நேரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.தற்போது இவர் வெள்ளை நிறப்புடவை அணிந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.புன்னகைப்பூ அஞ்சு..இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 22 Apr 2024 10:53 PM (IST)

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண

Source link

Tamilnadu school education department, action will be taken if special classes are held in schools during the summer vacation | Special Classes: கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை பாயும்


கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் பிற வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கமாகி உள்ளது. கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதாலும், விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், “முதல்வர் தனிப்பிரிவில் 14417-ல் பெறப்பட்ட புகார் மனுவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது.
இப்புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும், மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக்கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கூறப்பட்ட ஆணையை தவறாது கடைபிடிக்கவேண்டும் என்றும், தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link

TN Weather Update: 28-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கக்கூடும்.. 13 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..


<p>தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை, தென் தமிழகத்தில்&nbsp; ஓரிரு&nbsp; இடங்களில் லேசான மழை&nbsp; பெய்யக்கூடும்.&nbsp; வட தமிழகம், புதுவை&nbsp; மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;</p>
<h2>அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய&nbsp; முன்னறிவிப்பு:</h2>
<p>அதிகபட்ச&nbsp;&nbsp; வெப்பநிலை&nbsp; தமிழக&nbsp; உள்&nbsp; மாவட்டங்களின்&nbsp; ஒருசில&nbsp; இடங்களில்&nbsp; இயல்பை விட 2&deg; &ndash; 3&deg; செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச&nbsp; வெப்பநிலையில்&nbsp; பெரிய&nbsp; மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p>
<p>அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்&nbsp; மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39&deg;&ndash;41&deg; செல்சியஸ், இதர&nbsp; தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள்,&nbsp; புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34&deg;&ndash;38&deg; செல்சியஸ் இருக்கக்கூடும்.</p>
<p><strong>ஈரப்பதம்:</strong></p>
<p>காற்றின் ஈரப்பதம் தமிழக உள்&nbsp; மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்&nbsp; பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும்&nbsp; இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது&nbsp; ஓரிரு இடங்களில்&nbsp; அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வட&nbsp; தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு&nbsp; இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான&nbsp;&nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
<p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்&nbsp; இருக்கக்கூடும்.</p>
<h2>அதிகபட்ச வெப்பநிலை :</h2>
<p>அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.2&deg; செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5&deg; செல்சியஸ், சேலத்தில் 41.0&deg; செல்சியஸ், வேலூரில் 40.8&deg; செல்சியஸ்,&nbsp; திருச்சியில் 40.6&deg; செல்சியஸ்,&nbsp; மதுரை விமானநிலையம் &amp; திருப்பத்தூரில் 40.2&deg; செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 40.0&deg; செல்சியஸ் பதிவாகியுள்ளது.</p>
<p>தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை&nbsp; மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35&deg; &ndash; 39&deg; செல்சியஸ்&nbsp;&nbsp;&nbsp; மற்றும் மலைப் பகுதிகளில் 24&deg; &ndash;30&deg;&nbsp; செல்சியஸ்&nbsp; பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.8&deg; செல்சியஸ்&nbsp; மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4&deg; செல்சியஸ்&nbsp;&nbsp; பதிவாகியுள்ளது.</p>
<h2>கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):</h2>
<p>திற்பரப்பு (கன்னியாகுமரி) 4, தாளவாடி (ஈரோடு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா&nbsp; 2, சோலையார் (கோயம்புத்தூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.</p>
<p>&nbsp;</p>

Source link

Special classes should not be conducted during summer holidays Dry Weather Till 28th Todays Headlines | Todays Headlines:கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது; 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்


