Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
-

தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை திடீர் சரிவு… வரைவு பட்டியலில் அதிர்ச்சி தகவல்…
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024-ன்படி தமிழ்நாட்டில் தற்போது 6,11,31,197 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் – 3,00,68,610, பெண்கள் – 3,10,54,571, மூன்றாம் பாலினத்தவர் – 8,016 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாடை ஒப்பிடும்போது ஒன்பது லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளதாக சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6,52,065 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இங்கு,…
-

ஆவின் நெய் விலை திடீரென உயர்வு… அதிர்ச்சி அளிக்கும் விலை பட்டியல்… பால் முகவர் சங்கம் கண்டனம்…
ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 100 ரூபாய் உயர்த்தி உள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமல் பால் மற்றும் நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களின் விற்பனை விலையை…
-

பொங்கலுக்கான சிறப்பு ரயில்களில் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்ல ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல்…
-

வேன் மீது லாரி மோதி விபத்து! 7 பெண்கள் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓனான் குட்டை கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா முடிந்து அனைவரும் வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த…
-

விவசாயியை நோகடிக்கும் விலை நிர்ணயம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சுமார் 6 ஏக்கரில் ஒட்டு தக்காளி மற்றும் ஒட்டு கத்தரிக்காய் சாகுபடி செயதுள்ள விவசாயி ஒருவர், உரிய விலை கிடைக்காததால் மனம் வருந்தி, விவசாயத்தை விட்டு கூலி வேலைக்கு சென்று விடலாமா என யோசித்து வருவதாக கூறுகிறார். பொன்னேரியை அடுத்த தடம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து, அங்குள்ள விவசாய முறைகளை கற்று வந்து தனது நிலத்தில் பயிரிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இஸ்ரேல்…
-

திருச்சியில் 39 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஐயாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 39 வது நாளாக திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது, இதனை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடன் சார்ந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற காரணங்களை முன்வைத்து போராடி வருகின்றனர். ஏற்கனவே அரை…
-

திருப்பூரில் பயங்கரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய நான்கு பேரும் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு அங்கு மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரும் மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் ‘இங்கு ஏன் மது அருந்துகிறீர்கள்’ என்று கேட்ட செந்தில்குமார்…
-

இரண்டு மாணவர்களுக்கு கத்திக்குத்து! பிட் அடிக்காதே என்றதால் ஆத்திரம்!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த கீழமுடிமண்ணில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றபோது நயினார்புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் துண்டுச்சீட்டில் உள்ள விடைகளை பார்த்து தேர்வு எழுதியிருக்கிறார். இதனைக் கண்ட நிஷாந்த் , அமிர்தராஜ் ஆகிய இரு மாணவர்களும் ‘பார்த்து எழுதாதே’ ‘ஆசிரியரிடம் கூறிவிடுவோம் ‘ என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தேர்வு முடிந்து பள்ளிக்கு வெளியே வந்தபோது தான் தேர்வில்…
-

வேளச்சேரியில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு காட்சி…
சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேளச்சேரி முத்துகிருஷ்ணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். #WATCH | Chennai: Fire broke out in an apartment in Muthukrishnan Street, Velachery. Fire tenders are present at the spot. Further details are awaited. pic.twitter.com/sOwre761IA — ANI…
-

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி கொலை… அதிர்ச்சி
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் ஏவிஎம் செட் அருகே உள்ள அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் எட்டாவது நடைமேடை உள்ளது. இந்த நடைமேடை அருகே நேற்று இரவு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி மக்களோடு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார், அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு…
-

புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட அங்காடி தெரு பட நடிகை சிந்து காலமானார்…
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நடிகை அங்காடி தெரு சிந்து காலமானார். அவருக்கு வயது 42. இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அங்காடித் தெரு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து என்கிற கௌரி. இவர் சினிமாவிலும், சீரியலிலும் நடித்து வந்தார். நடிப்பது மட்டுமில்லாமல், சமூக சேவைகளில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவித்து வந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். அதே நேரத்தில், கொரோனா…
-

என்எல்சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? புரட்சி வெடிக்கும்! அன்புமணி எச்சரிக்கை…
என்எல்சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? புரட்சி வெடிக்கும்! என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடலூர் மாவட்டத்தில் வேளாண் விளைநிலங்களை பறிப்பதற்கு எதிராக உழவர்களும், மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், என்.எல்.சி 1, 1ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தை நாசமாக்கும் என்.எல்.சியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது.…
-

ஜனநாயகத்துடன் சிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா – அர்ஜுன் சம்பத் பேச்சு…
உலகத்திலேயே நீதி சட்டம் ஜனநாயகம் அடிப்படையில் தலைசிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா திகழ்வதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற முழக்கத்தோடு, செங்கோல் வழிபாடு தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், மூன்றாவது முறையாக மீண்டும் இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சி…
-

