நடிகர் விஜய் தமிழகத்தில் கட்சி ஆரம்பித்ததும் பலரும் அவரை நடிகர் என்றும், நடிகன் நாடாளமாட்டான், தகுதி இல்லை என்றெல்லாம் பேசினார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு பொதுக்கூடத்திற்கும் வருகை தந்த மக்கள் அலையை பார்த்த பின்னர், கூட்டம் வாக்காக மாறாது என்றார்கள்.
ரசிகர்கள், சிறுவர்கள் எல்லாம் வாக்களித்து விஜய்யால் அரசியலில் கரை சேர முடியாது என்று விமர்சித்தார்கள்.
ஆனால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 233 தொகுதிகளில் களம் கண்ட விஜய்யின் வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு கிடைத்தது. அதன் பலனாக 108 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைக்க உள்ளார்.
தமிழகத்தில் மட்டுமல்ல, புதுச்சேரியிலும் விஜய் கால்தடம் பதித்துள்ளார்.
இந்நிலையில், விஜய்க்கு இலங்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது. யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் விஜய்யின் தவெக கொடியை இளைஞர்கள் ஏற்றி வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கலை கட்டிய தளபதியின் வெற்றி விழா.. ஈழத்தில் பறக்கும் தமிழக வெற்றிக்கழக கொடிகள்🔥 pic.twitter.com/9cFe6mm5cC
— priya (@PriyankaSmile01) May 5, 2026
இலங்கை யாழ்ப்பாணத்தில் பறக்கும் தவெக கொடி 🇪🇸 🥹 pic.twitter.com/9cT2fSakLK
— 𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 (@TVK_Dinshu) May 5, 2026
இதோடு மட்டுமல்ல, இலங்கை நாடாளுமன்றத்திலும், அங்கு உள்ள தமிழ் எம்பிக்கள் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளனர்.
அதிலும் ஒருபடி மேலே போய், கச்சத்தீவையும், யாழ்ப்பாணத்தையும் விஜய்யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பி அர்ச்சுனா பேசியுள்ளார்.



























