Author: Sanjuthra
-

குற்ற வழக்குகளை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் – 2 போலீசாருக்கு 5 ஆண்டு சிறை
குற்ற வழக்குகளை முடித்து வைக்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர், ஏட்டு ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அணாநகர் நடுவன்கரை பகுதியை சேர்ந்தவர் அபினேஷ்பாபு. இவர் மீது, சொத்து பிரச்சினை சம்பந்தமாக கடந்த 2008-ம் ஆண்டு, 2 குற்ற வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சிவில் பிரச்சினை எனக்கூறி முடித்து…
-

அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் அதிரடி வழக்கு!
“Where the Game Is Real” – Your Essential Guide to Online Gaming Let’s be real, the online gaming world is a jungle, and 99% of the sites out there are just a joke. It’s tough as nails to find a place that’s fair, pays out properly, and doesn’t give you a massive headache. After testing…
-

திமுகவின் துரோகத்தை சுட்டிக்காட்டினால் அச்சுறுத்துவதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும்; காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இன்று அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மீது ஊதியம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.…
-

ஏர்ப்போர்ட்டுக்கு ஆயிரம் ஏக்கர் தேவையில்லை… ஆந்திராவின் அதிரடி திட்டம்…
ஆந்திராவில் சோதனை முயற்சியாக ஆற்று நீரில் இயக்கப்படும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. விமான சேவை என்றாலே, அதற்கு விமான நிலையம், ஓடுதளம் என ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்காக பெரும்பாலும், விவசாய நிலங்களையே அரசுகள் கையகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும் என்று பொதுமக்கள் அச்சத்தில், விமான நிலைய திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக அப்படி ஒரு போராட்டம்…
-

வடகொரியாவின் புதுவித தாக்குதலால் அதிர்ந்த தென் கொரியா… அச்சத்தில் அமெரிக்கா…
வடகொரியா நடத்திய ஜிபிஎஸ் தாக்குதலால் பல கப்பல்கள், விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவையே குலைநடுங்க வைக்கும் நாடாக வடகொரியா இருந்து வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு பொருளாதாரத் தடைகளை மீறியும், ஐநா சபையில் தடையை மீறியும் அணுஆயுத சோதனையும் நடத்தி வருகிறது. இது, அண்டை நாடான, தென் கொரியாவுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும், வடகொரியா சோதனை நடத்தும் ஏவுகணைகள் அனைத்தும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய…
-

டீ மட்டும்தான் கொடுத்தாரு… ரஜினியை சந்தித்த வைரமுத்து பகீர் பதிவு…
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து, அவருடனான கலந்துரையாடலை கவியாக வடித்துள்ளார். அதில், 80 நிமிடங்கள் உரையாடியபோது, கிரீன் டீயைத் தவிர வேறு எந்த இடைஞ்சலும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இதனை, டீ மட்டும்தான் ரஜினி கொடுத்தார் என வைரமுத்து சாடையாக கூறியிருப்ப்பதாக, பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்புக்குப் பிறகு, வைரமுத்து வெளியிட்ட பதிவு இதோ… https://x.com/Vairamuthu/status/1855075536428495190?t=Yy_QG7qCJp3BUnP_SP2OBg&s=08 கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
-

பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பரிந்துரை…
பெண்கள் பாதுகாப்புக்காக, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் லக்னோவில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன், கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது, ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு…
-

அமரன் பட இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்… D55 அதிரடி அறிவிப்பு…
தனுஷ் நடிக்கும் D55 வது திரைப்படத்தை அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மகத்தான வரவேற்பு பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து இயக்கப் போகும் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளார். https://x.com/Rajkumar_KP/status/1854776375506342187?t=fzMHAmEuFy7qRHJcmZojvw&s=08 நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்கு பிறகு இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் இட்லி கடை என்ற திரைப்படத்தை தானே இயக்கி…
-

மீண்டும் ரயில் விபத்து… அதிர்ச்சியில் மத்திய அரசு…
மேற்கு வங்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் வைத்துள்ள இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகிறது. ரயில்கள் ஒன்றன்மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹவுரா அருகே நல்பூர் என்ற இடத்தில், செகந்திராபாத் – சாலிமார் அதிவிரைவு ரயில் வந்தபோது,…
-

