Author: Sanjuthra
-

தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை திடீர் சரிவு… வரைவு பட்டியலில் அதிர்ச்சி தகவல்…
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024-ன்படி தமிழ்நாட்டில் தற்போது 6,11,31,197 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் – 3,00,68,610, பெண்கள் – 3,10,54,571, மூன்றாம் பாலினத்தவர் – 8,016 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாடை ஒப்பிடும்போது ஒன்பது லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளதாக சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6,52,065 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இங்கு,…
-

இன்று முதல் கேஸ் சிலிண்டர் விலை உயர்கிறது
இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலையை ரூ.209 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் ரூ.1731.50 க்கு விற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. Oil marketing companies have increased the prices of commercial LPG gas cylinders. The rate…
-

ஆவின் நெய் விலை திடீரென உயர்வு… அதிர்ச்சி அளிக்கும் விலை பட்டியல்… பால் முகவர் சங்கம் கண்டனம்…
ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 100 ரூபாய் உயர்த்தி உள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமல் பால் மற்றும் நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களின் விற்பனை விலையை…
-

பொங்கலுக்கான சிறப்பு ரயில்களில் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்ல ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல்…
-

ரஷ்யா புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்… அரிய புகைப்படங்கள்…
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரயில் மூலமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று, சென்றுள்ளதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம், பியாங்யாங்கில் இருந்து, தனக்கென உள்ள பிரத்யேக ரயில் மூலமாக புறப்பட்டதாக, வடகொரிய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. அவருடன், வடகொரிய ராணுவத்தின் உயர் அதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சிஇன் மூத்த தலைவர்கள் உடன் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், யார் யார் சென்றுள்ளனர்…
-

வேன் மீது லாரி மோதி விபத்து! 7 பெண்கள் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓனான் குட்டை கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா முடிந்து அனைவரும் வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த…
-

மொராக்கோவில் நிலநடுக்கம்! 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி!
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000 க்கும் மேற்பட்டோராக அதிகரித்துள்ளது. வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு மொராக்கோ. கால்பந்து அணிக்கு பெயர் போனது, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரை கடலின் எல்லையோரம் அமைந்துள்ள இந்நாடு அரேபிய மற்றும் ஐரோப்பிய கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் முக்கிய நுழைவு வாயிலாக திகழ்கிறது. மொராக்கோவின் மராக்கேஷ் பகுதியில் இருந்து 75 கிமீ தூரத்தில் அட்லஸ் மலை தொடர் உள்ளது. இதனை ஒட்டிய…
-

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை 3-வது முறையாக அதிகரிப்பு
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்ட பாதை உயரம் மூன்றாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ மையம் தகவல் தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த வாரம் 2வது சுற்று பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. இதனிடையே இன்று ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி…
-

ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம்.
ஜி 20 அமைப்பில் இந்தியா பங்கேற்று உள்ள நிலையில் உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்க உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கான விரிவான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. ஜி-20 அமைப்பில் இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளும் வளர்ந்த நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச பொருளாதாரம், பருவநிலை மாற்றம், உள்ளிட்ட பிரச்சனைகள் சார்ந்த முக்கிய முடிவுகளை இந்த அமைப்பு எடுத்து வருகிறது. இவ்வாறே கௌரவமிக்க இந்த அமைப்பின் தலைமை…
-

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து காலமானார்.
இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அருகே பசுமலை கிராமத்தை சேர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. எஸ்.ஜே. சூர்யாவின் நெருங்கிய நண்பரான மாரிமுத்து வாலி படத்தில் முதன் முதலில் துணை நடிகராக தோன்றினார். இயக்குனர் மிஷ்கின் தனது யுத்தம் செய் திரைப்படத்தில் மாரிமுத்துவை முழு நடிகராக அறிமுகம் செய்தார். பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அண்மையில் கமல்ஹாசனின் இந்தியன்- 2…
-