Lok Sabha Election 2024: வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏன்..? தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம்..!
“ Voter Turnout’ செயலியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கெடுக்கப்பட்ட நிலையில் சில குளறுபடிகள் நடைபெற்றது. செயலியில் ஒரு சில வாக்குச்சாவடி அலுவலர்களும் மட்டுமே அப்டேட் செய்தார்கள், இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது என்று சத்ய பிரதா சாஹூ விளக்கம் அளித்தார். மேலும் படிக்க
Doordarshan Logo : “காவி தியாகத்தின் வண்ணம்.. தூர்தர்ஷன் லோகோவை மாற்றுவது தவறில்லையே” – தமிழிசை சௌந்தராஜன்..
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதி, அதன் முதன்மையான செய்தி சேனலான டி.டியின்  புதிய லோகோவை  சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றி வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழிசை செளந்தரராஜன் காவி என்பது தியாகத்தின் வண்ணம் என முதலமைச்சருக்கு பதில அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
Special Classes: கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை பாயும் – பள்ளிக்கல்வித்துறை
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை  சிறப்பு வகுப்புகளுக்கு வர சொல்லி மாணவர்களுக்கு அழுத்தம் தர கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க
தேனி, கம்பம் : புதுப்பட்டி சுற்றுலா வாகனம் கவிழ்ந்து நடந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம்
திருப்பூரில் கம்பெனி ஒன்றில் பணியாற்றக்கூடிய நபர்கள் சிலர் தேனி மாவட்டம் இடுக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது சாலையை கடக்க முயன்ற பெண்ணின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகன ஓட்டுநர் வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் படிக்க
TN Weather Update: 28-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கக்கூடும்.. 13 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..
இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை, தென் தமிழகத்தில்  ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 

மேலும் காண

Source link

Summer Holidays peoples visit tourist place like kodaikanal ooty know details here | Summer Holidays: தொடங்கிய கோடை விடுமுறை! சுற்றுலா தளங்களில் குவியும் மக்கள்


தமிழ்நாட்டில் எப்போதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கோடை காலத்தில் விடுமுறை விடப்படுவது வழக்கம். பள்ளிகளை பொறுத்தவரையில் 12,11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்கு இறுதியாண்டு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டது. அதேபோல, 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கும் இன்னும் சில தினங்களில் தேர்வுகள் நிறைவு பெற்று, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கல்லூரிகளிலும் சில துறைகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நிறைவு பெற்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே மாதம் வெயில் மற்ற மாதங்களை காட்டிலும் மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே, தமி்ழ்நாட்டில் பள்ளிகளுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காலம் தொடங்கி விட்டதால் பல குடும்பங்களும் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல தொடங்கி வருகின்றனர்.
தயார் நிலையில் சுற்றுலா தளங்கள்:
குறிப்பாக, தொடர் விடுமுறை வந்துவிட்டாலே குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கி விடுவார்கள். குழந்தைகளுக்கு விடுமுறை தொடங்கி விட்டதால் பலரும் கோடைவாச ஸ்தலங்களுக்கு செல்லத்  தொடங்கி வருகின்றனர். அதற்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவும், பேருந்து பயணச்சீட்டு முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வியாபாரிகள் உற்சாகம்:
இனி வரும் ஒரு மாத காலம் முழுவதும் கோடை விடுமுறை காலம் என்பதால், அந்த பகுதியில் வசிக்கும் வியாபாரிகளும், விடுதி உரிமையாளர்களும் குஷியடைந்துள்ளனர். இதனால், அவர்களது வியாபாரம் வெகு சிறப்பாக நடைபெறும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். அதேசமயம், அடுத்த ஒரு மாதத்திற்கு சுற்றுலா பயணிகள் சுற்றுலா ஸ்தலங்களில் குவிவார்கள் என்பதால் காவல்துறையினர் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காததை உறுதிப்படுத்த பாதுகாப்பு ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாததையும் உறுதி செய்யவும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் வார இறுதி நாட்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெப்பத்தை தணிக்கும் குளிர் பிரதேசங்கள் மட்டுமின்றி கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளுக்கும் மக்கள் படையெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியும் பகுதிகளில் சுகாதார பிரச்சினை ஏற்படாதவாறும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர். கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களும் தங்களது வருவாய் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மேலும், இன்னும் சிலர் தங்களது குடும்பங்களுடன் ஆன்மீக சுற்றுலாவிற்கு திட்டமிட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோயில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அந்தந்த கோயில் நிர்வாகங்களும் அதற்கு தயாராகி வருகின்றனர்.
மேலும் படிக்க: ஜில்லுன்னு ஒரு டம்ளர் மண்பானை தண்ணீர் குடிக்க பைப் வைத்த பானையை வாங்குவோமா!!!
மேலும் படிக்க: 30 ஆண்டுகளாக மக்களின் தாகம் தீர்க்கும் மனிதர்; தஞ்சை ஒப்பந்தக்காரருக்கு குவியும் பாராட்டுக்கள்

மேலும் காண

Source link

Repolling has started in 11 polling stations affected by violence in Inner Manipur constituency lok sabha election 2024


மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி நடந்த தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதை அடுத்து மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