நடிகர் மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு… மலையாள திரைத்துறை அதிர்ச்சி…
மலையாள நடிகர்கள் சங்கமாக அம்மா அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்க நடிகர் மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுகுறித்த விசாரித்த ஹேமா கமிட்டி, அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கை வெளியானதற்குப் பின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் நேரடியாக குவிந்தன. நடிகைகள் நேரடியாகவே பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர். மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்த பிரபல நடிகர் சித்திக் மீதும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து,…
-

இஸ்ரேலியர்களை காப்பாற்ற விமானம் அனுப்பிய நெதன்யாகு…
நெதர்லாந்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்க விமானங்களை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுப்பியுள்ளார். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், கால்பந்து ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில், இஸ்ரேலிய ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டுவர, அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக, 2 மீட்பு விமானங்களை ஆம்ஸ்டர்டாம் நோக்கி அனுப்பியுள்ளார். வன்முறையாளர்கள் மீது டட்சு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நெதன்யாகு, இஸ்ரேலிய குடிமக்களின் பாதுகாப்பை…
-

காஷ்மீர் சட்டப்பேரவையில் நடந்த பரபரப்பு சம்பவம்! காரணம் அதுதான்…
காஷ்மீர் சட்டப்பேரவையில் பிடிபி எம்எல்ஏ காட்டிய பேனரால், பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, பிடிபி எம்எல்ஏ திடீரென ஒரு பேனரை கையில் ஏந்திக்கொண்டு சென்றார். காஷ்மீரில் இருந்த சிறப்புச் சட்டம் 370ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட அந்த பேனரை பார்த்ததும், அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்தனர். இதனால், காஷ்மீர் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்து முழக்கங்களை…
-

தலையை எடுப்பேன் என்றவரை கைது செய்யாததுதான் திராவிட மாடலா? – அன்புமணி கேள்வி
தலையை எடுப்பேன் என்று மேடையில் பேசிவரை 3 நாட்களாகியும் கைது செய்யாததுதான் திராவிட மாடலா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கடலூர் மஞ்சக்குப்பம் பிரச்சினையை குறிப்பிட்டு பேசினார். குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் பாமகவை சேர்ந்த இளைஞரை கொடூரமாக தாக்கியதாகவும், அவருக்கு ஆறுதல் கூற சென்ற பாமக மாவட்டச் செயலாளர் வன்னியர் சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார். 10 பேர் மீது வன்கொடுமை…
-

வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா திடீர் வேண்டுகோள்
ரஷ்யாவில் உள்ள படைகளை வட கொரியா திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தென்கொரியா வலியுறுத்தியுள்ளது. உக்ரைனுக்கு மீது போர் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது வடகொரிய ராணுவ வீரர்களை போரில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, வடகொரிய படைகளுக்கு ரஷயா பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியிருந்தது. இதன்மூலம், உக்ரைனில் ரஷ்ய படையுடன் இணைந்து வடகொரிய படைகளும் போரில் ஈடுபடும் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அதிலும், 10,000 வீரர்களை போரில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறி…
-

ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் கூறிய முக்கிய அறிவிப்பு…
திமுக விசிக இடையே எந்த விரிசலும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த உள்ள நிலையில், இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டு…
-

ஆவின் ஆலையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மரணம்… எடப்பாடி பழனிசாமி கண்டனம்…
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவின் ஆலையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மரணத்துக்கு, ஆலையில் முறையான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தராததே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாராணி என்ற பெண் ஊழியர், கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த உமாராணியின்…
-

3,500 சாலை பணியாளர்கள் பணி இழக்கும் ஆபத்து.. எச்சரித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தால் 3,500 சாலை பணியாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தமிழ்நாடு சாலை பணியாளர் சங்கம் எச்சரித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கப் பொதுச் செயலாளர் அம்சராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க கூடாது, இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உட்பட…
-

வயநாடு மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி… வங்கி செய்த செயலால் போராட்டம்…
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள அரசு நிவாரண நிதி வழங்கிய நிலையில், அந்த தொகையை, ஈஎம்ஐக்காக கேரள கிராமிய வங்கி பிடித்தம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு முண்டக்கை ,சூரல்மலையில் கடந்த மாதம் 30 தேதி அதிகாலை பெய்த கனமழை காரணமாக மூன்று முறை எற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 420 மேற்பட்டோர் உயிரிழந்தனர். 119 பேர் மாயமாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாமிலும், உறவினர் வீடுகளிலும், ஒருசிலர் அரசு கொடுத்துள்ள வாடகை…
-