விவசாயியை நோகடிக்கும் விலை நிர்ணயம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சுமார் 6 ஏக்கரில் ஒட்டு தக்காளி மற்றும் ஒட்டு கத்தரிக்காய் சாகுபடி செயதுள்ள விவசாயி ஒருவர், உரிய விலை கிடைக்காததால் மனம் வருந்தி, விவசாயத்தை விட்டு கூலி வேலைக்கு சென்று விடலாமா என யோசித்து வருவதாக கூறுகிறார். பொன்னேரியை அடுத்த தடம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து, அங்குள்ள விவசாய முறைகளை கற்று வந்து தனது நிலத்தில் பயிரிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இஸ்ரேல்…
-

திருச்சியில் 39 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஐயாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 39 வது நாளாக திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது, இதனை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடன் சார்ந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற காரணங்களை முன்வைத்து போராடி வருகின்றனர். ஏற்கனவே அரை…
-

திருப்பூரில் பயங்கரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய நான்கு பேரும் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு அங்கு மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரும் மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் ‘இங்கு ஏன் மது அருந்துகிறீர்கள்’ என்று கேட்ட செந்தில்குமார்…
-

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் ஸ்பெயின் நகரம்!
ஸ்பெயின் நாட்டில் ஒரே இரவில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள சாலைகளிலும், வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்பெயினின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள அல்கானார் மற்றும் டாரகோனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. ஏராளமான வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில் காவல் துறையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனிடையே பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-

இரண்டு மாணவர்களுக்கு கத்திக்குத்து! பிட் அடிக்காதே என்றதால் ஆத்திரம்!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த கீழமுடிமண்ணில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றபோது நயினார்புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் துண்டுச்சீட்டில் உள்ள விடைகளை பார்த்து தேர்வு எழுதியிருக்கிறார். இதனைக் கண்ட நிஷாந்த் , அமிர்தராஜ் ஆகிய இரு மாணவர்களும் ‘பார்த்து எழுதாதே’ ‘ஆசிரியரிடம் கூறிவிடுவோம் ‘ என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தேர்வு முடிந்து பள்ளிக்கு வெளியே வந்தபோது தான் தேர்வில்…
-

புற்று நோய்க்கான முதல் ஊசி மருந்தை இங்கிலாந்து உருவாக்கி சாதனை
உலகிலேயே முதன்முறையாக புற்றுநோய் சிகிச்சைக்கான ஊசி மருந்தை இங்கிலாந்து உருவாக்கியுள்ளது. அடிஸோலிசூமாப் எனப்படும் இந்த ஊசி மருந்தைச் செலுத்திய ஏழே நிமிடங்களில் இந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று இந்த மருந்தைக் கண்டறிந்த இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை எனப்படும் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தோலுக்கு அடியில் செலுத்தக்கூடிய இந்த ஊசி மருந்தால், புற்றுநோய்க்கான சிகிச்சை காலம் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊசி மூலம் புற்றுநோயாளிகளுக்கு விரைவாக…
-

டி20 இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள்… தொடரை கைப்பற்றி அபாரம்…
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது. இந்தியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 61 ரன்களை குவித்தார். திலக் வர்மா…
-

வேளச்சேரியில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு காட்சி…
சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேளச்சேரி முத்துகிருஷ்ணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். #WATCH | Chennai: Fire broke out in an apartment in Muthukrishnan Street, Velachery. Fire tenders are present at the spot. Further details are awaited. pic.twitter.com/sOwre761IA— ANI (@ANI)…
-

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி கொலை… அதிர்ச்சி
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் ஏவிஎம் செட் அருகே உள்ள அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் எட்டாவது நடைமேடை உள்ளது. இந்த நடைமேடை அருகே நேற்று இரவு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி மக்களோடு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார், அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு…
-

புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட அங்காடி தெரு பட நடிகை சிந்து காலமானார்…
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நடிகை அங்காடி தெரு சிந்து காலமானார். அவருக்கு வயது 42. இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அங்காடித் தெரு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து என்கிற கௌரி. இவர் சினிமாவிலும், சீரியலிலும் நடித்து வந்தார். நடிப்பது மட்டுமில்லாமல், சமூக சேவைகளில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவித்து வந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். அதே நேரத்தில், கொரோனா…
-