நாமக்கல்லில் ஹோட்டல் ஊழியர் உயிரிழப்பு….
நாமக்கல்லில் தனியார் தங்கும் விடுதியின் 2-வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து ஹோட்டல் ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் ராமாபுரம் புதூர் செல்லும் வழியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, மதுரையை சேர்ந்த அய்யனார் என்பவர், கடந்த சில ஆண்டுகளாக விடுதியின் 2-வது மாடியில் உள்ள அறை எண் 15-ல் தங்கி, நாமக்கல்லில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதனிடையே நேற்று நள்ளிரவு விடுதியில் மது அருந்திவிட்டு,…
-

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு… அதிர்ச்சித் தகவல்…
சென்னையில் கை அகற்றப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் தாய் அஜிஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: என் குழந்தையின் கை அகற்றபட்டதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்திருந்தேன். ஆனால் இதுவரை அதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. கடந்த 29 ஆம் தேதி…
-

புதியதாக நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கிய என்எல்சி… எந்தெந்த ஊர்?
புதியதாக நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கிய என்எல்சி… எந்தெந்த ஊர்? கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் தற்போது சுரங்கங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக என்எல்சி நிறுவனத்தின் மின் உற்பத்தி 800 மெகாவாட்ளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுரங்க விரிவாக்க பணிகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இரண்டாவது சுரங்க விரிவாக்க…
-

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி… செல்லூர் ராஜூ பதிலடி…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு, அவர் ஒரு கத்துக்குட்டி என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது : பாஜக ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியின் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள் தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷாவும் முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம்…
-

கொல்லிமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்! எதற்காக தெரியுமா?
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு 3 நாட்கள் அரசு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 2 மற்றும் 3-ந் தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின்போது மது பிரியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொல்லிமலை வட்டத்தில் செயல்படும் 4 டாஸ்மாக் மதுக்சில்லறை விற்பனை கடைகளை 3 நாட்களுக்கு அடைத்து…
-

மாணவர்களுக்கு மடிகணினி வழங்குவார்களா? மாட்டார்களா? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
அரசின் நிதிநிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, துறைமுகம் தொகுதி தம்பு செட்டி தெருவில் உள்ள முத்தியால் பேட்டை மேல்நிலைப்பள்ளியில் ,இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர் அன்பில்…
-

ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் பரிசாக தோல்வி கிடைக்கும் – அமைச்சர் சேகர்பாபு…
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி உட்பட எப்படிப்பட்ட ஜாம்பாவான் போட்டியிட்டாலும் தோல்வியை பரிசாக வழங்குவோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட தங்கசாலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலை, அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, 130 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அண்ணாமலை எத்தனை பாதயாத்திரை…
-

கிருஷ்ணகிரி வெடி விபத்துக்கு உண்மை காரணம் என்ன? அமைச்சர் விளக்கம்
கிருஷ்ணகிரி வெடி கடை வெடித்து சிதறி 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சிலிண்டர் கசிவுதான் காரணம் என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் வெடி கடை ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவராண வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். படுகாயமடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாயும் காயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும்…
-

பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும், தானாகவே மாட்டிகொள்வார்கள் – எடப்பாடி பழனிசாமி பேச்சு
இன்னும் பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும், தானாகவே மாட்டிகொள்வார்கள்,மாட்டிவிடத் தேவையில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி தங்கயூர் ஊராட்சிக்கு உட்பட்ட காவடிக்காரனுர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்ற பெயர் பெற்றது. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகாலம் ஆகிறது. அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் கிடப்பில் போட்டு…
-

16 வயது சிறுமி பாலியல் தொல்லை… 81 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை…
அரியலூரில் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 81 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். 81 வயதாகயன இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 11 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், சுந்தரத்தை மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர்…
-

4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…
தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 02.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர்,…
-

செந்தில் பாலாஜி ஊழலை சொல்லிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும்… எடப்பாடி பழனிசாமி உறுதி…
அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழலை வெளியே சொல்லிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த தாதாபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் கிராமத்தில் இருந்து நகரம் வரை ஏழை மக்கள் உயர்ந்துள்ளார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான் காரணம் என்றார். அதிமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் சிறப்பாக…
-

தலித் சமையலருக்கு சம்பளம் தராத தாசில்தார்… 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு…
ஆதி திராவிடர் நல வாரிய சமையல்காரருக்கு 6 ஆண்டுகளாக சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல வாரியத்தில் சமையல்காரராக உள்ள தனக்கு, 2017 டிசம்பர் 1ம் தேதி முதல் சம்பளம் வழங்கப்படாததால், தனது சம்பள பாக்கியை வழங்க ஆதி திராவிடர் நலத்துறைக்கு உத்தரவிடக் கோரி மூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சம்பளத்தை வழங்க வேண்டுமென…
-

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் மரணம்… அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…
ஆன்லைன் சூதாட்ட இழப்பு தற்கொலைகள் கூடாது; மன உறுதியுடன் மீண்டு வர போராட வேண்டும்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிசெல்வம் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து…







suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz