Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
-

Schools Leave: 7 மாவட்ட பள்ளிகளுக்கும் 3 மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை: கொட்டித் தீர்க்கும் கனமழை.. இன்னும் இருக்கு!
வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைப் போல் சென்னை மட்டும் இல்லாமல் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இதனால் மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. மற்ற அரசு அலுவலகங்களும் பொது சேவை நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி…
-

ஏழ்மையிலும் நேர்மை! காணாமல்போன ஒன்றரை சவரனை பத்திரமாக மீட்டுக் கொடுத்த மூதாட்டி!
<h2><strong>காணாமல் போன ஒன்றரை சவரன்:</strong></h2> <p>தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமச்சந்திரன் என்பவரின் குடும்ப வளைகாப்பு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சாத்தான்குளம் வணிக வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைவரும் வீட்டிற்கு சென்றதும் பேராசிரியர் ராமச்சந்திரனின் குடும்ப உறவினர் பெண் ஒருவரின் 1 1/2 பவுன் செயின் நிகழ்ச்சி நடந்த அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது.</p> <p>இதுகுறித்து பேராசிரியர் ராமச்சந்திரன் திருமண…
-

TN Rain Alert: | TN Rain Alert:
TN Rain Alert: சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நாளை வரை மிக கனமழையா? தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…
-

Global Investors Conference The Startup TN Pavillion Attracted Multinational Visitors
பல்வேறு தொழில்முனைவோர்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், The Startup TN Pavillion 8000 சதுர அடியில் 23 வெவ்வேறு துறைகளின் 41 அரங்குகளை அமைத்துள்ளது. இதில் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் 10 ஸ்டார்ட்அப்களும் அடங்கும். மேலும் 20 அரங்குகள் அரசின் அங்கீகாரம் பெற்றவை. இது தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாடு ஆதி திராவிட/ பழங்குடியின மானிய நிதி மற்றும் தமிழ்நாடு தொடக்க விதை…
-

GIM:முதல் நாளிலேயே இலக்கை எட்டிய முதலீட்டாளர்கள் மாநாடு; சாதித்த தமிழக அரசு!
<p>உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டதாக தொழில்துறைச் செயலர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.</p> <p>இன்று 100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அருண் ராய் தெரிவித்துள்ளார்.</p> Source link
-

Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்?
<h2>அடுத்த 3 மணி நேரம்</h2> <p>தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p> <p>திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p> <p>இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:</p> <p>“07.01.2024: தென்தமிழக…
-

Global Investor Meet: இத்தனை துறைகளில் தமிழ்நாடு முதலிடமா?!- முதலீட்டாளர்கள் மாநாட்டில் பட்டியலிட்ட அமைச்சர் டிஆர்பி ராஜா!
<p>இந்தியாவிலேயே பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருவதாக, முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பட்டியலிட்டு உள்ளார்.</p> <p>சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு இன்று (டிச.7) தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.</p> <p>இதில் மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் தமிழக…
-

IPS transfer: 48 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு!
<p>நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. </p> Source link
-

CM Stalin: பெரும் துயரம்! சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
<p><strong>CM Stalin:</strong> நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> உத்தரவிட்டுள்ளார். </p> <h2><strong>சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு:</strong></h2> <p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு…
-

அதிர்ச்சி சம்பவம்.. இசைக்குழுவான BTS மீது அதீத மோகம்! ரூ.14 ஆயிரத்துடன் கொரியா கிளம்பிய பள்ளி மாணவிகள்..
<p>இன்றைய இணைய உலகில் அதிக ரசிகர்களைப் பெற்று கோலோச்சி வருகிறது கொரிய இசைக்குழுவான பிடிஎஸ். இவர்கள் பிரபல யூடியூப் பக்கத்தில் ஒரு பாடலை வெளியிட்டால் கூட லைக்ஸுகளும், ஷேர்களும் குவியும். இன்றைய கால 2கே கிட்ஸ்களுக்கு இவர்களது இசை நிகழ்ச்சி, பாடல்கள் என்றால் கொள்ளை பிரியம். மேலும், இந்த பிடிஎஸ் குழுவிற்கு ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகம். இவர்களின் நிகழ்ச்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். </p> <p>இப்படியான சூழ்நிலையில், கொரியாவில் நடைபெற இருந்த…
-

Tamilisai Soundararajan Said That The Prime Minister And The Central Government Have A Role In Bringing Global Investors To Tamil Nadu | ’உலக முதலீட்டாளர்கள் தமிழகம் வருவதில் பிரதமருக்கும் பங்கு உள்ளது’
கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. பிரதமர் மோடி பல வெளிநாடுகளுக்கு சென்று ஏற்படுத்திய நல்லுறவு ஏற்படுத்தியுள்ளார். அதனால் பாரத தேசம் தொழில் முனைவோருக்கு ஏற்ற தேசமாக இருக்கிறது. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று நல்லெண்ணம் ஏற்படுத்தியதே இதற்கு காரணம். முந்தைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு தொழில்முனைவோர்கள் கிடைத்ததார்கள்? எந்தெந்த நாடுகள் தொழிற்சாலைகள் ஆரம்பித்தது? என்ன பயன்…
-

திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கான58 நேரடி கொள் முதல் நிலையங்கலில் நாளை முதல் முன்பதிவு துவக்கம்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கான நேரடி கொள் முதல் நிலையங்கள் (10.01.2024 )முதல் துவக்கம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-24 ஆண்டிற்க்கான சம்பா பருவத்தில் முதல் கட்டமாக 11 வட்டங்களில் 58 மையங்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (10.01.2024) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு (08.01.2024) முதல் துவங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பின்வரும் விவரப்படி 58 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. திருவண்ணாமலை வட்டத்தில் நார்த்தாம்பூண்டி, வெளுக்கானந்தல், பெரியகிளாம்பாடி, கருத்துவாம்பாடி,…
-

ஈரோட்டில் கட்டடம் இடிந்து பணியாளர் உயிரிழப்பு
ஈரோடு ஆர்.என்.புதூர் அருகே உள்ள ஜவுளி நகரில் கட்டடம் இடிந்து பணியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், கட்டப்பட்ட கட்டடத்தின் மாடியில் பூச்சு வேலைகளை செய்தபோது விபத்து நடந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர் நாகேந்திரனை மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்த பணியாளர்கள் இருவர் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link
-

Chance Of Very Heavy Rain In 3 Districts In Tamil Nadu Today Next 7 Days Status
Rain Alert : இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 07.01.2024: தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்…
-
Tamil Nadu Global Investors Meet 2024 Reliance Mukesh Ambani Speech
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொழில்துறைக்கு சாதகமான மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளதாக, தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு இன்று (டிச.7) தொடங்கியது. விழாவில் மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறி,…
-
Tamilnadu Latest Headlines News Update 7th January 2024 Tamilnadu Flash News Vijayakanth Death | TN Headlines: இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; தமிழ்நாட்டில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு
Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. அடுத்த 7 நாள் நிலவரம் இதோ.. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க CM Stalin Global…
-

உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை கூறிய பிரேமலதா விஜயகாந்த்… ஏன் தெரியுமா?
உதயநிதி ஸ்டாலின் முக்கிய பொறுப்பில் உள்ளதால் ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை, வியாசர்பாடியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிர்மலா சீதாராமன் பேசியது அநாகரீகமாக தனக்கு தெரியவில்லை என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்குதான் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும், ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் என்றும்…
-

மீண்டும் பைக்கில் ஏறிய டிடிஎஃப் வாசன்… ஆனால் செய்தது என்ன தெரியுமா?
பஞ்சர் லிக்விட் திரவத்தை பரிசோதனை செய்ய இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் யுடூபர் டிடிஎப் வாசன் பயணம் செய்தார். பிரபல யூட்டுபரும் மோட்டார் சைக்கிள் சாகச வீரருமான டிடிஎஃப் வாசன், காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விபத்து ஏற்படுத்தியதின் காரணமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையம் டிடிஎஃப்…
-

கழிவறைகள் கழுவுவதாக கூறுவதா? தயாநிதிமாறனுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம்…
பீகாரில் இருந்து தமிழகம் வருபவர்கள் கழிவறைகள் கழுவுவதாகக தயாநிதிமாறன் கூறிய கருத்துக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம் பி தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், திமுக என்பது கருணாநிதியின் கட்சி. திமுக…
-

உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டியாக இருக்கிறார்… கடுமையாக விமர்சித்த எல்.முருகன்…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார். கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா, கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின்…
-

வரலாறு காணாத அளவில் முட்டை விலை கடும் உயர்வு… பொதுமக்கள் அதிர்ச்சி…
நாமக்கல் மண்டலத்தில் வரலாறு காணாத வகையில், புதிய உச்சமாக முட்டை கொள்முதல் விலையானது ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 4-ந் தேதி வரை 4 ரூபாய் 75 காசுகளுக்கு, கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. பின்னர் நாள்தோறும் நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில், 5 காசுகள், 10 காசுகள் என படிப்படியாக கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இதன்காரணமாக வரலாறு காணாத வகையில், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் புதிய…
-

தூத்துக்குடியில் சுங்கக் கட்டணத்திற்கு திடீர் விலக்கு… ஆனால் யாருக்கு இந்த விலக்கு? முழு விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சுங்கச் சாவடிகளில் 31ஆம் தேதி வரை, நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன. இதனால், நிவாரணப் பொருட்கள் கிடைப்பதற்கு ஏதுவாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 24 ஆம் தேதி முதல்…
-

போலீஸ் எனக்கூறி 20லட்ச ரூபாய் வழிப்பறி… விசாரணையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
சென்னையில் போலீஸ் எனக்கூறி 20லட்ச ரூபாய் வழிப்பறி செய்த கும்பலை 4 மணி நேரத்தில் காவல்துறையினர் பிடித்துள்ளனர். புது பெருங்களத்தூரில் ஷூ மற்றும் பேக் கடையை நடத்தி வருபவர் முகமது அசைன். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த சிராஜுதீன்(33) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மாதம் ஒரு முறை ரயில் மூலமாக வந்து பீச் ஸ்டேஷனில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வியாபார பணத்தை வசூல் செய்துவிட்டு எடுத்து செல்வது வழக்கம். அதே போல சிராஜுதீன்…
-

அண்ணாமலை நிதியை வாங்கி கொடுத்தால் நிவாரணம் உயர்த்தி வழங்குகிறோம்… அமைச்சர் மா.சு. பேச்சு…
மத்திய அரசிடம் ரூ.7,000 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாகவும் அந்த நிதியை அண்ணாமலையை வாங்கி கொடுத்தால் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 1,400 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக உறுப்பினர்கள் நிவாரண நிதி வழங்குகிறார்கள் எனக் கூறுவது வதந்தி என்றார். அப்படி இருந்தால் முன்னாள் ஜெயக்குமார் அதனை நிரூபிக்கட்டும்…
-

மாடர்ன் தியேட்டர்ஸ்.. அதை அப்படி பார்க்கக்கூடாது.. அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்…
மாடர்ன்ஸ் தியேட்டர் விவகாரத்தில் கற்பனையாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களுக்கு அரசு பதில் சொல்ல முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாடர்ன் தியேட்டர்ஸ் பகுதியில் அரசின் சார்பில் ஏதோ செய்யப் போகிறோம் என சமூகவலைத்தளங்களில் தகவல் பரவுகிறது என்றும், ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்றும் கூறினார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றி சாலை விரிவாக்கம் செய்து வருவதாக கூறிய அமைச்சர், சாலை மேம்பாட்டுத்…
-

பா.ஜ.கவுக்கு மூடிய கதவை காங்கிரசுக்கு திறந்த அதிமுக… ஜெயக்குமார் வெளியிட்ட முக்கிய தகவல்…
பா.ஜ.க உடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஹேப்பி கிட்ஸ் அகாடமி ஏற்பாட்டில் கலாம் உலக சாதனை நிறுவனத்தினர் முன்பு, பள்ளி மாணவ மாணவிகளின் கண்களை கட்டிகொண்டு படம் வரைதல், cube- ஐ பயன்படுத்தி அப்துல் கலாமின் உருவத்தை கொண்டு வருதல், யோகாசனம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
-

குமரியில் கனமழை வெள்ளம்… அதிகாரிகளுக்கு அறிவுரை கூறிய பாஜக எம்எல்ஏ…
குமரியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து உதவிகளை வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து குடியிருப்புகளில் ஏராளமானோர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நாகர்கோயிலில் ஊட்டுவாழ் மடம், பாறை கால் மடம்ர மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு, பாதுகாப்பான…
-

பிராமணர்கள் குறித்து தவறான செய்தி வெளியிட்டால்…! அரசுக்கு விடுத்த கோரிக்கை
மயிலாடுதுறையில் நடைபெற்ற பிராமணர் சமுதாயம், சம்பிரதாயங்களையும், இந்து கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுபவர்களை சட்டபூர்வமாக தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சங்கர ராமநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்…
-

வேலை நிறுத்தம்… போக்குவரத்து ஊழியர்கள் விடுத்த புதிய அறிவிப்பு… அரசுக்கு புதிய சிக்கல்…
தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் பொங்கலுக்கு முன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அண்ணா திமுக உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக, பாமக,நாம் தமிழர் மற்றும் தேமுதிக உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக போக்குவரத்து துறையில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த…
-

அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவிகளை பலியாக்க திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா? – சீமான் கேள்வி
சென்னையில் எண்ணெய் கழிவுகள் விவகாரத்தில் அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா? உரிய பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப் பயிற்சி…
-

நிவாரண முகாம்களில் ரூ.14.40 கோடிக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி…
சென்னை மாநகராட்சியில் வெள்ள நிவாரண முகாம்களில், ரூ.14.40 கோடி செலவில் உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பெரிய அளவில் சென்னை பாதிக்கப்பட்டது. சென்னையில் 193 இடங்களில் முதல் மாடி அளவிற்கு மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. பல பகுதிகளில் மழை நீர் வடிய ஐந்து நாட்கள் ஆனது. மழைநீர் தேங்கிய பகுதிகளை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின் பழுது சரி செய்து, குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன, அதற்காக…
-

36 தமிழக மீனவர்களை விடுவித்தது பிரிட்டிஷ் கடற்படை… வீடியோ உள்ளே!
பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். தமிழகத்தின் தேங்காய்ப்பட்டின மீனவர்கள் 36 பேர் செப்டம்பர் 29ஆம் தேதி இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை கைது செய்த British Indian Ocean Territory நிர்வாகம், படகையும் பறிமுதல் செய்தது. இந்நிலையில், 36 மீனவர்களையும் British Indian Ocean Territory நிர்வாகம் விடுவித்துள்ளது. #WATCH | Vizhinjam, Kerala: Indian fishermen who were arrested by the…
-

ஓபிஎஸ் செய்த செயலால் தூக்கத்தை இழக்கும் அதிமுகவினர்…
அதிமுகவின் பெயர், கட்சியின் கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு எதிராக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமையை எதிர்த்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர், இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தேர்ந்தெடுத்த போதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், தேர்தல் நடத்தப்பட்டு, போட்டியின்றி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில், கட்சியில் இருந்து…
-

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதெல்லாம் மீண்டும் செய்யும் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…
அதிமுக ஆட்சி மீண்டும் அமைத்த பின்பு, ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்காக நான்கு கிராம் தங்கம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. ஆலங்குடி தொகுதி அதிமுக சார்பில் வம்பன் நால்ரோடு என்ற இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: திமுகவின்…
-

விசிக நிர்வாகி விக்ரமன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
விசிக பிரமுகரும் பிக் பாஸ் பிரபலமுமான விக்ரமனின் மீது, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் விக்ரமன். விசிகவில் மாநில இணை செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் மீது, இளம்பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், இரண்டு ஆண்டுகளாக விக்ரமன் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம்…
-

ராமதாஸ் அன்புமணி மீது அதிருப்தியில் பாமகவினர்… பரபரப்புத் தகவல்…
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர்அன்புமணி ராமதாஸ் மீது கட்சியினர் சமூக வலைத்தளங்களில் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். பாமகவின் மூத்த தலைவரும், மருத்துவர் ராமதாசின் நெருங்கிய நண்பருமான இசக்கி படையாட்சி கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு பாமகவுக்கு பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது. தென்காசியை சேர்ந்த இசக்கி படையாட்சி, தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்தவும், மருத்துவர் ராமதாசின் கொள்கைகளை தென் மாவட்டங்களில் பரப்புவதற்கும் முக்கியமானவராக பார்க்கப்பட்டவர். தென் மாவட்டங்களில் பாமகவினர் இல்லை, வன்னியர்கள் இல்லை…
-

தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை திடீர் சரிவு… வரைவு பட்டியலில் அதிர்ச்சி தகவல்…
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024-ன்படி தமிழ்நாட்டில் தற்போது 6,11,31,197 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் – 3,00,68,610, பெண்கள் – 3,10,54,571, மூன்றாம் பாலினத்தவர் – 8,016 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாடை ஒப்பிடும்போது ஒன்பது லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளதாக சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6,52,065 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இங்கு,…
-

ஆவின் நெய் விலை திடீரென உயர்வு… அதிர்ச்சி அளிக்கும் விலை பட்டியல்… பால் முகவர் சங்கம் கண்டனம்…
ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 100 ரூபாய் உயர்த்தி உள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமல் பால் மற்றும் நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களின் விற்பனை விலையை…
-

பொங்கலுக்கான சிறப்பு ரயில்களில் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்ல ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல்…
-

வேன் மீது லாரி மோதி விபத்து! 7 பெண்கள் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓனான் குட்டை கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா முடிந்து அனைவரும் வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த…
-

விவசாயியை நோகடிக்கும் விலை நிர்ணயம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சுமார் 6 ஏக்கரில் ஒட்டு தக்காளி மற்றும் ஒட்டு கத்தரிக்காய் சாகுபடி செயதுள்ள விவசாயி ஒருவர், உரிய விலை கிடைக்காததால் மனம் வருந்தி, விவசாயத்தை விட்டு கூலி வேலைக்கு சென்று விடலாமா என யோசித்து வருவதாக கூறுகிறார். பொன்னேரியை அடுத்த தடம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து, அங்குள்ள விவசாய முறைகளை கற்று வந்து தனது நிலத்தில் பயிரிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இஸ்ரேல்…
-

திருச்சியில் 39 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஐயாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 39 வது நாளாக திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது, இதனை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடன் சார்ந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற காரணங்களை முன்வைத்து போராடி வருகின்றனர். ஏற்கனவே அரை…
-

திருப்பூரில் பயங்கரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய நான்கு பேரும் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு அங்கு மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரும் மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் ‘இங்கு ஏன் மது அருந்துகிறீர்கள்’ என்று கேட்ட செந்தில்குமார்…
-

இரண்டு மாணவர்களுக்கு கத்திக்குத்து! பிட் அடிக்காதே என்றதால் ஆத்திரம்!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த கீழமுடிமண்ணில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றபோது நயினார்புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் துண்டுச்சீட்டில் உள்ள விடைகளை பார்த்து தேர்வு எழுதியிருக்கிறார். இதனைக் கண்ட நிஷாந்த் , அமிர்தராஜ் ஆகிய இரு மாணவர்களும் ‘பார்த்து எழுதாதே’ ‘ஆசிரியரிடம் கூறிவிடுவோம் ‘ என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தேர்வு முடிந்து பள்ளிக்கு வெளியே வந்தபோது தான் தேர்வில்…
-

வேளச்சேரியில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு காட்சி…
சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேளச்சேரி முத்துகிருஷ்ணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். #WATCH | Chennai: Fire broke out in an apartment in Muthukrishnan Street, Velachery. Fire tenders are present at the spot. Further details are awaited. pic.twitter.com/sOwre761IA — ANI…
-

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி கொலை… அதிர்ச்சி
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் ஏவிஎம் செட் அருகே உள்ள அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் எட்டாவது நடைமேடை உள்ளது. இந்த நடைமேடை அருகே நேற்று இரவு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி மக்களோடு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார், அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு…
-

புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட அங்காடி தெரு பட நடிகை சிந்து காலமானார்…
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நடிகை அங்காடி தெரு சிந்து காலமானார். அவருக்கு வயது 42. இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அங்காடித் தெரு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து என்கிற கௌரி. இவர் சினிமாவிலும், சீரியலிலும் நடித்து வந்தார். நடிப்பது மட்டுமில்லாமல், சமூக சேவைகளில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவித்து வந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். அதே நேரத்தில், கொரோனா…
-

என்எல்சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? புரட்சி வெடிக்கும்! அன்புமணி எச்சரிக்கை…
என்எல்சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? புரட்சி வெடிக்கும்! என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடலூர் மாவட்டத்தில் வேளாண் விளைநிலங்களை பறிப்பதற்கு எதிராக உழவர்களும், மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், என்.எல்.சி 1, 1ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தை நாசமாக்கும் என்.எல்.சியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது.…
Latest News

Stay Connected
Kadıköy Su Kaçağı Tespiti Profesyonel ekipman kullandılar. https://vplesson.com/
Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/
Great content! Keep up the good work!
suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








Ümraniye Zemin Altı Su Kaçağı Tespiti Nokta atışı kaçak bulma yaptılar. https://amano.lk/