சட்டை காலரை பிடித்த போலீசாருக்கு தர்ம அடி கொடுத்த குடும்பம்… பரபரப்பு வீடியோ…
மகாராஷ்டிரவாவில் பொதுமக்கள் முன்னிலையில் சட்டை காலரை பிடித்த போலீஸ்காரரை ஒரு குடும்பமே சேர்ந்து தர்ம அடி கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில், டாக்டர் ஒருவரை ஒரு கும்பல் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் சென்றனர். அப்போது, பொதுமக்களின் முன்பு, ஒருவரின் சட்டை காலரை பிடித்து போலஸ்காரர் இழுத்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபரும், அவரது குடும்பத்தினரும், போலீஸ்காரரை சரமாரியாக தாக்கினர். மேலும்,…
-

அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு… கமலா ஹாரிஸ் சொன்ன தகவல்….
அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்தாலும் அமெரிக்காவில் வேலையில்லா திட்டாட்டம் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. கொரோனா காலத்திற்குப்பிறகு இது மேலும் அதிகரித்ததால், பல லட்சம் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பொறுப்பேற்ற பின்னர், வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தாங்கள் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து 13 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக துணை…
-

டி20 போட்டியில் இந்தியா அடுத்த தோல்வி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகின்றன. கயானாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வரமா 51 ரன்களை குவித்தார். இசான் கிசான் 27 ரன்களையும் ஹர்திக் பாண்டியா…
-

என்எல்சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? புரட்சி வெடிக்கும்! அன்புமணி எச்சரிக்கை…
என்எல்சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? புரட்சி வெடிக்கும்! என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடலூர் மாவட்டத்தில் வேளாண் விளைநிலங்களை பறிப்பதற்கு எதிராக உழவர்களும், மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், என்.எல்.சி 1, 1ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தை நாசமாக்கும் என்.எல்.சியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது.…
-

ஜனநாயகத்துடன் சிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா – அர்ஜுன் சம்பத் பேச்சு…
உலகத்திலேயே நீதி சட்டம் ஜனநாயகம் அடிப்படையில் தலைசிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா திகழ்வதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற முழக்கத்தோடு, செங்கோல் வழிபாடு தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், மூன்றாவது முறையாக மீண்டும் இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சி…
-

நாமக்கல்லில் ஹோட்டல் ஊழியர் உயிரிழப்பு….
நாமக்கல்லில் தனியார் தங்கும் விடுதியின் 2-வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து ஹோட்டல் ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் ராமாபுரம் புதூர் செல்லும் வழியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, மதுரையை சேர்ந்த அய்யனார் என்பவர், கடந்த சில ஆண்டுகளாக விடுதியின் 2-வது மாடியில் உள்ள அறை எண் 15-ல் தங்கி, நாமக்கல்லில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதனிடையே நேற்று நள்ளிரவு விடுதியில் மது அருந்திவிட்டு,…
-

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு… அதிர்ச்சித் தகவல்…
சென்னையில் கை அகற்றப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் தாய் அஜிஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: என் குழந்தையின் கை அகற்றபட்டதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்திருந்தேன். ஆனால் இதுவரை அதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. கடந்த 29 ஆம் தேதி…
-

புதியதாக நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கிய என்எல்சி… எந்தெந்த ஊர்?
புதியதாக நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கிய என்எல்சி… எந்தெந்த ஊர்? கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் தற்போது சுரங்கங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக என்எல்சி நிறுவனத்தின் மின் உற்பத்தி 800 மெகாவாட்ளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுரங்க விரிவாக்க பணிகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இரண்டாவது சுரங்க விரிவாக்க…
-

உபியில் 60 கர்ப்பிணிகளுக்கு HIV தொற்று… அதிர்ச்சித் தகவல்…
உத்தரப்பிரதேசத்தில் 60 கர்ப்பிணிகளுக்கு HIV தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லஜபதி ராய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 16 மாதங்களில் 60 கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண்களுக்கு ART பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ART மையத்தின் அறிக்கையின்படி, 2022-23ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் லாலா…
-

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி… செல்லூர் ராஜூ பதிலடி…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு, அவர் ஒரு கத்துக்குட்டி என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது : பாஜக ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியின் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள் தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷாவும் முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம்…
-

ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம் செய்த அனிருத்…
ஜெயிலர் படம் குறித்து முதல் விமர்சனமாக இசையமைப்பாளர் அனிருத் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். அவரது இசையில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவாலா பாடல் பெரும் வெற்றியை பெற்று பட்டித்தொட்டி எங்கும் பாடும் அளவுக்கு பரவியுள்ளது. வருகின்ற 10ஆம்தேதி படம் வெளியாக உள்ள நிலையில், கடந்த 2ஆம் தேதி ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை…
-

கொல்லிமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்! எதற்காக தெரியுமா?
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு 3 நாட்கள் அரசு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 2 மற்றும் 3-ந் தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின்போது மது பிரியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொல்லிமலை வட்டத்தில் செயல்படும் 4 டாஸ்மாக் மதுக்சில்லறை விற்பனை கடைகளை 3 நாட்களுக்கு அடைத்து…
-

மகாராஷ்டிராவில் கோர விபத்து… கிரேன் விழுந்து 14 பேர் உயிரிழப்பு…
மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரேன் விழுந்து 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஸ்டிரா மாநிலம் தானே அருகே ஷாபூர் பகுதியில் சம்ருதி விரைவு நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. அங்கு, அதிகாலையில், பில்லர்களை தைக்கி வைக்க பயன்படுத்தி வந்த கிரைடர் எனப்படும் மிகப்பெரிய கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-

சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி மெகா ஹிட் ஆனது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இப்போது எடுத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திரமுகி 2 படம், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
-

ஓடும் ரயிலில் போலீஸ் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற காவலர்… பரபரப்பு…
மகாராஷ்டிராவில் ஓடும் அதிவிரைவு தொடர்வண்டியில் 4 பயணிகளை ஆர்பிஎஃப் காவலர் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு விரைவு தொடர்வண்டியில் பயணித்த சிடி சேத்தன் என்ற தொடர்வண்டி பாதுகாப்புப்படை காவலர் சிடி சேத்தன் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். மகாராஷ்டிராவின் பல்கார் தொடர்வண்டி நிலையத்தை, விரைவு தொடர்வண்டி கடந்த போது, பி5 பெட்டியில் 3 பயணிகள் மற்றும் ஆர்பிஎஃப் துணை சார்பு ஆய்வாளர் ஆகியோர் மீது, தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில்,…
-

மாணவர்களுக்கு மடிகணினி வழங்குவார்களா? மாட்டார்களா? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
அரசின் நிதிநிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, துறைமுகம் தொகுதி தம்பு செட்டி தெருவில் உள்ள முத்தியால் பேட்டை மேல்நிலைப்பள்ளியில் ,இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர் அன்பில்…
-

நாட்டு மக்களுக்கு திடீரென வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி…
சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் முழு விவரம்: ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும். அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, இடர்கள் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை…
-

ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் பரிசாக தோல்வி கிடைக்கும் – அமைச்சர் சேகர்பாபு…
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி உட்பட எப்படிப்பட்ட ஜாம்பாவான் போட்டியிட்டாலும் தோல்வியை பரிசாக வழங்குவோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட தங்கசாலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலை, அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, 130 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அண்ணாமலை எத்தனை பாதயாத்திரை…
-

கிருஷ்ணகிரி வெடி விபத்துக்கு உண்மை காரணம் என்ன? அமைச்சர் விளக்கம்
கிருஷ்ணகிரி வெடி கடை வெடித்து சிதறி 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சிலிண்டர் கசிவுதான் காரணம் என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் வெடி கடை ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவராண வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். படுகாயமடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாயும் காயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும்…
-

6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரஷ்யா கொடுத்த அதிரடி சலுகை…
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆறு ஏழை ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவச தானியங்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரண்டு நாள் உச்சிமாநாடு நடைபெற்றது. உச்சிமாநாட்டின் முக்கிய உரையில், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு தானியங்களை அனுப்புவதாக புடின் உறுதியளித்தார். வரும் மாதங்களில் புர்கினா பாசோ, ஜிம்பாப்வே, மாலி, சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு 25,000 முதல் 50,000 டன் தானியங்களை இலவசமாக வழங்குவதாக கூறினார். உக்ரைனைக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள்…
-

அணையை கடந்து வழியும் வெள்ளம் – அச்சத்தில் ஓட்டம் பிடித்த எம்எல்ஏ…
ஆபத்தான முறையில் அணையை கடந்து வழியும் வெள்ளம் – அச்சத்தில் ஓட்டம் பிடித்த எம்எல்ஏ…. தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நிர்மல் மாவட்டத்தில் உள்ள கடம் அணை நீர்பிடிப்புப் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடம் அணைக்கான நீர்வரத்து 4 லட்சம் நொடிக்கு கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் கொள்ளளவான 700 அடியில் 699.5 அடியை தொட்டுள்ளதால், அணையை தாண்டி தண்ணீர் வழிந்தோடுகிறது. அணையில் உள்ள 18 மதகுகளையும் திறந்துவிடுவதற்காக அதிகாரிகள் முயன்ற போது,…
-

மரத்தடியில் தூங்கிய நபரின் சட்டைக்குள் புகுந்த பாம்பு… பரபரப்பு வீடியோ…
ஓய்வெடுப்பதற்காக மரத்தடியில் தூங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி தூங்குவோர் மீது எறும்பு உள்ளிட்ட பூச்சிகள் சட்டைக்குள் புகுந்து கடிக்கும். இதனால், பூச்சி ஏதும் வராத இடமாக பார்த்து மரத்தடியில் படுத்து உறங்குவர். அப்படி, பார்த்து பார்த்து உறங்கினாலும், இப்படி ஒரு ஆபத்து வரும் என யாரும் நினைத்தது இல்லை. ஆம், மரத்தடியில் படுத்து உறங்கிய நபரின் சட்டைக்குள் மிகப்பெரிய பாம்பு புகுந்தால் என்ன ஆகும்? சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த காணொலியில்,…
-

ஜார்க்கண்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக் கொலை – பதற்றம்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சுபாஷ் முண்டாவை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள தனது அலுவலகத்தில் சுபாஷ் முண்டா நேற்றிரவு இருந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயமடைந்த சுபாஷ் முண்டா உயிரிழந்த நிலையில், மர்ம நபர்கள் தப்பியோடினர். இதையறிந்த அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த கடைகளையும் சேதப்படுத்தி,…
-

மகாராஷ்டிராவில் மீண்டும் முதலமைச்சர் மாற்றம்? – முன்னாள் முதலமைச்சர் கருத்தால் பரபரப்பு….
மகாராஷ்டிராவில் மீண்டும் முதலமைச்சர் மாற்றம்? – முன்னாள் முதலமைச்சர் கருத்தால் பரபரப்பு…. மகாராஸ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பதிலாக அஜித் பவார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று முன்னாள் முதலமைச்சர் பிரித்திவிராஜ் சவான் தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை தனது வசமாக்கிய ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி வைத்து, முதலமைச்சராக பொறுப்பேற்றார். இது மராட்டிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், கட்சி தனக்கே…
-

ஞானவாபி மசூதியில் இன்று காலை தொல்லியல் துறையினர் ஆய்வு…
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல்துறையினர் இன்று காலை ஆய்வை தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், இந்திய தொல்லியல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இஇந்த வழக்குகள் மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி முடிந்தது. இதையடுத்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், மசூதி வளாகத்தில் அறிவியல்…
-

பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும், தானாகவே மாட்டிகொள்வார்கள் – எடப்பாடி பழனிசாமி பேச்சு
இன்னும் பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும், தானாகவே மாட்டிகொள்வார்கள்,மாட்டிவிடத் தேவையில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி தங்கயூர் ஊராட்சிக்கு உட்பட்ட காவடிக்காரனுர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்ற பெயர் பெற்றது. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகாலம் ஆகிறது. அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் கிடப்பில் போட்டு…
-

16 வயது சிறுமி பாலியல் தொல்லை… 81 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை…
அரியலூரில் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 81 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். 81 வயதாகயன இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 11 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், சுந்தரத்தை மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர்…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
3д сетка производство забор 3д от производителя
ограждения 3д от производителя купить забор 3д от производителя
забор 3д от производителя 3d забор от производителя
Каталог нейросетей AI-Panda https://ai-panda.ru это более 1000 AI-инструментов в одном месте. Найди идеальную нейросеть для своих задач: генерация изображений, работа…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports










gioco della roulette Check out my page :: Giocare In Linea E Vincere Soldi