முதல்வர் ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்கா பயணம்… இவ்வளவு நன்மையா?
உலக முதலீடுகளை ஈட்டுவதற்கு வரும் 27ஆம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை திரும்பும் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான் பிரான்சிஸ் கோ, சிக்காகோ உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உலகம் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேச உள்ளார் சென்னையில் இருந்து 27-ம் தேதி அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், 28ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். 28ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 2 தேதி…
-

வெஜ் ரைஸ்க்கு ஊறுகாய் கேட்ட இளைஞர்… சரமாரியாக தாக்கிய உணவக ஊழியர்கள்…
காஞ்சிபுரத்தில் வெஜ் ரைஸ் சாப்பிட ஊறுகாய் கேட்ட இளைஞரை, உணவக ஊழியர்கள் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரம் பல்லவன் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். துக்க நிகழ்ச்சிக்காக சென்ற இவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முனியாண்டி விலாஸ்க்கு சாப்பிட சென்றார். வெஜ் ரைஸ் ஆர்டர் கொடுத்து வாங்கி சாப்பிட்டபோது, வெஜ் ரைஸ் சரியாக இல்லை என கூறி தொட்டுக்கொள்ள ஊறுகாய் கேட்டுள்ளார். ஆனால், உணவக…
-

ஒரே நாடு ஒரே தேர்தல் – பிரதமர் மோடி புதிய அறிவிப்பு…
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் உரையாற்றினார். பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் குறித்து பேசிய பிரதமர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சியில்…
-

ஒரே நாளில் 3 படுகொலைகள்… பதவி விலக வலியுறுத்தும் அன்புமணி ராமதாஸ்…
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ள நிலையில், சட்டம் ஒழங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூர் நகர அதிமுக வட்ட செயலாளரான பத்மநாதன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பணாம்பாக்கம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்…
-

ஒலிம்பிக்கில் ட்ரையத்லான் பயிற்சி திடீரென ரத்து… பரபரப்புத் தகவல்…
பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், இரண்டாம் நாள் ட்ரையத்லான் பயற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாலீசில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளின் வீரர்கள் பங்கேற்று, ஒவ்வொரு போட்டிகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு விளையாட்டுகளிலும், பதக்கங்களை குவிக்கும் முனைப்பில் வீரர்கள் உற்சாகமாக செயல்பட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், ட்ரையத்லான் போட்டிக்காக இன்று நடைபெற இருந்த இரண்டாம் நாள் பயிற்சி ரத்து செய்யப்படுவதாக பாரீஸ் ஒலிம்பிக் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.…
-

ராயன் படத்தை செல்போனில் படம் பிடித்தவர் கைது… போலீஸ் அதிரடி…
தனுஷின் ராயன் படத்தை திரையரங்கில் செல்போனில் படம் பிடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய திரைப்படங்கள் வெளிவரும் போது, திரையரங்கில் முதல் காட்சியை ரெக்கார்ட் செய்து, இணையத்தில் வெளியிடுவது தொடர்கதையாகியுள்ளது. அதனை தடுக்க திரைத்துறையினரும், காவல்துறையினரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை இந்த கும்பலை தடுக்க முடியவில்லை. எப்பேர்பட்ட நடிகர் படமாக இருந்தாலும், முதல் காட்சி வெளியான அடுத்த சில நிமிடங்களில், முழு படமும் இணையத்தில் வெளியாகிவிடுகிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில்…
-

விஜய்யின் கோட் படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு நடிகர் பிரசாந்த் கூறிய பதில்…
விஜய் நடிப்பில் வெளிவர உள்ள கோட் திரைப்படத்தின் புதிய தகவல் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு? நடிகர் பிரசாந்த் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். உலக ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) தினத்தையொட்டி, சென்னை தீவுத்திடலில் சுமார் 500 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனித உடலில் கல்லீரல் என்பது மிகவும் முக்கியமானது என்றார்.…
-

கேரளாவில் கோவில் மேல்சாந்திக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு…
கேரளாவில் கோவில் மேல்சாந்திக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டபனை மேப்பாறை மகா விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருபவர் மதுசூதனன் (வயது 52). 20 ஆண்டுகளாக ஆன்மிக பணியில் ஈடுபடும் இவர், அடிக்கடி கேரள அரசின் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். அதேபோன்று தற்போதும் லாட்டரி வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி பிப்டி பிப்டி லாட்டரி குலுக்கல் நடந்தது. அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டது.…
-