#WATCH | Manipur: Re-polling in 11 polling stations of I-Inner Manipur Parliamentary constituency being held today. Visuals from a polling station in Moirangkampu Sajeb of Imphal East as people form queues to cast their vote. #LokSabhaElections2024 pic.twitter.com/jqAu0isiPt
— ANI (@ANI) April 22, 2024

முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு நடைபெற்று முடிந்தது. முக்கியமாக கலவர பூமியாக மாறியுள்ள மணிப்பூரிலும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதாவது, மணிப்பூரில் மொத்தம் 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில், இன்னர் மணிப்பூர் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஆனால், அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

#WATCH | Manipur: Re-polling in 11 polling stations of I-Inner Manipur Parliamentary constituency being held today. Visuals from Thongju in Imphal East. #LokSabhaElections2024 pic.twitter.com/GviHcnP29F
— ANI (@ANI) April 22, 2024

கடந்த மே மாதம் 3 ஆம் தேதியில் இருந்து மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 11 மாதங்களாக அங்கும் இங்குமாய் வன்முறை சம்பவங்கள் வெடித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வாக்குப்பதிவு நடக்கும் நாளில் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொய்ராங் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக 11 வாக்குச்சாவடிகளில் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 11 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link

Deadpool & Wolverine: வாவ் பிரமாதம்! கலக்கலான டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெயிலர் ரிலீஸ் – குஷியில் மார்வெல் ரசிகர்கள்


<p>ஹாலிவுட்டில் எப்போதும் சூப்பர் ஹீரோக்கள் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் படங்களை தயாரிப்பதில் மார்வெல் மற்றும் டி.சி. நிறுவனங்களுக்கு இணை அவர்கள் மட்டுமே. குறிப்பாக, மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோக்களுக்கு என்று உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். &nbsp;கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், தோர், ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.</p>
<h2><strong>எக்ஸ் மேன் – டெட்பூல்:</strong></h2>
<p>இதில், வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, எக்ஸ் மேன் எனப்படும் எனப்படும் வோல்வரின் கதாபாத்திரத்திற்கு தமிழ்நாட்டிலே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எக்ஸ் மேன் வரிசை படங்கள் உலகெங்கிலும் கோடிக்கணக்கில் வசூலை வாரிக்குவித்தவை என்பதும் குறிப்பிடத்தக்து.</p>
<p>இந்த சூழலில், வோல்வரின் கதாபாத்திரம் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்தை இணைத்து டெட்பூல் அண்ட் வோல்வரின் படம் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.</p>
<h2><strong>மிரட்டும் ட்ரெயிலர் ரிலீஸ்:</strong></h2>
<p>அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு பிறகு ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தை தவிர மற்ற படங்கள் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி 3-யும் ரசிகர்களை கவர்ந்தது, இந்த சூழலில், உலகெங்கிலும் உள்ள மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டெட்பூல் அண்ட் வோல்வெரின் படம் வரும் ஜூலை 26ம் தேதி வெளியாக உள்ளது.</p>
<p>இந்த படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. லோகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹியூக் ஜேக்மேனே இதிலும் வோல்வரினாக நடித்துள்ளார். டெட்பூலாக டேட் வில்சன் கதாபாத்திரத்தில் நடித்து வரும்&nbsp; ரியான் ரெனால்ட்சே இதிலும் டெட்பூல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள ட்ரெயிலரில் தொடக்கத்தில் மாறி, மாறி சண்டையிட்டுக் கொள்ளும் டெட்பூல் மற்றும் வோல்வரின் ஒரு கட்டத்தில் ஒன்றாக இணைந்து சக்திவாய்ந்த வில்லியை எதிர்கொள்கின்றனர்.</p>
<h2><strong>டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கேமியோவா?</strong></h2>
<p>இதில் ஒரு காட்சியில் இருவரும் இணைந்து ஒரு போர்ட்டல் உள்ளே செல்கின்றனர். வழக்கமாக, மார்வெல் படங்களில் இந்த போர்ட்டல் டாக்டர் ஸ்ட்ரேஞ்சால் மட்டுமே உருவாக்கப்படும். இதனால், இந்த படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வருகிறாரா? என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.</p>
<p>2017ம் ஆண்டு வந்த லோகன் படத்தில் வயதான லோகனாக எக்ஸ்மேன் இறப்பது போல படம் முடிந்திருக்கும். இந்த சூழலில், மீண்டும் திரையில் எக்ஸ் மேனாக வோல்வரினை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். டெட்பூல் கதாபாத்திரம் வழக்கம்போல தன்னுடைய நகைச்சுவை மற்றும் ஆக்&zwnj;ஷனுடன் கலக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஷாவ்ன் லேவி இயக்கியுள்ளார்.</p>
<p>வழக்கமாக மார்வெல் படங்கள் தமிழிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றவை என்பதால், இந்த படமும் தமிழில் வெளியாக உள்ளது.</p>
<p><iframe src="//www.youtube.com/embed/73_1biulkYk?si=gCzqdSQEYtEUc4ki" width="560" height="314" allowfullscreen="allowfullscreen"></iframe></p>

Source link

திருமணம் முடிந்த கையோடு ரத்த தானம் செய்த தம்பதிகள்… விழுப்புரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்


<p>&nbsp;</p>
<p>விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அப்பம்பட்டு என்ற பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் , திருமணம் நடந்த கையோடு ரத்த தானம் செய்த புதுமண தம்பதிகள். இச்செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் அமைப்பின் சார்பில்,கேசவ பிரகாஷ் சோனியா தம்பதியின் திருமணம் நடக்கும் தனியார் திருமண மாபெரும் ரத்ததானம் முகாம் மண்டபத்திலேயே நடைபெற்றது. ரத்ததான முகாமிற்கு என திருமண மண்டபத்திலே தனியாக இடம் ஒதுக்கி இரத்ததான முகாம் நட்த்தப்பட்டது.</p>
<p>இந்நிகழ்ச்சியில் செஞ்சி எடுத்த நரசிங்க ராயன்பேட்டை ஊராட்சியை சேர்ந்த புதுமண தம்பதிகள் கேசவ பிரகாஷ் -சோனியா தம்பதியினர்,திருமணம் முடிந்த கையோடு ரத்த தானம் செய்தனர்.</p>
<p>&nbsp;இவர்கள்தான் ( கேசவ பிரகாஷ்- சோனியா) தம்பதியினர் விழுப்புரம் மாவட்டத்திலேயே முதல்முறையாக திருமணம் முடிந்த கையோடு ரத்த தானம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .</p>
<p>தம்பதிகள் ரத்ததானம் செய்வது பார்த்து, அவரது நண்பர்கள், உறவினர்கள் என சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் ரத்ததானம் அளிக்க முன்வந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ரத்ததானம் அளித்த அனைவருக்கும் சான்றிதழனை மருத்துவர் வழங்கினார்.</p>
<p>திருமணம்&nbsp; நடைபெற்ற அன்றே ரத்ததானம் அளித்த புதுமண தம்பதிகளின் இச்செயல் பொதுமக்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவருமே ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.</p>

Source link

Cyber crimes on the rise in Villupuram Cybercrime police alert villupuram advertisements | விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் ஏமாறவேண்டாம்


விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் சைபர்கிரைம் அதிகரித்து வருவதால் சைபர்கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 
 விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலைய காவல்துறையினர் Cyber Crime  குற்றங்கள் பெருகி வரும் வேளையில் பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
சைபர்கிரைம் விழிப்புணர்வு 

அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit Card/Debit Card Details/OTP/CVV/Expiry Date எண்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.
Online மூலம் Part Time Job என வரும் போலி Link விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
Fake Loan App இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம். உங்கள் கைபேசி Hack செய்யப்பட்டு விடும் ஜாக்கிரதை,
Naptol, Meesho பரிசு விழுந்துள்ளதாக வரும் தபால் கூப்பன்களை பார்த்து ஏமாறாதீர்கள்.
OLX போன்ற இணையதளத்தை பயன்படுத்தி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் விற்பதற்காக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.
Telegram, Facebook, Instagram போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனங்களை வாங்க வேண்டாம்.
Army Vehicles Purchase 6163 அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம் இது முற்றிலும் Fake ஆனது.
Unknown Link, Message, Call, Video Call, Sexy Video Call எவ்வித பதிலும் அளிக்காமல் விட்டுவிடுங்கள்.
Any Desk Quick Support CL Remote Access Appகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
Fake Investment App பிரபல முதலீட்டு நிறுவனத்தின் பெயரை கூறி பொய்யான முதலீடு செய்ய தொலைபேசி மூலம் அழைத்து பணம் செலுத்தக்கூறினால் முதலீடு செய்து ஏமாறாதீர்கள்.
அறிமுகம் இல்லாத நபர் Whatsapp or Telegram மூலம் அனுப்பும் QR Code Scan செய்யாதீர். இது முற்றிலும் மோசடியானது.
இலவச WiFi வசதிகளை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை தவிர்த்துவிடுங்கள்.
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி KYC Biometric System Update என கூறுவதை நம்பி ஏமாறவேண்டாம்.
Helicopter Ticket Booking Q வேண்டாம்.
Postal Payment Bank KYC Update வேண்டாம்.
Credit Card Bonus Point Redeem செய்துதருவதாக கூறி போன் வந்தால் அதை நம்பி ஏமாற வேண்டாம்.
True Caller App Gpay, Phone pe பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இது உங்கள் போனை Hack செய்துவிடும்.
தேவையற்ற App-களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். UnUsed App களை உடனடியாக செய்து விடுங்கள்.
உங்களது மொபைலில் Date of Birth, Cell Phone Number போன்ற Easily Access பண்ண கூடிய Password-ஆக வைக்க வேண்டாம்.
உங்களது Cellphone ல் Profile DP-இல் உங்கள் Photo வைக்க வேண்டாம். உங்கள் Photo morphing செய்து பணம் பறிக்கக்கூடும்.
Instagram IMO போன்ற சமூக வளைதளங்களை பயன்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பறிமாற்றம் செய்ய கூடாது. Facebook, Whatsapp போன்ற சமூகவளைதளங்கள் மூலம் உங்களிடம் தெரிந்த நபர்களின் அக்கவுண்ட் எண்ணில் பண உதவி கேட்டு வரும் செய்திகளை கேட்டு நம்பி பண உதவி செய்து ஏமாற வேண்டாம்.
ATM card பயன்படுத்தும்போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ATM Card PIN நம்பர் பணம் எடுத்து தருமாறு கொடுக்கக்கூடாது. ATM Crad பணம் பரிவர்த்தனை முடிந்தவுடன் Cancel Button ஐ அழுத்த வேண்டும். Password, OTP -ஐ யாரிடமும் பகிரவேண்டாம்.
Online மூலம் வேலைவாய்ப்பு நிறுவனங்களை நம்பி முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
Cryptocurrency என வரும் போலி Link விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
Google Search தளத்தில் Customer Care மற்றும் Government Website போல 12 ஆயிரம் போலியான வெப்சைட்கள் வெளியிடப்பட்டுள்ளது அதை தவறுதலாக பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.
EB Bill செலுத்துமாறு Unknow Number மூலம் வரும் போலி Link மூலம் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
Email, Watsapp Massenger Computer software பதிவிறக்கம் செய்ய வேண்டாம் அது Random Wires ஆக மாறி உங்கள் சிஸ்டம் செயல் இழக்க செய்ய வாய்ப்புள்ளது.
Artificial Intelligence போல Whatsapp messenger-யை பயன்படுத்தி Video Call மூலம் பேசி பண உதவி கேட்கலாம் அது முற்றிலும் போலியானது ஏமாற வேண்டாம்.
Multimedia Marketing என வரும் போலி Link மூலம் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
Merchant Fraud மொத்த வியாபாரத்திற்கு குறைந்த விலையில் புளி, வெங்காயம், பூண்டு கிடைக்கும் என வரும் போலி Link மூலம் நம்பி பணம் செலுத்த வேண்டாம்.

மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. இணையதளம் மூலம் பண இழப்பு ஏற்படும் பட்சத்தில் 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண

Source link

திருவண்ணாமலை: தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கிரிவலப்பாதைக்கு இலவச பேருந்து வசதி


<p>திருவண்ணாமலை&nbsp; அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் மற்றும் சகோதர போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 23.04.2024 மற்றும் 24.04.2024 ஆகிய தினங்களில் 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து 2500 சிறப்பு பேருந்துகள் மூலம் 5326 நடைகள் இயக்கப்படவுள்ளது. விவரம் பின்வருமாறு:</p>
<p>&nbsp; &nbsp;</p>
<table style="border-collapse: collapse; width: 92.8705%; height: 198px;" border="1">
<tbody>
<tr>
<td style="width: 6.87927%;">வ.எண்</td>
<td style="width: 39.5246%;">தற்காலிக பேருந்து நிலையம்</td>
<td style="width: 46.4665%;">மார்க்கம்</td>
</tr>
<tr style="height: 22px;">
<td style="width: 6.87927%; height: 22px;">1</td>
<td style="width: 39.5246%; height: 22px;">காஞ்சி ரோடு</td>
<td style="width: 46.4665%; height: 22px;">டான் பாஸ்கோ பள்ளி- காஞ்சி , மேல்சோழங்குப்பம்</td>
</tr>
<tr style="height: 22px;">
<td style="width: 6.87927%; height: 22px;">2</td>
<td style="width: 39.5246%; height: 22px;">வேலூர் ரோடு-anna arch&nbsp;</td>
<td style="width: 46.4665%; height: 22px;">வேலூர், போளூர் ,ஆரணி, ஆற்காடு,செய்யாறு</td>
</tr>
<tr style="height: 22px;">
<td style="width: 6.87927%; height: 22px;">3</td>
<td style="width: 39.5246%; height: 22px;">அவலூர்பேட்டை ரோடு</td>
<td style="width: 46.4665%; height: 22px;">srgds பள்ளி எதிரில்- சேத்துப்பட்டு,வந்தவாசி, காஞ்சிபுரம்</td>
</tr>
<tr style="height: 22px;">
<td style="width: 6.87927%; height: 22px;">4</td>
<td style="width: 39.5246%; height: 22px;">திண்டிவனம் ரோடு</td>
<td style="width: 46.4665%; height: 22px;">ஆறுமுகனார் நகர்- கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம்</td>
</tr>
<tr style="height: 22px;">
<td style="width: 6.87927%; height: 22px;">`5</td>
<td style="width: 39.5246%; height: 22px;">திண்டிவனம் ரோடு</td>
<td style="width: 46.4665%; height: 22px;">அன்பாலயா நகர் – செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி</td>
</tr>
<tr style="height: 22px;">
<td style="width: 6.87927%; height: 22px;">6</td>
<td style="width: 39.5246%; height: 22px;">வேட்டவலம் ரோடு&nbsp;</td>
<td style="width: 46.4665%; height: 22px;">சர்வேயர் நகர்- வேட்டவலம், விழுப்புரம்</td>
</tr>
<tr style="height: 22px;">
<td style="width: 6.87927%; height: 22px;">7</td>
<td style="width: 39.5246%; height: 22px;">திருக்கோயிலூர் ரோடு&nbsp;</td>
<td style="width: 46.4665%; height: 22px;">ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்- திருக்கோயிலூர் பண்ருட்டி,கடலூர்,சிதம்பரம், நாகப்பட்டினம்,<br />திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி</td>
</tr>
<tr style="height: 22px;">
<td style="width: 6.87927%; height: 22px;">8</td>
<td style="width: 39.5246%; height: 22px;">
<p>மணலூர்பேட்டை ரோடு</p>
</td>
<td style="width: 46.4665%; height: 22px;">
<p>செந்தமிழ் நகர்- கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை, மணலூர்பேட்டை</p>
</td>
</tr>
<tr style="height: 22px;">
<td style="width: 6.87927%; height: 22px;">9</td>
<td style="width: 39.5246%; height: 22px;">செங்கம் ரோடு&nbsp;</td>
<td style="width: 46.4665%; height: 22px;">அத்தியந்தல்- திருப்பத்தூர், சேலம் ,பெங்கர்,ஒசூர் ஈரோடு, கோயம்புத்தூர்</td>
</tr>
</tbody>
</table>
<p>இந்த தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதை அருகில் செல்ல கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு உதவும் வகையில் அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என பொது மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (வி) லிட் அவர்கள் தெரிவித்துள்ளார்.</p>

Source link

TVK Party: மக்களை நோக்கி நகருங்கள்: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய நிர்வாகிகள்..!


<h2 style="text-align: justify;">&nbsp;தமிழக வெற்றிக் கழகம்</h2>
<p style="text-align: justify;"><br />தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய், ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்த பிறகு 2026ம் ஆண்டு முதல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண போகிறார் என்றும் அவரின் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள அவர்களின் கட்சி அலுவுலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவிக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. &nbsp;&nbsp;</p>
<h2 style="text-align: justify;">&nbsp;உறுப்பினர் சேர்க்கை</h2>
<p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்வதற்கு தனி செயலியை விஜய் அறிமுகப்படுத்தினார். &nbsp; அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தனித்தனியாக பொறுப்பு கொடுக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்த நடிகர் விஜய் பல்வேறு திட்டங்களை நிர்வாகிகளுக்கு கூறியிருந்தார். &nbsp;அதேபோன்று இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.</p>
<h2 style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/4c76077f1de809b7d954b5fd7e634c8d1713775162139113_original.jpg" /><br />&nbsp;மக்களவைத் தேர்தல் அறிவிப்பு</h2>
<p style="text-align: justify;">&nbsp;இந்த மக்களவைத் தேர்தலில் விஜய் போட்டியிட போவதுமில்லை யாருக்கும் &nbsp;ஆதரவும் இல்லை என தெரிவித்து இருந்தார். &nbsp;அதன் ஒரு பகுதியாக, &nbsp;மக்களவைத் தேர்தலை முன்னிட்டு &nbsp; &nbsp;தமிழக வெற்றிக் கழகத்தின் &nbsp;உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட சில பணிகளை &nbsp;செய்யாமல் மௌனம் காத்து வந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிந்த நிலையில் தற்பொழுது , கட்சி நிர்வாகிகள்&nbsp;பல்வேறு நல திட்ட பணிகளில் &nbsp;கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில், &nbsp;இலவச சட்ட ஆலோசனை மையத்தை &nbsp;கொண்டு வர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தொகுதி தோறும், &nbsp;ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், &nbsp;பயிலகம் மற்றும் நூலகத்தை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>
<h2 style="text-align: justify;">&nbsp; கோடை காலத்தை முன்னிட்டு</h2>
<p style="text-align: justify;">கோடை காலத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் &nbsp;பல்வேறு தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் இலவச நீர் மற்றும் மோர் பந்தல் அமைப்பது வழக்கம். &nbsp;இது பல்வேறு முக்கிய கட்சிகளின் முக்கிய &nbsp;பணியாக கருதப்படுகிறது. அதேபோன்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் தற்போது நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்து துவங்கியுள்ளனர். அந்த வகையில் &nbsp;வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் கோடைக்கால வெப்பநிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் குளிர்ச்சியான பழங்கள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/7d0f9f11d774c605197459963f1d1d071713775188346113_original.jpg" /></p>
<p style="text-align: justify;">இதில் தெள்ளார் ஒன்றிய தலைவர் பரமசிவன், வந்தவாசி நகர தலைவர் &nbsp;அருண் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, நகர செயலாளர் ராஜேஷ் &nbsp;நகர பொருளாளர் கோகுல் ஆனந்த், நகரத் துணைத் தலைவர் கெவின் நகர துணை செயலாளர் நைனா நகர பொறுப்பாளர் சோமசுந்தரம் ஒன்றிய பொறுப்பாளர் வினோத் ஒன்றிய தலைவர் ஷபி, ஒன்றிய &nbsp;பொருளாளர் திரு மாஸ், ஒன்றிய துணை பொறுப்பாளர் சகாதேவன், நகர நிர்வாகி சந்தோஷ் &nbsp;செந்தில், சுறா கோகுல், பிள்ளையார், பாரத், தெள்ளார் ஒன்றிய நிர்வாகிகள் யோகேஷ் அஸ்வின் மாதேஸ் பரமேஸ் போன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். பொறுத்திருந்து பார்ப்போம் எந்த அளவிற்கு இது போன்ற திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்கிறது என்று.</p>

Source link

top news India today abp nadu morning top India news April 22 2024 know full details



நாளை சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலைக்கு 2-வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2வது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வெவ்வேறு நட்சத்திரங்களில் வரும். அப்படி சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தினம் எமலோகத்தில் நம்முடைய புண்ணியம் மற்றும் பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்திரகுப்தனை அவதரித்த தினம் என கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து நல்ல காரியங்கள் செய்தால் நம் தலைமுறை நற்பலன்களை பெறும். மேலும் படிக்க..

தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கு 25% மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் 2023-2024 கல்வியாண்டுக்கான இறுதி பருவத் தேர்வுகள் மீது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க..

விண்ணதிர்ந்த பக்தர்கள் கோஷம்.. மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டம் தொடங்கியது!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய வைபவமான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உள்ளூர் முதல் வெளிநாடு வரையிலான லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். இத்தகைய மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் படிக்க..

கலெக்‌ஷன் அமோகம் – கடந்த நிதியாண்டில் ரூ.19.58 லட்சம் கோடி நேரடி வரி வசூல் – 17.7% அதிகரிப்பு

கடந்த 2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் முந்தைய ஆண்டை காட்டிலும் 17.7 சதவிகிதம் அதிகம் ஆகும். வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மார்ச் 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.19.58 லட்சம் கோடியாக நேரடி வரியாக வசூலாகியுள்ளது. அதாவது இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் முந்தைய ஆண்டை காட்டிலும் 17.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது திருத்தப்பட்ட கணிப்புகளையும் விட அதிகமாக உள்ளது.  2024 நிதியாண்டில் வருமானம் மற்றும் கார்ப்பரேஷன் வரிகளின் நிகர வசூல், நேரடி வரிகளின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. மேலும் படிக்க..

“உங்க சொத்துக்களை பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்திருவாங்க” – பிரதமர் மோடி சர்ச்சை கருத்து!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக வாக்காளர்களை கொண்ட இந்தியாவில் மக்களவை தேர்தலானது 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளுப்போவது யார் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். அந்த வகையில், முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மேலும் படிக்க..

மேலும் காண

Source link

Maldives Parliamentary Elections: மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் புதிய ட்விஸ்ட்.. அதிபர் முய்சுவின் கட்சி 66 இடங்களில் வெற்றி..!


<p>&lsquo;மஜ்லிஸ்&rsquo; எனப்படும் 93 உறுப்பினர்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) 86 இடங்களில் 66 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.&nbsp;</p>
<h2><strong>மஜ்லிஸ் என்றால் என்ன..?&nbsp;</strong></h2>
<p>மக்கள் மஜ்லிஸ் என்பது மாலத்தீவின் ஒருசபையை கொண்ட சட்டமன்ற அமைப்பாகும். மாலத்தீவின் அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சட்டங்களை இயற்றவும், திருத்தவும் மஜ்லிஸுக்கு அதிகாரம் உள்ளது.</p>
<h2><strong>மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்:&nbsp;</strong></h2>
<p>மாலத்திவீன் 20வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, 93 தொகுதிகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில், கிட்டதட்ட 66 இடங்களில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தியது. இது நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
<p>கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றாலும், பிஎன்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் எட்டு இடங்கள் மட்டுமே இருந்தன.&nbsp;</p>
<p>இதையடுத்து, தற்போதைய &nbsp;தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த எம்.டி.பி.க்கு பெரும் அடியாக அமைந்ததுடன், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத முயிஸ்ஸூவின் அரசுக்கு பலம் அளிக்கிறது.</p>
<h2><strong>முகம்மது முய்சு:&nbsp;</strong></h2>
<p>இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, முகமது முய்சுவின் பிஎன்சி மற்றும் அதன் கூட்டணி &nbsp;கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, முய்சு விரும்பிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் எளிதாக கொண்டு வர முடியபில்லை. முய்சு எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், எதிர்க்கட்சிகளின் தலையீட்டால் அது முடக்கப்பட்டது. இந்தநிலையில், 66 இடங்களில் தற்போது முய்சுவின் வேட்பாளர்கள் வெற்றிபெற்ற சூழ்நிலையில், அவர் நினைத்த சட்டங்களை நிறைவேற்றி கொள்ளலாம்.&nbsp;</p>
<p>இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து, சீனாவுடன் நெருங்கி பழகி வந்தவர்தான் இந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்த வெற்றிக்கு பிறகு முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகளவில் அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>
<p>மாலத்தீவு 800 கிலோமீட்டர் தொலைவில் 1192 சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது. மொத்தம் 2,84,663 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று நடைபெற்ற தேர்தலில் 73 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.&nbsp;</p>
<h2><strong>இந்திய எதிர்ப்புக்கு ஆதரவா?</strong></h2>
<p>மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் கட்சியான பிஎன்சியின் மகத்தான வெற்றி, அதிபரின் பதவிக்கு ஆதரவாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்த காய் நகர்த்திய முய்சுவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்தியப் படைகள் தீவில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தெரிவித்திருந்தார். முய்சுவின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை.&nbsp;</p>
<p>தான் அதிபரான பிறகு இந்திய ராணுவம் தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று முய்சு கோரினார். தொடர்ந்து, இதுகுறித்து நாடாளுமன்ற தேர்தலில் முய்சு பிரச்சாரமும் செய்தார். அதன் தொடர்ச்சியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகும், சமீபத்தில் இந்தியாவை விமர்சித்து வந்த முய்சு, இந்தியா நெருங்கிய நண்பராக இருக்கும் என்று கூறி ஆச்சரியம் அளித்தார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தின் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பிஎன்சி உறுப்பினர் மரியம் ஷிவுனா உட்பட இரண்டு அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் .</p>

Source link