புதுச்சேரி மாநிலத்திற்கு துணைநிலை ஆளுநர் நியமனம்… பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம்… முழு விவரம்…
புதுச்சேரி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அசாம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன், குஜராத் மாநில முதல்வரின் முதன்மை செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார்.…
-

முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள்… அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு..
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, திருவான்மியூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு உள்ள ஆபத்து, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எடுத்து கூறினார்.…
-

இந்திய கடற்படை போர்க்கப்பலில் தீ விபத்து… ஒருப்பகமாக கவிழ்ந்ததால் பரபரப்பு…
மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, ஒருபக்கமாக கவிழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எஸ்.பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதும், உடனடியாக, தீயை அணைக்க அந்த கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா போர்க்கப்பல் திடீரென ஒரு பக்கமாக கவிழ்ந்தது. இதனால், கப்பலில் இருந்தவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனடியாக கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். பலர் காயமடைந்த நிலையில், ஒரு மாலுமி மாயமானார். அவரை தேடும் பணியில் சக வீரர்கள்…
-

துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி… திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு…
திமுகவில் பல சீனியர் அமைச்சர்கள் உள்ளதாகவும், அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் வேண்டாம் என்பாரா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொத்தம்பட்டி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர்…
-

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகர்… உருக்கமாக தெரிவித்த மகள்…
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகரின் மகள் வீடியோ மூலம் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன், தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ரஞ்சிதமே’ என்ற தொடரில் நடித்து வருகிறார். டான்ஸர், நடிகர் என பன்முக திறமை கொண்ட இவர், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பிரபலமானவராக இருந்து வருகிறார். இவருடைய காதல் மனைவியான தீபாவும் சின்னத்திரையில் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நேத்ரன்…
-

அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? அண்ணாமலைக்கு தோன்றிய எண்ணம்… பரபரப்புத் தகவல்
சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? என்ற எண்ணம் தனது மனதில் எழுந்தது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜகவுக்காக பணியாற்றிய பிப்புல்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பு, வாய்ஸ் ஆப் கோவை என மாற்றப்பட்டுள்ளது. அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு தன்னார்வலர்களுக்காக நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ…
-

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்… மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை…
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் விசிக கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக கூறினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, டெல்லி ஜந்தர்…
-

ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு… எதற்காக தெரியுமா?
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென அவரை சந்தித்து பேசியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், 5 நாள் பயணமாக டெல்லி சென்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்தார். அவரை நேற்று மாலை திடீரென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். மாலை 6.30மணியளவில்…
-

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் கபாலீஸவரர் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பின், ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள மூத்த குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். அந்த வகையில், முதலில் 200 பேர் தமிழ்நாட்டைச் சார்ந்த மக்கள் ராமேஸ்வரத்திலிருந்து காசி செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாகவும், தற்போது, 300 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுவரை…
-

மின் கட்டண உயர்வைக் கண்டித்து முதல் ஆளாய் போராடிய அன்புமணி ராமதாஸ்…
தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மின் கட்டண உயர்வைக் கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். உயர்த்தப்பட்ட மின் கட்டண அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும், மின்சாரத்துறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, அதன்மூலம் மின்வாரிய கடன்களை அடைக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்…
-

தண்ணீர் தரமாட்டோம் என்ற கர்நாடகா… இப்போ அறிவிப்பின்றி தண்ணீர் திறக்கிறது…
தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கனமழை காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 62,000 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்துவிட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கபினி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. அந்த அணையின் மொத்த கொள்ளளவான 19.52 டிஎம்சியில் தற்பொழுது 17.05 டிஎம்சியாக நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 49,334 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 61,200 கன அடியாகவும்…
-

சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 7.1 ரிக்டராக பதிவு…
தென் அமெரிக்க நாடான சிலியில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலி, பொலிவியா, அர்ஜெண்டியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் 115 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 7.20 மணிக்கு 7.1 ரிக்டர் என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால், பாதிப்புகள் பெரிய அளவில்…
-

கடலூர் 3 கொலையில் முடிவுக்கு வந்தது குழப்பம்… கைதானவர்கள் அளித்த வாக்குமூலம்…
கடலூரில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தாய் தற்கொலைக்கு சுதன் குமார் தான் காரணம் என்பதால் குடும்பத்துடன் கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்ட சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். கடலூர் காராமணி குப்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐடி ஊழியரான சுதன் குமார், அவரது தாயார் கமலேஸ்வரி, அவருடைய மகன் நிஷாந்தன் ஆகிய மூன்று பேர் கொலை…
-

சவுக்கு சங்கருக்கு கிடைத்தது இடைக்கால ஜாமின்… ஆனால் சந்தோசப்பட எதுவும் இல்லையாம்…
தடுப்பு காவல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டதற்கான காரணங்களை தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கி கூறப்பட்டது. ஆனால், சவுக்கு சங்கரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கும் நோக்கில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக, அவரது தாயார் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றமே விசாரிக்க…
-

தமிழகம் பிற மாநிலங்களை விட பின்தங்கியுள்ளது… அறிக்கையை காட்டி அண்ணாமலை தகவல்…
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள, நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார். நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது அதன்மூலம் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக, ஆண் பெண் சமத்துவக் குறியீட்டில், 10 ஆவது இடத்திலும்,…
-

இங்கிலாந்தில் நடந்தது போல் இந்தியாவில் நடக்கும்… செல்வப்பெருந்தகை நம்பிக்கை…
இங்கிலாந்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் வந்துள்ளது போன்று, இந்தியாவிலும் 2029ல் ஆட்சி மாற்றம் வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரகால சட்டங்கள் முளைத்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். யாராவது தங்களது கருத்துகளை கூறினால், அவர்கள் மீது தாக்குதல் என பாசிச ஆட்சி நடந்து வருவதாக குற்றம் சாட்டினார். முழுமையான மோடி ஆட்சி என்பது போய் என்ற செல்வபெருந்தகை,…
-

மின் கட்டண உயர்வின் அவசியம் இதுதான்… இதை பார்த்தால் நீங்களே புரிஞ்சுப்பீங்க…
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துள்ள வருகின்றனர். இந்நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், எதற்காக மின் கட்டண உயர்வு அவசியம் என்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பு, கடந்த 10 ஆண்டுகளில், ரூ.94.312 கோடி மேலும்…
-

எக்ஸ் தளத்தில் சாதித்த பிரதமர் மோடி… 100 மில்லியனை கடந்த ஃபாலோயர்ஸ்…
பிரதமர் மோடியின் எக்ஸ் தளத்தை ஃபாலோ செய்வோரின் எண்ணிக்கை 100 மில்லியன், அதாவது 10 கோடி பேரை கடந்துள்ளது. சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். எனினும், எக்ஸ் தளம் ஏற்கனவே இருந்தது போலவே செயல்பட்டு வருகிறது. இதில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு நிறுவனங்கள், ஊடகங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்களுக்கு என்று பக்கத்தை உருவாக்கி, கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில்,…
-

சீமானை பற்றி விஜயலட்சுமி பேசியதை வெளியிடுவோம்… சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை…
கருணாநிதி பற்றி தரக்குறைவாக பேசுவது தொடர்ந்தால், சீமானை பற்றி நடிகை விஜயலட்சுமி பேசிய அனைத்தையும் வெளியிடுவோம் என்று சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறையில் திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் சுப.வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயக நாட்டில் யாரைப்பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்றும், ஆனால் அது அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார். ஆனால், எந்த ஒரு அரசியலும் இல்லாமல், கருணாநிதியைப் பற்றி சீமான் தரக்குறைவாக பேசியதும், பாட்டு…
-

சட்டம் ஒழுங்கு பிரச்சினை… தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திடீரென ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தமிழகத்தில் அடுத்தடுத்து படுகொலைகள், கூலிப்படைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதோடு, அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை, நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகி கொலை, கடலூரில் பாமக நிர்வாகியை வெட்டி கொல்ல முயற்சி என அடுத்தடுத்து சம்பவங்கள்…
-

நான் ரவுடியா? வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும்.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை எச்சரிக்கை..
தன்னை ரவுடி என்று கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதனை நிரூபிக்க முடியுமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சவால் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு பதிலளித்தார். எல்லா கட்சித் தலைவர்களையும் அண்ணாமலை பிளாக்மெயில் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், அருவருப்பான அரசியலில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தார். தன்னை ரவுடி என்று அண்ணாமலை கூறியிருப்பதாகவும்,…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports










Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/